Skip to main content

இலங்கையில் மதத்தலங்களில் குண்டுவெடிப்பு

முன்பை விட மக்கள் பக்குவப்பட்டிருப்பதாக உணருகிறேன். உணர்ச்சி அரசியலைக் கட்டவிழ்க்காமல் மனிதரோடு சக மனிதர்களாக கை கொடுக்கும் தேவையை உணர்ந்திருக்கிறோம். இதுவே நாகரீகத்தின், பகுத்தறிவின் வளர்சியாகும். மனித குலத்தின் வளர்ச்சியாகவும் இதைப் பார்க்கிறேன். 

அதே வேளை குறித்த ஒரு இனத்தின் மீதான, குறித்த ஒரு மதத்தின் மீதான காழ்ப்புகள் சிறுகச் சிறுக, பாதுகாப்புணர்வாயும், அச்சவுணர்வாகவும், வரலாற்றுப் பாடங்களின் படிப்பினை என்று கூறிக் கொண்டும் வெறுப்பும் துவேசமுமாயும் வெவ்வேறு பெயர் கொண்டு அலைகின்றன. அந்த இனத்தின், அந்த மதத்தின் மக்களையும் அதைக் குற்றவுணர்வோடு ஏற்றுக் கொள்ளவும் செய்து விட்டோம். 

சிந்தியுங்கள் மனிதர்களே! பாசிச அரசாட்சி நடக்கும் இந்த நாட்டில் இதுவரை காலமும் ஒரு சிறு துரும்பு அசைவதும் அரசாங்கத்திற்குத் தெரியாமல் இருந்திருக்கிறதா? இது மதங்களுக்கிடையிலான கலவரம் இல்லை. மதத் தீவிரவாதம் இல்லை. என்னுடைய இயலாமையைக் கைப்பற்றி, என் இயலாமையைக் கொண்டு என் பெயரைப் பாவித்து எங்கள் எல்லோரையும் அடக்கும் வழிமுறை இது! என்னுடைய பழமையான வழிமுறையில் இருக்கும் ஓட்டையைக் கண்டுபிடித்து என்னையும் என் போன்றவர்களையும் அழிக்கும் செயலிது! அரசு ஒத்தோடிய பயங்கரவாதம். 

இழப்புகளுக்கு இந்த அரசாங்கம் என்ன பதிலைக் கூறப்போகிறது? இதுவரை மக்கள் மீது நிகழந்த அரச பயங்கவாதச் செயல்களுக்கு என்ன பதிலோ, அதுவே பதில். எமக்கு எம்முடைய பதில் தெரிந்திருக்க வேண்டும். எமக்கு எம்மைச் சுற்றி நிகழ்வது தெரிந்திருக்க வேண்டும். மனிதர்களே, உங்கள் கவலைகள் நீங்கி நீங்கள் ஆறுதலடையும் ஒரு பொழுதில் மக்கள் மீது பயங்கரவாதிப் படம் ஏன் வரையப்படுகிறதென்று சிந்தியுங்கள். 

இது ஒரு கெட்ட படிப்பினை நமக்கு.

Comments

Popular posts from this blog

சாமகானமும் காம்போதியும்

முருகையன் ஒரு மொழிபெயர்ப்புச் செய்தார். மொழிபெயர்ப்பு எண்டும் சொல்ல முடியாது,சாதுவா மொழிபெயர்ப்பும்,திறமையான கற்பனையும் போட்டு செய்யுள் வடிவத்தில, இளநலம்! என்ன இளநலமா?ஹையா கிளுகிளுப்பான கதை வரப்போகுது. குமாரசம்பவம் (ஸாரி வேற கண்டென்ட் எண்டு நினைக்கப்படாது, ஐ ஆம் வெரி டீசன்ட்) காளிதாசன் குமாரசம்பவத்தில எழுதின அதே கதையை தமிழில தந்தவர். அதில தான் இந்தக் கதை வருகுது.  சாமகானம் சாமகானம் எண்டு ஒண்டு சொல்லக் கேட்டிருப்பம். “சாமகானம் பாடினான்” எண்டு நாலாம் வகுப்புச் சமய பாட புத்தகத்தில ஒரு பாடம் இருக்கு. பத்துத் தலையும், கையில ஒரு தலையுமாக் கணக்குப் பிழையா மொறாயஸ் கீறின இராவணனிண்ட மீசை வெச்ச படம் இருக்கும், இப்ப ஞாபகம் வந்துட்டுதா? அந்தக் காலத்திலேயே தலைகளிண்ட கணக்கை எண்ணிப் பாத்தனாங்கள் ஆக்கும். (தலைக்கணக்கு முக்கியம் அமைச்சரே) இப்ப சாமகானத்தைப்பற்றிப் பாப்பம். காளிதாசன் குமாரசம்பவம் எழுதேக்க, சும்மா கற்பனைகுதிரையை காட்டாற்று வெள்ளம் போல பறக்க விடுறேர்.  மிஸ்டர் சிவனும் மிசஸ் உமாவும் கலியாணமான புதிசில, (ஏன் கல்யாணமான பழசில யாரும் வெளிய போறதில்ல எண்டு நெடுங்காலமா டவுட்) சும்மா வெளிய வெளிக்

இராவணேசன் ; Maunaguru's 'Ravanesan'

நெறியாள்கை - பேராசிரியர் மௌனகுரு. இடம் -கொழும்பு கலை இலக்கியப் பேரவை. காலம்- சனி(13.02.2010)  மாலை 6.30மணி. சனி மாலை(13.02.2010) பேராசிரியர் மௌனகுரு அவர்களின் 'இராவணேசன்' நாடகம் நடைபெறவிருக்கிறதென்று நண்பரொருவர் தகவல் சொன்னார். இருந்த எல்லா வேலைகளையும் புறந்தள்ளி விட்டேன். நாடகங்கள் என்றவுடன்  வரும் இந்த தொலைகாட்சி சீரியல்களையே கண் ஞாபகத்தில் கொண்டுவந்து முகத்தை அஷ்ட கோணலாக்குகிறது. மேடையமைப்பும், அரங்கமும்,அரிதாரம் பூசிக்கொண்ட பாத்திரங்களும், நேரடியான காட்சிகளூட்டும் கிளர்வும், எங்களுக்கு முன்னாள் ஒரு தலைமுறை இதனூடே வாழ்ந்து காட்டியிருக்கிற விடயமும் தெரிவதில்லை. மாற்றங்கள் மட்டுமே மாறிக் கொண்டிருந்தாலும்,எங்களின் முன்னோடிகள் வழி வந்த கலைப் பாதையை எடுத்தியம்புதலுக்கும்,அதற்கான வரவேற்புக்கும் இங்கு இடமில்லை எனும் போது அவற்றையெல்லாம் தாண்டி மனதில் எங்கேயோ வலிக்கிறது. எங்களுடைய காலத்தில், முழுமையான கூத்துக்கலையோ, அரங்காடல்ககளையோ  காண்பதற்கு காலமோ மாற்றமோ ஏதோவொன்று இடந்தரவில்லை .இருப்பினும் யாராவது எங்கள்  நலிந்து போன கலைகளை மறுபடியும் இளஞ்சமுதாயத்திட்கு க

குழந்தைகளுக்கான நவீன தமிழ்ப் பெயர்கள்

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தல் எனும்போது, இவ்வளவு காலமும் வைத்த பெயர்கள் தமிழ்ப்பெயர்கள் இல்லையா எனும் கேள்வி எம்மில் பலருக்கு எழும். உங்கள் பெரும்பாலானோர் தமிழ்ப்பெயர் என்று எண்ணிக்கொண்டிருக்கும் உங்கள் பெயரை வட இந்தியக் கலப்பு,சமக்கிருத கலப்பு,ஐரோப்பிய,அரேபியக் கலப்புடனான பெயராக இனங்காணுவீர்கள்.  தமிழில் பெயர் சூட்டுவது இனத்துவேசம் உள்ள செயலா? :P இனத்தைக் கொண்டாடக் கூடிய செயல். மறத்தமிழன் என்று அடைமொழி இட்டுக்கொண்டு உலாவுவதை விட அழகான செயல் என்று எண்ணுகிறேன். இந்த அடையாளம் மிக அழகானது.  அண்மையில் நிறையப் பேர் தமிழில் குழந்தைகளூக்கான நவீனமான பெயர்கள் வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். தமிழில் பெயர்கள் பழமையானவையாக இருப்பது கூட இக்காலத்தோரின் தெரிவுக்குட்படாமைக்கு ஒரு காரணமாகும். பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் சிலவற்றை தொகுத்திருக்கிறேன்.சிலவற்றை கண்டும் பிடித்திருக்கிறேன். ( பிற்காலத்தேவைகளுக்கு ;)  ) வினைச்சொல் பெயர்கள் அஞ்சா ஆராதி ஆனந்தி  சலனி கோளறா இசி இனி தேயா மேதா வேயா வேகா மின்னு மிதவா தெகிழா நெகி