Skip to main content

Posts

Showing posts with the label நிலையாமை என்றும் .

நிலையாமை என்றும் !

ஒரு கோடி இயலாமை நிலையாமை ஆகும் அது கூடி தணியாமை தவிக்காமல்ப் போகும் சில கேள்வி சிதையாமல் நெடு நாளை வாழும் சிதைவோடு செல்வார்க்கு செல்வாக்கும் கூடும் சில நாளில் இவையாவும் சிதையாமல் வாழும் சிதையாமல் வாழ்வாகில் சிந்தாமல் ஓயும் ஓயாத ஓசைக்கு ஒலியென்று ஓசை பேசாத சொல்லுக்கு வெறும் என்று பாசை வெறுமென்று ஆனாலே வெளி வேடத் தொல்லை  தொலையாது ஒழிந்தோடி என்னென்ன லாபம் என்னான காலத்தில் ஒழிந்தென்ன பாவம் பருவோடு பயிலாமை மனதார வாழ்த்தும் பயமோடு பல தாரம் பருகாமை கூடும் கொடியோடு மலர் கொண்டு கொடும்பாவி ஆடும் அடியோடு மலராகி அரும்பாகி வாழும் அரும்பாகி அவையாவும் அல்லாது போகும் கரும்பாகும் எண்ணங்கள் கல்லாகிப் போகும் ஒரு வேளை உயிர் வந்து ஓயாமல் உருகும் அது காலை அலை வந்து கடலோடும் போகும் கலையாமை கனவென்று கடிதாரம் பேசும் கடிகாரம் பேசாத கனவென்ன ஆகும் கனவென்று ஆகாமல் கலையாதும் போகும் கலையாத கனவுக்குள் கலை ஒன்று ஆடும் கலையொன்று ஆடாமல் கலைந்தெங்கு போகும் கலைந்தங்கு போனாலும் கனவோடு வாழும் பொய்யாகிப் போகாத பொருள் ஒன்றும் இல்லை பொய்யாகிப் போனாலே பொருள் அங்