Skip to main content

Posts

Showing posts with the label பௌர்ணமிக் கிறுக்கு

பௌர்ணமிக் கிறுக்கு -02 -கவிதை-

-நிலா- 29-7-2010  ஒரு நாள் , வானம் விடை பெற்றுக் கொண்டிருந்தது- அந்த நாள் புத்தனும் சில சந்நியாசிகளும்   வானத்துக்குக் கீழே நடப்பவை பற்றி   பிரஸ்தாபித்துக் கொண்டிருந்தார்கள். மரங்கள் நேர் கோட்டில் அசைகின்றன  என்றான் ஒரு- புனிதன் . இலைகள் வளைவை நோக்கிப் பயணிக்கின்றன  என்றான் இன்னொரு- புனிதன் எனினும் எல்லாமுமே மண்ணை நோக்கித்தான் விழுகின்றன என்றான்   இன்னொரு- மனிதன். புத்தனுக்கு கதைப்பதற்கு ஏதுமில்லை- கதைகளைத் தவிர்க்கிறான். அல்லது கேள்விகளைத் துரத்துகிறான்.   கேள்விகளில் இருந்து பதில்களுக்கான நியாயங்களை அவன்   நிராகரிக்கிறான் அல்லது நிராகரிப்புக்களை கேள்விகளாக்குகின்றான். ஏனென்றால் அவன் எப்போதும்  புத்தனாயிருக்க விரும்புகிறான். புத்தன் ஒரு தர்மத்தை ஸ்தாபித்தவன், அவனுக்கு   வழக்கொழிந்து போன காருண்யம் பற்றித் தெரியவே தெரியாது. இருந்தாலும் அவன்   மரங்கள் நேர் கோட்டிலா, இலைகள் வளைவிலா, கனிகள் சுவையிலா பயணிக்கின்றன என்பது பற்றி   கனவுகளில் தனும் சிந்திப்பான்.   புத்தன் ஒவ்வொரு தடவையும்  கனவில் விழும்

பௌர்ணமிக் கிறுக்கு -01

இதோ இந்த புத்தன்   போன மாதம் தான் வைகாசியில் வர்ணம் பூசி வெளிச்சக் கூடுகள் மின்னி   ஏந்து கரத்தில் தீபம் ஏந்தி தாமரைக் கடவுளனுக்கு நீலோத்பலம் பிடுங்கி, சம்பங்கியும், பவள மல்லிகையும் சூட்டி, கண்களை மூடி மோனத்தின் உச்சியிலிருக்கும் புத்தன்- அதோ அன்று தான் பிறந்தான். ராஜ கம்பீரத்தில் மிடுக்கில் திரிந்து, காலத்தின் கோலத்தில் காவி சூடிக் கொண்டவன். அதோ அன்று தான் பிறந்தான்..! அவனது ,கேசங்களும் தந்தங்களும், அகவன்கூடும் தங்கப் பேழையுள் தாங்கப்படும் என்றறியாமலேயே- முக்தியாகிப் போனான். புத்தா, சந்திக்குச் சந்தி, அரசமரத்துக்கு மரம் கல்லாகி, மரமாகி ,கருஞ்சிலையாகி பெருத்த வண்டிப் பெருச்சாளிப் பிள்ளையார் போல வீற்றிருப்பது- கடினமடா பார்க்க எனக்கு- அவருக்குத் தான் தூக்க முடியாத தொந்தி   நடுத்தெருவிலே குந்தி விட்டார். நீ கட்டழகனல்லவா ? கூடாது கடவுளே - நீ முக்தியடைந்திருக்கக் கூடாது கடவுளே ! காசினியிலோ   கங்கையிலோ   குளித்து விட்டு "கப் " என்று இருந்திருக்கலாம். பாவி ... கடவுளாகிப் போனாயே ..!