என்னிடத்தில் எஞ்சியிருப்பது ஒன்றே ஒன்று மட்டும், அது என் பற்றியதல்ல - அது , வெட்ட வெளி நிலத்தின் ஊடு பாயும் கதிர்க் கற்றையிலிருந்து, பிளந்து வரும் ஏழாவது நிறத்தின் மக்கிப் போன சாயம் தாங்கிய நிழல் ! அது ஒரு வகை பெருமிதம் ; களிப்பு ! என்னில் இருந்து நிழல் விலகத் தொடங்கும், கடைசிப் பௌர்ணமியின் இருட்டில், அதனது சாயம் வெளுத்துக் கொண்டு போக ஆரம்பிக்கும்... என் மூக்கை தொடர்ந்து உற்று நோக்கினால் , என் வெளுத்த சாயம் வெளியேறுவதை எல்லோரும் அவதானிக்க முடியும்! கண்களினால் பார்ப்பதைத் தவிர்த்து மூக்கினால் பார்ப்பதற்கு அவன் என்னைப் பழக்கினான். மூக்கினால் பார்ப்பவர்களுக்கு மட்டும் வெளுப்பின் நிறம், மக்கிய சாயம், ஆவி போல் அந்தரத்தில் அலைவது தெரியும். கடவுள், நிழலை ஒரு சன்னத்தின் தெறிப்பாய்ப் படைத்திருக்கிறார். சன்னம் தெறிக்கையில் என் மீ உந்தம் , இடப் பரவலில் இருந்து ஒடுங்கிக் கொண்டு விடுகிறது. அந்த அற்புதங்கள் மூக்கினால்ப் பார்ப்பவர்களுக்கு மட்டுமே புரியும். மூக்கி