Skip to main content

Posts

Showing posts with the label கதை

காகம்

                                                                                அண்டைக்கு எதோ விரத நாள் .சனி விரதம். அவள்பாடிக் கொண்டிருக்கிறாள் . அவள் பாடிக் கன காலம் .                ஒரு சுமூக கானம்.இதுவரைக்கும் எச்சந்தர்ப்பத்திலும் இது போல உணர்ந்ததே கிடையாது. இயற்கையின் கல்பிதம்!              காற்று, மழை, இடி, புயல் எல்லாமுமாய்க் கலந்தது. ஒரு மெல்லிய பூவினது மணம் நுகரக் கற்றுக் கொடுப்பது போல அந்த நரம்புக் கருவி நீண்ட நேரம் ஓசையாகிக் கொண்டேயிருந்தது .                  சாமியறையின் விளக்கு நூர்ந்தது கூடத் தெரியாமல் ....வானம் பூமியிலிருந்து விண்டு வெடித்து தனியே பிளவு படுவது தெரியாமல், பாடிக்கொண்டே இருந்தாள்.               இயற்கை அவளை முற்றிலுமாக வசீகரித்திருந்தது. அவளும் இயற்கையும் ஒன்றே தான்.   பாடுகின்ற பொழுதில் அவள் தான் கடவுள்! அவள் பாட , கண்களில் கண்ணீர் தளும்புகிறது.           'இப்படியே பாடீட்டிருந்தா செத்திருவாவா மாமா இவ...?   .................இல்லடா, அவ பாடாட்டாத் தான் இந்த வையமே செத்துடும். புல், பூண்டு, பூச்சி, மனுசர், விலங்கு ஒண்ணுமே இந்த வை

முகம்

சகுந்தலாவுக்கு பெண் பார்க்க ஆரம்பித்திருந்தார்கள்.ஆனால் இன்று வரைக்கும் யாருமே அவளை வந்து பார்த்துவிடவில்லை.சகுந்தலாவுக்கு இருபது நெருங்கிக் கொண்டிருந்தது .பள்ளிக் கூடப் படிப்பு ஐந்தாறு தேறும் .  பெரிய அழகியும் இல்லை . அழகிக்கு முதட்படியும் இல்லை   கருப் பீ.. ..  கொஞ்சம் குட்டை . உடம்பு மசமசவென்று துவண்டு கிடந்தது .பெரிய விஷய ஞானமெல்லாம் கிடையாது . கூந்தல் நீளமாகக் கிடக்கும் அதுவுஞ்சுருட்டை .தனக்குள் தான் பெரிய  அழகி என்ற  கர்வமெல்லாம் அவளுக்கில்லை . அவளுக்கு தன உருவமே மறந்தது போலத்தான் படும் .அவ்வப்போது தன முக வடிவம் மறந்து  போய் கண்டவர்கள் ,பார்த்தவர்கள் முகமெல்லாம் தன்னது தானென்று நினைத்துக் கொண்டாள்  .அதனால் அவளுக்கு தன அழகைப் பற்றி ஓரளவுக்கு பெருமிதமாகவும் இருந்ததுண்டு .அவள் சேலை தான் கட்டிக் கொண்டாள் .  சில தடவை பாவாடையும் ,பிளவுசும் அணிந்தாள் .தன்னை சிங்காரிப்பதில்  எப்போதும்  ஆர்வமிருந்ததில்லை . தான் சிங்காரித்த முகத்துடனேயே எப்போதும் இருப்பதாகவும் பட்டது அவளுக்கு .......!     அவள் தகப்பனாருக்கு வேலை இருந்தது. தரகர் வேலை. வீடு பிடித்துக் கொடுத்து, அதிலே கி