Skip to main content

Posts

Showing posts with the label தேவமகன்

மலபரிபாகம் !

                                         விரிவாக நான் ஒன்றுமே இன்னமும் எழுதவில்லை. என் எழுத்தில் இருந்து விரவி ஓடும் எச்சில் ஈயைப் போல காலத்தின் முன் சிறு முட்களைப் போல இப்படிப் பல 'போல'  வாக நீ தள்ளி ஓடுகிறாய். காப்பிய மானத்தைப் பற்றி அக்கறை கொண்டவனாக நீ இருக்கையில், அதில் பாதி காப்பாற்றிய மானமாவது எனக்கிருக்கக் கூடாதா? இல்லை, இருக்கக் கூடாது. அகம்பாவத்தின் அடிச் செருக்கு நீ, உனக்கேற்றாட் போல உன் மான விபரத்தைக் கூட்டிக் குறைக்கிற பொறுப்பு உன்னிடமில்லை. எந்தவொரு உயிரின் மீது நீ அளவு கடந்த பாசத்தை வைக்கிறாயோ, அந்த நொடி முதல் நீ  மனதாலும் உடலாலும், சமூகத்தாலும் பலவீனனாகிறாய். ஆக நீ கோழையாகி விட்டாய். 'குரு தேவா, நான் மலபரிபாகம் பால் ஆட்கொள்ளப் பட்டவள் என்பதை நீங்கள் தானே சொல்லியிருந்தீர்கள்?'  .....ஹஹ் பூ.....மலபரிபாகமா, நேற்று முதல் நீ அப்படியிருந்திருக்கலாம்,இன்று கடிகார முள்ளைப் பார்த்தாயா, காலத்தின் நிகண்டில் குத்திட்டு நிற்கிறது. ஒருகாலமும் முடியாது,உன்னால் ஒரு காலமும் முடியாது....! ஆக்ரோஷமாய்க் கத்தினார். மலம் என்று சிறப

கடவுள் பற்றி வாழ்தல் ............

                                                                                                    ....அம்மா, அந்த அனிச்சம் பூ பூக்குமாம்மா?....... பூக்கும் ராசாத்தி.......... 'எப்பம்மா பூக்கும்? .......... ...    மழை நிறையப் பெஞ்சு, காத்தும் சூரிய ஒளியும் தாராளமாக் கிடைக்கிரண்டைக்குப் பூக்கும். ......... "இன் சபிசியன்ட்"   பூட்ஸ் அப்பிடித்தானேம்மா ? ம்ம்ம்........ '' ஏண்டா,  தேவ மகனே , இந்த அனிச்ச மரம் எப்ப பூக்கும்? ......... 'தெரியேல்ல'.............., அது பூத்த அண்டைக்கு அதைப் பிச்சு எனக்குத் தருவியளா? ........... .........இல்லை....., மாட்டன். 'ஏன்? ............. அதை உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை. ......சரி, அணிச்சம்பூவைப் பிச்சுத் தரவேண்டாம்.அது எப்ப பூக்குதெண்டு பாத்தியள் எண்டா எனக்குச் சொல்லுவியலா? ......... 'இல்லை...., மாட்டன். 'உங்களுக்கு, 'இல்லை'யையும் 'மாட்டனை'யும் தவிர தமிழில வேற ஒன்டுமும் தெரியாதா? .......???? ...........தெரியுமே, திருப்புகழும், த