Skip to main content

வெலிவேரியா- குடி தண்ணீர் யுத்தம்.



இருபத்தியோராம் நூற்றாண்டின் உலகப்போர் நீருக்காக நிகழும் சாத்தியங்கள் உள்ளதாக ஆய்வாளர்கள் எதிர்வு கூறியுள்ளார்கள். ஏற்கனவே சிரியாவில் கடந்த ஆறேழு வருடங்களாக தண்ணீருக்கான யுத்தம் நிகழ்ந்து இலச்சக்கணக்கான மனித உயிர்கள் மரணங்களில் முடிந்தது. இப்போது இலங்கையில். 

பெருமாட்டி பஞ்சாயத்து வட்டப் பிளாச்சிமோடாவில் கோக்காகோலா, நிலத்தடித் தண்ணீரை அண்மையில் உறிஞ்சி, அம்மாவட்ட மக்களால் போராட்டத்தை எதிர்கொண்டது. வாரணாசிக்கு அருகே உள்ள மேஹ்டிகஞ்சில் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக கோலா நிறுவனத்தை மூட வேண்டி ஏற்பட்டது. 

தற்போது, தரமான குடிநீர் கேட்டுக் கிளர்ந்து திரண்ட மக்களை அரசாங்கம் ராணுவம் மூலம் அத்துமீறச்செய்து மக்களை முடக்கிப் போட்டது. பொது மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டது. இருவர் கொல்லப்பட்டனர்.

தமான குடிநீர் கேட்டுத் திரண்டு நின்ற கம்பஹா மாவட்ட வெலிவேரிய ரதுபஸ் ஹெலவில் சிங்கள  மக்களுக்கே அரசாங்கம் தனது ஏகாதிபத்திய ஆதிக்கத்தைக் காட்டியுள்ளது. கம்பஹாவில் உள்ள தொழிற்சாலையிலிருந்து வெளியேறிய கழிவு நீரானது,அம்மாவட்ட நீர் நிலைகளில் நேரடியாகக் கலந்துள்ளதால், அப்பகுதி மக்களின் நீர்ப்புழக்கம் கேள்விக்குறியாகியுள்ளது. சுமார் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நீர் நிலைகளும், வீட்டுப்பாவனைக் கிணறுகளும் அப்பகுதியில் புழக்கத்துக்குத் தோதில்லாததாக மாறியிருக்கிறது. கிணற்று நீர், பிரதேச சுகாதார ஆணையாளரால் பரிசோதிக்கப்பட்டு மாசடைந்து பயன்பாட்டுக்கு உகந்ததில்லை என்று சுகாதாரப்பத்திரம் வழங்கப்பட்டது.

வழமைபோல இடதுசாரிகளையும்,அம்மாவட்ட மக்களையும் தவிர எந்தவொரு பெரு வணிக நிறுவனமோ, அரசியல் ஆதரவாளர்களோ இதில் தலையிடவில்லை. ஆனால் ஸ்ரீ தம்ம தேரர் சாகும் வரை மக்களது போராட்டம் தொடங்கிய நாளில் இருந்து உண்ணாவிரதமிருந்தார். இவரது குரலும் பின்னடைந்தது. 

ஏற்க்கனவே மாவிலாறு அணைக்கட்டில்  தொடங்கிய வடக்கு யுத்தம் முள்ளிவாய்க்கால் வரை குருதியோடி  அணைந்தது. இப்போது கம்பஹாவில். 


வடக்கிற்கும், தெற்கிற்கும் வெவ்வேறான நீர்த்தன்மைகள்,வெவ்வேறான அரசியல் என்று இதனை எந்தவகையிலும்  தமக்கொண்ணாதவொன்றாக மக்கள் பார்ப்பார்களாயின் குஷ்டம் தான். மக்கள் பற்றிய பிரக்ஞையற்ற ஏகாதிபத்திய நாடொன்றில் மக்களின் தேவை அனைவருமே ஏதிலி  தான்.  


நிலா  லோகநாதன்
2013

Comments

Popular posts from this blog

சாமகானமும் காம்போதியும்

முருகையன் ஒரு மொழிபெயர்ப்புச் செய்தார். மொழிபெயர்ப்பு எண்டும் சொல்ல முடியாது,சாதுவா மொழிபெயர்ப்பும்,திறமையான கற்பனையும் போட்டு செய்யுள் வடிவத்தில, இளநலம்! என்ன இளநலமா?ஹையா கிளுகிளுப்பான கதை வரப்போகுது. குமாரசம்பவம் (ஸாரி வேற கண்டென்ட் எண்டு நினைக்கப்படாது, ஐ ஆம் வெரி டீசன்ட்) காளிதாசன் குமாரசம்பவத்தில எழுதின அதே கதையை தமிழில தந்தவர். அதில தான் இந்தக் கதை வருகுது.  சாமகானம் சாமகானம் எண்டு ஒண்டு சொல்லக் கேட்டிருப்பம். “சாமகானம் பாடினான்” எண்டு நாலாம் வகுப்புச் சமய பாட புத்தகத்தில ஒரு பாடம் இருக்கு. பத்துத் தலையும், கையில ஒரு தலையுமாக் கணக்குப் பிழையா மொறாயஸ் கீறின இராவணனிண்ட மீசை வெச்ச படம் இருக்கும், இப்ப ஞாபகம் வந்துட்டுதா? அந்தக் காலத்திலேயே தலைகளிண்ட கணக்கை எண்ணிப் பாத்தனாங்கள் ஆக்கும். (தலைக்கணக்கு முக்கியம் அமைச்சரே) இப்ப சாமகானத்தைப்பற்றிப் பாப்பம். காளிதாசன் குமாரசம்பவம் எழுதேக்க, சும்மா கற்பனைகுதிரையை காட்டாற்று வெள்ளம் போல பறக்க விடுறேர்.  மிஸ்டர் சிவனும் மிசஸ் உமாவும் கலியாணமான புதிசில, (ஏன் கல்யாணமான பழசில யாரும் வெளிய போறதில்ல எண்டு நெடுங்காலமா டவுட்) சும்மா வெளிய வெளிக்

இராவணேசன் ; Maunaguru's 'Ravanesan'

நெறியாள்கை - பேராசிரியர் மௌனகுரு. இடம் -கொழும்பு கலை இலக்கியப் பேரவை. காலம்- சனி(13.02.2010)  மாலை 6.30மணி. சனி மாலை(13.02.2010) பேராசிரியர் மௌனகுரு அவர்களின் 'இராவணேசன்' நாடகம் நடைபெறவிருக்கிறதென்று நண்பரொருவர் தகவல் சொன்னார். இருந்த எல்லா வேலைகளையும் புறந்தள்ளி விட்டேன். நாடகங்கள் என்றவுடன்  வரும் இந்த தொலைகாட்சி சீரியல்களையே கண் ஞாபகத்தில் கொண்டுவந்து முகத்தை அஷ்ட கோணலாக்குகிறது. மேடையமைப்பும், அரங்கமும்,அரிதாரம் பூசிக்கொண்ட பாத்திரங்களும், நேரடியான காட்சிகளூட்டும் கிளர்வும், எங்களுக்கு முன்னாள் ஒரு தலைமுறை இதனூடே வாழ்ந்து காட்டியிருக்கிற விடயமும் தெரிவதில்லை. மாற்றங்கள் மட்டுமே மாறிக் கொண்டிருந்தாலும்,எங்களின் முன்னோடிகள் வழி வந்த கலைப் பாதையை எடுத்தியம்புதலுக்கும்,அதற்கான வரவேற்புக்கும் இங்கு இடமில்லை எனும் போது அவற்றையெல்லாம் தாண்டி மனதில் எங்கேயோ வலிக்கிறது. எங்களுடைய காலத்தில், முழுமையான கூத்துக்கலையோ, அரங்காடல்ககளையோ  காண்பதற்கு காலமோ மாற்றமோ ஏதோவொன்று இடந்தரவில்லை .இருப்பினும் யாராவது எங்கள்  நலிந்து போன கலைகளை மறுபடியும் இளஞ்சமுதாயத்திட்கு க

குழந்தைகளுக்கான நவீன தமிழ்ப் பெயர்கள்

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தல் எனும்போது, இவ்வளவு காலமும் வைத்த பெயர்கள் தமிழ்ப்பெயர்கள் இல்லையா எனும் கேள்வி எம்மில் பலருக்கு எழும். உங்கள் பெரும்பாலானோர் தமிழ்ப்பெயர் என்று எண்ணிக்கொண்டிருக்கும் உங்கள் பெயரை வட இந்தியக் கலப்பு,சமக்கிருத கலப்பு,ஐரோப்பிய,அரேபியக் கலப்புடனான பெயராக இனங்காணுவீர்கள்.  தமிழில் பெயர் சூட்டுவது இனத்துவேசம் உள்ள செயலா? :P இனத்தைக் கொண்டாடக் கூடிய செயல். மறத்தமிழன் என்று அடைமொழி இட்டுக்கொண்டு உலாவுவதை விட அழகான செயல் என்று எண்ணுகிறேன். இந்த அடையாளம் மிக அழகானது.  அண்மையில் நிறையப் பேர் தமிழில் குழந்தைகளூக்கான நவீனமான பெயர்கள் வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். தமிழில் பெயர்கள் பழமையானவையாக இருப்பது கூட இக்காலத்தோரின் தெரிவுக்குட்படாமைக்கு ஒரு காரணமாகும். பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் சிலவற்றை தொகுத்திருக்கிறேன்.சிலவற்றை கண்டும் பிடித்திருக்கிறேன். ( பிற்காலத்தேவைகளுக்கு ;)  ) வினைச்சொல் பெயர்கள் அஞ்சா ஆராதி ஆனந்தி  சலனி கோளறா இசி இனி தேயா மேதா வேயா வேகா மின்னு மிதவா தெகிழா நெகி