Skip to main content

மறுக்க அழையுங்கள்...


                                                             


நான் கொதிக்கும் உலையில் இருந்து விடுபட்டு-
அந்தம் ஒழிக்க,
எனக்கென இருக்கும் ஒரு பகலோ இருபகலோ
போதாமல் போகும்.
வாமன உருவத்தில் இருந்த வலி காணாமல்
நீண்டு பெரும் இராக்கதனாய் அவதரிக்கும்.

பார்- நீ ஒரு நாள்
சினம் கொண்டு எழுதலில் இருக்கும் தீவிரம்
அனுதினம் எனக்குள்ளே பொங்கிப் பிரவகிக்கும்.
கடல் ,வெளிகள் ,மவுன மலைகள் தாண்டி எதிரொலிக்கும்.
யாரையும் வாழப் பிரியப்படாமல்-
ஓசை முறித்துக் கொள்ளும் -உணர்வலைகள் !

பொங்குதலில் உள்ள லாபகரம் என்ன தெரியுமா?
ரகசிய சந்திப்புகளில் புரியாத
வார்த்தையற்ற விரவும் வெளிகள்- தாம் !

புல் நுனியில் காலம் பனி தட்டி எழுந்து கூத்தாடும்.
புலர்தலுக்கு முன்னே பூப்பெய்தும்.
புருட சுகம் ஒன்றினையே  புணர்ந்தலையும் ;
புல்லுருவி வாழ்க்கையில் இருந்து வெளியேறும்.
நல்லினக்கமில்லா  நகைப்புக்களை 
நரிக் குளிப்பாட்டும்.
நானெனும் தனியுடமை தங்கித் தங்கி பல திசைகளில்
காடு, சமுத்திரம், கரு மரப் பொந்துகள், இருட்டில் நீ அகன்ற வானம்
இல்லாது என்று போன அணியட்கைச் சபலங்கள் ,
எல்லாம் தீர்ந்து போன மூர்ச்சனையில்
நான் எழுவேன்,
நான் எழுவேன் ,
.......................................................................................
நமக்கான சாத்தியங்கள் அறுன்றொழியும்!
நமக்கான சமவுடமைகள் அல்லாது போகும்!
நமக்கான சரி நிகர்கள் தகர்ந்து தொலையும்!
அண்டப் பேரண்டம் எனும் தமிழ் வார்த்தையல்லாத
அகிலப் பிம்பத்தில்  என் கை நீளும்.
சுற்றி வளைக்க  அதலமும் பாதாளமும் கை வரும்.
விரல்கள் பூக்கும், நீ ஒருபோதுமளிக்காத  கணையாழி மின்னும்.

ஒ..ராமர்களே ....
உங்கள் சீத்தைகளை  கொண்டு போய் கைக்குட்டைக்குள் பதுக்குங்கள்.
ஒ...இரட்சன்னிய யாத்திரிகர்களே ....
உங்கள் இறை தூதப் படலத்தை  கன்னியாத்திரிகளுடன் பகிராதீர் !
ஒ...இன்று முளைத்த வீர இளைஞர்களே.....
உங்கள் யுவ ராசாப் பட்டங்களை  யுவதிகளிடமிருந்து ஒழியுங்கள் !

மரணத்தில் மிதக்கும்  மறு உயிரொன்று வந்து
உங்களில் தங்கியிருக்கப் பிரியப் படலாம்.
மறுத்து விடுங்கள்....
மறுத்துவிடுவது , எந்தப் பாவத்தையும் போல
யார் மீதும் பழி சொல்ல நேரிடாத செயல்,
மறுத்து விடுங்கள்...
மறுப்பதற்கான இதயங்களை சேகரித்துக் கொள்ளுங்கள்
தவறியும் மரணம் யாசிக்கும் சந்நியாசினிகளை அண்ட விடாதீர்கள்......

ஓ.....
மறுப்பது பற்றி யோசிக்கிறீர்களா?
மறுப்பது  ஒன்றும் மன்னிக்கக் கெஞ்சும்  மானங்கெட்ட பிழைப்பில்லை.
மறந்து விடுவது எனும்  மனிதாபிமானத்துக்குமப்பால்,
மறுப்பது மட்டும்  தாழ்வுச் சிக்கலில்லை !
மறுப்பது தான் சாலச் சிறந்தது.....
மறுக்க அழையுங்கள்....
மறுக்க அழையுங்கள்....
மறுப்பதற்குக் கற்றுத் தாருங்கள்....
மறுபடியும் மறுபடியும்  மறுப்பதற்குக் கற்றுத் தாருங்கள்....

சாட்டைகளால் முதுகில் ஓங்கி
அடிப்பதைக் காட்டிலும்,
மறுப்பது  அழகு.....
வாசனையே இன்றி வனப்பு ஓடியும் வரை,
மூக்கை ஓட்ட அறுத்தது விடலிலும்,
மறுப்பது அழகு....

ஒ...தேவ கணமே.....
உயிரிலும் இனிய கண்மணியே....
அந்தத்தின் அனுபந்தமே ......
மறுக்க அழை.....
மறுக்க அழை.....
மறுக்க மட்டுமாவது அழை....
மறுத்தல் என்பது மறக்க முடியாது போகும் வரை மறுக்க அழை....

மறுக்க மட்டும் அழைத்துக் கொண்டே இரு...............



நிலா-
23/05/2011

Comments

Popular posts from this blog

சாமகானமும் காம்போதியும்

முருகையன் ஒரு மொழிபெயர்ப்புச் செய்தார். மொழிபெயர்ப்பு எண்டும் சொல்ல முடியாது,சாதுவா மொழிபெயர்ப்பும்,திறமையான கற்பனையும் போட்டு செய்யுள் வடிவத்தில, இளநலம்! என்ன இளநலமா?ஹையா கிளுகிளுப்பான கதை வரப்போகுது. குமாரசம்பவம் (ஸாரி வேற கண்டென்ட் எண்டு நினைக்கப்படாது, ஐ ஆம் வெரி டீசன்ட்) காளிதாசன் குமாரசம்பவத்தில எழுதின அதே கதையை தமிழில தந்தவர். அதில தான் இந்தக் கதை வருகுது.  சாமகானம் சாமகானம் எண்டு ஒண்டு சொல்லக் கேட்டிருப்பம். “சாமகானம் பாடினான்” எண்டு நாலாம் வகுப்புச் சமய பாட புத்தகத்தில ஒரு பாடம் இருக்கு. பத்துத் தலையும், கையில ஒரு தலையுமாக் கணக்குப் பிழையா மொறாயஸ் கீறின இராவணனிண்ட மீசை வெச்ச படம் இருக்கும், இப்ப ஞாபகம் வந்துட்டுதா? அந்தக் காலத்திலேயே தலைகளிண்ட கணக்கை எண்ணிப் பாத்தனாங்கள் ஆக்கும். (தலைக்கணக்கு முக்கியம் அமைச்சரே) இப்ப சாமகானத்தைப்பற்றிப் பாப்பம். காளிதாசன் குமாரசம்பவம் எழுதேக்க, சும்மா கற்பனைகுதிரையை காட்டாற்று வெள்ளம் போல பறக்க விடுறேர்.  மிஸ்டர் சிவனும் மிசஸ் உமாவும் கலியாணமான புதிசில, (ஏன் கல்யாணமான பழசில யாரும் வெளிய போறதில்ல எண்டு நெடுங்காலமா டவுட்) சும்மா வெளிய வெளிக்

இராவணேசன் ; Maunaguru's 'Ravanesan'

நெறியாள்கை - பேராசிரியர் மௌனகுரு. இடம் -கொழும்பு கலை இலக்கியப் பேரவை. காலம்- சனி(13.02.2010)  மாலை 6.30மணி. சனி மாலை(13.02.2010) பேராசிரியர் மௌனகுரு அவர்களின் 'இராவணேசன்' நாடகம் நடைபெறவிருக்கிறதென்று நண்பரொருவர் தகவல் சொன்னார். இருந்த எல்லா வேலைகளையும் புறந்தள்ளி விட்டேன். நாடகங்கள் என்றவுடன்  வரும் இந்த தொலைகாட்சி சீரியல்களையே கண் ஞாபகத்தில் கொண்டுவந்து முகத்தை அஷ்ட கோணலாக்குகிறது. மேடையமைப்பும், அரங்கமும்,அரிதாரம் பூசிக்கொண்ட பாத்திரங்களும், நேரடியான காட்சிகளூட்டும் கிளர்வும், எங்களுக்கு முன்னாள் ஒரு தலைமுறை இதனூடே வாழ்ந்து காட்டியிருக்கிற விடயமும் தெரிவதில்லை. மாற்றங்கள் மட்டுமே மாறிக் கொண்டிருந்தாலும்,எங்களின் முன்னோடிகள் வழி வந்த கலைப் பாதையை எடுத்தியம்புதலுக்கும்,அதற்கான வரவேற்புக்கும் இங்கு இடமில்லை எனும் போது அவற்றையெல்லாம் தாண்டி மனதில் எங்கேயோ வலிக்கிறது. எங்களுடைய காலத்தில், முழுமையான கூத்துக்கலையோ, அரங்காடல்ககளையோ  காண்பதற்கு காலமோ மாற்றமோ ஏதோவொன்று இடந்தரவில்லை .இருப்பினும் யாராவது எங்கள்  நலிந்து போன கலைகளை மறுபடியும் இளஞ்சமுதாயத்திட்கு க

குழந்தைகளுக்கான நவீன தமிழ்ப் பெயர்கள்

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தல் எனும்போது, இவ்வளவு காலமும் வைத்த பெயர்கள் தமிழ்ப்பெயர்கள் இல்லையா எனும் கேள்வி எம்மில் பலருக்கு எழும். உங்கள் பெரும்பாலானோர் தமிழ்ப்பெயர் என்று எண்ணிக்கொண்டிருக்கும் உங்கள் பெயரை வட இந்தியக் கலப்பு,சமக்கிருத கலப்பு,ஐரோப்பிய,அரேபியக் கலப்புடனான பெயராக இனங்காணுவீர்கள்.  தமிழில் பெயர் சூட்டுவது இனத்துவேசம் உள்ள செயலா? :P இனத்தைக் கொண்டாடக் கூடிய செயல். மறத்தமிழன் என்று அடைமொழி இட்டுக்கொண்டு உலாவுவதை விட அழகான செயல் என்று எண்ணுகிறேன். இந்த அடையாளம் மிக அழகானது.  அண்மையில் நிறையப் பேர் தமிழில் குழந்தைகளூக்கான நவீனமான பெயர்கள் வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். தமிழில் பெயர்கள் பழமையானவையாக இருப்பது கூட இக்காலத்தோரின் தெரிவுக்குட்படாமைக்கு ஒரு காரணமாகும். பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் சிலவற்றை தொகுத்திருக்கிறேன்.சிலவற்றை கண்டும் பிடித்திருக்கிறேன். ( பிற்காலத்தேவைகளுக்கு ;)  ) வினைச்சொல் பெயர்கள் அஞ்சா ஆராதி ஆனந்தி  சலனி கோளறா இசி இனி தேயா மேதா வேயா வேகா மின்னு மிதவா தெகிழா நெகி