Skip to main content

புத்தம்.






புத்தனை,
போதையில் சந்தித்தேன்.
இன்று அவனிடம் எதுவுமில்லை
ஒரு ,காவியையும் ,
சதக் காகாசுகளையும் தவிர.....
காலத்தின்
அழுகிய நாற்றத்தால்
போதியில் சந்திக்க
வேண்டிய அவனை ..............................
..........................................................

பொம்மைகளின் யாசகர்கள் பற்றியும்
வானம் வழுக்கி விழுந்த தடம் பற்றியுமாய்
அவன் பதில்கள்
இருக்கவில்லை.

'வாசவதத்தை' பற்றியும்,
தீண்டப்ப டாத, வீணை பற்றியுமாய் இருந்தது....
அவன் பதில் .....

புனையப்படாத ஓவியத்திலிருந்து வரும்
அவனின் பௌர்ணமி ,....
பெருத்துப் போன பெருச்சாளி போன்றிருந்தது....!

அவனுக்கும் தெளிவில்லை ,
எனக்கும், தெளிவில்லை.....
காவிக்கும் , கர்த்தாவுக்குமான உட்கிடக்கையில்...........

அரச மரத்து
அணில் சொன்னது........
இவன் நெடுகாலமாய் இங்குதான் கிடக்கிறான்.....
வேலையத்த பயல்.....

மௌனத்தின் காற்று வெளி -
படபடத்தது....
அவனுக்கு மூல வியாதி வரக்கூடாமைக்கு வேண்டி -
மீண்டு வந்தேன்.

அவன் சீடன் சொன்னான்,
நானும் புத்தனாகி விட்ட கதை.....

திரும்பிப் பார்த்தேன்
அவன் அமர்ந்திருந்த இடம் -
சவக் கிடந்க்காய் கிடந்தது...

புத்தத்துக்கு பின்னாலும் ,
சரணத்துக்கு பின்னாலும் 'ஆமி'
தான் நின்றார்கள்.


-நிலா
2007

Comments

  1. ஒ! கவிதை கவிதை...
    நல்லா இருக்கு...
    ஆனா கவிதைகளை புரிந்து கொள்ற அளவுக்கு எனக்கு மண்டயில மசாலா இல்லயே...

    ReplyDelete
  2. சிறப்பாக உள்ளது...
    மொழியை சிறப்பாக கையாளும் திறன் உங்களுக்கு கைவரப்பெற்றிருக்கிருக்கிறது.

    //புத்தத்துக்கு பின்னாலும் ,
    சரணத்துக்கு பின்னாலும் 'ஆமி'
    தான் நின்றார்கள். //

    அருமையான வரிகள்.... யதார்த்தமும் கூட...!

    ReplyDelete
  3. //புத்தத்துக்கு பின்னாலும் ,
    சரணத்துக்கு பின்னாலும் 'ஆமி'
    தான் நின்றார்கள். //

    ஆஹா கலக்கல் வரிகள், எதற்க்கும் கவனமாக இருங்கள் நீதிதேவதை செத்து நீதிமன்றம் இடியும் நாடு இது.

    அழகாகக் கவிதை எழுதுகிறீர்கள், கவிதை எழுதுபவர்களைப் பார்த்தால் எனக்குப் பொறாமையாக இருக்கும் ஏனென்றால் எனக்கு கவிதை படிக்க மட்டும் தான் தெரியும்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சாமகானமும் காம்போதியும்

முருகையன் ஒரு மொழிபெயர்ப்புச் செய்தார். மொழிபெயர்ப்பு எண்டும் சொல்ல முடியாது,சாதுவா மொழிபெயர்ப்பும்,திறமையான கற்பனையும் போட்டு செய்யுள் வடிவத்தில, இளநலம்! என்ன இளநலமா?ஹையா கிளுகிளுப்பான கதை வரப்போகுது. குமாரசம்பவம் (ஸாரி வேற கண்டென்ட் எண்டு நினைக்கப்படாது, ஐ ஆம் வெரி டீசன்ட்) காளிதாசன் குமாரசம்பவத்தில எழுதின அதே கதையை தமிழில தந்தவர். அதில தான் இந்தக் கதை வருகுது.  சாமகானம் சாமகானம் எண்டு ஒண்டு சொல்லக் கேட்டிருப்பம். “சாமகானம் பாடினான்” எண்டு நாலாம் வகுப்புச் சமய பாட புத்தகத்தில ஒரு பாடம் இருக்கு. பத்துத் தலையும், கையில ஒரு தலையுமாக் கணக்குப் பிழையா மொறாயஸ் கீறின இராவணனிண்ட மீசை வெச்ச படம் இருக்கும், இப்ப ஞாபகம் வந்துட்டுதா? அந்தக் காலத்திலேயே தலைகளிண்ட கணக்கை எண்ணிப் பாத்தனாங்கள் ஆக்கும். (தலைக்கணக்கு முக்கியம் அமைச்சரே) இப்ப சாமகானத்தைப்பற்றிப் பாப்பம். காளிதாசன் குமாரசம்பவம் எழுதேக்க, சும்மா கற்பனைகுதிரையை காட்டாற்று வெள்ளம் போல பறக்க விடுறேர்.  மிஸ்டர் சிவனும் மிசஸ் உமாவும் கலியாணமான புதிசில, (ஏன் கல்யாணமான பழசில யாரும் வெளிய போறதில்ல எண்டு நெடுங்காலமா டவுட்) சும்மா வெளிய வெளிக்

இராவணேசன் ; Maunaguru's 'Ravanesan'

நெறியாள்கை - பேராசிரியர் மௌனகுரு. இடம் -கொழும்பு கலை இலக்கியப் பேரவை. காலம்- சனி(13.02.2010)  மாலை 6.30மணி. சனி மாலை(13.02.2010) பேராசிரியர் மௌனகுரு அவர்களின் 'இராவணேசன்' நாடகம் நடைபெறவிருக்கிறதென்று நண்பரொருவர் தகவல் சொன்னார். இருந்த எல்லா வேலைகளையும் புறந்தள்ளி விட்டேன். நாடகங்கள் என்றவுடன்  வரும் இந்த தொலைகாட்சி சீரியல்களையே கண் ஞாபகத்தில் கொண்டுவந்து முகத்தை அஷ்ட கோணலாக்குகிறது. மேடையமைப்பும், அரங்கமும்,அரிதாரம் பூசிக்கொண்ட பாத்திரங்களும், நேரடியான காட்சிகளூட்டும் கிளர்வும், எங்களுக்கு முன்னாள் ஒரு தலைமுறை இதனூடே வாழ்ந்து காட்டியிருக்கிற விடயமும் தெரிவதில்லை. மாற்றங்கள் மட்டுமே மாறிக் கொண்டிருந்தாலும்,எங்களின் முன்னோடிகள் வழி வந்த கலைப் பாதையை எடுத்தியம்புதலுக்கும்,அதற்கான வரவேற்புக்கும் இங்கு இடமில்லை எனும் போது அவற்றையெல்லாம் தாண்டி மனதில் எங்கேயோ வலிக்கிறது. எங்களுடைய காலத்தில், முழுமையான கூத்துக்கலையோ, அரங்காடல்ககளையோ  காண்பதற்கு காலமோ மாற்றமோ ஏதோவொன்று இடந்தரவில்லை .இருப்பினும் யாராவது எங்கள்  நலிந்து போன கலைகளை மறுபடியும் இளஞ்சமுதாயத்திட்கு க

குழந்தைகளுக்கான நவீன தமிழ்ப் பெயர்கள்

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தல் எனும்போது, இவ்வளவு காலமும் வைத்த பெயர்கள் தமிழ்ப்பெயர்கள் இல்லையா எனும் கேள்வி எம்மில் பலருக்கு எழும். உங்கள் பெரும்பாலானோர் தமிழ்ப்பெயர் என்று எண்ணிக்கொண்டிருக்கும் உங்கள் பெயரை வட இந்தியக் கலப்பு,சமக்கிருத கலப்பு,ஐரோப்பிய,அரேபியக் கலப்புடனான பெயராக இனங்காணுவீர்கள்.  தமிழில் பெயர் சூட்டுவது இனத்துவேசம் உள்ள செயலா? :P இனத்தைக் கொண்டாடக் கூடிய செயல். மறத்தமிழன் என்று அடைமொழி இட்டுக்கொண்டு உலாவுவதை விட அழகான செயல் என்று எண்ணுகிறேன். இந்த அடையாளம் மிக அழகானது.  அண்மையில் நிறையப் பேர் தமிழில் குழந்தைகளூக்கான நவீனமான பெயர்கள் வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். தமிழில் பெயர்கள் பழமையானவையாக இருப்பது கூட இக்காலத்தோரின் தெரிவுக்குட்படாமைக்கு ஒரு காரணமாகும். பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் சிலவற்றை தொகுத்திருக்கிறேன்.சிலவற்றை கண்டும் பிடித்திருக்கிறேன். ( பிற்காலத்தேவைகளுக்கு ;)  ) வினைச்சொல் பெயர்கள் அஞ்சா ஆராதி ஆனந்தி  சலனி கோளறா இசி இனி தேயா மேதா வேயா வேகா மின்னு மிதவா தெகிழா நெகி