கண்ணுக்கு லென்ஸ் வைத்துக்கொள்வது எந்தளவு சுகாதாரமான, ஆரோக்கியமான விடயம் என்பதைப் பற்றி பார்க்க முன்னர், பன்னிரண்டு வயது முதல் கண்ணாடி போட்டு, இற்றைக்கு பன்ரெண்டு வருசமா முக்குக் கண்ணாடியுடன் அல்லல்ப்பட்டு, லோல்ப்பட்டு, குப்பைகொட்டிய எனக்கு லென்ஸ் முதலில் பயங்கர ஆறுதலாகவும் பரம சவுகரியமாகவும் இருந்தது. கண்ணுக்கு லென்ஸ் போட்டுக் கொள்ள முதல், கிட்டத்தட்ட எட்டு வகையான கண்ணாடி மோஸ்தர்களை, பன்னிரண்டு வருடங்களுக்குள் மாற்றி விட்டேன். மோஸ்தர்களுக்காக மட்டுமல்ல,கண்ணின் பார்வைத்திறன் கண்ணாடி போட்டுக் கொண்டு வர வரக் குறைந்து கொண்டே போனது. ஒரு கட்டத்தில் பத்தடி தூரத்தில் நடந்து வருபவர் யார் என்று தெரியும், அவருக்கு மூக்கு புடைப்பாக இருக்கிறதா,சப்பையாக இருக்கிறதா என்கிற அனுமானம் கண்ணினால் எடுக்க முடியவில்லை. மிகக் கஷ்டமாகவிருக்கும் அந்த மாதிரியான சந்தர்ப்பங்களில். இப்பவே இப்படி எண்டா நாப்பது வயசாகிற போது கண்ணு மொத்தமாக நொள்ளையாக போய்விடும் என்கிறதாய்ப்படும். முந்தி ஒரு காலத்தில் நாப்பது வயது வரும் போது செத்துவிட வேண்டும் என்று நினைத்திருந்தேன், அதைத்தான், கண்பார்வையில் கோளாறு வரும் போது செய்ய