Skip to main content

Posts

Showing posts with the label குறி சொல்லி

மலபரிபாகம் !

                                         விரிவாக நான் ஒன்றுமே இன்னமும் எழுதவில்லை. என் எழுத்தில் இருந்து விரவி ஓடும் எச்சில் ஈயைப் போல காலத்தின் முன் சிறு முட்களைப் போல இப்படிப் பல 'போல'  வாக நீ தள்ளி ஓடுகிறாய். காப்பிய மானத்தைப் பற்றி அக்கறை கொண்டவனாக நீ இருக்கையில், அதில் பாதி காப்பாற்றிய மானமாவது எனக்கிருக்கக் கூடாதா? இல்லை, இருக்கக் கூடாது. அகம்பாவத்தின் அடிச் செருக்கு நீ, உனக்கேற்றாட் போல உன் மான விபரத்தைக் கூட்டிக் குறைக்கிற பொறுப்பு உன்னிடமில்லை. எந்தவொரு உயிரின் மீது நீ அளவு கடந்த பாசத்தை வைக்கிறாயோ, அந்த நொடி முதல் நீ  மனதாலும் உடலாலும், சமூகத்தாலும் பலவீனனாகிறாய். ஆக நீ கோழையாகி விட்டாய். 'குரு தேவா, நான் மலபரிபாகம் பால் ஆட்கொள்ளப் பட்டவள் என்பதை நீங்கள் தானே சொல்லியிருந்தீர்கள்?'  .....ஹஹ் பூ.....மலபரிபாகமா, நேற்று முதல் நீ அப்படியிருந்திருக்கலாம்,இன்று கடிகார முள்ளைப் பார்த்தாயா, காலத்தின் நிகண்டில் குத்திட்டு நிற்கிறது. ஒருகாலமும் முடியாது,உன்னால் ஒரு காலமும் முடியாது....! ஆக்ரோஷமாய்க் கத்தினார். மலம் என்று சிறப

கடவுள் பற்றி வாழ்தல் ............

                                                                                                    ....அம்மா, அந்த அனிச்சம் பூ பூக்குமாம்மா?....... பூக்கும் ராசாத்தி.......... 'எப்பம்மா பூக்கும்? .......... ...    மழை நிறையப் பெஞ்சு, காத்தும் சூரிய ஒளியும் தாராளமாக் கிடைக்கிரண்டைக்குப் பூக்கும். ......... "இன் சபிசியன்ட்"   பூட்ஸ் அப்பிடித்தானேம்மா ? ம்ம்ம்........ '' ஏண்டா,  தேவ மகனே , இந்த அனிச்ச மரம் எப்ப பூக்கும்? ......... 'தெரியேல்ல'.............., அது பூத்த அண்டைக்கு அதைப் பிச்சு எனக்குத் தருவியளா? ........... .........இல்லை....., மாட்டன். 'ஏன்? ............. அதை உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை. ......சரி, அணிச்சம்பூவைப் பிச்சுத் தரவேண்டாம்.அது எப்ப பூக்குதெண்டு பாத்தியள் எண்டா எனக்குச் சொல்லுவியலா? ......... 'இல்லை...., மாட்டன். 'உங்களுக்கு, 'இல்லை'யையும் 'மாட்டனை'யும் தவிர தமிழில வேற ஒன்டுமும் தெரியாதா? .......???? ...........தெரியுமே, திருப்புகழும், த

காகம்

                                                                                அண்டைக்கு எதோ விரத நாள் .சனி விரதம். அவள்பாடிக் கொண்டிருக்கிறாள் . அவள் பாடிக் கன காலம் .                ஒரு சுமூக கானம்.இதுவரைக்கும் எச்சந்தர்ப்பத்திலும் இது போல உணர்ந்ததே கிடையாது. இயற்கையின் கல்பிதம்!              காற்று, மழை, இடி, புயல் எல்லாமுமாய்க் கலந்தது. ஒரு மெல்லிய பூவினது மணம் நுகரக் கற்றுக் கொடுப்பது போல அந்த நரம்புக் கருவி நீண்ட நேரம் ஓசையாகிக் கொண்டேயிருந்தது .                  சாமியறையின் விளக்கு நூர்ந்தது கூடத் தெரியாமல் ....வானம் பூமியிலிருந்து விண்டு வெடித்து தனியே பிளவு படுவது தெரியாமல், பாடிக்கொண்டே இருந்தாள்.               இயற்கை அவளை முற்றிலுமாக வசீகரித்திருந்தது. அவளும் இயற்கையும் ஒன்றே தான்.   பாடுகின்ற பொழுதில் அவள் தான் கடவுள்! அவள் பாட , கண்களில் கண்ணீர் தளும்புகிறது.           'இப்படியே பாடீட்டிருந்தா செத்திருவாவா மாமா இவ...?   .................இல்லடா, அவ பாடாட்டாத் தான் இந்த வையமே செத்துடும். புல், பூண்டு, பூச்சி, மனுசர், விலங்கு ஒண்ணுமே இந்த வை

என் நாளினது சுமை

ம னிதனின் நிலைப்பாடு என்பது எந்தப் புள்ளியில் தங்கியிருக்கிறது என்பதற்கான கேள்வியுடன் ஆரம்பிக்கிறேன். சாதாரணமாக ஆசனத்தில் அமர்ந்து இருப்பீர்கள். அது அவ்வளவு சௌகரியப்படாத போது , காலைக் கொஞ்சம் மடக்கி, பிறகு காலுக்கு மேல் கால் போட்டு இன்னும் பிறகு புழு நெளிவதை போல கால்களைப் பின்னிக் கொண்டும், கொஞ்ச நேரமப்பால், கால்களை நிதானமாக பிரித்துப் போட்டும ஆயாசமான நிலையில் ....... இருக்க எத்தனிப்பீர்கள். இந்த உட்காருதலுக்கான கூர்ப்பே இவ்வளவு நீளுகையில், மனிதனின் நிலைப்பிற்கான கூர்ப்பானது எத்துனை நீண்டதாய் இருக்கும்.?உங்களைக் கடந்து செல்கின்ற நாட்களை ஒவ்வொருவரும் எவ்வாறு  கழிக்கிறீர்கள் ? புதிதாக புலருகின்ற நிதானமேயல்லாத காலைப் பொழுதில் மனமும் உடலும் வெறுப்பைச் சுமந்து கொண்டு உடலைக் காற்றில் மிதக்க வைக்கின்றது. நித்திரையின் இறுதிப்படி இன்னமும் கண்களில் பேராசையைத் தூண்டி , நாளின் அபவாதங்களை ஆராய்கின்றது. இந்த நாளின் தொடக்கம் ஒரு வேளை ஏதாவது ஆராய்ச்சியுடன் ஆரம்பமாகலாம். என்ன, எதுவென்ற கேள்விகளுடன் மணிகளை, விழுங்கி ஏப்பம் விடுகின்ற அவசரத்தில் காலம் நகருகின்றது.    கண்ணாடிக் கூட

குறி சொல்லி

      நா ன் படிப்பது தொடர்பான ஆராய்ச்சிகளை செய்து வந்தேன் . மேசைக்கு சமீபமாக தலையைக் கவிழ்த்துக் கொண்டே புத்தகத்துக்குள் அமிழ்ந்திருப்பது, புத்தகத்தின் முதற் பாகங்களை மடித்து ஒற்றைக் கையால் லகுவாக தூக்கிப் பிடித்துப் படிப்பது , ஒரேயடியாக , கட்டிலிலே அகல விரித்துப் போட்டு புத்தகங்களை மேய்ந்து பார்ப்பது ,ஒரு நிழல்த் தருவின் கீழே சாய்வு நாற்காலியைத் தேடிப போட்டுக்கொண்டே சலனமின்றிப் படிப்பது.... ஒ.... புத்தகங்களைப படிப்பதென்பது பெரியதொரு காரியம். அதற்கு முதலிலே புத்தகங்களைப் பற்றிய எண்ணக்கரு பரவ விரிந்திருக்க வேண்டும். சல்ஜாப்பமின்றிய தெளிந்த நனவோடை போல புத்தகளின் அறை எண்கள் கிடாசப் பட வேண்டும். புத்தகத்துக்குள்ளே கிடக்கின்ற கூறுகள் நிகண்டுகள் போல நெருங்கி லயிக்க வேண்டும் .பதியையும் பசுவையும் போலத்தான், ஜீவாத்மா பரமாத்மாவோடே உளறிக்கொண்டு கிடக்க வேண்டும். இது சோதினைப் புத்தகமாக இருந்தாலும் சரி........... புத்தகங்களைப் படிக்கிற தருவாயில் நான் சமனிலியாகவும் , மாறிலியாகவும், சமதானியாகவும் நாளுக்கு நாள் மாறிக் கொண்டு வருமுண்மை பலத்தது.  இது வெறும் பலித்த சமண்பாடேயண்றி முழுவதும் அல்லவெண்