Skip to main content

Posts

Showing posts with the label சும்மா

இரண்டு கவிதைகள் ; Two Poems

                                                                                                       ஐந்தாம் படைக் காதல் எனக்குத் தெரிந்த வரைக்கும் கடல் ஆர்ப்பரிக்கத் தொடங்கியது- என் அகாலத்தின் போதே மெல்லிய சாம்பலில்- சுடுகின்ற தணல் தாங்கும் குளிரைப் போல- இருக்கிறது- எனக்குள்ளான காதல். இது, வகையறா வகைக்குரியது. இசையினது சாரலில் தூணோரமாக தழுவியபடி நிற்கின்ற நாணலைப் பிடித்தபடி, செத்துப் போன மஞ்சளிளைகளைப் பார்க்கையில்- என், காதலின் ஆண்டு வளையம் தெரிகின்றது. புலப்பட்டுப் போக, இறுதியில் மேகங்களைப் பிழிந்து, சாறு கொண்டுவந்து, காயங்கண்ட இடங்களில் தெளிக்க, சில்லிடுகிறது தேகம்- அக்கினிக் குமிழியின் ஆரை தீண்டியது போல, மௌனக்குடிலிலிருந்து வரும் ஆபோகிச் சங்கீதத்தில்- அவர்களிருக்கிரார்கள், வேட்டி நிறைந்த பூக்களுடன் அவளிருக்கிறாள். தீவிரமான விரகத்தின் முடிபில்- போய்க் கேட்கிறேன், ஐந்தாம் படைக் காதலை- ஆயுதந்தந்துதவும் படிக்கு... அவர்களின் , பிரிக்க முடியாத பல்லிடுக்கிலிருந்து சிரிப