படபடவென்று, இறக்கையை அடித்துக் கொண்டு அந்தரத்தில் துடிக்கின்ற அந்த இரவுப் பட்சி, இரவின் கவிந்து போன நரையை ரசிகத் தன்மைக்கு அப்பாலே எட்ட நின்று பார்க்கிறது- இருந்தும் கூடக்குறைய அதன் மையப்புள்ளிக்குள் அதனால் இறங்கமுடியவில்லை. நான் சாய்வு நாற்காலியைத் தேர்ந்தெடுத்து, ஆயாசமாக உட்கார்ந்து கொண்டு இஞ்சித் தேத்தண்ணியை ருசிக்கிறேன். எனக்கு எல்லாவற்றிலும் ரசனையுண்டு. அந்த மாமரத்தில், தளிர் வரத்தொடங்கி நாளாகீற்று- மாம்பூ பூத்துக் குலுங்கும் குடலையின் உன்னத வாசம்...! அன்றைய மாலை, இருண்டு போன சூரியனின் அழைப்பை மீறி வௌவால்களை மரத்துக்கு அழைக்கிறது. எங்கிருந்தோ நெடிய வீச்சத்துடன் வரும் பீத்தோவனின் மேற்கத்தைய இசையொன்றோடு என் இஞ்சித் தேத்தண்ணியும் தீர்ந்து போகிறது. தீர்ந்து போன படியினால், இன்னொரு நாள் இஞ்சித் தேத்தண்ணியைக் குடிக்கமாட்டேன் என்றதிலை. என் சுரனையில்லாத் தனம் என் போலவே என்னையும் ஏமாற்றிக் கொண்டிருந்தது. அந்த இராப் பட்சி, இன்னமும் இறக்கையை அடித்து ஓயவ