Skip to main content

Posts

Showing posts with the label மரபுக் கவிதை

நிலையாமை என்றும் !

ஒரு கோடி இயலாமை நிலையாமை ஆகும் அது கூடி தணியாமை தவிக்காமல்ப் போகும் சில கேள்வி சிதையாமல் நெடு நாளை வாழும் சிதைவோடு செல்வார்க்கு செல்வாக்கும் கூடும் சில நாளில் இவையாவும் சிதையாமல் வாழும் சிதையாமல் வாழ்வாகில் சிந்தாமல் ஓயும் ஓயாத ஓசைக்கு ஒலியென்று ஓசை பேசாத சொல்லுக்கு வெறும் என்று பாசை வெறுமென்று ஆனாலே வெளி வேடத் தொல்லை  தொலையாது ஒழிந்தோடி என்னென்ன லாபம் என்னான காலத்தில் ஒழிந்தென்ன பாவம் பருவோடு பயிலாமை மனதார வாழ்த்தும் பயமோடு பல தாரம் பருகாமை கூடும் கொடியோடு மலர் கொண்டு கொடும்பாவி ஆடும் அடியோடு மலராகி அரும்பாகி வாழும் அரும்பாகி அவையாவும் அல்லாது போகும் கரும்பாகும் எண்ணங்கள் கல்லாகிப் போகும் ஒரு வேளை உயிர் வந்து ஓயாமல் உருகும் அது காலை அலை வந்து கடலோடும் போகும் கலையாமை கனவென்று கடிதாரம் பேசும் கடிகாரம் பேசாத கனவென்ன ஆகும் கனவென்று ஆகாமல் கலையாதும் போகும் கலையாத கனவுக்குள் கலை ஒன்று ஆடும் கலையொன்று ஆடாமல் கலைந்தெங்கு போகும் கலைந்தங்கு போனாலும் கனவோடு வாழும் பொய்யாகிப் போகாத பொருள் ஒன்றும் இல்லை பொய்யாகிப் போனாலே பொருள் அங்

கண்ணன் பாடல்

சொன்ன பொருளிலெலாம் கண்ணா சேதி சொல்ல மறந்தாயோ ! - சேதி-சொன்ன பொருளிலெல்லாம் கண்ணா மீதி சொல்ல மறந்தாயோ- மீதி- சொல்லியிருந்தும் கண்ணா பாதி சொல்லினை மறந்தாயோ- பாதி-சொல்லிலும் ஒரு சொல் சொல்லாமல் நின்றாயோ- சொல்லாமல் நின்றதினால் சோதி என்று ஆனாயோ- சோதி என்று ஆனவனே சேதி ஒன்று தாராயோ ? கேள்வி உன்னைக் கேட்பதற்கே வேள்வி பலம் தாராயோ - வேள்வி நிதம் செய்வதற்கே தோளில் பலம் தாராயோ- தோளில் பலம் சேர்த்து விட்டு தோல்வியினைச் சேர்ப்பாயோ- தோல்வியினைத் தோள் கொடுக்க துன்பமினைத் தருவாயோ- துன்பமிதைச் சேர்த்துவைக்க தொல்லையினைத் தாராயோ- தொல்லைகளின் தொன் முடிவில் உன் புன் முகத்தைத் காட்டாயோ- தோல்வி ஒன்று கண்ணா நீ என் தோளில் வந்து ஏற்றாதே- ஆழி பயில் மன்னா நீ என் காலில் பழி சேர்க்காதே - வாலிபத்தை ஒரு வழியாய் வலி நிறைத்து விற்காதே- உன் விற்பனையை விஞ்சுமொரு விலை மதிப்பைச் செய்யாதே- விலை போவார்க் குலமொழுக கொஞ்சும் படி நிற்காதே- தானாய்க் -கொஞ்சுமொரு அஞ்சுகத்தைக் கச்சவிழத் தள்ளாதே ! தேளை விட்டுத் தேன் பருக, சாலை விட்டுத் தேர் விலக காளை விட்டுப்போன பின்னே புதுப

பிச்சிப் பெரும்பாடல் !

ஒய்ய நினவாத ஒன்கடலும் வீழாத, பைய நடவாத பாலுருகிப் பாடாத, ஐய, உன்னை அன்றி ஆயகலை அறியாத, செய்ய அறியாத சேதி அறியாத, கொய்ய மலர்ப்பங்கு கோதிக் குலையாத, பொய்ய உரைத்தாலும் போதும் மறையோயே !  வெங்கு புலையோயே வேறு விளையோயே ! அங்கு அலையாயே ஆழி மழையோயே ! பங்கு சிறுத்தாலும் பாதி கறுத்தாலும்- எங்கும் உனைத் தேடி ஏங்க வைத்தாயே ! வெம்புனல் தீ பெய்து,சங்கர,கனல் செய்து, கொங்கு நின் கோ கழல் பூட்டி, அம்புவி ஆர்த்தெழ வேண்டி, என்புரு ஏய்த்து மாய்த்து, அம்பு நின் அன்பு பாய்ச்சி, ஆணவம் அடியோடழித்து, கொன்றையில் கிலுகிலுப்பை செய்து, கிண்டியில் வேதம் பாய்ச்சி, ஒன்று நான் செய்யப் போக, ஒன் நிழல் ஓய்ந்து போச்சு ! உருவுடையார் எலாம் காண நிற்கிலர்- பெருவுடையார் தோற்றமேலாம் போல நிற்கிறர்- கருவுடைக் கொற்றமெலாம் தீது தைக்கிறர்- தெருவிடையோர் போதல் இன்னும் தேக்க மறுக்கிறர்- தேர்ந்து சொல்லும் வாய் முதலே தெரிதல் பிழையோ-  கூர்ந்து கொல்லும் ஆயுதமே குணத்தில் வெல்லோ?  தேர்ந்து சொல்லச் சேதியில்லை - இங்கோ , நானோர்ஆவுடையாக் கோலமென இப்போ வாய் பிளக்கக் கண்டாய்...!  

இயல் ஒன்று தருவே !

                              விழ ஒணாத நீ - வீழ ஒணாத நீ -அழ ஒணாத நீ- ஆள ஒணாத நீ- பகல் ஒணாத நீ- அகல் ஒண்ணாத நீ-  கங்குல் புகழ் ஒணாதபெரும் பயிற்ருப் புலவ நீ - என்றும் தகல் விளங்கா பெரும்  தருக்கமும் நீ ! கன வளவாத கழ வளவாத வின வளவாத விளை நீ பயில் வளவாத பரு வளவாத அரு மருந்தாகும் அயிர் நீ துணை வளவா இணை வளவா பிணை வளவா பெரும் அத்தன் என்னை ஆள்பவன் நீ ! பொன்னுற்றே பொருளுற்றே துகிலும் அகிலுற்றே  கலையுற்று களியுற்ற என் காலக் கிளை பற்றி நின் தன்னும் வேண்டா தனையும் வேண்டா  தானொடு அடங்கலுற்றேனே ! இரு பகல்வா ஒரு பகல்வா முழுதகலா முதல்வா தரு கருக்கும் விழி பருக்கும் சிறை உதிர்க்கும் தணலா விலை மதிக்கும் மதி பதிக்கும் உலை கொதிக்கும் இனி தகிக்கும் இயல் ஒன்று தருவே ! நிலா - 17 .09 .2010  

பெரும் பரனோடு பாவி -கவிதை

      மூழ்கிச் சா என் கடவுளே உன் உத்தமத்தின் அறுதியில் அறுதி காண் அம்பலனே ஐம்பெரும் அவத்தையிலே   அறு படுந் தீயில் அயில் பெரும் பரனே பரமொடு பாங்கர் படுத்துறங்கு முன் பாவைப் பழி ஏகில் ஆண்டும் நீ தீ தீண்டாமல் திகம்பரனாய் என்னை திசையணி   பற்றுக்கு மேலாய்ப் பரமன் ஒழிந்திடும்    அற்ற குடிலுக்கு ஊற்றாய் வழிந்திடும் என்னன்னை நீ எற்ற உன்திருக்கால் ஒற்றி    அற்றுப்போகவென இற்றுப் போய் எனதுள்ளம் ! எற்றைக்கும் ஏற்கும் எனப் பணியேனே இச்சை ஆல். ஆல் இச்சை ஆவதுமிச்சை கொச்சை மொழியிலுன் கொற்றம் பிடுங்கி ஓர் பிச்சைப் பாத்திரமேந்தியதன் அட்சய விளிம்பிடுக்கில் அடுத்தடுத்து ஊற்று உன்ரவை ஊற்றிய உறவுதனை ஒருக்களித்துன்ப துன்ப மில்லாப் பொருதி நீ அளி ! அளித்தோய்க்கும் அளி அமுதம் அள்ளி அளி தோய்த்து ஆற அள்ளி கிளி தூக்கும் கிளர்ந்தோங்கும் கிளி முனிவ கிழவா விழவா உன் விழி போலுந் தெளி அசையும் நதிச் சரிவில்-   இலை போல் இல்லா பூப் போல் இல்லா இயல்பிலும் இல்லா கலை போல் இல்லா கருத்திலும் இல்லா கருணையும் இல்லா வசை போல் இல்லா வாசியும் இல்லா முது கொன்றளுமி

ஆளச் சொல்லுகிற ஆட்சிப் பாட்டு

                              அரவச் சடை கழழில் பூட்டி அருவத் துயில் விழியில் கொண்டு அருக்கக் கதிர் அகலம் பரப்பி ஐம்பொன் உன்னை ஆழேன் அருகில்?  இரக்கக் குணம் சிறிதும் இல்லா இன்பப் பொருள் எதிலும் அல்லா மெய்யன் உன்னை மெச்சேன் பொழுதில்? பொய்யன் உன்னை புகழேன் வாதில்? [எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்] வானமே இரு சோலை வான்முகிலும் நாடும் கானமே  ஒரு பாட்டில் கவியரசு செய்யும் ஏனம் ஒரு கிண்ணம் பாலமுது  கொய்து பானமெனப் பருக்கும் சேய் எனது கன்றே ! கண்ட திருக்கோலம் காட்சிப் பிழையின்றி கைகளை தலை மீது தானுயர்த்தி தவிசு பாடி பொய்களை பூசுற போதுமென  அகஞ்சொல்லி அல்லிக் குவளையிவள் ஆதாரமின்றிப் படர்ந்து !  [ஆசிரியத்துறை] வேள்வித் தீயில் வெட்கிக் குனிகையில் ஆவி பெருகி  அங்குமிங்கும் ஒழுகி -ஐயம் இல்லாமல் ஐம்புலனும் கருகி அட்டமா சித்திக்கு அப்பாலும் தாவித் தாவி, தன் நிலைபரம் தவித்து- கடினமடா காத்திருத்தல் காம்போடு வேர் பிடுங்கல்! [ஆசிரியத்துறை]  மெய் நிகர்த்தப் பாடுபட்டு மெய்யாலே விதிர் விதித்து கை நிறையப் பாடும் பட்டு பாழுமோர் பழியைச் சுமந்து "

அவைப் பழி

மண்ணில் வாழ்மின்னு அலகில்சீர் வன்னிலங்கை பொன்போல் மன்னும் மனு நீதி கண்ணும் திரை சேரும் கலையது திருந்தோதி முறையது வாழ்ந்த பலர். முன்னுமில்லையது கேளா செங்கதிரோன் வெடித்தான் பகட் போது வடவைதான் முகம் புலர்ந்து குவலயம் பண்ணி-சோலையிட் சிறப்புற. கண்ணும் கட் பட்டு,பாதகம் பழந்தமிழ் மறைமொழியும் சிதறி-கனியற்றரறு போல மலர்மகள் பொங்கு கங்கு ஊடு போகி தொலைந்தனள் உயிர் பதைக்க. வெங்குமில்லையது போல் பழி பாவம் பொருளில்லார் போருள்கொண்டார் பொருளற்று போதுமின் முன் பொருளோ பொருளாகி உயிர் போதும் நிலையறவாய். அவைகுலைந்து சபை சரிந்து மறுமை நீதியோழிந்து கடைவாசல் மாய்தலெனும் பேருண்மை கொண்டு நட்கனவு கண்டாரை நமன் கொண்டனனே. துயர் மிகு மாந்தர் துடிப்பதுவுமிறை பொறுக்க செவியற்றோ கிடந்தவன் கோபுரஞ்சரிய கல்லெனக்கிடந்தவன் மணிமுடிதரித்தவன் மண்ணேயானான். பின் முன் வந்தவன் கேடு புரிந்தான் ஈகாடு ஆகாடு சாகாடு பூகாடு ஒன்றே போகாது போகாது பாவாது வந்த கொலைன்ஞனின் அறம்பாடி. பக்கமும் துக்கமும் நீருரூக்கொண்டதெந்தாகாரமும் இவ்வளவில் நீளும் நெடு