Skip to main content

கண்ணன் பாடல்







சொன்ன பொருளிலெலாம் கண்ணா சேதி சொல்ல மறந்தாயோ ! -
சேதி-சொன்ன பொருளிலெல்லாம் கண்ணா மீதி சொல்ல மறந்தாயோ-
மீதி- சொல்லியிருந்தும் கண்ணா பாதி சொல்லினை மறந்தாயோ-
பாதி-சொல்லிலும் ஒரு சொல் சொல்லாமல் நின்றாயோ-
சொல்லாமல் நின்றதினால் சோதி என்று ஆனாயோ-
சோதி என்று ஆனவனே சேதி ஒன்று தாராயோ ?

கேள்வி உன்னைக் கேட்பதற்கே வேள்வி பலம் தாராயோ -
வேள்வி நிதம் செய்வதற்கே தோளில் பலம் தாராயோ-
தோளில் பலம் சேர்த்து விட்டு தோல்வியினைச் சேர்ப்பாயோ-
தோல்வியினைத் தோள் கொடுக்க துன்பமினைத் தருவாயோ-
துன்பமிதைச் சேர்த்துவைக்க தொல்லையினைத் தாராயோ-
தொல்லைகளின் தொன் முடிவில் உன் புன் முகத்தைத் காட்டாயோ-

தோல்வி ஒன்று கண்ணா நீ என் தோளில் வந்து ஏற்றாதே-
ஆழி பயில் மன்னா நீ என் காலில் பழி சேர்க்காதே -
வாலிபத்தை ஒரு வழியாய் வலி நிறைத்து விற்காதே-
உன் விற்பனையை விஞ்சுமொரு விலை மதிப்பைச் செய்யாதே-
விலை போவார்க் குலமொழுக கொஞ்சும் படி நிற்காதே-
தானாய்க் -கொஞ்சுமொரு அஞ்சுகத்தைக் கச்சவிழத் தள்ளாதே !

தேளை விட்டுத் தேன் பருக, சாலை விட்டுத் தேர் விலக
காளை விட்டுப்போன பின்னே புதுப் பாலையொரு பசு தருமோ!
ஆளை விட்டு ஊர் புழங்க, ஊளை விட்டு நரி கலங்க
மாலை இடப் போன கையை மறப்பாளோமலர்க்க்கணிகை !

கோழி போலக் கொத்தி வந்து மடிக் கொய்யகத்தில் கட்டி வந்து-
பல்லிழிக்கும் பல்லி போலே பலமார்கதையே சொல்லிடுவேன் -
உள்ளிருக்கும் உன் நேசம் எட்டு எள்ளெனப் பிரித்தாலும்
கள் மணக்கும் காம் -பூவாய் காய் மணப்பேன்- பின் பூப்பூப்பேன் !

சோலையிலே சொல்லெடுத்து ஆலையிலே கரும் பூ - வெடுத்து-
காலையிலே கண் வளர்ப்பேன்- காணாத இரவைக் காட்டி!
ஆன மொத்தம் நீ மருகா இந்த ஏழை பக்கம் ஏன் உருகாய் -
ஆளில்லாத கிழம் போல் ஏன் அடுப்படியில் இன்னும் கிடந்தாய்!

ஆம்பல் மலர்க் கொய்து உன்றன் கால் பணிய ஆசை !
என்றன் ஆழி பயிர் மொண்டு வந்து சேவை செய்ய மாஞ்சை!
மோகம் என்னை வாட்டும் வரை-
 என் தேகம் எங்கே தேக்கம்.

தாகம் என்று சொல்ல மாட்டேன் தர்க்கம் இல்லை கண்ணா-
ஆன மட்டும் ஆக விடு என் ஆவியினைப் போகவிடு
போன வுயிர் புறக்கணிக்க -
உன் புண்ணியத்தை மறந்து விடு!

-நிலா-

இந்தப்பாட்டு / கவிதை "வலஜி" ராகத்தை அடிப்படையா மனதில வெச்சுக் கொண்டு மெட்டுப் போடாமலேயே ஒரு இறுக்கமான இடை ராத்திரியில், கிறுக்கினது :)
2010

Comments

Popular posts from this blog

சாமகானமும் காம்போதியும்

முருகையன் ஒரு மொழிபெயர்ப்புச் செய்தார். மொழிபெயர்ப்பு எண்டும் சொல்ல முடியாது,சாதுவா மொழிபெயர்ப்பும்,திறமையான கற்பனையும் போட்டு செய்யுள் வடிவத்தில, இளநலம்! என்ன இளநலமா?ஹையா கிளுகிளுப்பான கதை வரப்போகுது. குமாரசம்பவம் (ஸாரி வேற கண்டென்ட் எண்டு நினைக்கப்படாது, ஐ ஆம் வெரி டீசன்ட்) காளிதாசன் குமாரசம்பவத்தில எழுதின அதே கதையை தமிழில தந்தவர். அதில தான் இந்தக் கதை வருகுது.  சாமகானம் சாமகானம் எண்டு ஒண்டு சொல்லக் கேட்டிருப்பம். “சாமகானம் பாடினான்” எண்டு நாலாம் வகுப்புச் சமய பாட புத்தகத்தில ஒரு பாடம் இருக்கு. பத்துத் தலையும், கையில ஒரு தலையுமாக் கணக்குப் பிழையா மொறாயஸ் கீறின இராவணனிண்ட மீசை வெச்ச படம் இருக்கும், இப்ப ஞாபகம் வந்துட்டுதா? அந்தக் காலத்திலேயே தலைகளிண்ட கணக்கை எண்ணிப் பாத்தனாங்கள் ஆக்கும். (தலைக்கணக்கு முக்கியம் அமைச்சரே) இப்ப சாமகானத்தைப்பற்றிப் பாப்பம். காளிதாசன் குமாரசம்பவம் எழுதேக்க, சும்மா கற்பனைகுதிரையை காட்டாற்று வெள்ளம் போல பறக்க விடுறேர்.  மிஸ்டர் சிவனும் மிசஸ் உமாவும் கலியாணமான புதிசில, (ஏன் கல்யாணமான பழசில யாரும் வெளிய போறதில்ல எண்டு நெடுங்காலமா டவுட்) சும்மா வெளிய வெளிக்

இராவணேசன் ; Maunaguru's 'Ravanesan'

நெறியாள்கை - பேராசிரியர் மௌனகுரு. இடம் -கொழும்பு கலை இலக்கியப் பேரவை. காலம்- சனி(13.02.2010)  மாலை 6.30மணி. சனி மாலை(13.02.2010) பேராசிரியர் மௌனகுரு அவர்களின் 'இராவணேசன்' நாடகம் நடைபெறவிருக்கிறதென்று நண்பரொருவர் தகவல் சொன்னார். இருந்த எல்லா வேலைகளையும் புறந்தள்ளி விட்டேன். நாடகங்கள் என்றவுடன்  வரும் இந்த தொலைகாட்சி சீரியல்களையே கண் ஞாபகத்தில் கொண்டுவந்து முகத்தை அஷ்ட கோணலாக்குகிறது. மேடையமைப்பும், அரங்கமும்,அரிதாரம் பூசிக்கொண்ட பாத்திரங்களும், நேரடியான காட்சிகளூட்டும் கிளர்வும், எங்களுக்கு முன்னாள் ஒரு தலைமுறை இதனூடே வாழ்ந்து காட்டியிருக்கிற விடயமும் தெரிவதில்லை. மாற்றங்கள் மட்டுமே மாறிக் கொண்டிருந்தாலும்,எங்களின் முன்னோடிகள் வழி வந்த கலைப் பாதையை எடுத்தியம்புதலுக்கும்,அதற்கான வரவேற்புக்கும் இங்கு இடமில்லை எனும் போது அவற்றையெல்லாம் தாண்டி மனதில் எங்கேயோ வலிக்கிறது. எங்களுடைய காலத்தில், முழுமையான கூத்துக்கலையோ, அரங்காடல்ககளையோ  காண்பதற்கு காலமோ மாற்றமோ ஏதோவொன்று இடந்தரவில்லை .இருப்பினும் யாராவது எங்கள்  நலிந்து போன கலைகளை மறுபடியும் இளஞ்சமுதாயத்திட்கு க

குழந்தைகளுக்கான நவீன தமிழ்ப் பெயர்கள்

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தல் எனும்போது, இவ்வளவு காலமும் வைத்த பெயர்கள் தமிழ்ப்பெயர்கள் இல்லையா எனும் கேள்வி எம்மில் பலருக்கு எழும். உங்கள் பெரும்பாலானோர் தமிழ்ப்பெயர் என்று எண்ணிக்கொண்டிருக்கும் உங்கள் பெயரை வட இந்தியக் கலப்பு,சமக்கிருத கலப்பு,ஐரோப்பிய,அரேபியக் கலப்புடனான பெயராக இனங்காணுவீர்கள்.  தமிழில் பெயர் சூட்டுவது இனத்துவேசம் உள்ள செயலா? :P இனத்தைக் கொண்டாடக் கூடிய செயல். மறத்தமிழன் என்று அடைமொழி இட்டுக்கொண்டு உலாவுவதை விட அழகான செயல் என்று எண்ணுகிறேன். இந்த அடையாளம் மிக அழகானது.  அண்மையில் நிறையப் பேர் தமிழில் குழந்தைகளூக்கான நவீனமான பெயர்கள் வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். தமிழில் பெயர்கள் பழமையானவையாக இருப்பது கூட இக்காலத்தோரின் தெரிவுக்குட்படாமைக்கு ஒரு காரணமாகும். பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் சிலவற்றை தொகுத்திருக்கிறேன்.சிலவற்றை கண்டும் பிடித்திருக்கிறேன். ( பிற்காலத்தேவைகளுக்கு ;)  ) வினைச்சொல் பெயர்கள் அஞ்சா ஆராதி ஆனந்தி  சலனி கோளறா இசி இனி தேயா மேதா வேயா வேகா மின்னு மிதவா தெகிழா நெகி