Skip to main content

அவைப் பழி




மண்ணில் வாழ்மின்னு அலகில்சீர்
வன்னிலங்கை பொன்போல் மன்னும்
மனு நீதி கண்ணும் திரை சேரும்
கலையது திருந்தோதி முறையது வாழ்ந்த பலர்.

முன்னுமில்லையது கேளா
செங்கதிரோன் வெடித்தான் பகட் போது
வடவைதான் முகம் புலர்ந்து குவலயம்
பண்ணி-சோலையிட் சிறப்புற.

கண்ணும் கட் பட்டு,பாதகம் பழந்தமிழ்
மறைமொழியும் சிதறி-கனியற்றரறு போல
மலர்மகள் பொங்கு கங்கு ஊடு போகி
தொலைந்தனள் உயிர் பதைக்க.

வெங்குமில்லையது போல் பழி பாவம்
பொருளில்லார் போருள்கொண்டார்
பொருளற்று போதுமின் முன்
பொருளோ பொருளாகி உயிர் போதும் நிலையறவாய்.

அவைகுலைந்து சபை சரிந்து
மறுமை நீதியோழிந்து கடைவாசல்
மாய்தலெனும் பேருண்மை கொண்டு
நட்கனவு கண்டாரை நமன் கொண்டனனே.

துயர் மிகு மாந்தர் துடிப்பதுவுமிறை
பொறுக்க செவியற்றோ கிடந்தவன்
கோபுரஞ்சரிய கல்லெனக்கிடந்தவன்
மணிமுடிதரித்தவன் மண்ணேயானான்.

பின் முன் வந்தவன் கேடு புரிந்தான்
ஈகாடு ஆகாடு சாகாடு பூகாடு
ஒன்றே போகாது போகாது பாவாது
வந்த கொலைன்ஞனின் அறம்பாடி.

பக்கமும் துக்கமும் நீருரூக்கொண்டதெந்தாகாரமும்
இவ்வளவில் நீளும் நெடு கிடை தீவிடை
அல்லனவும் அல்லவாம் அறம் பெருகும்
அன்னவள் அள்ளித்தர ஆகாரம்.

கொலை பாதகந் தெரியா புளுவிடை
கடியது காவிடை அழிந்து புலன்திட
புல்லதுவும் பூண்டிடையும் சொட்பமும்
இல்லையது அருமருந்தொரு துளி நீரும்.

கோகாத்த கோபுரம் நாகாத்த நம்பவம்
சீ காத்த மூலவம் சாகாக்கும் குலமெலாம்
கா காக்க மூதிரைந்து பேருதவிகேட்டு
ஏந்துகரம் ஏந்தாப்போயி ஆகுமே பணிசெய் எனவெஞ்சி.

அஞ்சாதிசைமுகர் அன்னனார் பேதைமதி
கொன்னனார் குழந்தை செய் குளவியோடு போர்புரிந்து
முன்னா முன்னம் சட்குணத்தை முறைதவறி
கெட்டழிந்தார் வருங்குவளை கண் மாந்தரை -கெட்டழித்தார்.

கூந்தல் கங்கை புல்லி வல்லிய
காமர் கோன் அவைநெறி தறிகெட்டு
பசு பனிப்பில் பழிப்பாரை கேளார்-
போரது வீண் சம்பமோ சம்பம்!

அவ்வண்ணம் கலி காலம் தொலி கேழா
ஆர்கலி அபாயத்தில் தானை சேனை
உலாவுந்தெரு தருஇல்லா நெருப்பழழாய்-ஒழித்தார்
உயிரொழிக்கவொரு உபாயங்காணாமல்!

ஊரோடு ஓங்கி நீங்கி தஞ்சமாகி
தலைகுனிந்து பஞ்சம்பாடி பாணிடை வீழ்ந்து
உய்யவே திக்கிலா ஊழி யாக்கையை
பெருமூச்சிட்டு எண்ணிஎண்ணி நீக்கினர் நாள்.

காலம் பழிநீங்கி- பலமில் பசை பூசி
இற்றவர் நெஞ்சம் மருந்கியுவந்திட
வேசமே விடுத்த வடிவில் ஓலைகொண்டவர்
தீர்வையோன்றைஎழுதினார் போர்வைபோர்த்திய அரி மார்.

அறமில்லா மேதினியில் மறங்கொண்டவர்
விடுவித்தார்தீயாரை தீட்சையோடு விட்டு
மீ யாரை மீட்டல்லாது பூட்டி
சாவியோடுகொண்டு மதுவில் மூழ்கியே போனார்-
செவ்வாரம் பூண்டார்!

பாண்டவர் பட்டாரோடு கூட, இவ்வாண்டவர்
பட்டர் துயர் மட்டுமா பட்டர் இகழ்
மாய்தலெனும் பேருண்மை மாய்த்ததடி
மற்றவர் தம்மை -சொல்லவொரு வகையறியாவண்ணம்

பின்தவநெறி கண்டவர் அழைத்து காவிபூசசூட்டி
கொண்டாடி விதி விதிக்க வெடி வெடித்து
சாலைமறித்து பாயாசம் பண்ணியூத்தி
குதித்தார் நெடுநாள் குப்பையுள் வீழ்ந்தே!

நீரிலேழுதிய காவாக்கியம் கனவு தானோ
கண்டனர் எம் மக்கள் எம் மாக்கள்
அங்கில்லை இங்கில்லை இனியவர்க்கு
விடிவில்லை கொண்டார் கம்பிக்குள் சிறை.

திரைக்குப்பின் நீதி வேண்டி தூரதேசம் போயேகேட்டு
மறைக்குறிப்பு எதுமேயின்றி மவுனமாய் மக்கம்பிரட்டி
வாழைத்தோல் வழுக்கி சீலை மீன் கிழித்து
வாயில்லாப்பிராணி யானார் அண்டை வீட்டு மாமன்.

இனி நாயினுக்கடியவன் நக்கியெடு நல்லதை
பேயினுக்குரியவன் புறங்காட்டிஒடிவிடு
காவினுக்குஇனையவன் கரையாதே கண்டதை
சாவினுக்கும் இனியானே போடா போ மா ராஜா .


-நிலா
2007


பள்ளிக்கூடத்தில் ஒரு பகலில் எழுதியது :)

Comments

  1. ஊரோடு ஓங்கி நீங்கி தஞ்சமாகி
    தலைகுனிந்து பஞ்சம்பாடி பாணிடை வீழ்ந்து
    உய்யவே திக்கிலா ஊழி யாக்கையை
    பெருமூச்சிட்டு எண்ணிஎண்ணி நீக்கினர் நாள்

    ஆழமும் அழகும் அறிவும் வார்த்தையாய்
    வாழவும் மாழவும் வழியிலாத் தமிழரின்
    ஓலமும் காலமும் ஒரு வழிப்பாதையும்
    மீளவும் முடியா விதியையும் விளக்கின..

    திரு.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சாமகானமும் காம்போதியும்

முருகையன் ஒரு மொழிபெயர்ப்புச் செய்தார். மொழிபெயர்ப்பு எண்டும் சொல்ல முடியாது,சாதுவா மொழிபெயர்ப்பும்,திறமையான கற்பனையும் போட்டு செய்யுள் வடிவத்தில, இளநலம்! என்ன இளநலமா?ஹையா கிளுகிளுப்பான கதை வரப்போகுது. குமாரசம்பவம் (ஸாரி வேற கண்டென்ட் எண்டு நினைக்கப்படாது, ஐ ஆம் வெரி டீசன்ட்) காளிதாசன் குமாரசம்பவத்தில எழுதின அதே கதையை தமிழில தந்தவர். அதில தான் இந்தக் கதை வருகுது.  சாமகானம் சாமகானம் எண்டு ஒண்டு சொல்லக் கேட்டிருப்பம். “சாமகானம் பாடினான்” எண்டு நாலாம் வகுப்புச் சமய பாட புத்தகத்தில ஒரு பாடம் இருக்கு. பத்துத் தலையும், கையில ஒரு தலையுமாக் கணக்குப் பிழையா மொறாயஸ் கீறின இராவணனிண்ட மீசை வெச்ச படம் இருக்கும், இப்ப ஞாபகம் வந்துட்டுதா? அந்தக் காலத்திலேயே தலைகளிண்ட கணக்கை எண்ணிப் பாத்தனாங்கள் ஆக்கும். (தலைக்கணக்கு முக்கியம் அமைச்சரே) இப்ப சாமகானத்தைப்பற்றிப் பாப்பம். காளிதாசன் குமாரசம்பவம் எழுதேக்க, சும்மா கற்பனைகுதிரையை காட்டாற்று வெள்ளம் போல பறக்க விடுறேர்.  மிஸ்டர் சிவனும் மிசஸ் உமாவும் கலியாணமான புதிசில, (ஏன் கல்யாணமான பழசில யாரும் வெளிய போறதில்ல எண்டு நெடுங்காலமா டவுட்) சும்மா வெளிய வெளிக்

இராவணேசன் ; Maunaguru's 'Ravanesan'

நெறியாள்கை - பேராசிரியர் மௌனகுரு. இடம் -கொழும்பு கலை இலக்கியப் பேரவை. காலம்- சனி(13.02.2010)  மாலை 6.30மணி. சனி மாலை(13.02.2010) பேராசிரியர் மௌனகுரு அவர்களின் 'இராவணேசன்' நாடகம் நடைபெறவிருக்கிறதென்று நண்பரொருவர் தகவல் சொன்னார். இருந்த எல்லா வேலைகளையும் புறந்தள்ளி விட்டேன். நாடகங்கள் என்றவுடன்  வரும் இந்த தொலைகாட்சி சீரியல்களையே கண் ஞாபகத்தில் கொண்டுவந்து முகத்தை அஷ்ட கோணலாக்குகிறது. மேடையமைப்பும், அரங்கமும்,அரிதாரம் பூசிக்கொண்ட பாத்திரங்களும், நேரடியான காட்சிகளூட்டும் கிளர்வும், எங்களுக்கு முன்னாள் ஒரு தலைமுறை இதனூடே வாழ்ந்து காட்டியிருக்கிற விடயமும் தெரிவதில்லை. மாற்றங்கள் மட்டுமே மாறிக் கொண்டிருந்தாலும்,எங்களின் முன்னோடிகள் வழி வந்த கலைப் பாதையை எடுத்தியம்புதலுக்கும்,அதற்கான வரவேற்புக்கும் இங்கு இடமில்லை எனும் போது அவற்றையெல்லாம் தாண்டி மனதில் எங்கேயோ வலிக்கிறது. எங்களுடைய காலத்தில், முழுமையான கூத்துக்கலையோ, அரங்காடல்ககளையோ  காண்பதற்கு காலமோ மாற்றமோ ஏதோவொன்று இடந்தரவில்லை .இருப்பினும் யாராவது எங்கள்  நலிந்து போன கலைகளை மறுபடியும் இளஞ்சமுதாயத்திட்கு க

குழந்தைகளுக்கான நவீன தமிழ்ப் பெயர்கள்

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தல் எனும்போது, இவ்வளவு காலமும் வைத்த பெயர்கள் தமிழ்ப்பெயர்கள் இல்லையா எனும் கேள்வி எம்மில் பலருக்கு எழும். உங்கள் பெரும்பாலானோர் தமிழ்ப்பெயர் என்று எண்ணிக்கொண்டிருக்கும் உங்கள் பெயரை வட இந்தியக் கலப்பு,சமக்கிருத கலப்பு,ஐரோப்பிய,அரேபியக் கலப்புடனான பெயராக இனங்காணுவீர்கள்.  தமிழில் பெயர் சூட்டுவது இனத்துவேசம் உள்ள செயலா? :P இனத்தைக் கொண்டாடக் கூடிய செயல். மறத்தமிழன் என்று அடைமொழி இட்டுக்கொண்டு உலாவுவதை விட அழகான செயல் என்று எண்ணுகிறேன். இந்த அடையாளம் மிக அழகானது.  அண்மையில் நிறையப் பேர் தமிழில் குழந்தைகளூக்கான நவீனமான பெயர்கள் வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். தமிழில் பெயர்கள் பழமையானவையாக இருப்பது கூட இக்காலத்தோரின் தெரிவுக்குட்படாமைக்கு ஒரு காரணமாகும். பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் சிலவற்றை தொகுத்திருக்கிறேன்.சிலவற்றை கண்டும் பிடித்திருக்கிறேன். ( பிற்காலத்தேவைகளுக்கு ;)  ) வினைச்சொல் பெயர்கள் அஞ்சா ஆராதி ஆனந்தி  சலனி கோளறா இசி இனி தேயா மேதா வேயா வேகா மின்னு மிதவா தெகிழா நெகி