Skip to main content

நிலையாமை என்றும் !






ஒரு கோடி இயலாமை நிலையாமை ஆகும்
அது கூடி தணியாமை தவிக்காமல்ப் போகும்
சில கேள்வி சிதையாமல் நெடு நாளை வாழும்
சிதைவோடு செல்வார்க்கு செல்வாக்கும் கூடும்
சில நாளில் இவையாவும் சிதையாமல் வாழும்
சிதையாமல் வாழ்வாகில் சிந்தாமல் ஓயும்
ஓயாத ஓசைக்கு ஒலியென்று ஓசை
பேசாத சொல்லுக்கு வெறும் என்று பாசை
வெறுமென்று ஆனாலே வெளி வேடத் தொல்லை 
தொலையாது ஒழிந்தோடி என்னென்ன லாபம்
என்னான காலத்தில் ஒழிந்தென்ன பாவம்
பருவோடு பயிலாமை மனதார வாழ்த்தும்
பயமோடு பல தாரம் பருகாமை கூடும்
கொடியோடு மலர் கொண்டு கொடும்பாவி ஆடும்
அடியோடு மலராகி அரும்பாகி வாழும்
அரும்பாகி அவையாவும் அல்லாது போகும்
கரும்பாகும் எண்ணங்கள் கல்லாகிப் போகும்

ஒரு வேளை உயிர் வந்து ஓயாமல் உருகும்
அது காலை அலை வந்து கடலோடும் போகும்
கலையாமை கனவென்று கடிதாரம் பேசும்
கடிகாரம் பேசாத கனவென்ன ஆகும்
கனவென்று ஆகாமல் கலையாதும் போகும்
கலையாத கனவுக்குள் கலை ஒன்று ஆடும்
கலையொன்று ஆடாமல் கலைந்தெங்கு போகும்
கலைந்தங்கு போனாலும் கனவோடு வாழும்

பொய்யாகிப் போகாத பொருள் ஒன்றும் இல்லை
பொய்யாகிப் போனாலே பொருள் அங்கு இல்லை
இல்லாமல்ப் போனாலே இல்லாமை இல்லை
இயலாத பொருளுக்கும் இயல்பொன்று இல்லை
இயல் ஒன்று இல்லாமல் இல்லாமல் இல்லை
இல்லாமல் இல்லாமல், இல்லாமல் இல்லை
இனிதான இயல்புக்கு சொல்லாமல் இல்லை
சொல்லாத பொருளுக்கும் புனைவொன்று இல்லை
இல்லாத புனைவுக்கும் புகலொன்று இல்லை
புகலொன்று இல்லாமல் அகல் அங்கு இல்லை
அகல் ஒன்று இல்லாமல் அகலாது இல்லை
இல்லாத அகலுக்குள் இருளென்னும் தொல்லை !

விசையில்லாப் படகுக்கு திசையொன்றும் இல்லை
திசையொன்றும் இல்லாமல்ப் படகொன்றுக்கெல்லை?
நதியோடு படகொன்று நடவாமல்ப் போகும்
நடவாத படகுக்குள் நழுவாமல்த் தளைக்கும்
நழுவாத களையெங்கும் கழுவாமல்க் கலையும்
கலையாத களையெங்கும் கடலொன்றில் சேரும்
கடலொன்றில் கவிழாமழ்ப் படகொன்று ஓடும்
ஓடாத படகுக்குள் ஒரு மீனும் துடிக்கும்
துடிக்கின்ற மீனுக்கு துணையொன்று தேடி
துணையாகிப் போம் மீனைப் உமலோடு அள்ளி
உனதோடும் எனதோடும் உணவாக்கி உண்ணல்
உனதான என்னை உயிரோடு தின்னல் !
தின்னாத தினவுக்கு தினமொன்ரும் இல்லை
தின்னாத  தினமொன்ரும் திகழாமல் இல்லை
திகழாமல்ப் போனாலே தினமொன்ரும் இல்லை
தினமொன்று தினமொன்று- தினமொன்றைக், கொன்று
திகழாமல்ப் போவாரே நிலையாமல் இன்று !


-நிலா-
17/11/2010

Comments

Popular posts from this blog

சாமகானமும் காம்போதியும்

முருகையன் ஒரு மொழிபெயர்ப்புச் செய்தார். மொழிபெயர்ப்பு எண்டும் சொல்ல முடியாது,சாதுவா மொழிபெயர்ப்பும்,திறமையான கற்பனையும் போட்டு செய்யுள் வடிவத்தில, இளநலம்! என்ன இளநலமா?ஹையா கிளுகிளுப்பான கதை வரப்போகுது. குமாரசம்பவம் (ஸாரி வேற கண்டென்ட் எண்டு நினைக்கப்படாது, ஐ ஆம் வெரி டீசன்ட்) காளிதாசன் குமாரசம்பவத்தில எழுதின அதே கதையை தமிழில தந்தவர். அதில தான் இந்தக் கதை வருகுது.  சாமகானம் சாமகானம் எண்டு ஒண்டு சொல்லக் கேட்டிருப்பம். “சாமகானம் பாடினான்” எண்டு நாலாம் வகுப்புச் சமய பாட புத்தகத்தில ஒரு பாடம் இருக்கு. பத்துத் தலையும், கையில ஒரு தலையுமாக் கணக்குப் பிழையா மொறாயஸ் கீறின இராவணனிண்ட மீசை வெச்ச படம் இருக்கும், இப்ப ஞாபகம் வந்துட்டுதா? அந்தக் காலத்திலேயே தலைகளிண்ட கணக்கை எண்ணிப் பாத்தனாங்கள் ஆக்கும். (தலைக்கணக்கு முக்கியம் அமைச்சரே) இப்ப சாமகானத்தைப்பற்றிப் பாப்பம். காளிதாசன் குமாரசம்பவம் எழுதேக்க, சும்மா கற்பனைகுதிரையை காட்டாற்று வெள்ளம் போல பறக்க விடுறேர்.  மிஸ்டர் சிவனும் மிசஸ் உமாவும் கலியாணமான புதிசில, (ஏன் கல்யாணமான பழசில யாரும் வெளிய போறதில்ல எண்டு நெடுங்காலமா டவுட்) சும்மா வெளிய வெளிக்

இராவணேசன் ; Maunaguru's 'Ravanesan'

நெறியாள்கை - பேராசிரியர் மௌனகுரு. இடம் -கொழும்பு கலை இலக்கியப் பேரவை. காலம்- சனி(13.02.2010)  மாலை 6.30மணி. சனி மாலை(13.02.2010) பேராசிரியர் மௌனகுரு அவர்களின் 'இராவணேசன்' நாடகம் நடைபெறவிருக்கிறதென்று நண்பரொருவர் தகவல் சொன்னார். இருந்த எல்லா வேலைகளையும் புறந்தள்ளி விட்டேன். நாடகங்கள் என்றவுடன்  வரும் இந்த தொலைகாட்சி சீரியல்களையே கண் ஞாபகத்தில் கொண்டுவந்து முகத்தை அஷ்ட கோணலாக்குகிறது. மேடையமைப்பும், அரங்கமும்,அரிதாரம் பூசிக்கொண்ட பாத்திரங்களும், நேரடியான காட்சிகளூட்டும் கிளர்வும், எங்களுக்கு முன்னாள் ஒரு தலைமுறை இதனூடே வாழ்ந்து காட்டியிருக்கிற விடயமும் தெரிவதில்லை. மாற்றங்கள் மட்டுமே மாறிக் கொண்டிருந்தாலும்,எங்களின் முன்னோடிகள் வழி வந்த கலைப் பாதையை எடுத்தியம்புதலுக்கும்,அதற்கான வரவேற்புக்கும் இங்கு இடமில்லை எனும் போது அவற்றையெல்லாம் தாண்டி மனதில் எங்கேயோ வலிக்கிறது. எங்களுடைய காலத்தில், முழுமையான கூத்துக்கலையோ, அரங்காடல்ககளையோ  காண்பதற்கு காலமோ மாற்றமோ ஏதோவொன்று இடந்தரவில்லை .இருப்பினும் யாராவது எங்கள்  நலிந்து போன கலைகளை மறுபடியும் இளஞ்சமுதாயத்திட்கு க

குழந்தைகளுக்கான நவீன தமிழ்ப் பெயர்கள்

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தல் எனும்போது, இவ்வளவு காலமும் வைத்த பெயர்கள் தமிழ்ப்பெயர்கள் இல்லையா எனும் கேள்வி எம்மில் பலருக்கு எழும். உங்கள் பெரும்பாலானோர் தமிழ்ப்பெயர் என்று எண்ணிக்கொண்டிருக்கும் உங்கள் பெயரை வட இந்தியக் கலப்பு,சமக்கிருத கலப்பு,ஐரோப்பிய,அரேபியக் கலப்புடனான பெயராக இனங்காணுவீர்கள்.  தமிழில் பெயர் சூட்டுவது இனத்துவேசம் உள்ள செயலா? :P இனத்தைக் கொண்டாடக் கூடிய செயல். மறத்தமிழன் என்று அடைமொழி இட்டுக்கொண்டு உலாவுவதை விட அழகான செயல் என்று எண்ணுகிறேன். இந்த அடையாளம் மிக அழகானது.  அண்மையில் நிறையப் பேர் தமிழில் குழந்தைகளூக்கான நவீனமான பெயர்கள் வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். தமிழில் பெயர்கள் பழமையானவையாக இருப்பது கூட இக்காலத்தோரின் தெரிவுக்குட்படாமைக்கு ஒரு காரணமாகும். பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் சிலவற்றை தொகுத்திருக்கிறேன்.சிலவற்றை கண்டும் பிடித்திருக்கிறேன். ( பிற்காலத்தேவைகளுக்கு ;)  ) வினைச்சொல் பெயர்கள் அஞ்சா ஆராதி ஆனந்தி  சலனி கோளறா இசி இனி தேயா மேதா வேயா வேகா மின்னு மிதவா தெகிழா நெகி