Skip to main content

ஆளச் சொல்லுகிற ஆட்சிப் பாட்டு

                             


அரவச் சடை கழழில் பூட்டி அருவத் துயில் விழியில் கொண்டு
அருக்கக் கதிர் அகலம் பரப்பி ஐம்பொன் உன்னை ஆழேன் அருகில்? 
இரக்கக் குணம் சிறிதும் இல்லா இன்பப் பொருள் எதிலும் அல்லா
மெய்யன் உன்னை மெச்சேன் பொழுதில்? பொய்யன் உன்னை புகழேன் வாதில்?

[எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்]


வானமே இரு சோலை வான்முகிலும் நாடும் கானமே 
ஒரு பாட்டில் கவியரசு செய்யும் ஏனம் ஒரு கிண்ணம் பாலமுது 
கொய்து பானமெனப் பருக்கும் சேய் எனது கன்றே !
கண்ட திருக்கோலம் காட்சிப் பிழையின்றி கைகளை தலை மீது
தானுயர்த்தி தவிசு பாடி பொய்களை பூசுற போதுமென 
அகஞ்சொல்லி அல்லிக் குவளையிவள் ஆதாரமின்றிப் படர்ந்து !

 [ஆசிரியத்துறை]

வேள்வித் தீயில் வெட்கிக் குனிகையில் ஆவி பெருகி 
அங்குமிங்கும் ஒழுகி -ஐயம் இல்லாமல் ஐம்புலனும் கருகி
அட்டமா சித்திக்கு அப்பாலும் தாவித் தாவி, தன் நிலைபரம் தவித்து-
கடினமடா காத்திருத்தல் காம்போடு வேர் பிடுங்கல்!

[ஆசிரியத்துறை]

 மெய் நிகர்த்தப் பாடுபட்டு மெய்யாலே விதிர் விதித்து
கை நிறையப் பாடும் பட்டு பாழுமோர் பழியைச் சுமந்து
"கை கழுவி வாரும் என்றாள்" "கடும் புனல் மொண்டு வந்தான்".

[கலித்தாழிசை] 

நாழிகை ஐந்து தான் ; நான் நிலம் பொழுது தான் வைகறை வரையில்
தான் வடித்தனல் வாது தான் சூதுரை என்றுமோர் தீதுரை என்றுமோர் -
சூழ் கலி என்று கொண்டு சூழ்ச்சிகள் செய்தவையே!பாவைகள் என்றுமோர் பாவிகள் ஆல்லவே !இப்பாவையைப் பற்றியோர் நூழிடை ஆட்டமோ ?
நூலிலே நுனியிலே நுன்மையின் சீற்றமோ?காதலோ சாதலோ கடைசியில் தாழழோ?

[ஆசிரியத்துறை]

பாதமோ பணிவுற பழி தளை சுமப்ப
உள்ளமே உருகி உன் மலம் ஒழிய
என்றுமே நின்னை மறக்கிலேன் கண்ணே
கருமுகில் என்றும் கதிர் தனை மறைக்கும்?

இரு நிலைக் கொள்ளும் இருதலை எறும்பாய்
ஒரு நிலை தானென் ஓங்கிய கல்லாய்ப் பட்டு
உறுபசி என்றே ஒன்றை உணருமின் நின் காதில்
உணர்வில்லை என்றோ என்று ஒரு பழி சொல்லாய் போதில்!

[கலித்தாழிசை]


பர நிலை தாண்டி இங்கே பருவரை யாப்பும் கூடி அருபெரும் 
அமைதி வேண்டி அடக்கமாய் உறங்க வேண்டும் தர நிலை 
தாண்டி அது ஓர் தகாத செயல் ஆகிப் போகும் இக நிலை 
பொய்த்துப் போனால் இந்நிலை மெய் நிலையாமே ! - இருந்தும், 

[ஆசிரியத்துறை]

உம்பன் உன்னை உணர்வித்து ஆகுதியால் அருச்சித்து
கம்பன்னெனக் கரம் பிடித்து காவியமும் நான் பாடி அம்பலத்தில் 
ஏறியுந்தன் ஆட்சி பீடமேறி ஆனதின்பம் ஆட்சியுரைப்பேன்
அந்தநாள் தொலைவிலில்லை...! 

[ஆசிரியத்துறை]



நிலா -
எழுதப்பட்ட காலத்திற்கும், உள்ளடக்கத்துக்கும் புறம்பாக, வெறுமனே பாக்களையும், கவிதைகளையும் சேமித்து வைக்கிறதையும் விட, அவை என்னென்ன வகையறாக்கள் என்று பகுத்து வைத்திருக்கிறது, வாசிக்கிறவைகும் இன்பம் தரும் என்ன ? ;)
 2010 ஜூன்-

Comments

  1. மரபுக் கவிதையில் உள்ள சுவை ஏனோ புதுக்கவிதையில் அவ்வளவாக இல்லை. உங்கள் கவிதை நன்றாக இருக்கின்றது.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சாமகானமும் காம்போதியும்

முருகையன் ஒரு மொழிபெயர்ப்புச் செய்தார். மொழிபெயர்ப்பு எண்டும் சொல்ல முடியாது,சாதுவா மொழிபெயர்ப்பும்,திறமையான கற்பனையும் போட்டு செய்யுள் வடிவத்தில, இளநலம்! என்ன இளநலமா?ஹையா கிளுகிளுப்பான கதை வரப்போகுது. குமாரசம்பவம் (ஸாரி வேற கண்டென்ட் எண்டு நினைக்கப்படாது, ஐ ஆம் வெரி டீசன்ட்) காளிதாசன் குமாரசம்பவத்தில எழுதின அதே கதையை தமிழில தந்தவர். அதில தான் இந்தக் கதை வருகுது.  சாமகானம் சாமகானம் எண்டு ஒண்டு சொல்லக் கேட்டிருப்பம். “சாமகானம் பாடினான்” எண்டு நாலாம் வகுப்புச் சமய பாட புத்தகத்தில ஒரு பாடம் இருக்கு. பத்துத் தலையும், கையில ஒரு தலையுமாக் கணக்குப் பிழையா மொறாயஸ் கீறின இராவணனிண்ட மீசை வெச்ச படம் இருக்கும், இப்ப ஞாபகம் வந்துட்டுதா? அந்தக் காலத்திலேயே தலைகளிண்ட கணக்கை எண்ணிப் பாத்தனாங்கள் ஆக்கும். (தலைக்கணக்கு முக்கியம் அமைச்சரே) இப்ப சாமகானத்தைப்பற்றிப் பாப்பம். காளிதாசன் குமாரசம்பவம் எழுதேக்க, சும்மா கற்பனைகுதிரையை காட்டாற்று வெள்ளம் போல பறக்க விடுறேர்.  மிஸ்டர் சிவனும் மிசஸ் உமாவும் கலியாணமான புதிசில, (ஏன் கல்யாணமான பழசில யாரும் வெளிய போறதில்ல எண்டு நெடுங்காலமா டவுட்) சும்மா வெளிய வெளிக்

இராவணேசன் ; Maunaguru's 'Ravanesan'

நெறியாள்கை - பேராசிரியர் மௌனகுரு. இடம் -கொழும்பு கலை இலக்கியப் பேரவை. காலம்- சனி(13.02.2010)  மாலை 6.30மணி. சனி மாலை(13.02.2010) பேராசிரியர் மௌனகுரு அவர்களின் 'இராவணேசன்' நாடகம் நடைபெறவிருக்கிறதென்று நண்பரொருவர் தகவல் சொன்னார். இருந்த எல்லா வேலைகளையும் புறந்தள்ளி விட்டேன். நாடகங்கள் என்றவுடன்  வரும் இந்த தொலைகாட்சி சீரியல்களையே கண் ஞாபகத்தில் கொண்டுவந்து முகத்தை அஷ்ட கோணலாக்குகிறது. மேடையமைப்பும், அரங்கமும்,அரிதாரம் பூசிக்கொண்ட பாத்திரங்களும், நேரடியான காட்சிகளூட்டும் கிளர்வும், எங்களுக்கு முன்னாள் ஒரு தலைமுறை இதனூடே வாழ்ந்து காட்டியிருக்கிற விடயமும் தெரிவதில்லை. மாற்றங்கள் மட்டுமே மாறிக் கொண்டிருந்தாலும்,எங்களின் முன்னோடிகள் வழி வந்த கலைப் பாதையை எடுத்தியம்புதலுக்கும்,அதற்கான வரவேற்புக்கும் இங்கு இடமில்லை எனும் போது அவற்றையெல்லாம் தாண்டி மனதில் எங்கேயோ வலிக்கிறது. எங்களுடைய காலத்தில், முழுமையான கூத்துக்கலையோ, அரங்காடல்ககளையோ  காண்பதற்கு காலமோ மாற்றமோ ஏதோவொன்று இடந்தரவில்லை .இருப்பினும் யாராவது எங்கள்  நலிந்து போன கலைகளை மறுபடியும் இளஞ்சமுதாயத்திட்கு க

குழந்தைகளுக்கான நவீன தமிழ்ப் பெயர்கள்

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தல் எனும்போது, இவ்வளவு காலமும் வைத்த பெயர்கள் தமிழ்ப்பெயர்கள் இல்லையா எனும் கேள்வி எம்மில் பலருக்கு எழும். உங்கள் பெரும்பாலானோர் தமிழ்ப்பெயர் என்று எண்ணிக்கொண்டிருக்கும் உங்கள் பெயரை வட இந்தியக் கலப்பு,சமக்கிருத கலப்பு,ஐரோப்பிய,அரேபியக் கலப்புடனான பெயராக இனங்காணுவீர்கள்.  தமிழில் பெயர் சூட்டுவது இனத்துவேசம் உள்ள செயலா? :P இனத்தைக் கொண்டாடக் கூடிய செயல். மறத்தமிழன் என்று அடைமொழி இட்டுக்கொண்டு உலாவுவதை விட அழகான செயல் என்று எண்ணுகிறேன். இந்த அடையாளம் மிக அழகானது.  அண்மையில் நிறையப் பேர் தமிழில் குழந்தைகளூக்கான நவீனமான பெயர்கள் வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். தமிழில் பெயர்கள் பழமையானவையாக இருப்பது கூட இக்காலத்தோரின் தெரிவுக்குட்படாமைக்கு ஒரு காரணமாகும். பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் சிலவற்றை தொகுத்திருக்கிறேன்.சிலவற்றை கண்டும் பிடித்திருக்கிறேன். ( பிற்காலத்தேவைகளுக்கு ;)  ) வினைச்சொல் பெயர்கள் அஞ்சா ஆராதி ஆனந்தி  சலனி கோளறா இசி இனி தேயா மேதா வேயா வேகா மின்னு மிதவா தெகிழா நெகி