Skip to main content

இரண்டு கவிதைகள் ; Two Poems

                                                              
                                      


ஐந்தாம் படைக் காதல்


எனக்குத் தெரிந்த வரைக்கும்
கடல் ஆர்ப்பரிக்கத் தொடங்கியது-
என்
அகாலத்தின் போதே

மெல்லிய சாம்பலில்-
சுடுகின்ற தணல் தாங்கும்
குளிரைப் போல- இருக்கிறது-
எனக்குள்ளான காதல்.

இது,
வகையறா வகைக்குரியது.
இசையினது சாரலில்
தூணோரமாக தழுவியபடி நிற்கின்ற
நாணலைப் பிடித்தபடி,
செத்துப் போன மஞ்சளிளைகளைப் பார்க்கையில்-
என்,
காதலின் ஆண்டு வளையம் தெரிகின்றது.

புலப்பட்டுப் போக,
இறுதியில்
மேகங்களைப் பிழிந்து,
சாறு கொண்டுவந்து, காயங்கண்ட இடங்களில்
தெளிக்க,

சில்லிடுகிறது தேகம்-
அக்கினிக் குமிழியின் ஆரை தீண்டியது போல,

மௌனக்குடிலிலிருந்து வரும்
ஆபோகிச் சங்கீதத்தில்-
அவர்களிருக்கிரார்கள்,
வேட்டி நிறைந்த பூக்களுடன்
அவளிருக்கிறாள்.

தீவிரமான
விரகத்தின் முடிபில்-
போய்க் கேட்கிறேன்,
ஐந்தாம் படைக் காதலை-
ஆயுதந்தந்துதவும் படிக்கு...

அவர்களின் ,
பிரிக்க முடியாத பல்லிடுக்கிலிருந்து
சிரிப்பு வர-
இறுதியில் எனக்குமிருக்கின்றது-
நேயத்தின் தடயம் !



                                     

அலம்பல்க் கதை.......

 
ஏதாவது எழுத வேண்டும்,
அதுவும் தெளிவாய் எழுத வேண்டும்
அம்மா, ஆடு, இலை , ஈசன்...
எழுதலாம்.

முறையே அவை,
பந்தம், மிருகத்தன்மை, தாவரவியல், ஆன்மிகம் பற்றி குறிப்பதால்
அவையும் கடினமானவையே..
பிறகு என்ன எழுதுவது...

வெயில்க்காலத்தின்
சூரியத் தகிப்பினால் மண்ணிறத் தரையில்
செத்துக் கிடக்கின்றன, மண் புழுக்கள்.
சிவந்த புழுக்களின் உடல்கள்
கறுத்து அல்லது சிவத்து இம்மியளவான
ஏறும்புகளினால் காவப் படுகின்றன -
இறுதி ஊர்வலத்தில்.

மழைக் காலத்தின் சொதசொதத்த
ஈரத்தில் நெளிந்து நெளிந்து பல புழுக்கள்
சேர்ந்து கட்டிக் கொள்கின்றன.
கறுப்பில் மஞ்சள புள்ளி போட்ட பேனா அட்டையும்,
சிவப்பு வரி வேய்ந்த
ஆயிரங்கால் பூச்சியும்,
கழிவறைத் துவாரத்திலிருந்து மெல்ல மெல்ல
வெளிவரத் தொடங்குகின்றன.

கரப்பான் பூச்சியின் சாகசம்,
மண்ணிறம், நரை நிறம்,
இன்னுஙக் கொஞ்சம் வெழுத்த நிறங்களில் இவை கிடைக்கும்,
ஜெட் விமானம் பறப்பது போல குறுக்காலே....
பறக்கும்.

ஈசல்,
மழைக்கு முந்தின ராத்திரியே
பாத்திரங்கழுவும் சட்டிக்குள் மிதக்கும்...
தவளைப் பொக்கானின் நாட்டியம்...
அதன் இனிமையான சன்னத ஆட்டம்...!

இரவில் மின்சாரம் போனதன் பிறகு,
அம்மா கதை சொல்லுவா ....
பெரும்பாலும்,
'அக்காக் காரி, தங்கச்சிக்காரி' கதை...
'சாம்பலாண்டிக்' கதை,
'பனியார மழை' பெஞ்ச கதை...
இப்பிடி நீளும் .....

மெல்லிய சாமியறை
விளக்கு வெளிச்சத்தில்,
விரல்களால்,
மான், குதிரை, நாய், யானை....ஆமை
மிருகங்களின் உருவங்களை நிழல் செய்து,

எல்லோரையும் வட்டமாய் இருத்தி ,
குழைச்ச சோற்றை ஓரொரு பிடி கயிலை வைப்பா -
கடைசிச் சோற்றுருண்டை எனக்கு....!

மழை நாள்,
வெயில் நாள்
எல்லா நாட்களும்
முன் போல இல்லை....

இயல்பிலிருந்து விலகிக் கொண்டுவரும் நான்,
கடவுளாவதில் முனைகிறது,
இருப்பினும் என்னைச் சுற்றிக் கூட்டம் கூடுவதை
வெறுக்கிறது.

நிலா -

Comments

  1. அருமைப்பா..

    வார்த்தைகளில் எளிய நடையுடன் வேகமும்..

    ReplyDelete
  2. கருத்துச் சுதந்திரம், மாற்றுக்கருத்துக்களுக்கு மதிப்பு இருக்கிறது என்ற நம்பிக்கையில் சொல்கின்றேன். ஏன் தங்கள் கவிதைகளில் ”சேடிஸ்டிக்” வாசம் அதிகமாக வீசுகிறது - ”பொஸிடிவ்” ஆக விஷயங்களை அணுகலாமே!

    ReplyDelete
  3. //
    ஏதாவது எழுத வேண்டும்,

    அதுவும் தெளிவாய் எழுத வேண்டும்
    அம்மா, ஆடு, இலை , ஈசன்...
    எழுதலாம்.


    முறையே அவை,
    பந்தம், மிருகத்தன்மை, தாவரவியல், ஆன்மிகம் பற்றி குறிப்பதால்
    அவையும் கடினமானவையே..
    பிறகு என்ன எழுதுவது...
    .............
    //

    எனக்கு பிடித்த கவிதை!
    கவிதை நடைக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. ரியல்லி சூபர்ப்... தொடர்ந்து எழுதுங்க..

    ReplyDelete
  5. அனைத்து நண்பர்களுக்கும் இனிய ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள்...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சாமகானமும் காம்போதியும்

முருகையன் ஒரு மொழிபெயர்ப்புச் செய்தார். மொழிபெயர்ப்பு எண்டும் சொல்ல முடியாது,சாதுவா மொழிபெயர்ப்பும்,திறமையான கற்பனையும் போட்டு செய்யுள் வடிவத்தில, இளநலம்! என்ன இளநலமா?ஹையா கிளுகிளுப்பான கதை வரப்போகுது. குமாரசம்பவம் (ஸாரி வேற கண்டென்ட் எண்டு நினைக்கப்படாது, ஐ ஆம் வெரி டீசன்ட்) காளிதாசன் குமாரசம்பவத்தில எழுதின அதே கதையை தமிழில தந்தவர். அதில தான் இந்தக் கதை வருகுது.  சாமகானம் சாமகானம் எண்டு ஒண்டு சொல்லக் கேட்டிருப்பம். “சாமகானம் பாடினான்” எண்டு நாலாம் வகுப்புச் சமய பாட புத்தகத்தில ஒரு பாடம் இருக்கு. பத்துத் தலையும், கையில ஒரு தலையுமாக் கணக்குப் பிழையா மொறாயஸ் கீறின இராவணனிண்ட மீசை வெச்ச படம் இருக்கும், இப்ப ஞாபகம் வந்துட்டுதா? அந்தக் காலத்திலேயே தலைகளிண்ட கணக்கை எண்ணிப் பாத்தனாங்கள் ஆக்கும். (தலைக்கணக்கு முக்கியம் அமைச்சரே) இப்ப சாமகானத்தைப்பற்றிப் பாப்பம். காளிதாசன் குமாரசம்பவம் எழுதேக்க, சும்மா கற்பனைகுதிரையை காட்டாற்று வெள்ளம் போல பறக்க விடுறேர்.  மிஸ்டர் சிவனும் மிசஸ் உமாவும் கலியாணமான புதிசில, (ஏன் கல்யாணமான பழசில யாரும் வெளிய போறதில்ல எண்டு நெடுங்காலமா டவுட்) சும்மா வெளிய வெளிக்

இராவணேசன் ; Maunaguru's 'Ravanesan'

நெறியாள்கை - பேராசிரியர் மௌனகுரு. இடம் -கொழும்பு கலை இலக்கியப் பேரவை. காலம்- சனி(13.02.2010)  மாலை 6.30மணி. சனி மாலை(13.02.2010) பேராசிரியர் மௌனகுரு அவர்களின் 'இராவணேசன்' நாடகம் நடைபெறவிருக்கிறதென்று நண்பரொருவர் தகவல் சொன்னார். இருந்த எல்லா வேலைகளையும் புறந்தள்ளி விட்டேன். நாடகங்கள் என்றவுடன்  வரும் இந்த தொலைகாட்சி சீரியல்களையே கண் ஞாபகத்தில் கொண்டுவந்து முகத்தை அஷ்ட கோணலாக்குகிறது. மேடையமைப்பும், அரங்கமும்,அரிதாரம் பூசிக்கொண்ட பாத்திரங்களும், நேரடியான காட்சிகளூட்டும் கிளர்வும், எங்களுக்கு முன்னாள் ஒரு தலைமுறை இதனூடே வாழ்ந்து காட்டியிருக்கிற விடயமும் தெரிவதில்லை. மாற்றங்கள் மட்டுமே மாறிக் கொண்டிருந்தாலும்,எங்களின் முன்னோடிகள் வழி வந்த கலைப் பாதையை எடுத்தியம்புதலுக்கும்,அதற்கான வரவேற்புக்கும் இங்கு இடமில்லை எனும் போது அவற்றையெல்லாம் தாண்டி மனதில் எங்கேயோ வலிக்கிறது. எங்களுடைய காலத்தில், முழுமையான கூத்துக்கலையோ, அரங்காடல்ககளையோ  காண்பதற்கு காலமோ மாற்றமோ ஏதோவொன்று இடந்தரவில்லை .இருப்பினும் யாராவது எங்கள்  நலிந்து போன கலைகளை மறுபடியும் இளஞ்சமுதாயத்திட்கு க

குழந்தைகளுக்கான நவீன தமிழ்ப் பெயர்கள்

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தல் எனும்போது, இவ்வளவு காலமும் வைத்த பெயர்கள் தமிழ்ப்பெயர்கள் இல்லையா எனும் கேள்வி எம்மில் பலருக்கு எழும். உங்கள் பெரும்பாலானோர் தமிழ்ப்பெயர் என்று எண்ணிக்கொண்டிருக்கும் உங்கள் பெயரை வட இந்தியக் கலப்பு,சமக்கிருத கலப்பு,ஐரோப்பிய,அரேபியக் கலப்புடனான பெயராக இனங்காணுவீர்கள்.  தமிழில் பெயர் சூட்டுவது இனத்துவேசம் உள்ள செயலா? :P இனத்தைக் கொண்டாடக் கூடிய செயல். மறத்தமிழன் என்று அடைமொழி இட்டுக்கொண்டு உலாவுவதை விட அழகான செயல் என்று எண்ணுகிறேன். இந்த அடையாளம் மிக அழகானது.  அண்மையில் நிறையப் பேர் தமிழில் குழந்தைகளூக்கான நவீனமான பெயர்கள் வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். தமிழில் பெயர்கள் பழமையானவையாக இருப்பது கூட இக்காலத்தோரின் தெரிவுக்குட்படாமைக்கு ஒரு காரணமாகும். பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் சிலவற்றை தொகுத்திருக்கிறேன்.சிலவற்றை கண்டும் பிடித்திருக்கிறேன். ( பிற்காலத்தேவைகளுக்கு ;)  ) வினைச்சொல் பெயர்கள் அஞ்சா ஆராதி ஆனந்தி  சலனி கோளறா இசி இனி தேயா மேதா வேயா வேகா மின்னு மிதவா தெகிழா நெகி