Skip to main content

பெண் வெறுப்பு நோய்

அண்மையில் பரவி வரும் பெண் வெறுப்பு நோய் சம்பந்தமானது, 


பெண்கள் மீதான இயலாமையை நினைத்துக் குமுறிக் குமுறி எல்லா இடங்களிலும் தமது தலையை பிய்த்துக்கொள்வதும், தாங்கொணா வயிற்றுளைவில் குடலேறிக் கிடப்பவர்களையும் பார்க்க முடிகிறது. மிக நல்லது.மீண்டும் மீண்டும் உங்களது நிலைப்பாட்டினை அருவருப்பு சார்ந்ததாகவே நிரூபித்து வருகிறீர்கள். நீங்கள் நிரூபிக்கவும் தேவையில்லை, உங்களது இயல்பான குணாதிசயங்கள் அதுவாகவே வெளிவருகின்றது. எங்களுக்கு இது வேடிக்கையின்றி ஒரு பொருட்டும் இல்லை. 



பெண்ணுடலை மோப்பம்பிடித்துப் பார்க்கிற பாலியல் வறுமையும், வசை வறுமையும் கொண்ட கூட்டங்களே, எழுத்தையும், திறன்பாட்டினையும் கூட உங்களால் அதைத்தாண்டிப் பார்க்க முடியவில்லை. உங்கள் மன நோய்களுக்கு தக்க மருந்தினை உங்கள் வயதான காலங்களில் உங்களிடம் தர வேண்டாமே என்று பார்க்கிறேன். 


எனக்குத்தெரிந்து எந்தப் பெண்ணும் பிச்சை வாங்கிப் புத்தகம் வெளியிடுவதில்லை. எந்த ஆணினுடைய கையாலாகாததனத்தையும் பார்த்துப் பயந்ததும் இல்லை ;இந்தளவு நோய்க்கூறும் இனங்காணப்படவில்லை. 


பெண்ணியலாளர்கள் , பெண் எழுத்தாளர்கள், பெண் களப்பணியாளர்கள், ஏன் பெண்களாக இருக்கிற எல்லோருமே இவர்களுடைய கட்டாக்காலித்தனத்திற்கு ஆப்பட்டவர்களாகவே இருக்க வேண்டும் என்பதே இவர்களது பேரவா. 


பருவம் தப்பிய வசந்தம் கொண்டாடிக் கொண்டிருக்கிற என்னினிய அங்கிள்மாருக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். உங்களுடைய பாலிய வயதில் ஏற்பட்ட கோளாறுகளால் நிறையப் பாதிக்கப்படிருக்கிறீர்கள். பாவம் நீங்கள். 


வேணுமென்றால் எங்களுக்கெதிராக ஒரு கூட்டுப் பிரார்த்தனை செய்துகொள்ளுங்களேன். தனித்தனியாக அறையைப் பூட்டி விட்டு ஒவ்வொருவராக அழுகிறதை ஒரு கிழமைக்கு மேலாக பார்க்க முடியாது. 


கால்நூற்றாண்டு வயது கூட ஆகவில்லை எனக்கு. எங்களுடைய சிந்தனை பற்றிய தெளிவும், தேவையும், தெரிவும் என்னவென்று எங்களுக்குத் தெரியும். எங்கள் அப்பாக்கள் யாரும் எங்களை எழுத்தாளர் ஆக்குவதிலோ, ஏரோப்பிளேன் ஓட்டியாக ஆக்குவதற்கோ விருப்புக் காட்டுவதாகக் கூறவில்லை. என்னவாக வரவேண்டும் என்பது எங்களுக்கே தெரியும். இது எங்களுடைய தலைமுறை. 


ஒரு பதின்மூன்று பதின்நான்கு வயதுப் பெண்குழந்தை என்ன வாசிக்கிறது என்பதை, நாற்பது வயதில் உங்களால் நினைத்தும் பார்க்க முடியாது. ஒட்டு மொத்தமாகத்தான் சொல்கிறேன். 


என்ன படித்தோம், என்ன படிக்கிறோம், என்ன வாசிக்கிறோம், என்ன எழுதுகிறோம், என்ன களப்பணி செய்கிறோம் என்பவை பற்றிய விழிப்புணர்வு தாராளமாக எங்களுக்கிருக்கிறது. இன்றைக்கு பெண்களின் நிலை என்பதை நீங்கள் தீர்மானிக்கவில்லை; கடந்து வந்த எல்லாப் பெண்களும் தீர்மானித்தது தான். 


ஆரோக்கியமாக கடைசியிலே எதையாவது சொல்லுவதாக நினைத்துக் கொண்டு, உங்களுடைய பிடியில் உங்களின் தொடர்ச்சிகளை நீங்களாக அனுமதி கொடுத்தாலன்றி உருவாக முடியாது என்ற அலட்சியத்தை வாந்தியெடுத்துள்ளீர்கள். வாந்தி ரொம்ப நாறுகிறது. 


பி.கு : வாந்தியெடுத்தவர்களை விட வாந்தியை முகர்ந்து பார்த்து வாசனை சொல்லும் குறிசொல்லிகளை பார்க்கும் போது பஜன்லால் சேட்டு ஞாபகம் வாறதை தவிர்க்க முடியேல்ல. 


-நிலா லோகநாதன்.

Comments

  1. Ungalathu vaarthaihal kadumai nirainthu kanappaduhirathu. Psycological counciling'kku parinthurai seihintren

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சாமகானமும் காம்போதியும்

முருகையன் ஒரு மொழிபெயர்ப்புச் செய்தார். மொழிபெயர்ப்பு எண்டும் சொல்ல முடியாது,சாதுவா மொழிபெயர்ப்பும்,திறமையான கற்பனையும் போட்டு செய்யுள் வடிவத்தில, இளநலம்! என்ன இளநலமா?ஹையா கிளுகிளுப்பான கதை வரப்போகுது. குமாரசம்பவம் (ஸாரி வேற கண்டென்ட் எண்டு நினைக்கப்படாது, ஐ ஆம் வெரி டீசன்ட்) காளிதாசன் குமாரசம்பவத்தில எழுதின அதே கதையை தமிழில தந்தவர். அதில தான் இந்தக் கதை வருகுது.  சாமகானம் சாமகானம் எண்டு ஒண்டு சொல்லக் கேட்டிருப்பம். “சாமகானம் பாடினான்” எண்டு நாலாம் வகுப்புச் சமய பாட புத்தகத்தில ஒரு பாடம் இருக்கு. பத்துத் தலையும், கையில ஒரு தலையுமாக் கணக்குப் பிழையா மொறாயஸ் கீறின இராவணனிண்ட மீசை வெச்ச படம் இருக்கும், இப்ப ஞாபகம் வந்துட்டுதா? அந்தக் காலத்திலேயே தலைகளிண்ட கணக்கை எண்ணிப் பாத்தனாங்கள் ஆக்கும். (தலைக்கணக்கு முக்கியம் அமைச்சரே) இப்ப சாமகானத்தைப்பற்றிப் பாப்பம். காளிதாசன் குமாரசம்பவம் எழுதேக்க, சும்மா கற்பனைகுதிரையை காட்டாற்று வெள்ளம் போல பறக்க விடுறேர்.  மிஸ்டர் சிவனும் மிசஸ் உமாவும் கலியாணமான புதிசில, (ஏன் கல்யாணமான பழசில யாரும் வெளிய போறதில்ல எண்டு நெடுங்காலமா டவுட்) சும்மா வெளிய வெளிக்

இராவணேசன் ; Maunaguru's 'Ravanesan'

நெறியாள்கை - பேராசிரியர் மௌனகுரு. இடம் -கொழும்பு கலை இலக்கியப் பேரவை. காலம்- சனி(13.02.2010)  மாலை 6.30மணி. சனி மாலை(13.02.2010) பேராசிரியர் மௌனகுரு அவர்களின் 'இராவணேசன்' நாடகம் நடைபெறவிருக்கிறதென்று நண்பரொருவர் தகவல் சொன்னார். இருந்த எல்லா வேலைகளையும் புறந்தள்ளி விட்டேன். நாடகங்கள் என்றவுடன்  வரும் இந்த தொலைகாட்சி சீரியல்களையே கண் ஞாபகத்தில் கொண்டுவந்து முகத்தை அஷ்ட கோணலாக்குகிறது. மேடையமைப்பும், அரங்கமும்,அரிதாரம் பூசிக்கொண்ட பாத்திரங்களும், நேரடியான காட்சிகளூட்டும் கிளர்வும், எங்களுக்கு முன்னாள் ஒரு தலைமுறை இதனூடே வாழ்ந்து காட்டியிருக்கிற விடயமும் தெரிவதில்லை. மாற்றங்கள் மட்டுமே மாறிக் கொண்டிருந்தாலும்,எங்களின் முன்னோடிகள் வழி வந்த கலைப் பாதையை எடுத்தியம்புதலுக்கும்,அதற்கான வரவேற்புக்கும் இங்கு இடமில்லை எனும் போது அவற்றையெல்லாம் தாண்டி மனதில் எங்கேயோ வலிக்கிறது. எங்களுடைய காலத்தில், முழுமையான கூத்துக்கலையோ, அரங்காடல்ககளையோ  காண்பதற்கு காலமோ மாற்றமோ ஏதோவொன்று இடந்தரவில்லை .இருப்பினும் யாராவது எங்கள்  நலிந்து போன கலைகளை மறுபடியும் இளஞ்சமுதாயத்திட்கு க

குழந்தைகளுக்கான நவீன தமிழ்ப் பெயர்கள்

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தல் எனும்போது, இவ்வளவு காலமும் வைத்த பெயர்கள் தமிழ்ப்பெயர்கள் இல்லையா எனும் கேள்வி எம்மில் பலருக்கு எழும். உங்கள் பெரும்பாலானோர் தமிழ்ப்பெயர் என்று எண்ணிக்கொண்டிருக்கும் உங்கள் பெயரை வட இந்தியக் கலப்பு,சமக்கிருத கலப்பு,ஐரோப்பிய,அரேபியக் கலப்புடனான பெயராக இனங்காணுவீர்கள்.  தமிழில் பெயர் சூட்டுவது இனத்துவேசம் உள்ள செயலா? :P இனத்தைக் கொண்டாடக் கூடிய செயல். மறத்தமிழன் என்று அடைமொழி இட்டுக்கொண்டு உலாவுவதை விட அழகான செயல் என்று எண்ணுகிறேன். இந்த அடையாளம் மிக அழகானது.  அண்மையில் நிறையப் பேர் தமிழில் குழந்தைகளூக்கான நவீனமான பெயர்கள் வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். தமிழில் பெயர்கள் பழமையானவையாக இருப்பது கூட இக்காலத்தோரின் தெரிவுக்குட்படாமைக்கு ஒரு காரணமாகும். பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் சிலவற்றை தொகுத்திருக்கிறேன்.சிலவற்றை கண்டும் பிடித்திருக்கிறேன். ( பிற்காலத்தேவைகளுக்கு ;)  ) வினைச்சொல் பெயர்கள் அஞ்சா ஆராதி ஆனந்தி  சலனி கோளறா இசி இனி தேயா மேதா வேயா வேகா மின்னு மிதவா தெகிழா நெகி