Skip to main content

Posts

The story of Kana and Nila

All things grow better with love. To mark Kana's 31st birthday, I created 31 digital illustrations using my Dell 13 laptop to capture and celebrate the meaningful moments we've shared throughout our lives together. As an artist, my passion for drawing and creating art has always been a central part of my life, and it's been a beautiful way to express and deepen my love for Kana. These artworks are a tribute to our enduring relationship and a reflection of the joy and love that fills our lives. Through the use of advanced techniques and creative expression, I sought to bring these memories to life and honor the person who has been such a vital part of my journey. The result is a stunning visual tapestry that not only captures the essence of our bond but also showcases the depth and beauty of our shared experiences. I hope these illustrations serve as a reminder of the love and happiness we've found in each other, and as a celebration of the many more years of love and ad

எது புரட்சி?

அதிகாரம் மக்களை எவ்வாறெல்லாம் அமுக்கிறது-சுரண்டுகிறதென்று "வெறும்" இடதுசாரிகளாயும் "வெறும்" முற்போக்காளர்களாகவும் இருந்தால்த் தெரியாது. அதிகாரம் சுரண்டும் வழிவகைகளைத் தெளிவாகத் தெரிந்து அதற்கு மாற்று உருவாக்கவும் அவ்வதிகாரத்தினை உடைக்கவும் தெளிவும் சிந்தனையும் கல்வியும் உடையவர்கள் தேவை.  இந்த "வெறும்" ஆட்கள் சாதாரண உழைக்கும் மக்களைப் பணயம் வைத்து அவர்களுடைய சிதிலமடைந்த வாழ்க்கையை இன்னும் சின்னாபின்னமாக்கி தன்னை விட்டால் யாரும் அவர்களைக் காப்பாற்ற முடியாதென்ற எண்ணத்தை உருவாக்கி நாயக பிம்மத்தைத் தோற்றுவித்து, அதிகாரத்திற்கு எதிராக அப்பாவி மக்களைப் பிணை வைத்து புரட்சிக் குளிர் காய்வர்.  புரட்சி என்பது, கூலித் தொழிலாளர்களை சம்பள உயர்வுக்காகத் தூண்டி விட்டு அவர்கள் சம்பளமில்லாமல் குளிரிலும் வெயிலிலும் வருசக்கணக்கில் போராடவிட்டு கொந்தளிப்பதல்ல. அவர்கள் அவர்களுடைய நியாயமான கோரிக்கையை வைப்பதை ஆதரித்து, அவர்களுடைய போராட்டத்தையும் ஆதரித்து, அதிகார மட்டத்திற்குக் கிட்டேயுள்ள மூளை உழைப்புச் செய்யும் தொழிலாளர்கள் திரண்டு அதிகார மட்டத்தை குலைத்தும், அடித்தும், சரி செ

கோட்பாடுகள்

எந்தவொரு கோட்பாடும்/ தத்துவமும் ஆண்டாண்டு காலமாக ஒன்று போலவே மாறாமல் இருப்பது ஆபத்தானது. விஞ்ஞான முறைக் கோட்பாடுகள் ஒருபோதும் காலங்கடந்து ஒன்று போலவே இருப்பதில்லை. அவை தம்மைப் புதுப்பிக்கின்றன. புதுப்பிக்கும் வழியை அதன் வழியில் உருவாக்கித் தருகின்றன. ஆகவே முதலாமாண்டு படித்த அ’னா, ஆ’வன்னா தான் இன்றளவும் கைக்கொடுக்கும் அறிவு என்று சிந்திப்பதும் அதற்கு நன்றியுடையவராக இருப்பதும் தேவையற்றது.  அதே வேளை கோட்பாடுகள்/ தத்துவங்கள் மனித சமுகத்தின் அடிப்படையான வாழ்க்கையில் செய்திருக்கும் மிகப்பெரும் மாற்றங்களை நாம் புறக்கணித்துவிட முடியாது. புறக்கணிப்பது வரலாற்றை பிழையான முறையில் போதித்து விடும். வரலாற்றைக் கூர்ந்து அவதானிப்பதன் மூலமே நாம் மனித குலத்தின் மிக முக்கியமான அடைவுகளின் தன்மையை, நோக்கத்தையெல்லாம் விளங்கிக் கொள்ள முடிகிறது. அந்த நோக்கு இல்லாவிட்டால் வரலாறு/சமுக விஞ்ஞானப்பரம்பல் புரிந்து கொள்ளப்படும் விதம் மந்தமானதாகவே இருக்கும்.  ஆனால்ப்பாருங்கள், கணித விஞ்ஞானத்தில் மிகச்சிக்கலான ஒன்றை எளிய சூத்திரங்களால் விளக்குவோம். அந்தச்சூத்திரத்தின் தார்ப்பரியம் மட்டுமே விளங்கினால்க் கூட மிகத்துல்

எப்படிச் சிந்திப்பது?

தோழரொருவர் கீழ்வரும் மீமைப் பகிர்ந்திருந்தார். அதற்குப் பதிலாக நான் பின்வரும் ஒரு பதிலை எழுதியிருந்தேன். பெண்கள் புரட்சிகரமாக, முற்போக்காக சமுகச் சிந்தனையோடு செயற்படுவதற்கு எப்போதுமே மார்க்சும் லெனினும் பெரியாரும் மட்டுந்தான் காரணமில்லை. ஒடுக்கப்படும் எவருக்கும் அடக்குமுறைக்கு எதிராகச் சிந்திக்கும் திறன் வரும். அது பகுத்து அறியும் திறன். இவர்கள் எல்லோரும் சமுக மேம்பாட்டிற்காக கோட்பாடுகளையும் அனுபவங்களையும் தந்திருந்தாலும், இவர்களின் சமுகத்திற்கான உழைப்பு எக்காலத்திலும் புறக்கணிக்க முடியாததுமாக இருப்பினும், ஒவ்வொரு தடவை பெண் தடைகளை உடைத்து வரும் போது பெரியாரின் பேத்தி, மார்க்ஸின் இளவல் எனச் சொல்லுவது அவர்களின் சுயசிந்தனையை அடிப்பதைப் போன்றது.  எதோவொரு மூலையில் எதோவொரு கிராமத்தில் பிறந்து வளர்ந்த கல்வி வாய்ப்புக்கள் மறுக்கப்பட்ட ஒரு பெண் தன் பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும் எனத் தனித்துப் போராடுவாள். எதோவொரு மூலையில் எதோவொரு கிராமத்தில் பிறந்து வளர்ந்த கல்வி வாய்ப்புக்கள் மறுக்கப்பட்ட ஒரு பெண் தனக்கும் தன் சமுகத்திற்கும் நேர்ந்திருக்கும் ஒடுக்குமுறைய தனக்குத் தெரிந்த முறையில் எதிர்ப்பா

இலங்கையில் மதத்தலங்களில் குண்டுவெடிப்பு

முன்பை விட மக்கள் பக்குவப்பட்டிருப்பதாக உணருகிறேன். உணர்ச்சி அரசியலைக் கட்டவிழ்க்காமல் மனிதரோடு சக மனிதர்களாக கை கொடுக்கும் தேவையை உணர்ந்திருக்கிறோம். இதுவே நாகரீகத்தின், பகுத்தறிவின் வளர்சியாகும். மனித குலத்தின் வளர்ச்சியாகவும் இதைப் பார்க்கிறேன்.  அதே வேளை குறித்த ஒரு இனத்தின் மீதான, குறித்த ஒரு மதத்தின் மீதான காழ்ப்புகள் சிறுகச் சிறுக, பாதுகாப்புணர்வாயும், அச்சவுணர்வாகவும், வரலாற்றுப் பாடங்களின் படிப்பினை என்று கூறிக் கொண்டும் வெறுப்பும் துவேசமுமாயும் வெவ்வேறு பெயர் கொண்டு அலைகின்றன. அந்த இனத்தின், அந்த மதத்தின் மக்களையும் அதைக் குற்றவுணர்வோடு ஏற்றுக் கொள்ளவும் செய்து விட்டோம்.  சிந்தியுங்கள் மனிதர்களே! பாசிச அரசாட்சி நடக்கும் இந்த நாட்டில் இதுவரை காலமும் ஒரு சிறு துரும்பு அசைவதும் அரசாங்கத்திற்குத் தெரியாமல் இருந்திருக்கிறதா? இது மதங்களுக்கிடையிலான கலவரம் இல்லை. மதத் தீவிரவாதம் இல்லை. என்னுடைய இயலாமையைக் கைப்பற்றி, என் இயலாமையைக் கொண்டு என் பெயரைப் பாவித்து எங்கள் எல்லோரையும் அடக்கும் வழிமுறை இது! என்னுடைய பழமையான வழிமுறையில் இருக்கும் ஓட்டையைக் கண்டுபிடித்து என்னையும் என்

Religions aren't progressive anymore!

I have realized, again, that this world, as usual, is a 'heavenly' land full of religion, religious hatred and a land of people at the height of their barbarism, passed on through thousands of years of religions. This time it was Buddhist monks who opened my eyes. We barely managed to escape with our lives yesterday.  The hatred could continue today, tomorrow, or even days after this has passed. We could be sliced down by hundred swords bearing people... me, my family, or the child in our house. You will probably remember, I wrote about the Buddhist temple close to our house, the loud Pirith chanting, and the festivities that were relayed over the loudspeaker a few months ago.  When we moved to this house it was but a small Buddha statue under a Bo tree. Now it covers a much bigger extent. It is the 10th anniversary of the Pansala. And I think they have holy days in October. Yesterday was the 10th day. On each of these 10 days, they start broadcasting songs of Nanda Malini a

சமுதாய வாழ்க்கை

நண்பர் ஒருவர் நான்கு மாதக் குழந்தையை சினமா அரங்கிற்குக் கூட்டி வந்த பெற்றோரை அக்கறையுடன் விசனப்பட்டிருக்கிறார். குழந்தை வீரிட்டு அழுதிருக்கிறது. இப்படி நானும் நினைத்திருக்கிறேன். எதற்காக குழந்தைகளை பெரியவர்கள் புழங்கும் இடத்திற்க்கு அழைத்து வருகிறார்கள் என, ஆனால் இக்கருத்தைச் சொல்லுவதற்கு முன்னர் நாம் சில விடயங்களை யோசிக்க வேண்டியிருக்கிறது.  நான்கு மாதக் குழந்தை வீட்டில் இருக்க வேண்டும் என்றால் தாயும் வீட்டில் இருக்க வேண்டும். ஆகவே பிள்ளை பெற்ற தாய்க்கு வெளியே வந்து தன் விருப்பம் போல ஏதேனும் செய்ய விருப்பம் இருந்தாலும் பிள்ளையின் காரணத்தால் வர முடியாது. பால் குடிக்கும் குழந்தையை வீட்டில் விட்டு விட்டு சினமா பார்க்க தாய் வருவதே இந்தச் சமுகத்தில் அபத்தமாகப் படும். சிறு குழந்தையொன்று இருப்பதற்காக அந்தத் தாய் வீட்டிலேயே கிடக்கத் தேவையில்லை.  அண்மையில் இலங்கை செய்தியொன்றை வாசித்தேன். சிவனொளி பாத மலைக்கு ஒரு தாய் தன் எட்டு மாதக் குழந்தையுடனும் குடும்பத்துடனும் சென்றிருக்கிறார். மலையில் அன்று அதிக புகார் இருந்ததினால் குழந்தையை தன் தாயிடம் கொடுத்து விட்டு அந்த இளம் அம்மா மலை ஏறி இருக்கிறா

நாம் நமது எதிர்காலச் சந்ததியினருக்காக்க எதை விடுத்துச் செல்லப்போகிறோம்?

தமிழ்நாட்டின் ஒரு துணுக்குப் பத்திரிக்கையின் செய்தி ஒன்றை வாசிக்க நேர்ந்தது. சுற்றுலாத்தளமொன்றில் பரிசல் கவிழ்ந்து குடும்பத்தினர் அறுவர் பலியாகியுள்ளனர். அதற்குக் காரணமாக அவர்கள் மகிழ்ந்திருந்த பொழுதொன்றில் கையடக்கத் தொலைபேசிக் கமெராவில் செல்ஃபிக்கள் எடுக்க முனையும் போது பரிசலின் சமநிலை குழம்பி பரிசல் கவிழ்ந்ததாகச் சொல்கிறார்கள்.  அதில் பத்து மாதக் குழந்தையொன்றும் அடக்கம். மேலும் இளந்தம்பதிகளும் குழந்தைகளும் இருந்துள்ளனர். மிகவும் துன்பியல் செறிந்த செய்தி இது. இச்செய்தி பகிரப்பட்ட தொணி, செல்ஃபிக்களால் உயிருக்கு ஆபத்து என்பதே. அச்செய்தியின் கீழ் ஏராளமானோர், செல்ஃபி மோகத்தினால் உயிர் பலி, செல்ஃபி அவசியம் தேவையா என்றெல்லாம் கருத்திட்டிருக்கிறார்கள்.  மனிதர்கள் இரண்டு வகை. ஒருவகை பழைய பாரம்பரியத்தை மட்டுமே கொண்டாடுபவர்கள். பண்பாட்டில் இல்லாதவை அறங்களுக்கு ஒவ்வாதவை என்பவர்கள். இது பெரும்பாலும் பழையவர்களின் குணம். அடுத்த வகை எது தற்போதைய நடைமுறையோ அதை மட்டும் உள்வாங்கிக் கொள்பவர்கள். இது பெரும்பாலும் புதியவர்களின் குணம். இதில் பழையவர்கள் காரண காரியமில்லாமல் புதியன புகுதலை வெறுப்பவர்கள்

மரணதண்டனை

உலகிலே எத்தனையோ மனிதர்கள் இயற்கையாலும், ஒருவருக்கு ஒருவர் மோதியும், போராலும்,நோயாலும் இறக்கிறார்கள். அதில் ஆபத்தில்லாதவர்கள், அப்பாவிகள், குழந்தைகள்,வயோதிபர்கள், குற்றமுள்ளவர்கள்,குற்றமற்றவர்கள்,இளைஞர்கள் என்று எல்லா வகையினரும் அடக்கம். சில குற்றங்கள் தனி நபரை மட்டும் பாதிக்கும். சில குற்றங்கள் ஒரு சமுதாயத்தையே அழிக்க வல்லது. போதைப்பொருள் கடத்தல், மருத்துவ ஊழல், விவசாய ஊழல், அரசியல் குற்றங்கள், போர்க்குற்றங்கள் அத்தகையன. இவ்வாறான குற்ங்களுக்கு தனி நபரோ ஒரு சிறு குழுமமோ எப்போதும் பொறுப்பாக முடியாது. குறிப்பாக போதைபொருள் உபயோகம், கடத்தல் இரண்டுமே இரு தரப்பாலும் தெரிந்தே செய்யப்படுகிறது. கடத்துபவருக்கு பிரக்ஞை இருப்பின் அவருக்கு அது பற்றிய விளைவுகள் தெரியும், உபயோகிப்பவருக்கு கட்டாயம் தெரியும். சிறு குழந்தையாயினும் போதைபொருட்கள் தவறானவை என்கிற பதாகை எல்லோராலும் அறியப்பட்ட ஒன்று. அவர்கள் தருவதால்த்தான் நாங்கள் பயன்படுத்துகிறோம் என்று சொல்லவே முடியாது. சட்ட விரோதமான எல்லாச் செயல்களுக்கும் பின்னால் மிகப்பெரிய வணிகப்புலங்கள் இருக்கும். இங்கும் அவ்வாறே. இருப்பினும் தண்டனைக

காலமாற்றம்

1981இல் வெள்ளவத்தை என்று நிறைய நண்பர்கள் பழைய புகைப்படங்கள் சிலவற்றைப் பகிர்ந்திருந்தார்கள். கூர்ந்து பார்க்கும் போது அப்பத்தைய பெண்கள் எல்லாரும் நல்ல வடிவான உடுப்புப் போட்டு, நல்ல ட்றேசிங் சென்ஸ்சோட இருந்திருக்கிறதா தெரியுது. அத நினைச்சாத்தான் கவலையா இருக்கு. வெள்ளவத்தை, அப்போதும் இப்போதும் தமிழர் நகரம் தான். இலங்கையின் அறுபதாமாண்டு காலப் படமொன்றை முன்னர் ஒரு தடவை பார்த்து வியந்தேன். சாதாரணமாக சந்தையில் பண்டம் வாங்கும் பெண்களின் படங்கள் அவை. படங்களில் பாடல்க்காட்சியின் பின்னணியில் வரும் 'ரிச் கேர்ள்ஸ்' மாதிரி இருந்தார்கள். எனது அம்மா பழையவர். அறுபத்தைந்து பிராயம். சிறிய சட்டைகளையும், காற்சராய்களையும் மட்டுமே இளம்பருவத்தில் யாழ்ப்பாணத்தில் அணிந்ததாகச் சொன்னார். கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரயில் முழங்காலுக்கு கீழே சட்டை போட்டால் தண்டனை என்றும் சொன்னார். கணருபனின் அம்மா அதே காலத்தவர். அறுபது பிராயம். தான் என்னென்ன வகையான கால்ச்சப்பாத்துக்களை அணிந்ததாகவும் இப்போது அப்படி ஒன்றுமேயில்லை என்று கேலியாக, "நான் ஸ்டைல் என்று சொல்லி அணிந்திருந்த" எனது செருப்புக்களை பார்த்துவிட்டுச

ஓ...அந்த இனிமையான நாட்கள் என்று சொல்லும் காலம்...

முதலில் இருந்து தொடங்க விருப்பமா? தொடங்குதலில் இருக்கும் இன்பம் முடிதலில் இருப்பதில்லையல்லவா? அதனால்க்கேட்டேன். முதலில் இருந்து தொடங்குதல் விருப்பமா? முதலிலிருந்து தொடங்கிய யாரையும் யாரும் கவரவேண்டுமென்றில்லாத, நாமாக நாமிருந்த அந்த நாட்களை மீட்டு மீட்டு மீட்டு.... அதனுடன் கரைவது பற்றி என்ன நினைக்கிறாய்? காதலிலும், கருத்துமோதலிலும் யாரும் யாருடனும் தோற்றுப் போவதில்லை என்று, சின்ன மீன் போட்டு பெரிய மீன் பிடிக்கத் தொடங்கிய 'அந்த முதலில்' இருந்து தொடங்குதல் பிடித்தமா? முற்றுப்புள்ளிக் குற்றுத் தேயாத தட்டச்சுப் பலகையை வெறித்துப் பார்த்துக் கொண்டே சிரிப்பின் முகங்கள் போட்டு நம்மை நாம் ஆதிக்கப்படுத்திய அந்த முதலில் இருந்து தொடங்க விருப்பமா? எங்கள் கதைகளின் கதைசொல்லல் அழகிற்கும், நம்மைப் பற்றிக் கதைத்தல் தவிர்க்கவும் மென்று துப்பிய அரசியல், பெண்ணிய ,சமுக விழுமிய... அந்த மேவும் வாசனையை மீண்டும் பெற முதலில் இருந்து தொடங்குதல் விருப்பமா? காதலைத் தவிர வேறு பேசுவதற்காய் விஞ்ஞானிகளாய் மாறிப்போய் கணிதமும் கணினியுமாய் ஆன ஒரு காலம். வெறுமனே முகத்தை முகத்தை பார்த்துகொண்டு பருக்கள்

தீபிகாவின் ஆவணப்படம்

https://www.youtube.com/watch?v=KtPv7IEhWRA இன்றைக்கு அதிகளவில் பேசப்பட்டுக்கொண்டிருப்பது,  தீபிகா படுகோனே  பங்குபற்றியிருக்கும் ஒரு ஆவணப்படம் பற்றியது. ஒரு பெண் தனது தேவைகளை தானே முடிவு செய்கிறாள், தன்னைப் பற்றி தானே சிந்திக்கிறாள், தனக்குத் தேவையானவை எவை, தேவையற்றவை எவையென விளக்கமுள்ளவள். தன் அறிவையும், உடலையும் கொண்டாடக் கூடிய தன்மை தனக்கு மட்டுமே உண்டு. தன்னுடைய விடுதலையுணர்வை நிர்ணயிப்பதும், குலைப்பதும் தானே- என்று எல்லாவற்றுக்கும் பொறுப்பேற்கும் ஆவணப்படம் ஒன்றினை ஹோமி அடஜானியா செய்திருக்கிறார். மக்களுடைய பிரச்சினை, பெண்ணியம் பேசுபவர்கள் மட்டும், எது எண்டுமானாலும் செய்யலாம், ஆயின் ஆண்கள் எது வேண்டுமானாலும் செய்வதும் சரிதானே? பெண்ணியம் என்பது ஒரு முரட்டுப் பிடிவாதமுடைய சமுக சீர்குலைப்பானா? இது ஒரு நல்ல கேள்வி. யார் வேண்டுமானாலும் எதுவும் செய்வது என்பது எழுந்தமானமான ஒரு சமுக அமைப்பு. இந்த உலகத்தில் யாரும் யாரையம் கொலை செய்துவிட முயாது. யாரும் யாருடைய தயவின்றி ஒரு உயிரை உருவாக்கி விடவும் முடியாது. பகைவர்களை எல்லாம் அழிக்கவும், நண்பர்களை எல்லாம் தழைக்கவும் வைக்க மு