Skip to main content

தீபிகாவின் ஆவணப்படம்


https://www.youtube.com/watch?v=KtPv7IEhWRA



இன்றைக்கு அதிகளவில் பேசப்பட்டுக்கொண்டிருப்பது, தீபிகா படுகோனே பங்குபற்றியிருக்கும் ஒரு ஆவணப்படம் பற்றியது. ஒரு பெண் தனது தேவைகளை தானே முடிவு செய்கிறாள், தன்னைப் பற்றி தானே சிந்திக்கிறாள், தனக்குத் தேவையானவை எவை, தேவையற்றவை எவையென விளக்கமுள்ளவள். தன் அறிவையும், உடலையும் கொண்டாடக் கூடிய தன்மை தனக்கு மட்டுமே உண்டு. தன்னுடைய விடுதலையுணர்வை நிர்ணயிப்பதும், குலைப்பதும் தானே- என்று எல்லாவற்றுக்கும் பொறுப்பேற்கும் ஆவணப்படம் ஒன்றினை ஹோமி அடஜானியா செய்திருக்கிறார்.


மக்களுடைய பிரச்சினை, பெண்ணியம் பேசுபவர்கள் மட்டும், எது எண்டுமானாலும் செய்யலாம், ஆயின் ஆண்கள் எது வேண்டுமானாலும் செய்வதும் சரிதானே? பெண்ணியம் என்பது ஒரு முரட்டுப் பிடிவாதமுடைய சமுக சீர்குலைப்பானா?
இது ஒரு நல்ல கேள்வி.
யார் வேண்டுமானாலும் எதுவும் செய்வது என்பது எழுந்தமானமான ஒரு சமுக அமைப்பு. இந்த உலகத்தில் யாரும் யாரையம் கொலை செய்துவிட முயாது. யாரும் யாருடைய தயவின்றி ஒரு உயிரை உருவாக்கி விடவும் முடியாது. பகைவர்களை எல்லாம் அழிக்கவும், நண்பர்களை எல்லாம் தழைக்கவும் வைக்க முடியாது.

ஆணும் பெண்ணும் ஒரு போதும் சரி நிகர் சமனாக முடியாது. அது தான் உண்மை. உயிரியல் வேறுபாடு கொண்டவர்கள் அவர்கள். ஒத்த மனநிலை உடையவர்களும் இல்லை. முற்றிலும் வேறுபாடுகள் கொண்டவர்களாக பல பில்லியன் வருடங்கள் வந்தவர்கள்.. ஆனால் இவ்விரு பால்நிலைகளும் சரிநிகராகக் கூடியவை. பால்நிலையைப் பற்றித்தான் நாங்கள் கதைக்கிறோம். பாலுக்கும், பால்நிலைக்கும் உள்ள வித்தியாசத்தை விளங்கிக் கொள்ள வேண்டும்.
மீண்டும் இந்த வீடியோவிற்கு வருவோம். ஒரு பெண் தன்னால் எல்லாமே செய்ய முடியும். திருமண பந்ததிற்கு உட்பட்டும், உட்படாமலும் உறவுநிலையில் இருக்க முடியும் என்று கூறுகிறார். அது சரியா? அது சரிதான், அது எனது தெரிவு என்றும் கூறுகிறார். அப்படியானால், யாரும் என்னவும் செய்யலாமா, அவரவர் தெரிவு என்று கூறிக்கொண்டு?
இந்த உலகம் முழுவதும் ஆண்களால், தாங்கள் செய்கிற ஒவ்வொரு காரியத்திற்கும் விளக்கங்களும், நீதியும், நியாயங்களும் கற்பிக்கப்பட்டு வருகிறது. ஒரு பாலியல் தாக்குதல்தாரி, தன்னை நியாயப்படுத்தும், பாதிக்கப்பட்டவர்களை குறை கூறும் உலகமிது.

இந்த உலகத்திற்கு பதிலடி கொடுப்பதே இவ்வாறான திறந்த வாக்குமூலங்களின் பதிவு. எந்தவொரு பெண் நினைத்தாலும் என்னவும் செய்யலாம். ஆண் செய்யக் கூடிய எல்லாவற்றையும் பெண் செய்வதாகச் சொல்லுகிறாள். ஆனால் முன்வைக்கப் படும் கேள்வியோ, பெண் இவற்றைச் செய்தால், ஒரு ஆண் இவற்றைச் செய்யும் போது கேள்விகள் கேட்காதீர்கள் என்பதாக இருக்கிறது.

இந்த ஆவணப்படம் வந்ததன் நோக்கமே, ஆண் ஏலவே இவற்றைச் செய்கிறான், அது போலவே தன்னாலும் செய்ய முடியும் என்பதை அழுத்தமாகச் சொல்லுவதற்காகவே. இதன் பின்னர்தான் ஆண் இவ்வாறானவற்றைச் செய்யப் போகிறான் என்கிறது மாதிரியான அபத்தங்களை முன் வைக்காதீர்கள்.

இருப்பினும், முறைகேடான, சமுகத்தின் ஒட்டுமொத்த பொதுப்புத்தியின் தெரிவில் எடுக்கும் முடிவுகளின் கூட்டுத் தெரிவானது மிகப் பிழையானது. அது யார் எடுப்பினும். எல்லோருக்கும் உறுத்துகிற ஒரு விடயம், திருமணத்திற்கு புறம்பான உறவைப் பெண் பேணுதல் தொடர்பானது. உன்னால் முடியுமாயிருந்தால் என்னாலும் முடியும் என்பது சரி.ஆனால் அனுமதிக்கப்பட்ட, சட்ட ரீதியான ஒரு உறவில் ஒருவரை ஒருவர் மன ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ, சமுக ரீதியாகவோ அழுத்தங்களுக்கு உள்ளாக்குதல் குற்றமாகும்.

தெரிவுகள் எப்போதும் நம் சார்ந்தவை அல்ல. எம்மைச் சுற்றியுள்ளவர்களின் தெரிவுகளும் நமதானவையாக இருக்கின்றது. எமக்கேயான தெரிவை ஏற்படுத்தும் போது, ஆரோக்கியமானதொரு சமுக மாற்றம் தேவையாகிறது.

ஆணை அடிபணிய வைப்பதும், ஆணை முடக்குவதுமல்ல எமது தேவை. அப்படியாயின் நாம் தோல்வியடைகிறோம். நம் பற்றிப் புரிய வைப்பதும், அவர்களைப் புரிந்து கொள்வதும் நமது தேவைகளில் முக்கியமானது.

Comments

Popular posts from this blog

சாமகானமும் காம்போதியும்

முருகையன் ஒரு மொழிபெயர்ப்புச் செய்தார். மொழிபெயர்ப்பு எண்டும் சொல்ல முடியாது,சாதுவா மொழிபெயர்ப்பும்,திறமையான கற்பனையும் போட்டு செய்யுள் வடிவத்தில, இளநலம்! என்ன இளநலமா?ஹையா கிளுகிளுப்பான கதை வரப்போகுது. குமாரசம்பவம் (ஸாரி வேற கண்டென்ட் எண்டு நினைக்கப்படாது, ஐ ஆம் வெரி டீசன்ட்) காளிதாசன் குமாரசம்பவத்தில எழுதின அதே கதையை தமிழில தந்தவர். அதில தான் இந்தக் கதை வருகுது.  சாமகானம் சாமகானம் எண்டு ஒண்டு சொல்லக் கேட்டிருப்பம். “சாமகானம் பாடினான்” எண்டு நாலாம் வகுப்புச் சமய பாட புத்தகத்தில ஒரு பாடம் இருக்கு. பத்துத் தலையும், கையில ஒரு தலையுமாக் கணக்குப் பிழையா மொறாயஸ் கீறின இராவணனிண்ட மீசை வெச்ச படம் இருக்கும், இப்ப ஞாபகம் வந்துட்டுதா? அந்தக் காலத்திலேயே தலைகளிண்ட கணக்கை எண்ணிப் பாத்தனாங்கள் ஆக்கும். (தலைக்கணக்கு முக்கியம் அமைச்சரே) இப்ப சாமகானத்தைப்பற்றிப் பாப்பம். காளிதாசன் குமாரசம்பவம் எழுதேக்க, சும்மா கற்பனைகுதிரையை காட்டாற்று வெள்ளம் போல பறக்க விடுறேர்.  மிஸ்டர் சிவனும் மிசஸ் உமாவும் கலியாணமான புதிசில, (ஏன் கல்யாணமான பழசில யாரும் வெளிய போறதில்ல எண்டு நெடுங்காலமா டவுட்) சும்மா வெளிய வெளிக்

இராவணேசன் ; Maunaguru's 'Ravanesan'

நெறியாள்கை - பேராசிரியர் மௌனகுரு. இடம் -கொழும்பு கலை இலக்கியப் பேரவை. காலம்- சனி(13.02.2010)  மாலை 6.30மணி. சனி மாலை(13.02.2010) பேராசிரியர் மௌனகுரு அவர்களின் 'இராவணேசன்' நாடகம் நடைபெறவிருக்கிறதென்று நண்பரொருவர் தகவல் சொன்னார். இருந்த எல்லா வேலைகளையும் புறந்தள்ளி விட்டேன். நாடகங்கள் என்றவுடன்  வரும் இந்த தொலைகாட்சி சீரியல்களையே கண் ஞாபகத்தில் கொண்டுவந்து முகத்தை அஷ்ட கோணலாக்குகிறது. மேடையமைப்பும், அரங்கமும்,அரிதாரம் பூசிக்கொண்ட பாத்திரங்களும், நேரடியான காட்சிகளூட்டும் கிளர்வும், எங்களுக்கு முன்னாள் ஒரு தலைமுறை இதனூடே வாழ்ந்து காட்டியிருக்கிற விடயமும் தெரிவதில்லை. மாற்றங்கள் மட்டுமே மாறிக் கொண்டிருந்தாலும்,எங்களின் முன்னோடிகள் வழி வந்த கலைப் பாதையை எடுத்தியம்புதலுக்கும்,அதற்கான வரவேற்புக்கும் இங்கு இடமில்லை எனும் போது அவற்றையெல்லாம் தாண்டி மனதில் எங்கேயோ வலிக்கிறது. எங்களுடைய காலத்தில், முழுமையான கூத்துக்கலையோ, அரங்காடல்ககளையோ  காண்பதற்கு காலமோ மாற்றமோ ஏதோவொன்று இடந்தரவில்லை .இருப்பினும் யாராவது எங்கள்  நலிந்து போன கலைகளை மறுபடியும் இளஞ்சமுதாயத்திட்கு க

குழந்தைகளுக்கான நவீன தமிழ்ப் பெயர்கள்

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தல் எனும்போது, இவ்வளவு காலமும் வைத்த பெயர்கள் தமிழ்ப்பெயர்கள் இல்லையா எனும் கேள்வி எம்மில் பலருக்கு எழும். உங்கள் பெரும்பாலானோர் தமிழ்ப்பெயர் என்று எண்ணிக்கொண்டிருக்கும் உங்கள் பெயரை வட இந்தியக் கலப்பு,சமக்கிருத கலப்பு,ஐரோப்பிய,அரேபியக் கலப்புடனான பெயராக இனங்காணுவீர்கள்.  தமிழில் பெயர் சூட்டுவது இனத்துவேசம் உள்ள செயலா? :P இனத்தைக் கொண்டாடக் கூடிய செயல். மறத்தமிழன் என்று அடைமொழி இட்டுக்கொண்டு உலாவுவதை விட அழகான செயல் என்று எண்ணுகிறேன். இந்த அடையாளம் மிக அழகானது.  அண்மையில் நிறையப் பேர் தமிழில் குழந்தைகளூக்கான நவீனமான பெயர்கள் வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். தமிழில் பெயர்கள் பழமையானவையாக இருப்பது கூட இக்காலத்தோரின் தெரிவுக்குட்படாமைக்கு ஒரு காரணமாகும். பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் சிலவற்றை தொகுத்திருக்கிறேன்.சிலவற்றை கண்டும் பிடித்திருக்கிறேன். ( பிற்காலத்தேவைகளுக்கு ;)  ) வினைச்சொல் பெயர்கள் அஞ்சா ஆராதி ஆனந்தி  சலனி கோளறா இசி இனி தேயா மேதா வேயா வேகா மின்னு மிதவா தெகிழா நெகி