Skip to main content

எப்படிச் சிந்திப்பது?

தோழரொருவர் கீழ்வரும் மீமைப் பகிர்ந்திருந்தார். அதற்குப் பதிலாக நான் பின்வரும் ஒரு பதிலை எழுதியிருந்தேன். பெண்கள் புரட்சிகரமாக, முற்போக்காக சமுகச் சிந்தனையோடு செயற்படுவதற்கு எப்போதுமே மார்க்சும் லெனினும் பெரியாரும் மட்டுந்தான் காரணமில்லை. ஒடுக்கப்படும் எவருக்கும் அடக்குமுறைக்கு எதிராகச் சிந்திக்கும் திறன் வரும். அது பகுத்து அறியும் திறன். இவர்கள் எல்லோரும் சமுக மேம்பாட்டிற்காக கோட்பாடுகளையும் அனுபவங்களையும் தந்திருந்தாலும், இவர்களின் சமுகத்திற்கான உழைப்பு எக்காலத்திலும் புறக்கணிக்க முடியாததுமாக இருப்பினும், ஒவ்வொரு தடவை பெண் தடைகளை உடைத்து வரும் போது பெரியாரின் பேத்தி, மார்க்ஸின் இளவல் எனச் சொல்லுவது அவர்களின் சுயசிந்தனையை அடிப்பதைப் போன்றது. 

எதோவொரு மூலையில் எதோவொரு கிராமத்தில் பிறந்து வளர்ந்த கல்வி வாய்ப்புக்கள் மறுக்கப்பட்ட ஒரு பெண் தன் பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும் எனத் தனித்துப் போராடுவாள். எதோவொரு மூலையில் எதோவொரு கிராமத்தில் பிறந்து வளர்ந்த கல்வி வாய்ப்புக்கள் மறுக்கப்பட்ட ஒரு பெண் தனக்கும் தன் சமுகத்திற்கும் நேர்ந்திருக்கும் ஒடுக்குமுறைய தனக்குத் தெரிந்த முறையில் எதிர்ப்பாள். எதோவொரு மூலையில் எதோவொரு கிராமத்தில் பிறந்து வளர்ந்த கல்வி வாய்ப்புக்கள் மறுக்கப்பட்ட ஒரு பெண் தன் மூன்றாவது சந்ததிக்குச் சொல்லவென படிப்பினைக் கதைகளை விட்டுச் சென்றிருப்பாள். 

ரோசா லக்சம்பேர்கோ, கிளாரா ஜெட்கினோ, அலெக்சாண்ரா கொலெண்டியோ, எல்லெனாரோ என்றால்க் கூட இந்த மீமை முழுமையாக ஏற்றுக் கொள்ளலாம். அதே வேளை அவர்களின் சமுகத்திற்கான அளப்பரிய உழைப்பை மறுக்க முடியாது. 

ஒவ்வொரு தடவையும் சாதாரண மக்களின் முற்போக்கு முயற்சிகள் முன்னயவர்களைக் கொண்டு சமப்படுத்தப்படும் போது, இனிவரும் காலத்திற்கான புதிய சிந்தனையாளர்களை இழக்கிறோம். ஆனால்ப்பாருங்கல் நான் இப்படி எழுதியது பெரியாரை எதிர்ப்பதாக ஒருவருக்கும், மார்க்சை எதிர்ப்பதாக இன்னொருவருக்கும் பட்டிருக்கிறது. 

மார்க்சையும் லெனினையும் சொன்னால் எரிச்சல் வருவதாக வலதுசாரிகளுக்கு அடிப்படைவாதிகளுக்கு எழுதும் அதே டெம்ளேட்டை என்னிடமும் கொண்டு வருகிறார்கள். யார் இவர்களை மறுத்தது? இவர்களுக்கு என்ன பிரச்சினை? நான் எழுதியிருக்கும் கருத்து உங்களில் பலருக்கு பொருள் மயக்கத்தை தருமாயின் உங்கள் கண்ணோட்டம் மீது பிழை இருக்கிறது. ஆனால் முன்னோடிகளைப் பற்றியும், அவர்களின் சமுக அரசியலைப் பற்றியும் கோட்பாடுகளைப் பற்றியும் நான் எதுவும் கதைக்காமலே இவர்களின் பெயரைச் சொன்னாலேயே மறுத்து அடிக்க ஓடி வரும் இத்தகையவர்களின் அரசியல்க் கோட்பாட்டின் மீதும் புரிதலின் மீதும் எனக்குச் சந்தேகம் எழுகிறது. வெறும் பிம்ப வழிபாட்டு அரசியலைச் செய்கிறார்களா? இவர்களுக்குச் சொல்லப்படும் பெயர் தான் முக்கியம். எதற்காக சொல்லப்படுகிறதென்பது முக்கியமில்லை. மேலும் நான் பல முன்னோடிப் பெண்களின் பெயர்களைக் குறிப்பிட்டிருந்தேன், அதைப்பற்றி ஒரு பேச்சையும் காணோம். 

புதிய சிந்தனையாளர்களை இழக்கிறோம் என்று நான் ஆதங்கப்படுவது மார்க்சையும் லெனினையும் பெரியாரையும் எதிர்ப்பதாக பட்டால், மார்க்சும் லெனினும் பெரியாரும் புதிய சிந்தனைகளை மறுப்பவர்கள் எனும் தொணியில் உங்கள் மனதில் எதுவோ பதிந்திருக்கிறது. அதை முதலில் களையுங்கள். எது கோட்பாடோ அதைக் கற்க முனையுங்கள் பிம்ப வழிபாட்டில் எதுவுமில்லை. 

இன்னுமின்னும் புதிய சிந்தனைகளையும், புதிய சிந்தனையாளர்களையும் ஒவ்வொரு தனி மனிதரினதும் தெளிவும், பங்களிப்பையும் இந்தச சமுகம் உருவாக்கிப் போடாமல் எந்தவித விடுதலையும் உருவாகிவிடாது. நாம் எல்லோருமே இந்தச் சமுகத்தின் காவிகள். சிறிதாகவோ பெரிதாகவோ, பெரிதினும் பெரிதாகவோ இந்தச் சமுக அசைவியக்கத்தைத் தூண்டுபவர்கள். இங்கு இன்னொரு மிகப்பெரிய சமுகப் பாய்ச்சலை உங்களில் யாராவதும் செய்யலாம். அதற்காக உங்களை மட்டும் கொண்டாடிக் கொண்டிருக்கத் தேவையில்லை. அதே வேளை அந்தப் பாய்ச்சலை நிகழ்த்திய நீங்கள் மிக மிக முக்கியமானவருந்தான்.

Comments

  1. சிறப்பு 👌
    மனப்பூர்வமாக ஏற்கிறேன்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சாமகானமும் காம்போதியும்

முருகையன் ஒரு மொழிபெயர்ப்புச் செய்தார். மொழிபெயர்ப்பு எண்டும் சொல்ல முடியாது,சாதுவா மொழிபெயர்ப்பும்,திறமையான கற்பனையும் போட்டு செய்யுள் வடிவத்தில, இளநலம்! என்ன இளநலமா?ஹையா கிளுகிளுப்பான கதை வரப்போகுது. குமாரசம்பவம் (ஸாரி வேற கண்டென்ட் எண்டு நினைக்கப்படாது, ஐ ஆம் வெரி டீசன்ட்) காளிதாசன் குமாரசம்பவத்தில எழுதின அதே கதையை தமிழில தந்தவர். அதில தான் இந்தக் கதை வருகுது.  சாமகானம் சாமகானம் எண்டு ஒண்டு சொல்லக் கேட்டிருப்பம். “சாமகானம் பாடினான்” எண்டு நாலாம் வகுப்புச் சமய பாட புத்தகத்தில ஒரு பாடம் இருக்கு. பத்துத் தலையும், கையில ஒரு தலையுமாக் கணக்குப் பிழையா மொறாயஸ் கீறின இராவணனிண்ட மீசை வெச்ச படம் இருக்கும், இப்ப ஞாபகம் வந்துட்டுதா? அந்தக் காலத்திலேயே தலைகளிண்ட கணக்கை எண்ணிப் பாத்தனாங்கள் ஆக்கும். (தலைக்கணக்கு முக்கியம் அமைச்சரே) இப்ப சாமகானத்தைப்பற்றிப் பாப்பம். காளிதாசன் குமாரசம்பவம் எழுதேக்க, சும்மா கற்பனைகுதிரையை காட்டாற்று வெள்ளம் போல பறக்க விடுறேர்.  மிஸ்டர் சிவனும் மிசஸ் உமாவும் கலியாணமான புதிசில, (ஏன் கல்யாணமான பழசில யாரும் வெளிய போறதில்ல எண்டு நெடுங்காலமா டவுட்) சும்மா வெளிய வெளிக்

இராவணேசன் ; Maunaguru's 'Ravanesan'

நெறியாள்கை - பேராசிரியர் மௌனகுரு. இடம் -கொழும்பு கலை இலக்கியப் பேரவை. காலம்- சனி(13.02.2010)  மாலை 6.30மணி. சனி மாலை(13.02.2010) பேராசிரியர் மௌனகுரு அவர்களின் 'இராவணேசன்' நாடகம் நடைபெறவிருக்கிறதென்று நண்பரொருவர் தகவல் சொன்னார். இருந்த எல்லா வேலைகளையும் புறந்தள்ளி விட்டேன். நாடகங்கள் என்றவுடன்  வரும் இந்த தொலைகாட்சி சீரியல்களையே கண் ஞாபகத்தில் கொண்டுவந்து முகத்தை அஷ்ட கோணலாக்குகிறது. மேடையமைப்பும், அரங்கமும்,அரிதாரம் பூசிக்கொண்ட பாத்திரங்களும், நேரடியான காட்சிகளூட்டும் கிளர்வும், எங்களுக்கு முன்னாள் ஒரு தலைமுறை இதனூடே வாழ்ந்து காட்டியிருக்கிற விடயமும் தெரிவதில்லை. மாற்றங்கள் மட்டுமே மாறிக் கொண்டிருந்தாலும்,எங்களின் முன்னோடிகள் வழி வந்த கலைப் பாதையை எடுத்தியம்புதலுக்கும்,அதற்கான வரவேற்புக்கும் இங்கு இடமில்லை எனும் போது அவற்றையெல்லாம் தாண்டி மனதில் எங்கேயோ வலிக்கிறது. எங்களுடைய காலத்தில், முழுமையான கூத்துக்கலையோ, அரங்காடல்ககளையோ  காண்பதற்கு காலமோ மாற்றமோ ஏதோவொன்று இடந்தரவில்லை .இருப்பினும் யாராவது எங்கள்  நலிந்து போன கலைகளை மறுபடியும் இளஞ்சமுதாயத்திட்கு க

குழந்தைகளுக்கான நவீன தமிழ்ப் பெயர்கள்

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தல் எனும்போது, இவ்வளவு காலமும் வைத்த பெயர்கள் தமிழ்ப்பெயர்கள் இல்லையா எனும் கேள்வி எம்மில் பலருக்கு எழும். உங்கள் பெரும்பாலானோர் தமிழ்ப்பெயர் என்று எண்ணிக்கொண்டிருக்கும் உங்கள் பெயரை வட இந்தியக் கலப்பு,சமக்கிருத கலப்பு,ஐரோப்பிய,அரேபியக் கலப்புடனான பெயராக இனங்காணுவீர்கள்.  தமிழில் பெயர் சூட்டுவது இனத்துவேசம் உள்ள செயலா? :P இனத்தைக் கொண்டாடக் கூடிய செயல். மறத்தமிழன் என்று அடைமொழி இட்டுக்கொண்டு உலாவுவதை விட அழகான செயல் என்று எண்ணுகிறேன். இந்த அடையாளம் மிக அழகானது.  அண்மையில் நிறையப் பேர் தமிழில் குழந்தைகளூக்கான நவீனமான பெயர்கள் வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். தமிழில் பெயர்கள் பழமையானவையாக இருப்பது கூட இக்காலத்தோரின் தெரிவுக்குட்படாமைக்கு ஒரு காரணமாகும். பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் சிலவற்றை தொகுத்திருக்கிறேன்.சிலவற்றை கண்டும் பிடித்திருக்கிறேன். ( பிற்காலத்தேவைகளுக்கு ;)  ) வினைச்சொல் பெயர்கள் அஞ்சா ஆராதி ஆனந்தி  சலனி கோளறா இசி இனி தேயா மேதா வேயா வேகா மின்னு மிதவா தெகிழா நெகி