Skip to main content

Posts

Showing posts with the label கவிதை

கதவுகளைத் திறந்து விடுங்கள் ...

கதவுகள் லேசுப்பட்டவை அல்ல , எந்தக் காலத்திலும் தட்டத் தட்டத் திறவு கொள்ளாமல் நம்மைப் பழிவாங்கியவை அவை கதவுகள் லேசுப்பட்டவை அல்ல , நாங்கள் தட்டத் தட்டத் திறவு கொள்ளாமல் பழியை வாங்கியவை அவை. எங்கள் வீடுகளில் கதவுகள் மரம் கடைந்தும், வசதிப்பட்ட வீடுகளில் இரும்பும், துரும்புமாயும் காகமிருக்கக் கொப்பாய் உயர்ந்து நெடுந்து , வளர்ந்து காவலிருக்கும். கதவுகள், சின்னஞ்சிறு  குழந்தைகள்,  தொங்கித் தொங்கி ஊஞ்சலாட வாய்ப்புக் கொடுக்கும். எல்லாக் கதவுகளும் யாரையாவது காவலிருப்பது குறித்து ஒரு நாளோ இரு நாளோ தயக்கமடைந்திருக்கும். அல்லது வெட்கப்பட்டிருக்கும்.  அடைக்கலம் தந்த கதவுகளும் இருக்கின்றன. காட்டிக் கொடுக்கத் திறந்து கொண்ட கதவுகளும் இருக்கின்றன... கதவுகள் எங்கள் பாட்டிகள் மாதிரி,  மூதாதைகள் மாதிரி, சின்னச் சின்னக் கதைகளை கதவு இடுக்குகளின் துவாரம் வழியாக யாருக்கும் பதனிடாத புதுக் காற்றில் சேமித்து வைத்திருக்கின்றன.  இன்னொரு இன்னொரு தலைமுறைக்காக  கதவுகளை நம்பி நாம் துயில் கொண்டோம்... எங்கள் பெண்களின் சொல்லக் கூடாத  கற்புகளை கதவுகளுக்கு

வெறுங்கிழவீ !

                                                                         வெட்கமில்லை கிழவீ உன் சதைகள் ஆட வீற்றிருக்க முடியா உன் விதானமாட பற்கலில்லை கிழவீ உன் மலினமாட மாண்டிருந்த  மறைப்பெல்லாம்  மங்கியாட பிறழ்ந்து  வந்த கண்ணீரில் உன் கிழவன் ஆட கடந்து வந்த வாழ்க்கையிலே என்ன கிழித்தாய் காலம் தின்று துப்பவென சேலை விரித்தாய் செய்ய வழி ஏதுமின்றி பத்து பெற்றாய் -பின் எதேனக்குப் பத்து என்று எண்ணி முடித்தாய் ஆடி முடித்தகிழவி உன் ஆசையென்ன ? - ஆண்ட நிலை அடி வயிற்றின் பாண்டல் என்ன ? கக்கலிலே கலந்து வந்த பேதி யோடே கற்ற வினை யாதடியே -கருங்கிழவீ  ! உற்ற துணை ஊர் முழுக்க ஒன்றுமில்லை ஊரறிய உனக்குமொரு காவலில்லை. கற்றடிமை கால் பெரும்  காதலில்லை கடைசியிலே யார் வருகைக் காயிருந்தாய் ? ஆதியுந்தான் அப்பனுந்தான் ஆரும் வருகார் ஆத்தி ஆத்தி தேத்தடியே தனிக்கிழவீ  ! காலம் தின்ற கிழவீ உன் கந்தலென்ன ? காதல் கிழம் சாவதிலுன் பந்தமுமென்ன ? ஆட ஆட, ஆட  ஆட, அடிமை கிழவீ நீ ஆண்டிருந்த காலமெல்லாம் அருமை கிழவீ வாழ என்று வந்து நிற்க எது கிழவீ நீ வந்து போன பாதி வழி

முன்னமொரு சகுனிகள்..

                                                முன்னமொரு சகுனிகள் முடிந்து வைத்த கதைகள் பல பின்னையொரு பொழுதிலே பேச்சவிழ்ந்த கதைகள் பல மன்னுமொரு காதல் மருந்தடித்த கதைகள் பல மாட்டிவைத்த அவன் கதையை மாய்ந்து மாய்ந்து-  உரைத்தன பல என்னையொரு நாளில் நீ அடித்துரைத்த கதையும் பல ஏக்கமொருநாளில் ஏங்கி வழிந்த கதையும் பல தோற்க வழியின்றி என்னைத் தோற்பித்த கதையும் பல தாக்க வழியின்றி எனைத் தகர்ப்பித்த கதையும் பல இருட்டிளுந்தன் பேர்தனை இடித்துரைத்த கதைகள் பல இன்னுமின்னும் இங்கிதமில்லாப் பங்கமும் பல கதை அழுக்கு என்று ஆர்ப்பரித்த ஆயிரங்கதை அன்றொருநாள் சொல்லிச் சொல்லி அழுத கதை பாடிப் பரவசம் காண முனைந்த பல கதை, பாடு பொருள் மட்டும் மாறாத பரிதவிப்பும் ஒரு கதை நாடி ஓடி வருங்கனவில் நான் நலிந்து போனதும் ஒரு கதை தேடி இனிதேடி தேய்ந்து போனதும் தொடர் கதை தேய்ந்த சகுனங்கள் தெளிவில்லை கண்ணே தேய்தலுக்கும் திரிதலுக்கும் எது எங்கே முன்னே ஆய்ந்து பதிலுரைத்தல் அடுத்தவிடை ஆனால் ஆன இன்பம் அது எனக்காம் பின்னே - ஏங்கி இனிப்பிரிதல் கூடாது என்றால் எது சரியோ, எது பிழையோ ஆரையும் நோகோம், இன

திரும்புவதற்குச் சாத்தியமற்ற குரல்........

திரும்புவதற்குச் சாத்தியமற்ற உன் குரல் தேடல்கள் தொலைந்து போன ஒரு  அந்தியில் என்னிடம் ஓடி வருகின்றன. நீ கோபப் படுவாய் என்பதற்காய் குரலில் மன்னிப்பு நிறைந்த கெஞ்சலை  அவிழ்த்துப் போட்டுக் கொண்டிருக்கிறேன். மன்னிப்பின் தீவிரத்தில் நீ  திட்ட மறந்த வார்த்தைகள்  நாளைக்காய் கிடப்பிலிருக்கிறது. மெல்ல,  நொடிப் பொழுதில்  நான் உன் கர்வம் என்பது போல் நான் உன்னில் நிறைந்து நிற்கும்  மந்திரக் கணத்தை ஆகர்ஷிக்க முற்படுவேன். உடனேயே, என்னிலிருந்து விலகும் வெளிச் சுவாசம் போல உன்னிலிருந்து விண்டு பிளவு படும் ஆக்ரோஷம் வெட்கமேயின்றி என்னைத் திட்டும். சிறுகச் சிறுகச் சேமித்து வைத்த என் மானம் மலினமாகும். மூடு பனியின் நளினங்கள் சாகும். நீ உச்சத்தில் இருப்பாய், நான் பாதத்தில் இருப்பேன். முன்னை விடத் தெளிவாக தீர்மானமாக, எல்லா நாளிலும் என் அழைப்பின் போது நீ சொல்லும்  தாரக மந்திரத்தை இப்போதும் சொல்ல மறக்க மாட்டாய். வழிகிற கன்னங்களை நான் துடைப்பதேயில்லை.  பதிலுக்கான சாத்தியமற்ற  ஓரிரு கணங்களில் துண்டிக்கப் படுகிறது,  தொடர்பு. நான் காட்டிய திசையில்

பிரம்மச்சரியத்தின் பிலாக்கணம்!

                                             இலையுதிர் காலமாதலால் ஒவ்வொரு பௌர்ணிமையிலும் அரச மரங்கள், இலைகளை சட்டை கழற்றுவது போல ஒரு வித சலசலப்புடன் உதிர்த்துக் கொட்டுகிறது ! அல்லது இலையுதிர்காலத்தின் இறுதி மரணந்தழுவும் வெள்ளரசு மரத்தினிலைகள் தெரு நாயொன்று சிரங்கு தாளாமல் உடலை சடசடத்து உலுப்பிக் கொள்வது போல உதிர்த்துக் கொட்டுகிறது ! கீழே போதிசத்துவன் இருந்தான் புகழ் மாலையில் நனைவது போல பழம் இலைகளாலும், இலைகளின் சவங்களாலும், சருகுகளாலும் அபிஷேகிக்கப்பட்டான். அதில் எதோ உத்தமத்தை உணர்ந்தவன், சடத்துவத்தைத் தாண்டி சத்துவத்துக்குள் நுழைந்தான். பிரம்மச்சரியத்தின் அந்தம் பற்றி புல்லுருவியாக வியாபகமாகிக் கொண்டு வருகின்ற படிகளில் என் முன்னேற்றம் தெரிகிறது !  என் அம்மா எனக்குத் தந்த இறுதி அரவணைப்போடு- 'அம்மா' என்கிற காட்சிப்புலமும் , அதன் விஸ்தீரணமும் என் வட்டத்துள் இருந்து தீர்ந்து போயிற்று. இன்று உணரக் கூடியதாயிருக்கிறது, எனக்கான குழந்தைகளுக்காக சேமித்து  வைத்த அன்பு முத்தங்களைப் பரிமா

இஞ்சித் தேத்தண்ணியும் குருட்டுப் பட்சியும்...

                                                            படபடவென்று, இறக்கையை அடித்துக் கொண்டு அந்தரத்தில் துடிக்கின்ற அந்த இரவுப் பட்சி, இரவின் கவிந்து போன நரையை ரசிகத் தன்மைக்கு அப்பாலே எட்ட நின்று பார்க்கிறது- இருந்தும் கூடக்குறைய அதன் மையப்புள்ளிக்குள் அதனால் இறங்கமுடியவில்லை. நான் சாய்வு நாற்காலியைத்  தேர்ந்தெடுத்து, ஆயாசமாக உட்கார்ந்து கொண்டு இஞ்சித் தேத்தண்ணியை ருசிக்கிறேன். எனக்கு எல்லாவற்றிலும் ரசனையுண்டு. அந்த மாமரத்தில், தளிர் வரத்தொடங்கி நாளாகீற்று- மாம்பூ பூத்துக் குலுங்கும் குடலையின் உன்னத வாசம்...! அன்றைய மாலை, இருண்டு போன சூரியனின் அழைப்பை மீறி வௌவால்களை மரத்துக்கு அழைக்கிறது. எங்கிருந்தோ நெடிய வீச்சத்துடன் வரும் பீத்தோவனின் மேற்கத்தைய இசையொன்றோடு என் இஞ்சித் தேத்தண்ணியும் தீர்ந்து போகிறது. தீர்ந்து போன படியினால், இன்னொரு நாள் இஞ்சித் தேத்தண்ணியைக் குடிக்கமாட்டேன் என்றதிலை. என் சுரனையில்லாத் தனம் என் போலவே என்னையும் ஏமாற்றிக் கொண்டிருந்தது.  அந்த இராப் பட்சி, இன்னமும் இறக்கையை அடித்து ஓயவ

பிச்சிப் பெரும்பாடல் !

ஒய்ய நினவாத ஒன்கடலும் வீழாத, பைய நடவாத பாலுருகிப் பாடாத, ஐய, உன்னை அன்றி ஆயகலை அறியாத, செய்ய அறியாத சேதி அறியாத, கொய்ய மலர்ப்பங்கு கோதிக் குலையாத, பொய்ய உரைத்தாலும் போதும் மறையோயே !  வெங்கு புலையோயே வேறு விளையோயே ! அங்கு அலையாயே ஆழி மழையோயே ! பங்கு சிறுத்தாலும் பாதி கறுத்தாலும்- எங்கும் உனைத் தேடி ஏங்க வைத்தாயே ! வெம்புனல் தீ பெய்து,சங்கர,கனல் செய்து, கொங்கு நின் கோ கழல் பூட்டி, அம்புவி ஆர்த்தெழ வேண்டி, என்புரு ஏய்த்து மாய்த்து, அம்பு நின் அன்பு பாய்ச்சி, ஆணவம் அடியோடழித்து, கொன்றையில் கிலுகிலுப்பை செய்து, கிண்டியில் வேதம் பாய்ச்சி, ஒன்று நான் செய்யப் போக, ஒன் நிழல் ஓய்ந்து போச்சு ! உருவுடையார் எலாம் காண நிற்கிலர்- பெருவுடையார் தோற்றமேலாம் போல நிற்கிறர்- கருவுடைக் கொற்றமெலாம் தீது தைக்கிறர்- தெருவிடையோர் போதல் இன்னும் தேக்க மறுக்கிறர்- தேர்ந்து சொல்லும் வாய் முதலே தெரிதல் பிழையோ-  கூர்ந்து கொல்லும் ஆயுதமே குணத்தில் வெல்லோ?  தேர்ந்து சொல்லச் சேதியில்லை - இங்கோ , நானோர்ஆவுடையாக் கோலமென இப்போ வாய் பிளக்கக் கண்டாய்...!  

இயல் ஒன்று தருவே !

                              விழ ஒணாத நீ - வீழ ஒணாத நீ -அழ ஒணாத நீ- ஆள ஒணாத நீ- பகல் ஒணாத நீ- அகல் ஒண்ணாத நீ-  கங்குல் புகழ் ஒணாதபெரும் பயிற்ருப் புலவ நீ - என்றும் தகல் விளங்கா பெரும்  தருக்கமும் நீ ! கன வளவாத கழ வளவாத வின வளவாத விளை நீ பயில் வளவாத பரு வளவாத அரு மருந்தாகும் அயிர் நீ துணை வளவா இணை வளவா பிணை வளவா பெரும் அத்தன் என்னை ஆள்பவன் நீ ! பொன்னுற்றே பொருளுற்றே துகிலும் அகிலுற்றே  கலையுற்று களியுற்ற என் காலக் கிளை பற்றி நின் தன்னும் வேண்டா தனையும் வேண்டா  தானொடு அடங்கலுற்றேனே ! இரு பகல்வா ஒரு பகல்வா முழுதகலா முதல்வா தரு கருக்கும் விழி பருக்கும் சிறை உதிர்க்கும் தணலா விலை மதிக்கும் மதி பதிக்கும் உலை கொதிக்கும் இனி தகிக்கும் இயல் ஒன்று தருவே ! நிலா - 17 .09 .2010  

எஞ்சாமி நீயி எப்ப வருவ?...

ஒண்ணுமே சொல்லாம போன எஞ்சாமி ! குத்தமொன்னு சொல்ல- குமுறியழ நீங்க இல்ல- ஒன்னுக்கு ஒண்ணா உசிரா வளத்துப்புட்டேன்-  உக்காந்து தேத்திவிட -நீங்க இல்ல எஞ்சாமி ! இவ கிடக்கா சிறுக்கியின்னு இம்புட்டும் இரங்காம- விறைப்பா நீரு, வில்லங்கமாப் போனீரு, கண்ணுக்குள்ள நீரு வரப்பத் தாண்டுது-  ஆத்தில தண்ணி அடிச்சிகிட்டு ஓடுது- எருக்கம் வித கையிருக்கு- அரளி வித அரைச்சிருக்கு-  எஞ்சாமி நீயி எப்ப வருவ?........... ஒத்தையில நட்டு வெச்ச மரம் போல வாடி நிக்கேன்- வாடிய பயிருக்கு வாழ கொஞ்சம் பச்சை கொடு. கத்தியில கட்டி வெச்ச  காய் போல காஞ்சிருக்கு- காயெல்லாம் தேஞ்சு என் வாய் போல பொளந்திருக்கு- வேணாஞ்சாமி நான் உன்னைக் குறை சொல்ல எல்லாத் தப்பும் எம்மெல்ல எஞ்சாமீ- குடை பிடிச்சு இங்காரும்  நெய் விளக்கு  ஏத்துவாரோ? கோடியில யாரும் கொடி வெச்சு தூத்துவாரோ ? ஐப்பசியில் மழை பேஞ்சு ஆவணியில் காத்தடிச்சா சித்திரையில், செங்கரும்பு சீனிபோல தித்திக்கும்முன்னு, ஒத்தையில போன எறும்புகளைப் புடிச்சி வெச்சி- ஒத்தடம் கொடுத்து- உருக்கமாப் பாத்துக்கிட்டது - எந்தப்பு எஞ்சாமீ !