Skip to main content

எஞ்சாமி நீயி எப்ப வருவ?...



ஒண்ணுமே சொல்லாம போன எஞ்சாமி !
குத்தமொன்னு சொல்ல- குமுறியழ நீங்க இல்ல-
ஒன்னுக்கு ஒண்ணா உசிரா வளத்துப்புட்டேன்- 
உக்காந்து தேத்திவிட -நீங்க இல்ல எஞ்சாமி !
இவ கிடக்கா சிறுக்கியின்னு இம்புட்டும் இரங்காம-

விறைப்பா நீரு, வில்லங்கமாப் போனீரு,
கண்ணுக்குள்ள நீரு வரப்பத் தாண்டுது- 
ஆத்தில தண்ணி அடிச்சிகிட்டு ஓடுது-
எருக்கம் வித கையிருக்கு- அரளி வித அரைச்சிருக்கு- 
எஞ்சாமி நீயி எப்ப வருவ?...........

ஒத்தையில நட்டு வெச்ச மரம் போல வாடி நிக்கேன்-
வாடிய பயிருக்கு வாழ கொஞ்சம் பச்சை கொடு.
கத்தியில கட்டி வெச்ச  காய் போல காஞ்சிருக்கு-
காயெல்லாம் தேஞ்சு என் வாய் போல பொளந்திருக்கு-

வேணாஞ்சாமி நான் உன்னைக் குறை சொல்ல
எல்லாத் தப்பும் எம்மெல்ல எஞ்சாமீ-
குடை பிடிச்சு இங்காரும்  நெய் விளக்கு  ஏத்துவாரோ?
கோடியில யாரும் கொடி வெச்சு தூத்துவாரோ ?

ஐப்பசியில் மழை பேஞ்சு ஆவணியில் காத்தடிச்சா
சித்திரையில், செங்கரும்பு சீனிபோல தித்திக்கும்முன்னு,
ஒத்தையில போன எறும்புகளைப் புடிச்சி வெச்சி-
ஒத்தடம் கொடுத்து- உருக்கமாப் பாத்துக்கிட்டது - எந்தப்பு எஞ்சாமீ !

எதுகை மோனை தெரிஞ்சா கை புடிச்சேன்-
எதுக்கும் நீரு தெரிஞ்சா கண் சிரிச்சீர்! 

நாளுக்கு அந்தம் நாளாக நாளாக,
இந்த ஏழைக்கு அந்தம்  பாழாக பாழாக,
யாருக்கு யாருன்னு எழுதி வெச்சா படைச்சாக,
நீருக்குள் இலையொன்ன அமுக்கி வச்சா ஒழிச்சாக?

ஒன்னும் குத்தமில்ல, ஒ மனசில் நானுமில்ல.
நீங்க ஆளப் பொறந்தவுங்க ஆண்டுகிட்டே அங்கிருங்க.
மாளப் பொறந்தவுங்க மாண்டுகிட்டே  இங்கிருக்கோம்.
ஒண்ணுமே இல்லையின்னு ஒருவாட்டி சொல்லியிருந்தா-
இன்னுமே ஆகாம இங்கிருந்து அழுவேனோ?

எத்தன நாள் பாத்திருக்கோம்-
எதுவெல்லாம் பேசிருக்கோம்-
தனிமையில சிரிச்சிருக்கோம்-
தாங்காம மொறைச்சிருக்கோம்-

காத்தில கை விரிச்சு காணாதத தேடும் படி-
ஆத்திதில மீன்புடிக்கும் இந்த அருவாச் சிறுக்கிக்கு ,
ஏட்டில கை புடிச்சும் எழுத்தே வரல்லேன்னு, 
ஏக்கப் பட்டவளை - நூத்தில ஒண்ணாக்கி நூழிழையில் தூங்கும் படி
எஞ்சாமி என்னதுன்னு போட்டே சொக்குப் பொடி?  

கவித படிச்ச நீ கஞ்சிக் கலயத்தக் கவிழ்த்தாலும்
கஞ்சிப் பருக்கையில கவித தெரியுது கா.
பொத்திப் பிடிச்சபடி மனசே தெரியாம போக்குக் காட்டிக்கிட்டு நடக்கையில-
பொத்துன்னு விழுகுதுன்னு - பொறவெடுத்து பாக்கையில-
வேகாத என்னெஞ்சின் வேர் பிஞ்ச இதயம் சாமீ! 

ஒன்னப் போல ரெண்டுமில்லே !
உன்னப் போல யாருமில்லே !
என்னப் போல பத்து விம்பம் என் எதிர்க்கே தெரியுது கா.
ஒன்னொன்னும் கேலிசெய்து உச்சத்தில் கத்துது கா.

ஆழம் பாத்தா காலவுட்டேன்-  
காலம் பாத்தா சொல்லிப்புட்டேன்
கடல் பெருசுன்னு கலந்துக்க நான் நினைச்சேன்- 
குருட்டுக் கண்ணுக்கு அது குளமென்னு புலப்படல்லே!

ஆசைப் பட்டபடி உங்கூரு பிள்ளையாரை-
ஒன்பது நாள் சுத்தி வந்தேன்- 
தொந்திப் பிள்ளையாரே தோக்கப் பண்ணிணீ ரே !
அந்திமக் காலத்திலேயும் மறப்பேனா ஐயா சொல்லும்? 

ஒண்ணுமில்ல எஞ்சாமி,
உசிரு போகையில ஒத்தையில நின்னு- ஒன்கண்ணைப் பாத்த படி
பத்தி எரிகிற பாடையில என் தேகம் -
பச்சை இலை போல - மசமசன்னு புகையடிக்கும்.

அது நான் காத்திருந்த கண்ணீருன்னு,
ஒன  காதில யாரும் சொல்லுவாக.
கேட்டபடி நீ போவ -
உனக்காயிரம் ஜோலியிருக்கும். 




(மட்டக்களப்பு /அம்பாறை  நாட்டாரியல் வழக்கில் எழுதப்பட்டது)

நிலா -
06 .09 .2010

Comments

  1. எப்படியென்று சொல்ல. படிப்பறிவில்லாத ஒரு பேதமையின் சொல்லாடலில் கவிதாயினியாக ஜொலிக்கும் உன் சாமததியதை. வாழ்க வள்ர்க

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சாமகானமும் காம்போதியும்

முருகையன் ஒரு மொழிபெயர்ப்புச் செய்தார். மொழிபெயர்ப்பு எண்டும் சொல்ல முடியாது,சாதுவா மொழிபெயர்ப்பும்,திறமையான கற்பனையும் போட்டு செய்யுள் வடிவத்தில, இளநலம்! என்ன இளநலமா?ஹையா கிளுகிளுப்பான கதை வரப்போகுது. குமாரசம்பவம் (ஸாரி வேற கண்டென்ட் எண்டு நினைக்கப்படாது, ஐ ஆம் வெரி டீசன்ட்) காளிதாசன் குமாரசம்பவத்தில எழுதின அதே கதையை தமிழில தந்தவர். அதில தான் இந்தக் கதை வருகுது.  சாமகானம் சாமகானம் எண்டு ஒண்டு சொல்லக் கேட்டிருப்பம். “சாமகானம் பாடினான்” எண்டு நாலாம் வகுப்புச் சமய பாட புத்தகத்தில ஒரு பாடம் இருக்கு. பத்துத் தலையும், கையில ஒரு தலையுமாக் கணக்குப் பிழையா மொறாயஸ் கீறின இராவணனிண்ட மீசை வெச்ச படம் இருக்கும், இப்ப ஞாபகம் வந்துட்டுதா? அந்தக் காலத்திலேயே தலைகளிண்ட கணக்கை எண்ணிப் பாத்தனாங்கள் ஆக்கும். (தலைக்கணக்கு முக்கியம் அமைச்சரே) இப்ப சாமகானத்தைப்பற்றிப் பாப்பம். காளிதாசன் குமாரசம்பவம் எழுதேக்க, சும்மா கற்பனைகுதிரையை காட்டாற்று வெள்ளம் போல பறக்க விடுறேர்.  மிஸ்டர் சிவனும் மிசஸ் உமாவும் கலியாணமான புதிசில, (ஏன் கல்யாணமான பழசில யாரும் வெளிய போறதில்ல எண்டு நெடுங்காலமா டவுட்) சும்மா வெளிய வெளிக்

இராவணேசன் ; Maunaguru's 'Ravanesan'

நெறியாள்கை - பேராசிரியர் மௌனகுரு. இடம் -கொழும்பு கலை இலக்கியப் பேரவை. காலம்- சனி(13.02.2010)  மாலை 6.30மணி. சனி மாலை(13.02.2010) பேராசிரியர் மௌனகுரு அவர்களின் 'இராவணேசன்' நாடகம் நடைபெறவிருக்கிறதென்று நண்பரொருவர் தகவல் சொன்னார். இருந்த எல்லா வேலைகளையும் புறந்தள்ளி விட்டேன். நாடகங்கள் என்றவுடன்  வரும் இந்த தொலைகாட்சி சீரியல்களையே கண் ஞாபகத்தில் கொண்டுவந்து முகத்தை அஷ்ட கோணலாக்குகிறது. மேடையமைப்பும், அரங்கமும்,அரிதாரம் பூசிக்கொண்ட பாத்திரங்களும், நேரடியான காட்சிகளூட்டும் கிளர்வும், எங்களுக்கு முன்னாள் ஒரு தலைமுறை இதனூடே வாழ்ந்து காட்டியிருக்கிற விடயமும் தெரிவதில்லை. மாற்றங்கள் மட்டுமே மாறிக் கொண்டிருந்தாலும்,எங்களின் முன்னோடிகள் வழி வந்த கலைப் பாதையை எடுத்தியம்புதலுக்கும்,அதற்கான வரவேற்புக்கும் இங்கு இடமில்லை எனும் போது அவற்றையெல்லாம் தாண்டி மனதில் எங்கேயோ வலிக்கிறது. எங்களுடைய காலத்தில், முழுமையான கூத்துக்கலையோ, அரங்காடல்ககளையோ  காண்பதற்கு காலமோ மாற்றமோ ஏதோவொன்று இடந்தரவில்லை .இருப்பினும் யாராவது எங்கள்  நலிந்து போன கலைகளை மறுபடியும் இளஞ்சமுதாயத்திட்கு க

குழந்தைகளுக்கான நவீன தமிழ்ப் பெயர்கள்

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தல் எனும்போது, இவ்வளவு காலமும் வைத்த பெயர்கள் தமிழ்ப்பெயர்கள் இல்லையா எனும் கேள்வி எம்மில் பலருக்கு எழும். உங்கள் பெரும்பாலானோர் தமிழ்ப்பெயர் என்று எண்ணிக்கொண்டிருக்கும் உங்கள் பெயரை வட இந்தியக் கலப்பு,சமக்கிருத கலப்பு,ஐரோப்பிய,அரேபியக் கலப்புடனான பெயராக இனங்காணுவீர்கள்.  தமிழில் பெயர் சூட்டுவது இனத்துவேசம் உள்ள செயலா? :P இனத்தைக் கொண்டாடக் கூடிய செயல். மறத்தமிழன் என்று அடைமொழி இட்டுக்கொண்டு உலாவுவதை விட அழகான செயல் என்று எண்ணுகிறேன். இந்த அடையாளம் மிக அழகானது.  அண்மையில் நிறையப் பேர் தமிழில் குழந்தைகளூக்கான நவீனமான பெயர்கள் வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். தமிழில் பெயர்கள் பழமையானவையாக இருப்பது கூட இக்காலத்தோரின் தெரிவுக்குட்படாமைக்கு ஒரு காரணமாகும். பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் சிலவற்றை தொகுத்திருக்கிறேன்.சிலவற்றை கண்டும் பிடித்திருக்கிறேன். ( பிற்காலத்தேவைகளுக்கு ;)  ) வினைச்சொல் பெயர்கள் அஞ்சா ஆராதி ஆனந்தி  சலனி கோளறா இசி இனி தேயா மேதா வேயா வேகா மின்னு மிதவா தெகிழா நெகி