Skip to main content

கதவுகளைத் திறந்து விடுங்கள் ...




கதவுகள் லேசுப்பட்டவை அல்ல ,
எந்தக் காலத்திலும்
தட்டத் தட்டத் திறவு கொள்ளாமல்
நம்மைப் பழிவாங்கியவை அவை
கதவுகள் லேசுப்பட்டவை அல்ல ,
நாங்கள் தட்டத் தட்டத் திறவு கொள்ளாமல்
பழியை வாங்கியவை அவை.

எங்கள் வீடுகளில்
கதவுகள் மரம் கடைந்தும், வசதிப்பட்ட வீடுகளில்
இரும்பும், துரும்புமாயும் காகமிருக்கக் கொப்பாய்
உயர்ந்து நெடுந்து , வளர்ந்து காவலிருக்கும்.
கதவுகள்,
சின்னஞ்சிறு  குழந்தைகள், 
தொங்கித் தொங்கி ஊஞ்சலாட வாய்ப்புக் கொடுக்கும்.
எல்லாக் கதவுகளும் யாரையாவது காவலிருப்பது குறித்து
ஒரு நாளோ இரு நாளோ தயக்கமடைந்திருக்கும்.
அல்லது வெட்கப்பட்டிருக்கும். 

அடைக்கலம் தந்த கதவுகளும் இருக்கின்றன.
காட்டிக் கொடுக்கத் திறந்து கொண்ட கதவுகளும் இருக்கின்றன...
கதவுகள் எங்கள் பாட்டிகள் மாதிரி, 
மூதாதைகள் மாதிரி,
சின்னச் சின்னக் கதைகளை
கதவு இடுக்குகளின் துவாரம் வழியாக
யாருக்கும் பதனிடாத புதுக் காற்றில் சேமித்து வைத்திருக்கின்றன. 
இன்னொரு இன்னொரு தலைமுறைக்காக 
கதவுகளை நம்பி நாம் துயில் கொண்டோம்...

எங்கள் பெண்களின் சொல்லக் கூடாத 
கற்புகளை கதவுகளுக்கு மட்டும் காட்டி வைத்திருந்தோம். 
சல்லாபம் தெறிக்கச் சிந்தி வரும் 
பொல்லாத குழ ஒழுக்கங்களுக்காய் கதவுகளை
காவலுக்கு வைத்திருந்தோம்.
கதவுகளுக்குப் பின்னாலே ஒளிந்து கொண்டு
கையாலாகாத தனமாய் களவுகள் செய்தோம்.
கதவுகளின் இடுக்கில் சன்னம் பார்த்து,
எதிரியையும், தோழனையும் முதுகில் சுட்டோம்.
கதவுகள் கற்பக தரு மாதிரி, 
அச்சாக் கதவுகள் 
ஜன்னல்களின் பாதிச் சுதந்திரத்தை முழுதாய்த் தந்தவை....
என்னை தாண்டிப் போ தாண்டிப் போ என்று 
தடுக்காமல் திறந்து விட்டவை...
வாழ்வின் சமநிலையின் உயிரிக் குறியீடுகள் !

எங்கள் பழந்நாளில் கதவு திறக்கப் பாடியும்,
திறந்த கதவு மூடவுமே தேவாரம் பாடி
மந்திரங்கள் பல செய்து மாயக் கதவுகளை உட்பத்தியாக்கினோம்
எங்களை அவை பாழும் நரகங்களில்
படு குப்பைகளை உட்பத்தியாக்கப் பயன்படுத்தின.
என்றைக்கு நாங்கள் திறந்த வெளிகளுக்குள்,
கதவுகள் இல்லாத வானப் பரப்பின் 
விரிந்த நிழலுக்குள் அன்பையும், சமத்துவத்தையும், சாத்வீகத்தையும்
உட்பத்தியாக்கியிருகிறோம் ?

கதவுகள் எங்களுக்குத் தடையா ?
பூட்டிய அறைக்குள் செய்கிற கள்ளத்தனம் தானே மனிதன்...
எங்களை உண்மைக்குப் பிறந்தவர்களாக்குங்கள்...
திறந்த வெளிகளுக்குள் எங்கள் குழந்தைகளுக்கு
அமுதூட்டுங்கள், அவர்களை
சுதந்திர புருஷர்களாக வலம் வரச் செய்யுங்கள்
எங்கள் சமுதாயத்தின் அடக்கு முறைகளை 
அவர்களுக்குச் சொல்லித் தராதீர்கள்...
அவர்களின் கதவுகளைத் திறந்து விடுங்கள்....

எங்களை இன்னொருவனுக்காய் உற்பத்தி பண்ணச் சொல்லியோ,
அடி கழுவி விடும் படியோ கதவுகளுக்குள் போட்டு அடைக்காதீர்கள். 

மனிதர்களின் உயிர்க் கூடுகளின் கதவுகளையோ,
குருவிகளின் சின்னச் சின்னக் கூடுகளின்
கதவுகளையோ திறந்து விடுங்கள்,
நாங்கள் எதுவாகிலும் ஒன்றிலிருந்தாவது தப்பிக்க விரும்புகிறோம்.

காகக் குருவிகள், தேர்ந்தெடுத்துக் கட்டிய கூட்டில்,
குழந்தைகளைப் போடாமல், குயில்பொந்தில் எம்மைத் தூக்கி எறியாதீர்கள்...
எம்மை அந்நிய தேசத்துக்காய் தயார்ப்படுத்தாதீர்கள்...
எங்கள் கதவுகள்,
எங்கள் பாரம்பரியங்கள், 
எங்கள் சுதந்திரங்கள், 
எங்கள் உயிர்களின் விலைகள் 
எல்லாவற்றையும் 
ஒரு கதவுக்குப்பின்னால்  நின்று பேரம் பேசாதீர்கள். 

நாங்கள் எங்கிருந்து அடைக்கப்பட்டோம் என்பதில்,
துநீஷியாவா ,
லிபியாவா ,
முள்ளி வாய்க்காலா, 
என்று எங்கெங்கோ தொலைக்கப்பட்ட 
திறவு கோல்கள் இல்லாமல், 

கதவுகளைத் திறந்து விடுதல் என்பது லேசுப்பட்டது அல்ல ,
கோடி மனிதர்களின் உயிர்கள்...
கோடி மனிதர்களின் மலினமான மானங்கள்...
கோடி மனிதர்களின் கடைசி அபிலாஷைகள்..
கோடி மனிதர்களின் கடைசி இருப்பு...
கோடி மனிதர்களின் ஒரே கனவுகள்....

கதவுகளைத் திறந்து விடுதல் என்பது லேசுப்பட்டதல்ல ! 
கோடி மனிதர்களின் ஒரே கனவுகள்...அவை 


-நிலா

கவியரங்காற்றுகைக்காக எழுதப்பட்ட கவிதை.. 

Comments

  1. கதவு எனும் மூன்று வார்த்தைகளுக்குள் இருக்கும் ஒரு பெரிய உலகத்தையே காணக்கிடைத்தது..

    மிகவும் அருமையான எழுத்து..!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சாமகானமும் காம்போதியும்

முருகையன் ஒரு மொழிபெயர்ப்புச் செய்தார். மொழிபெயர்ப்பு எண்டும் சொல்ல முடியாது,சாதுவா மொழிபெயர்ப்பும்,திறமையான கற்பனையும் போட்டு செய்யுள் வடிவத்தில, இளநலம்! என்ன இளநலமா?ஹையா கிளுகிளுப்பான கதை வரப்போகுது. குமாரசம்பவம் (ஸாரி வேற கண்டென்ட் எண்டு நினைக்கப்படாது, ஐ ஆம் வெரி டீசன்ட்) காளிதாசன் குமாரசம்பவத்தில எழுதின அதே கதையை தமிழில தந்தவர். அதில தான் இந்தக் கதை வருகுது.  சாமகானம் சாமகானம் எண்டு ஒண்டு சொல்லக் கேட்டிருப்பம். “சாமகானம் பாடினான்” எண்டு நாலாம் வகுப்புச் சமய பாட புத்தகத்தில ஒரு பாடம் இருக்கு. பத்துத் தலையும், கையில ஒரு தலையுமாக் கணக்குப் பிழையா மொறாயஸ் கீறின இராவணனிண்ட மீசை வெச்ச படம் இருக்கும், இப்ப ஞாபகம் வந்துட்டுதா? அந்தக் காலத்திலேயே தலைகளிண்ட கணக்கை எண்ணிப் பாத்தனாங்கள் ஆக்கும். (தலைக்கணக்கு முக்கியம் அமைச்சரே) இப்ப சாமகானத்தைப்பற்றிப் பாப்பம். காளிதாசன் குமாரசம்பவம் எழுதேக்க, சும்மா கற்பனைகுதிரையை காட்டாற்று வெள்ளம் போல பறக்க விடுறேர்.  மிஸ்டர் சிவனும் மிசஸ் உமாவும் கலியாணமான புதிசில, (ஏன் கல்யாணமான பழசில யாரும் வெளிய போறதில்ல எண்டு நெடுங்காலமா டவுட்) சும்மா வெளிய வெளிக்

இராவணேசன் ; Maunaguru's 'Ravanesan'

நெறியாள்கை - பேராசிரியர் மௌனகுரு. இடம் -கொழும்பு கலை இலக்கியப் பேரவை. காலம்- சனி(13.02.2010)  மாலை 6.30மணி. சனி மாலை(13.02.2010) பேராசிரியர் மௌனகுரு அவர்களின் 'இராவணேசன்' நாடகம் நடைபெறவிருக்கிறதென்று நண்பரொருவர் தகவல் சொன்னார். இருந்த எல்லா வேலைகளையும் புறந்தள்ளி விட்டேன். நாடகங்கள் என்றவுடன்  வரும் இந்த தொலைகாட்சி சீரியல்களையே கண் ஞாபகத்தில் கொண்டுவந்து முகத்தை அஷ்ட கோணலாக்குகிறது. மேடையமைப்பும், அரங்கமும்,அரிதாரம் பூசிக்கொண்ட பாத்திரங்களும், நேரடியான காட்சிகளூட்டும் கிளர்வும், எங்களுக்கு முன்னாள் ஒரு தலைமுறை இதனூடே வாழ்ந்து காட்டியிருக்கிற விடயமும் தெரிவதில்லை. மாற்றங்கள் மட்டுமே மாறிக் கொண்டிருந்தாலும்,எங்களின் முன்னோடிகள் வழி வந்த கலைப் பாதையை எடுத்தியம்புதலுக்கும்,அதற்கான வரவேற்புக்கும் இங்கு இடமில்லை எனும் போது அவற்றையெல்லாம் தாண்டி மனதில் எங்கேயோ வலிக்கிறது. எங்களுடைய காலத்தில், முழுமையான கூத்துக்கலையோ, அரங்காடல்ககளையோ  காண்பதற்கு காலமோ மாற்றமோ ஏதோவொன்று இடந்தரவில்லை .இருப்பினும் யாராவது எங்கள்  நலிந்து போன கலைகளை மறுபடியும் இளஞ்சமுதாயத்திட்கு க

குழந்தைகளுக்கான நவீன தமிழ்ப் பெயர்கள்

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தல் எனும்போது, இவ்வளவு காலமும் வைத்த பெயர்கள் தமிழ்ப்பெயர்கள் இல்லையா எனும் கேள்வி எம்மில் பலருக்கு எழும். உங்கள் பெரும்பாலானோர் தமிழ்ப்பெயர் என்று எண்ணிக்கொண்டிருக்கும் உங்கள் பெயரை வட இந்தியக் கலப்பு,சமக்கிருத கலப்பு,ஐரோப்பிய,அரேபியக் கலப்புடனான பெயராக இனங்காணுவீர்கள்.  தமிழில் பெயர் சூட்டுவது இனத்துவேசம் உள்ள செயலா? :P இனத்தைக் கொண்டாடக் கூடிய செயல். மறத்தமிழன் என்று அடைமொழி இட்டுக்கொண்டு உலாவுவதை விட அழகான செயல் என்று எண்ணுகிறேன். இந்த அடையாளம் மிக அழகானது.  அண்மையில் நிறையப் பேர் தமிழில் குழந்தைகளூக்கான நவீனமான பெயர்கள் வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். தமிழில் பெயர்கள் பழமையானவையாக இருப்பது கூட இக்காலத்தோரின் தெரிவுக்குட்படாமைக்கு ஒரு காரணமாகும். பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் சிலவற்றை தொகுத்திருக்கிறேன்.சிலவற்றை கண்டும் பிடித்திருக்கிறேன். ( பிற்காலத்தேவைகளுக்கு ;)  ) வினைச்சொல் பெயர்கள் அஞ்சா ஆராதி ஆனந்தி  சலனி கோளறா இசி இனி தேயா மேதா வேயா வேகா மின்னு மிதவா தெகிழா நெகி