Skip to main content

திரும்புவதற்குச் சாத்தியமற்ற குரல்........




திரும்புவதற்குச் சாத்தியமற்ற உன் குரல்
தேடல்கள் தொலைந்து போன ஒரு 
அந்தியில் என்னிடம் ஓடி வருகின்றன.
நீ கோபப் படுவாய் என்பதற்காய்
குரலில் மன்னிப்பு நிறைந்த கெஞ்சலை 
அவிழ்த்துப் போட்டுக் கொண்டிருக்கிறேன்.
மன்னிப்பின் தீவிரத்தில் நீ 
திட்ட மறந்த வார்த்தைகள் 
நாளைக்காய் கிடப்பிலிருக்கிறது.
மெல்ல, 
நொடிப் பொழுதில் 
நான் உன் கர்வம் என்பது போல்
நான் உன்னில் நிறைந்து நிற்கும் 
மந்திரக் கணத்தை ஆகர்ஷிக்க முற்படுவேன்.
உடனேயே,
என்னிலிருந்து விலகும் வெளிச் சுவாசம் போல
உன்னிலிருந்து விண்டு பிளவு படும் ஆக்ரோஷம்
வெட்கமேயின்றி என்னைத் திட்டும்.
சிறுகச் சிறுகச் சேமித்து வைத்த என் மானம் மலினமாகும்.
மூடு பனியின் நளினங்கள் சாகும்.
நீ உச்சத்தில் இருப்பாய்,
நான் பாதத்தில் இருப்பேன்.
முன்னை விடத் தெளிவாக தீர்மானமாக,
எல்லா நாளிலும் என் அழைப்பின் போது நீ சொல்லும் 
தாரக மந்திரத்தை இப்போதும் சொல்ல மறக்க மாட்டாய்.

வழிகிற கன்னங்களை நான் துடைப்பதேயில்லை. 
பதிலுக்கான சாத்தியமற்ற 
ஓரிரு கணங்களில் துண்டிக்கப் படுகிறது, 
தொடர்பு.
நான் காட்டிய திசையில் நீ நீங்கிப் போயிருக்கலாம்.
உறைந்து போன எனது அழைப்பின் ஆரம்பங்கள்
தந்திக் கம்பிகளின் எண் கோட்டில் இறுகிக் கிடக்கும். 

ஒரு காலத்தில் நடந்த விஷயங்கள் 
எதுவுமே உனக்கு ஞாபகம் வருவதில்லை.
அல்லது ஞாபகத்தைப் பிடுங்கி அங்கே 
எறிந்து விட்டு வந்திருக்கிறாய்.
அல்லது எறிவதற்காக, 
அல்லது எதிர்காலக் 
கவிதைகளுக்காகச் சேமித்து வைத்திருக்கிறாய். 
எவ்வையாகிலும், 
நான் -நீ , தவிர யாருக்கும் தெரியாமல் , 
அன்றிரவு நீ எழுதும் கவிதையில், 
என் பாதிப்பும் இருக்கும்.
அது போதும் எனக்கு.


- நிலா
02 /01 /2011 

Comments

  1. //சிறுகச் சிறுகச் சேமித்து வைத்த என் மானம் மலினமாகும்.
    மூடு பனியின் நளினங்கள் சாகும்.
    நீ உச்சத்தில் இருப்பாய்,
    நான் பாதத்தில் இருப்பேன்.//

    அழகான விவரணைகள் கவிதை தரும் அர்த்தங்கள் யோசிக்கவைத்தாலும் ரசிக்கமுடிகிறது !!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சாமகானமும் காம்போதியும்

முருகையன் ஒரு மொழிபெயர்ப்புச் செய்தார். மொழிபெயர்ப்பு எண்டும் சொல்ல முடியாது,சாதுவா மொழிபெயர்ப்பும்,திறமையான கற்பனையும் போட்டு செய்யுள் வடிவத்தில, இளநலம்! என்ன இளநலமா?ஹையா கிளுகிளுப்பான கதை வரப்போகுது. குமாரசம்பவம் (ஸாரி வேற கண்டென்ட் எண்டு நினைக்கப்படாது, ஐ ஆம் வெரி டீசன்ட்) காளிதாசன் குமாரசம்பவத்தில எழுதின அதே கதையை தமிழில தந்தவர். அதில தான் இந்தக் கதை வருகுது.  சாமகானம் சாமகானம் எண்டு ஒண்டு சொல்லக் கேட்டிருப்பம். “சாமகானம் பாடினான்” எண்டு நாலாம் வகுப்புச் சமய பாட புத்தகத்தில ஒரு பாடம் இருக்கு. பத்துத் தலையும், கையில ஒரு தலையுமாக் கணக்குப் பிழையா மொறாயஸ் கீறின இராவணனிண்ட மீசை வெச்ச படம் இருக்கும், இப்ப ஞாபகம் வந்துட்டுதா? அந்தக் காலத்திலேயே தலைகளிண்ட கணக்கை எண்ணிப் பாத்தனாங்கள் ஆக்கும். (தலைக்கணக்கு முக்கியம் அமைச்சரே) இப்ப சாமகானத்தைப்பற்றிப் பாப்பம். காளிதாசன் குமாரசம்பவம் எழுதேக்க, சும்மா கற்பனைகுதிரையை காட்டாற்று வெள்ளம் போல பறக்க விடுறேர்.  மிஸ்டர் சிவனும் மிசஸ் உமாவும் கலியாணமான புதிசில, (ஏன் கல்யாணமான பழசில யாரும் வெளிய போறதில்ல எண்டு நெடுங்காலமா டவுட்) சும்மா வெளிய வெளிக்

இராவணேசன் ; Maunaguru's 'Ravanesan'

நெறியாள்கை - பேராசிரியர் மௌனகுரு. இடம் -கொழும்பு கலை இலக்கியப் பேரவை. காலம்- சனி(13.02.2010)  மாலை 6.30மணி. சனி மாலை(13.02.2010) பேராசிரியர் மௌனகுரு அவர்களின் 'இராவணேசன்' நாடகம் நடைபெறவிருக்கிறதென்று நண்பரொருவர் தகவல் சொன்னார். இருந்த எல்லா வேலைகளையும் புறந்தள்ளி விட்டேன். நாடகங்கள் என்றவுடன்  வரும் இந்த தொலைகாட்சி சீரியல்களையே கண் ஞாபகத்தில் கொண்டுவந்து முகத்தை அஷ்ட கோணலாக்குகிறது. மேடையமைப்பும், அரங்கமும்,அரிதாரம் பூசிக்கொண்ட பாத்திரங்களும், நேரடியான காட்சிகளூட்டும் கிளர்வும், எங்களுக்கு முன்னாள் ஒரு தலைமுறை இதனூடே வாழ்ந்து காட்டியிருக்கிற விடயமும் தெரிவதில்லை. மாற்றங்கள் மட்டுமே மாறிக் கொண்டிருந்தாலும்,எங்களின் முன்னோடிகள் வழி வந்த கலைப் பாதையை எடுத்தியம்புதலுக்கும்,அதற்கான வரவேற்புக்கும் இங்கு இடமில்லை எனும் போது அவற்றையெல்லாம் தாண்டி மனதில் எங்கேயோ வலிக்கிறது. எங்களுடைய காலத்தில், முழுமையான கூத்துக்கலையோ, அரங்காடல்ககளையோ  காண்பதற்கு காலமோ மாற்றமோ ஏதோவொன்று இடந்தரவில்லை .இருப்பினும் யாராவது எங்கள்  நலிந்து போன கலைகளை மறுபடியும் இளஞ்சமுதாயத்திட்கு க

குழந்தைகளுக்கான நவீன தமிழ்ப் பெயர்கள்

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தல் எனும்போது, இவ்வளவு காலமும் வைத்த பெயர்கள் தமிழ்ப்பெயர்கள் இல்லையா எனும் கேள்வி எம்மில் பலருக்கு எழும். உங்கள் பெரும்பாலானோர் தமிழ்ப்பெயர் என்று எண்ணிக்கொண்டிருக்கும் உங்கள் பெயரை வட இந்தியக் கலப்பு,சமக்கிருத கலப்பு,ஐரோப்பிய,அரேபியக் கலப்புடனான பெயராக இனங்காணுவீர்கள்.  தமிழில் பெயர் சூட்டுவது இனத்துவேசம் உள்ள செயலா? :P இனத்தைக் கொண்டாடக் கூடிய செயல். மறத்தமிழன் என்று அடைமொழி இட்டுக்கொண்டு உலாவுவதை விட அழகான செயல் என்று எண்ணுகிறேன். இந்த அடையாளம் மிக அழகானது.  அண்மையில் நிறையப் பேர் தமிழில் குழந்தைகளூக்கான நவீனமான பெயர்கள் வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். தமிழில் பெயர்கள் பழமையானவையாக இருப்பது கூட இக்காலத்தோரின் தெரிவுக்குட்படாமைக்கு ஒரு காரணமாகும். பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் சிலவற்றை தொகுத்திருக்கிறேன்.சிலவற்றை கண்டும் பிடித்திருக்கிறேன். ( பிற்காலத்தேவைகளுக்கு ;)  ) வினைச்சொல் பெயர்கள் அஞ்சா ஆராதி ஆனந்தி  சலனி கோளறா இசி இனி தேயா மேதா வேயா வேகா மின்னு மிதவா தெகிழா நெகி