நண்பர் ஒருவர் நான்கு மாதக் குழந்தையை சினமா அரங்கிற்குக் கூட்டி வந்த பெற்றோரை அக்கறையுடன் விசனப்பட்டிருக்கிறார். குழந்தை வீரிட்டு அழுதிருக்கிறது. இப்படி நானும் நினைத்திருக்கிறேன். எதற்காக குழந்தைகளை பெரியவர்கள் புழங்கும் இடத்திற்க்கு அழைத்து வருகிறார்கள் என, ஆனால் இக்கருத்தைச் சொல்லுவதற்கு முன்னர் நாம் சில விடயங்களை யோசிக்க வேண்டியிருக்கிறது. நான்கு மாதக் குழந்தை வீட்டில் இருக்க வேண்டும் என்றால் தாயும் வீட்டில் இருக்க வேண்டும். ஆகவே பிள்ளை பெற்ற தாய்க்கு வெளியே வந்து தன் விருப்பம் போல ஏதேனும் செய்ய விருப்பம் இருந்தாலும் பிள்ளையின் காரணத்தால் வர முடியாது. பால் குடிக்கும் குழந்தையை வீட்டில் விட்டு விட்டு சினமா பார்க்க தாய் வருவதே இந்தச் சமுகத்தில் அபத்தமாகப் படும். சிறு குழந்தையொன்று இருப்பதற்காக அந்தத் தாய் வீட்டிலேயே கிடக்கத் தேவையில்லை. அண்மையில் இலங்கை செய்தியொன்றை வாசித்தேன். சிவனொளி பாத மலைக்கு ஒரு தாய் தன் எட்டு மாதக் குழந்தையுடனும் குடும்பத்துடனும் சென்றிருக்கிறார். மலையில் அன்று அதிக புகார் இருந்ததினால் குழந்தையை தன் தாயிடம் கொடுத்து விட்டு அந்த இளம் அம்மா மலை ஏறி இருக்கிறா