எனக்கு முன் , நீலத்தின் நிறத்துக்கு சொந்தமானவர்கள் வாழ்ந்திருந்தார்கள் - எங்கள் காணியில் . நாயின் கடை வாய்ப் பல்லின் மாமிச நாற்றத்தைப் போல நாளாக ஆக அவர்களின் வாசம் நீங்கிக்கொண்டிருந்தது . இருந்தும், மாவடுக்கள் தங்கிய மரம் காய்க்கத் தொடங்கிய பின்னும் கூட வாசம் நீங்கிய தடம் போகவில்லை............ எனக்கிருந்த அமில வார்ப்பை கவிழ்த்துக் கொட்டி துணியினால் தேய்த்துக் கழுவியும் - போகவில்லை நீலத்த்தின் நிணம் .......... செய்வதொன்றும் அறியாமல் அக்கினிக் கடவுளைத் தொழ , தனவந்தம் செய்தான் அவன். பிறகு - நானும் , நீலந்தாங்கியவர்களும் பச்சைக் கூண்டோடு திரிபுரம் எரித்த சிவன் மாலோடு , பவனி வந்து கொண்டிருந்தோம் - பால் வீதியில்.! -நிலா