எனக்கு முன் ,
நீலத்தின் நிறத்துக்கு சொந்தமானவர்கள்
வாழ்ந்திருந்தார்கள் -
எங்கள் காணியில் .
நாயின் கடை வாய்ப் பல்லின்
மாமிச நாற்றத்தைப் போல
நாளாக ஆக
அவர்களின் வாசம்
நீங்கிக்கொண்டிருந்தது .
இருந்தும்,
மாவடுக்கள் தங்கிய மரம்
காய்க்கத் தொடங்கிய பின்னும் கூட வாசம் நீங்கிய தடம்
போகவில்லை............
எனக்கிருந்த அமில வார்ப்பை கவிழ்த்துக் கொட்டி
துணியினால் தேய்த்துக் கழுவியும் -
போகவில்லை
நீலத்த்தின் நிணம் ..........
செய்வதொன்றும் அறியாமல்
அக்கினிக் கடவுளைத் தொழ ,
தனவந்தம் செய்தான் அவன்.
பிறகு -
நானும் ,
நீலந்தாங்கியவர்களும்
பச்சைக் கூண்டோடு
திரிபுரம் எரித்த சிவன் மாலோடு ,
பவனி வந்து கொண்டிருந்தோம் -
பால் வீதியில்.!
-நிலா
Comments
Post a Comment