Skip to main content

Posts

இராவணேசன் ; Maunaguru's 'Ravanesan'

நெறியாள்கை - பேராசிரியர் மௌனகுரு. இடம் -கொழும்பு கலை இலக்கியப் பேரவை. காலம்- சனி(13.02.2010)  மாலை 6.30மணி. சனி மாலை(13.02.2010) பேராசிரியர் மௌனகுரு அவர்களின் 'இராவணேசன்' நாடகம் நடைபெறவிருக்கிறதென்று நண்பரொருவர் தகவல் சொன்னார். இருந்த எல்லா வேலைகளையும் புறந்தள்ளி விட்டேன். நாடகங்கள் என்றவுடன்  வரும் இந்த தொலைகாட்சி சீரியல்களையே கண் ஞாபகத்தில் கொண்டுவந்து முகத்தை அஷ்ட கோணலாக்குகிறது. மேடையமைப்பும், அரங்கமும்,அரிதாரம் பூசிக்கொண்ட பாத்திரங்களும், நேரடியான காட்சிகளூட்டும் கிளர்வும், எங்களுக்கு முன்னாள் ஒரு தலைமுறை இதனூடே வாழ்ந்து காட்டியிருக்கிற விடயமும் தெரிவதில்லை. மாற்றங்கள் மட்டுமே மாறிக் கொண்டிருந்தாலும்,எங்களின் முன்னோடிகள் வழி வந்த கலைப் பாதையை எடுத்தியம்புதலுக்கும்,அதற்கான வரவேற்புக்கும் இங்கு இடமில்லை எனும் போது அவற்றையெல்லாம் தாண்டி மனதில் எங்கேயோ வலிக்கிறது. எங்களுடைய காலத்தில், முழுமையான கூத்துக்கலையோ, அரங்காடல்ககளையோ  காண்பதற்கு காலமோ மாற்றமோ ஏதோவொன்று இடந்தரவில்லை .இருப்பினும் யாராவது எங்கள்  நலிந்து போன கலைகளை மறுபடியும் இளஞ்சமுதாயத்திட்கு க

வாசவதத்தை

வாசவதத்தை, பகவானே உங்கள் கோமள ஹிருதயத்தை  திறந்து காட்டியமைக்காக நன்றிகள்.... வாசவதத்தை, என் ஹிருதயத்தில் கோமளத்தின் பரிசுத்தம் இருப்பதைப் போல் அதி உன்னதமான அபிமானமும் உன்மேல் இருக்கின்றது...... சுவாமி, அபிமானம் அசூசைப்படக்கூடியதல்லவே .... வாசவதத்தை உனக்குத் தெளிவில்லை...! பகவான், நான் இப்போது தான் தெளிந்த நதிப்பிரவகம் போலே இருக்கிறேன். எனக்கு எல்லாமுமே ஸ்பஷ்டமாகத் தோதாகத் தெரிகின்றது...., நான் என்ன சொல்லவருகிறேன் என்றால்...., போதும் சுவாமி, எனக்குப் புரிகின்றது.தம்சக்பதுவத்தையும், தர்மொபதேசத்தையும் விரைவாகக் கூற ஆரம்பியுங்கள். எனக்கு ஞானம் வேண்டும்! வாசவதத்தை, இப்போதும் காருண்யம் பற்றித்தான் சொல்லப் போகிறேன். என்னை வதைக்காதே ...! -நிலா   

உங்களுக்குப் பிடித்த ஊர் என்ன?

முன்பொரு நாள் அம்மா சொன்னார் இலங்கையில் தனக்குப் பிடித்தமான பெயருடைய ஊர் மருதமுனை என்று. அது அழகான பெயர் என்று வேறு சொன்னார். ஓ பிடித்தமான பெயருடைய ஊர்களும் இருக்கலாம் என்பதை அப்போது தான் யோசித்தேன். இலங்கையில் உள்ள நீங்கள் இரசிக்கும் ஊர்ப் பெயர்கள் என்னென்ன? எனக்குக் கீழ்க்காணும் ஊர்களின் பெயர்கள் பிடித்திருக்கின்றன. தமிழ்ப்பெயர்கள் மட்டுமென்றில்லை. வேற்று மொழிப் பெயர்களும் சொல்லலாம். பனிப்புலம் புகலிடவனம் பூநகரி ஆலங்கேணி பாலாவி அன்புவழிபுரம் மலைமுந்தல் உப்பூறல் ஈரமடு நிலாவெளி கல்லாறு எழுவான்கரை தாழங்குடா மரப்பாலம் வாழைச்சேனை அமிர்தகழி பூமுனை குருமண்காடு தீர்த்தக்கரை கல்வயல் மணல்காடு பச்சிலைப்பள்ளி மணல்க்குடியிருப்பு தண்ணிமுறிப்பு பொன்னகர் ஆலையடிவேம்பு வீரமுனை

எனக்கும், பூமிக்குமான நெருக்கம்.

எனக்கும் நிலவறைக்குமான நெருக்கம்- பூமிக்கும் அதன் பிளவணுக்களுக்குமான தூரத்திலும் குறுகி விட்டது- பல காலம் மலர்ந்த நீலோட்பலத்தின், நெடுஞ்சாண் கிடை நிலை -இன்றைக்கு ஆகாமியமாயச் சரிந்தொழிகின்றது- எனக்குமிருக்கின்றது- வேதனையின் பிரதி பிம்பம். நெடுகாலத் தபோவனச் சாயலின் நிழல்- தபஸ்வியாக என்னை சயனிக்கக் கூறியது. ஹம்..... பெரு நாட்களின் கணக்குப் படி, தூக்கிலிடப்பட்டிருக்க வேண்டும் நானாகிய ஆணவம். இருந்தும், மெல்லச் சாவென விடப் படுகிறது- சஞ்சலமான இமை முகத்தால். பெருஞ்சல்லாபத்தின் பேரில் நிருவாணந்தாங்கிய கோளச்சிலைகளை- கட்டியணைக்கிறேன்,- சிலை விலகி ஓடுகிறது. சாலை வண்டிகளுக்கு எனது பெருந்துன்பம் தெரியா... புகை கக்குகிறது எனது மரணந்தாங்கிய நடையில். உருவகங்களில், பேதைமை நிறைந்து, திவலைகளாக உருண்டு நிழல்த்தருக்களுள் ஒழிந்து கொண்டு- அப்பப்பா....ஏகப்பட்ட சேட்டைகள்....! கனவு, மிச்சமிருக்கிறது, அவள் வந்து தண்ணீர்க்குவளை நிறைய, பழச் சோடா ரெப்பிக் கொண்டு குடித்து, ஏப்பம் விடுகிறாள்.- சாம்பசிவக் குருக்கள், அதை தட்டி வி

Sri Lanka, Beginning of Ethnic Conflict and State Language Implementation. Part-2

      BEGINNING OF  ETHNIC CONFLICT IN SRI LANKA  -Part 2  அரசகரும மொழியாக்கம் மற்றும் இலங்கை இனப்பிரச்சினைக்கான ஆரம்பம் .  1948 இல் ஏற்பட்ட அரசியல் மாற்றமானது இலங்கையின் மொழிக் கொள்கையில்  ஏற்படுத்திய மாற்றங்கள் ஒன்றன் பின் ஒன்றாக இனப்பிரச்சினையை உண்டு பண்ணின. 1956இல் திரு. பண்டார நாயகம் அவர்களது  ஐக்கிய மக்கள் முன்னணி ஆட்சி பீடம் ஏறியது. ஆட்சிக்கு வந்து 24மணி நேரத்தில் சிங்களம் அரசகரும ,நிர்வாக மொழியாக மாற்றப்படும் என்ற கோரிக்கையுடனேயே அரசு பதவிக்கு வந்தது. சிங்கள மக்களைப் பொறுத்த வரையில் அது ஒரு சிறப்பான நடவடிக்கையாயும் தேர்தல் வாக்கு மூலம் நிறைவேற்றப்படும் உன்னதமான தருணமாயும் இருந்தது .      ஆனால் தமிழ் மொழிக்கு, மக்களுக்கு, அரசினது கடப்பாடு  இல்லாத இச் செயல்  இனவாதத்தை மேலும் அதிகரிக்கும் செயலாக  அமைந்தது. சிங்கள மொழி அரச கரும  மொழியாக்கப் பட்டதன் காரணமாக பல தமிழ் அரச ஊழியர்கள் ஓய்வு பெற நிர்ப்பந்திக்கப் பட்டனர். பலர் வெளி நாடுகளுக்கு வேலை வாய்ப்புக்குச் சென்றனர். நேரடியாக தமிழர் ஒருவர் அரச சேவையில் இருப்பது குதிரைக் கொம்பாக இருந்தது.         . சம்பள ஊதிய

Sri Lanka, Beginning of Ethnic Conflict and State Language Implementation. Part-1

      அரசகரும மொழியாக்கம் மற்றும் இலங்கை இனப்பிரச்சினைக்கான ஆரம்பம்.   மொழியானது தொடர்பாடலுக்கும் அறிவைப் பெருக்குதலுக்குமான  ஒரு கருவியாகும். ஒரு நாட்டில் வாழும் மக்களின் பிரதானமான தொடர்பாடல் மையம் மொழி, அது பெரும்பான்மை, சிறுபான்மை  இரு சாராருக்கும் பொதுவானதே. இருப்பினும் பொது வழக்கில் அரச  கரும மொழியாக தத்தமது   சுய   மொழிப் இருப்பது குறித்ததே இன்றைய அச்சம்.  '' உங்களுக்கு இரு மொழியுடனான தேசமா? அல்லது ஒரு மொழியுடனான இரு தேசங்களா வேண்டும் ? எமது நாட்டின் சுதந்திரத்திற்கும் அதன் உட்கூறுகளின் ஒற்றுமைக்கும் ஆனா  வழி,  சமத்துவம் என்றே நம்புகிறோம் . இல்லையென்றால், ஒரு சிறிய நாட்டிலிருந்து இரத்தம் சொட்டுகின்ற துண்டாகிப் போன இரு நாடுகள் தோன்றும் -'' இலங்கையின் தேசிய மொழியாக சிங்கள மொழி மட்டும் என்று சட்டம் -1956நிறைவேறிய போது கலாநிதி கொல்வின் ஆர் டீ சில்வா தெரிவித்தது . இன்றும் இதுவே நாட்டில் இரு மொழி அமுலாக்கம் என்றவுடன் ஞாபகத்திற்கு வருகிறது.      அரசியலமைப்புக்கான 16ம் திருத்தச் சட்டத்தின் கீழ் ஏதாவது ஒரு பிரதேச செயலகப் பிரிவில் உள்

காகம்

                                                                                அண்டைக்கு எதோ விரத நாள் .சனி விரதம். அவள்பாடிக் கொண்டிருக்கிறாள் . அவள் பாடிக் கன காலம் .                ஒரு சுமூக கானம்.இதுவரைக்கும் எச்சந்தர்ப்பத்திலும் இது போல உணர்ந்ததே கிடையாது. இயற்கையின் கல்பிதம்!              காற்று, மழை, இடி, புயல் எல்லாமுமாய்க் கலந்தது. ஒரு மெல்லிய பூவினது மணம் நுகரக் கற்றுக் கொடுப்பது போல அந்த நரம்புக் கருவி நீண்ட நேரம் ஓசையாகிக் கொண்டேயிருந்தது .                  சாமியறையின் விளக்கு நூர்ந்தது கூடத் தெரியாமல் ....வானம் பூமியிலிருந்து விண்டு வெடித்து தனியே பிளவு படுவது தெரியாமல், பாடிக்கொண்டே இருந்தாள்.               இயற்கை அவளை முற்றிலுமாக வசீகரித்திருந்தது. அவளும் இயற்கையும் ஒன்றே தான்.   பாடுகின்ற பொழுதில் அவள் தான் கடவுள்! அவள் பாட , கண்களில் கண்ணீர் தளும்புகிறது.           'இப்படியே பாடீட்டிருந்தா செத்திருவாவா மாமா இவ...?   .................இல்லடா, அவ பாடாட்டாத் தான் இந்த வையமே செத்துடும். புல், பூண்டு, பூச்சி, மனுசர், விலங்கு ஒண்ணுமே இந்த வை