முன்பொரு நாள் அம்மா சொன்னார் இலங்கையில் தனக்குப் பிடித்தமான பெயருடைய ஊர் மருதமுனை என்று. அது அழகான பெயர் என்று வேறு சொன்னார்.
ஓ பிடித்தமான பெயருடைய ஊர்களும் இருக்கலாம் என்பதை அப்போது தான் யோசித்தேன்.
இலங்கையில் உள்ள நீங்கள் இரசிக்கும் ஊர்ப் பெயர்கள் என்னென்ன?
எனக்குக் கீழ்க்காணும் ஊர்களின் பெயர்கள் பிடித்திருக்கின்றன. தமிழ்ப்பெயர்கள் மட்டுமென்றில்லை. வேற்று மொழிப் பெயர்களும் சொல்லலாம்.
பனிப்புலம்
புகலிடவனம்
பூநகரி
ஆலங்கேணி
பாலாவி
அன்புவழிபுரம்
மலைமுந்தல்
உப்பூறல்
ஈரமடு
நிலாவெளி
கல்லாறு
எழுவான்கரை
தாழங்குடா
மரப்பாலம்
வாழைச்சேனை
அமிர்தகழி
பூமுனை
குருமண்காடு
தீர்த்தக்கரை
கல்வயல்
மணல்காடு
பச்சிலைப்பள்ளி
மணல்க்குடியிருப்பு
தண்ணிமுறிப்பு
பொன்னகர்
ஆலையடிவேம்பு
வீரமுனை
முருகையன் ஒரு மொழிபெயர்ப்புச் செய்தார். மொழிபெயர்ப்பு எண்டும் சொல்ல முடியாது,சாதுவா மொழிபெயர்ப்பும்,திறமையான கற்பனையும் போட்டு செய்யுள் வடிவத்தில, இளநலம்! என்ன இளநலமா?ஹையா கிளுகிளுப்பான கதை வரப்போகுது. குமாரசம்பவம் (ஸாரி வேற கண்டென்ட் எண்டு நினைக்கப்படாது, ஐ ஆம் வெரி டீசன்ட்) காளிதாசன் குமாரசம்பவத்தில எழுதின அதே கதையை தமிழில தந்தவர். அதில தான் இந்தக் கதை வருகுது. சாமகானம் சாமகானம் எண்டு ஒண்டு சொல்லக் கேட்டிருப்பம். “சாமகானம் பாடினான்” எண்டு நாலாம் வகுப்புச் சமய பாட புத்தகத்தில ஒரு பாடம் இருக்கு. பத்துத் தலையும், கையில ஒரு தலையுமாக் கணக்குப் பிழையா மொறாயஸ் கீறின இராவணனிண்ட மீசை வெச்ச படம் இருக்கும், இப்ப ஞாபகம் வந்துட்டுதா? அந்தக் காலத்திலேயே தலைகளிண்ட கணக்கை எண்ணிப் பாத்தனாங்கள் ஆக்கும். (தலைக்கணக்கு முக்கியம் அமைச்சரே) இப்ப சாமகானத்தைப்பற்றிப் பாப்பம். காளிதாசன் குமாரசம்பவம் எழுதேக்க, சும்மா கற்பனைகுதிரையை காட்டாற்று வெள்ளம் போல பறக்க விடுறேர். மிஸ்டர் சிவனும் மிசஸ் உமாவும் கலியாணமான புதிசில, (ஏன் கல்யாணமான பழசில யாரும் வெளிய போறதில்ல எண்டு நெடுங்காலமா டவுட்) சும்மா வெளிய வெளிக்
Comments
Post a Comment