Skip to main content

எனக்கும், பூமிக்குமான நெருக்கம்.




எனக்கும் நிலவறைக்குமான
நெருக்கம்-
பூமிக்கும் அதன் பிளவணுக்களுக்குமான
தூரத்திலும் குறுகி விட்டது-
பல காலம் மலர்ந்த நீலோட்பலத்தின்,
நெடுஞ்சாண் கிடை நிலை -இன்றைக்கு
ஆகாமியமாயச் சரிந்தொழிகின்றது-

எனக்குமிருக்கின்றது- வேதனையின்
பிரதி பிம்பம்.
நெடுகாலத் தபோவனச் சாயலின் நிழல்-
தபஸ்வியாக என்னை சயனிக்கக் கூறியது.

ஹம்.....
பெரு நாட்களின் கணக்குப் படி,
தூக்கிலிடப்பட்டிருக்க வேண்டும் நானாகிய ஆணவம்.
இருந்தும், மெல்லச் சாவென விடப் படுகிறது-
சஞ்சலமான இமை முகத்தால்.

பெருஞ்சல்லாபத்தின் பேரில்
நிருவாணந்தாங்கிய கோளச்சிலைகளை-
கட்டியணைக்கிறேன்,- சிலை விலகி ஓடுகிறது.

சாலை வண்டிகளுக்கு
எனது பெருந்துன்பம் தெரியா...
புகை கக்குகிறது எனது மரணந்தாங்கிய நடையில்.
உருவகங்களில்,
பேதைமை நிறைந்து, திவலைகளாக உருண்டு
நிழல்த்தருக்களுள் ஒழிந்து கொண்டு-
அப்பப்பா....ஏகப்பட்ட சேட்டைகள்....!

கனவு,
மிச்சமிருக்கிறது,
அவள் வந்து தண்ணீர்க்குவளை நிறைய,
பழச் சோடா ரெப்பிக் கொண்டு
குடித்து, ஏப்பம் விடுகிறாள்.-
சாம்பசிவக் குருக்கள், அதை தட்டி விட்டு வேடிக்கை
பார்க்கிறார்.-
எளிய படையலின் எச்சீல்...,ச்சய்க்.....!

விருட்டென, அவள் நடந்து
அறைக்குள் போய்- ஆயாசமாக அழுகிறாள்.
எதைச்சொன்னாலும் கேட்டுக்கொள்ளும்,
தலையணைக் குறிப்புகள்- நள்ளிரவு சொல்கின்றன.
'எனக்கு போயும் போயும்' -
ச்சீய்க் ......!

சுசீலாவுக்கு வருத்தம் நிறைய-
கதைப் புத்தகத்தை பிரித்துப் படிக்கிறாள்-அதில்
கோகுலன், சீத்தம்மாவை-
வீட்டை விட்டு துரத்துகிறான்- அடக் கருமமே..!
சீத்த்ம்மா எங்கே போனாள்...?

சீத்தாம்மா கதவு தட்டினாள்- சுசீலா
வரவேற்றாள்-
கொஞ்சம் குளிர்ச்சியான பழச் சோடா கொடுத்து,
...........................................................................................
தாறு மாறாக புகார்- கோகுலன் பற்றி,
சுசீலா தேற்றினாள்- சாம்பசிவக்குருக்கள் நல்ல(கெட்ட)நித்திரை-
அடடா - சுசீலாவுந்தான்.

எனக்கும் சுசீலாவுக்குமான நெருக்கம்
பூமிப் பிளவுக்கும், நதி தீரத்துக்குமான
அளவையுங் காட்டிலும் சிறிசு-

யதார்த்தமாக சொல்லப் போனால்,
சீத்தம்மாவுக்கும், சுசீலாவுக்கும்
உள்ளதைப் போல...!

கோகுலன் கனவிலே,
சுசீலா, தனியே உறங்கிக் கொண்டிருந்தாள்-
சாம்பசிவக்குருக்களார்- ஒரு ஏறியில் ஏறி
புடலங்காய்க்கு கல்லுக்கட்டிக்கொண்டிருந்தார்.
அடடா, கோகுலன்
கல்லுக் கட்டிக் கொடுத்துதவினான்-
சாம்பசிவக் குருக்களார் மெத்த மகிழ்ச்சி
என்றார்.

எனக்கும் நிலவறைக்குமான நெருக்கம்,
பூமியினதும், படலங்களினதும் நெருக்கத்தையும்
தாண்டி,
சீத்தம்மாவுக்கும், சுசீலாவுக்கும் உள்ளதையும்
தண்டு தாண்டேன்று தாண்டி,
சாம்பு மாமாவுக்கும் எனக்கும் உள்ளதையும்
இன்னோருக்கால் தாண்டீ......,
இறுக்கமாய்க் கிடக்கு.!

இனி,
இனக்கும் எதுவுக்கும் நெருக்கம்
இல்லாமலேயே போச்சு...!


நிலா- 
2007

Comments

  1. நல்லாருக்குங்க...இன்னும் எழுதுங்க..பொங்கல் நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
  2. நல்ல கவிதை.
    "எளிய படையலின் எச்சீல்"
    வரிகள் மனதைக் கனதியாக்குகின்றன.
    இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. நல்லா இருக்கு அக்கா.. இனிற தைப்பொங்கல் வாழ்த்துக்கள்..;)

    ReplyDelete
  4. ரசித்தேன், தமிழர் திருநாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  5. இனிய பொங்கல் வாழ்த்துக்கள். சில நாட்களுக்கு என்னை பின்நவீனத்துவப் பதிவுகள் படிக்கவேண்டாம் என டொக்டர் பதிவானாந்தா சொல்லியிருக்கின்றார். ஆகவே அரசியல் எழுதவும்.

    ReplyDelete
  6. இனி,
    இனக்கும் எதுவுக்கும் நெருக்கம்
    இல்லாமலேயே போச்சு...!
    இதுதான் கவிதையின் முற்றிய நிலையா?!

    ReplyDelete
  7. ம்ம்.. நிறையப் புரிகிறது..
    ஓசைக்காக அல்லாமல் அர்த்ததுக்கான இவ்வாறான கவிதைகள் வேண்டும்..

    நன்றாக இருக்கிறது

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சாமகானமும் காம்போதியும்

முருகையன் ஒரு மொழிபெயர்ப்புச் செய்தார். மொழிபெயர்ப்பு எண்டும் சொல்ல முடியாது,சாதுவா மொழிபெயர்ப்பும்,திறமையான கற்பனையும் போட்டு செய்யுள் வடிவத்தில, இளநலம்! என்ன இளநலமா?ஹையா கிளுகிளுப்பான கதை வரப்போகுது. குமாரசம்பவம் (ஸாரி வேற கண்டென்ட் எண்டு நினைக்கப்படாது, ஐ ஆம் வெரி டீசன்ட்) காளிதாசன் குமாரசம்பவத்தில எழுதின அதே கதையை தமிழில தந்தவர். அதில தான் இந்தக் கதை வருகுது.  சாமகானம் சாமகானம் எண்டு ஒண்டு சொல்லக் கேட்டிருப்பம். “சாமகானம் பாடினான்” எண்டு நாலாம் வகுப்புச் சமய பாட புத்தகத்தில ஒரு பாடம் இருக்கு. பத்துத் தலையும், கையில ஒரு தலையுமாக் கணக்குப் பிழையா மொறாயஸ் கீறின இராவணனிண்ட மீசை வெச்ச படம் இருக்கும், இப்ப ஞாபகம் வந்துட்டுதா? அந்தக் காலத்திலேயே தலைகளிண்ட கணக்கை எண்ணிப் பாத்தனாங்கள் ஆக்கும். (தலைக்கணக்கு முக்கியம் அமைச்சரே) இப்ப சாமகானத்தைப்பற்றிப் பாப்பம். காளிதாசன் குமாரசம்பவம் எழுதேக்க, சும்மா கற்பனைகுதிரையை காட்டாற்று வெள்ளம் போல பறக்க விடுறேர்.  மிஸ்டர் சிவனும் மிசஸ் உமாவும் கலியாணமான புதிசில, (ஏன் கல்யாணமான பழசில யாரும் வெளிய போறதில்ல எண்டு நெடுங்காலமா டவுட்) சும்மா வெளிய வெளிக்

இராவணேசன் ; Maunaguru's 'Ravanesan'

நெறியாள்கை - பேராசிரியர் மௌனகுரு. இடம் -கொழும்பு கலை இலக்கியப் பேரவை. காலம்- சனி(13.02.2010)  மாலை 6.30மணி. சனி மாலை(13.02.2010) பேராசிரியர் மௌனகுரு அவர்களின் 'இராவணேசன்' நாடகம் நடைபெறவிருக்கிறதென்று நண்பரொருவர் தகவல் சொன்னார். இருந்த எல்லா வேலைகளையும் புறந்தள்ளி விட்டேன். நாடகங்கள் என்றவுடன்  வரும் இந்த தொலைகாட்சி சீரியல்களையே கண் ஞாபகத்தில் கொண்டுவந்து முகத்தை அஷ்ட கோணலாக்குகிறது. மேடையமைப்பும், அரங்கமும்,அரிதாரம் பூசிக்கொண்ட பாத்திரங்களும், நேரடியான காட்சிகளூட்டும் கிளர்வும், எங்களுக்கு முன்னாள் ஒரு தலைமுறை இதனூடே வாழ்ந்து காட்டியிருக்கிற விடயமும் தெரிவதில்லை. மாற்றங்கள் மட்டுமே மாறிக் கொண்டிருந்தாலும்,எங்களின் முன்னோடிகள் வழி வந்த கலைப் பாதையை எடுத்தியம்புதலுக்கும்,அதற்கான வரவேற்புக்கும் இங்கு இடமில்லை எனும் போது அவற்றையெல்லாம் தாண்டி மனதில் எங்கேயோ வலிக்கிறது. எங்களுடைய காலத்தில், முழுமையான கூத்துக்கலையோ, அரங்காடல்ககளையோ  காண்பதற்கு காலமோ மாற்றமோ ஏதோவொன்று இடந்தரவில்லை .இருப்பினும் யாராவது எங்கள்  நலிந்து போன கலைகளை மறுபடியும் இளஞ்சமுதாயத்திட்கு க

குழந்தைகளுக்கான நவீன தமிழ்ப் பெயர்கள்

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தல் எனும்போது, இவ்வளவு காலமும் வைத்த பெயர்கள் தமிழ்ப்பெயர்கள் இல்லையா எனும் கேள்வி எம்மில் பலருக்கு எழும். உங்கள் பெரும்பாலானோர் தமிழ்ப்பெயர் என்று எண்ணிக்கொண்டிருக்கும் உங்கள் பெயரை வட இந்தியக் கலப்பு,சமக்கிருத கலப்பு,ஐரோப்பிய,அரேபியக் கலப்புடனான பெயராக இனங்காணுவீர்கள்.  தமிழில் பெயர் சூட்டுவது இனத்துவேசம் உள்ள செயலா? :P இனத்தைக் கொண்டாடக் கூடிய செயல். மறத்தமிழன் என்று அடைமொழி இட்டுக்கொண்டு உலாவுவதை விட அழகான செயல் என்று எண்ணுகிறேன். இந்த அடையாளம் மிக அழகானது.  அண்மையில் நிறையப் பேர் தமிழில் குழந்தைகளூக்கான நவீனமான பெயர்கள் வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். தமிழில் பெயர்கள் பழமையானவையாக இருப்பது கூட இக்காலத்தோரின் தெரிவுக்குட்படாமைக்கு ஒரு காரணமாகும். பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் சிலவற்றை தொகுத்திருக்கிறேன்.சிலவற்றை கண்டும் பிடித்திருக்கிறேன். ( பிற்காலத்தேவைகளுக்கு ;)  ) வினைச்சொல் பெயர்கள் அஞ்சா ஆராதி ஆனந்தி  சலனி கோளறா இசி இனி தேயா மேதா வேயா வேகா மின்னு மிதவா தெகிழா நெகி