Skip to main content

Posts

புத்தம்.

புத்தனை, போதையில் சந்தித்தேன். இன்று அவனிடம் எதுவுமில்லை ஒரு ,காவியையும் , சதக் காகாசுகளையும் தவிர..... காலத்தின் அழுகிய நாற்றத்தால் போதியில் சந்திக்க வேண்டிய அவனை .............................. .......................................................... பொம்மைகளின் யாசகர்கள் பற்றியும் வானம் வழுக்கி விழுந்த தடம் பற்றியுமாய் அவன் பதில்கள் இருக்கவில்லை. 'வாசவதத்தை' பற்றியும், தீண்டப்ப டாத, வீணை பற்றியுமாய் இருந்தது.... அவன் பதில் ..... புனையப்படாத ஓவியத்திலிருந்து வரும் அவனின் பௌர்ணமி ,.... பெருத்துப் போன பெருச்சாளி போன்றிருந்தது....! அவனுக்கும் தெளிவில்லை , எனக்கும், தெளிவில்லை..... காவிக்கும் , கர்த்தாவுக்குமான உட்கிடக்கையில்........... அரச மரத்து அணில் சொன்னது........ இவன் நெடுகாலமாய் இங்குதான் கிடக்கிறான்..... வேலையத்த பயல்..... மௌனத்தின் காற்று வெளி - படபடத்தது.... அவனுக்கு மூல வியாதி வரக்கூடாமைக்கு வேண்டி - மீண்டு வந்தேன். அவன் சீடன் சொன்னான், நானும் புத்தனாகி விட்ட

அவைப் பழி

மண்ணில் வாழ்மின்னு அலகில்சீர் வன்னிலங்கை பொன்போல் மன்னும் மனு நீதி கண்ணும் திரை சேரும் கலையது திருந்தோதி முறையது வாழ்ந்த பலர். முன்னுமில்லையது கேளா செங்கதிரோன் வெடித்தான் பகட் போது வடவைதான் முகம் புலர்ந்து குவலயம் பண்ணி-சோலையிட் சிறப்புற. கண்ணும் கட் பட்டு,பாதகம் பழந்தமிழ் மறைமொழியும் சிதறி-கனியற்றரறு போல மலர்மகள் பொங்கு கங்கு ஊடு போகி தொலைந்தனள் உயிர் பதைக்க. வெங்குமில்லையது போல் பழி பாவம் பொருளில்லார் போருள்கொண்டார் பொருளற்று போதுமின் முன் பொருளோ பொருளாகி உயிர் போதும் நிலையறவாய். அவைகுலைந்து சபை சரிந்து மறுமை நீதியோழிந்து கடைவாசல் மாய்தலெனும் பேருண்மை கொண்டு நட்கனவு கண்டாரை நமன் கொண்டனனே. துயர் மிகு மாந்தர் துடிப்பதுவுமிறை பொறுக்க செவியற்றோ கிடந்தவன் கோபுரஞ்சரிய கல்லெனக்கிடந்தவன் மணிமுடிதரித்தவன் மண்ணேயானான். பின் முன் வந்தவன் கேடு புரிந்தான் ஈகாடு ஆகாடு சாகாடு பூகாடு ஒன்றே போகாது போகாது பாவாது வந்த கொலைன்ஞனின் அறம்பாடி. பக்கமும் துக்கமும் நீருரூக்கொண்டதெந்தாகாரமும் இவ்வளவில் நீளும் நெடு

குறி சொல்லி

      நா ன் படிப்பது தொடர்பான ஆராய்ச்சிகளை செய்து வந்தேன் . மேசைக்கு சமீபமாக தலையைக் கவிழ்த்துக் கொண்டே புத்தகத்துக்குள் அமிழ்ந்திருப்பது, புத்தகத்தின் முதற் பாகங்களை மடித்து ஒற்றைக் கையால் லகுவாக தூக்கிப் பிடித்துப் படிப்பது , ஒரேயடியாக , கட்டிலிலே அகல விரித்துப் போட்டு புத்தகங்களை மேய்ந்து பார்ப்பது ,ஒரு நிழல்த் தருவின் கீழே சாய்வு நாற்காலியைத் தேடிப போட்டுக்கொண்டே சலனமின்றிப் படிப்பது.... ஒ.... புத்தகங்களைப படிப்பதென்பது பெரியதொரு காரியம். அதற்கு முதலிலே புத்தகங்களைப் பற்றிய எண்ணக்கரு பரவ விரிந்திருக்க வேண்டும். சல்ஜாப்பமின்றிய தெளிந்த நனவோடை போல புத்தகளின் அறை எண்கள் கிடாசப் பட வேண்டும். புத்தகத்துக்குள்ளே கிடக்கின்ற கூறுகள் நிகண்டுகள் போல நெருங்கி லயிக்க வேண்டும் .பதியையும் பசுவையும் போலத்தான், ஜீவாத்மா பரமாத்மாவோடே உளறிக்கொண்டு கிடக்க வேண்டும். இது சோதினைப் புத்தகமாக இருந்தாலும் சரி........... புத்தகங்களைப் படிக்கிற தருவாயில் நான் சமனிலியாகவும் , மாறிலியாகவும், சமதானியாகவும் நாளுக்கு நாள் மாறிக் கொண்டு வருமுண்மை பலத்தது.  இது வெறும் பலித்த சமண்பாடேயண்றி முழுவதும் அல்லவெண்

அதி பனுவல்| Hyper Text

                                                             ஒரு நிமிஷம் ............ "உறுபசி" இயல்புக்கும், வெளித்தத்துவத்தி ற் கும்   இடைப்பட்ட ஓர் வெளி நிலையில் பயணத்தை ஆரம்பித்திருக்கிறது.  ''உறுபசி'' எண்டால், அதீத பசி எண்டு  அர்த்தம்.  Deep Hunger | Irremovable difference between presence and absence!  இப்பிடித் தான் ஏதாவது எழுதப்போறன். இதை விசும்பின் எல்லைக்குள்ளும் அப்பாலும் வைத்திருக்கும் பொறுப்பை உங்களிடம் கையளிக்கின்றேன். கோட்பாடுகளும், சுதாகரிப்புக்களும் நிறைந்த இந்த நிலை வாதத்தில், நானும் தேடலுடன் புறப்பட்டிருக்கிறேன்(உளட்டித்  தள்ள :P) பள்ளிக்கூடம் முடிச்ச கையோட  வேலைவெட்டி இல்லாமல எதையாவது ஆவணப் படுத்த விரும்புகிறேன்.இனி ,பொருத்தலும் இலமே , அன்புடன், நிலா  27 /09 /2009