நேற்றைய குடிநீருக்கான அறப்போராட்டம் பற்றி நேற்றே எழுதியிருக்க வேண்டும். கால தாமதத்திற்கு மன்னிக்க வேண்டும். இந்த இளைஞர்கள் படை என்ன செய்யும் என்ற கேள்வி நம்மில் பலருக்கு எப்போதும் இருந்தது. சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட அதிக வேலைப்பழுக்களோடு இருக்கும் எங்களில் பலரை நேற்று அங்கே கண்டேன். மிகவும் நெகிழ்வான தருணம் அது. மக்கள் பண்பாடு, மக்கள் இறைமையை நேற்று நாங்கள் நிருபித்தோம்.ஏற்பாட்டுக் குழுவுக்கு குறிப்பாக , சிவமைந்தன்,புருஜோத்தமன் இருவருக்கும் நன்றி.
இந்த ஒன்றுகூடல் நிகழ்வு, மக்கள் பலத்தை நிரூபித்தது. மக்கள் பலத்தை மட்டும் தான் எங்களால் காட்டவும் முடிந்தது. குறிப்பாக வடக்குக் கிழக்கு வாழ் முஸ்லீம்கள் அல்லாத தமிழ் பேசும் மக்களை மட்டுமே அங்கே என்னால்க் காண முடிந்தது. ஏன் எங்களால் பாதிக்குப் பாதி முஸ்லீம் மக்களை / குறைந்தது கால்வாசி இஸ்லாம் மதத்தைச் சார்ந்த தமிழ் மக்களை இந்த அலையில் திரட்ட முடியவில்லை? அவர்களாக இதைத்தவிர்த்தார்களா? அண்மையில் இசுலாமிய மக்களுக்கு வலுக்காட்டாயமாக வன்முறை நிகழ்ந்த போது இசுலாமியர்கள் தவிர்ந்த ஏனைய தமிழ் மக்கள் உதவுவதற்கு முன்வரவில்லையா? இதன் பின்னணி என்ன? இந்த நெருக்கடி வடக்குவாழ் தமிழ் மக்களுக்குமட்டுமானது என்று யாராவது நினைத்தார்களா? ஒன்றிரண்டு சிங்கள மக்கள் பேஸ்புக்கில் இதுதொடர்பாக பகிருவதையும்,நிகழ்வுக்கு வந்திருந்ததையும் கூட என்னால்க் காணமுடிந்தது.
மற்றது இது ஒரு போராட்டமல்ல. ஒன்றுகூடல் நிகழ்வு.மக்கள் பலத்தைக் காட்டக் கூடியதாக மட்டுமே இருந்தது. எங்களின் பயமும் வாழ்க்கை தொடர்தலுக்கான அச்சமும் இதனை போராட்டமாக பிரகடனப்படுத்தாமையின் வலியை உணரக்கூடியதாக இருந்தது.இதில் பெண்களின் பங்கு மகத்தானது. தலை போகிற காரியமாக வெள்ளவத்தையில் பெண்களை அழைத்தால்க் கூட வராதவர்கள் வந்திருந்தார்கள். மிக்க அகம் மகிழ்ந்தேன்.
இந்த அலை, குடிநீருக்கான போராட்டம் என்று இருந்தது. சுத்தமான குடிநீர் எமது உரிமை என்கிற தோற்றப் பதாகைகளையே அதிகம் காண முடிந்தது. நன்னீர் மாசு, நீர் மாசுக்கான காரணிகள், அதன் ஏகபோகிகள் யார் ,மாசடைந்த நிலத்தடி நீர் அன்றாடத்தில் எவ்வாறு மக்களை சென்றடைகிறது, இதனை யார் நிறுத்த வேண்டும்? எவ்வாறானவர்கள் இதற்கெதிராக கேள்வி கேட்கவேண்டும். யார் எல்லார் மீதும் நாம் குற்றத்தை சுமத்துகிறோம்? இதன் குறுங்கால ஆபத்தென்ன? நீண்டகால விளைவென்ன? ஆயின் அரசாங்கம் என்ன மாதிரியான சேவைகளை மக்களுக்கு செய்ய வேண்டும், அதற்கான இந்தப் பேரணியின் கேள்வித்தரம்/ நோக்கு என்ன? போன்ற மிக முக்கியமான விடயங்களை நாங்கள் செய்யவில்லை. இதன் பின்னணி அமைதியான நீண்டகால வாழ்க்கை பற்றிய கேள்வி நிமித்தமானது என்று விளங்குகிறது. இருப்பினும் போராட்ட அலை இவற்றை எல்லோருக்கும் கேட்கும்படி, சாதாரண குடிநீர்/ மின்சார வெட்டுத் தினங்களில் அறிவிப்பதைப் போல அறிவித்திருக்கலாம். இதை நான் முன்கூட்டியும் சொல்லியிருக்கலாம் .
wink emoticon
ஆனால் இதுபற்றிய ஆவல் இருந்தது.
சாதாரண மக்களுக்கு, யார் இதன் காரணி என்பதைக் கூட பிரித்தரியத்தெரியவில்லை. இதன் நீண்டகால ஆபத்துப் பற்றியும் அவர்கள் தெரிந்து கொள்ளவில்லை. வடக்குச் சூழலானது ஏற்க்கனவே போர்க்கழிவுகளான இரசாயனக்கழிவுச் சூழலினால் ஆக்கிரமிக்கப்பட்ட சூழத்தொகுதி. அதன் இரசாயன உயிரியல்ச் சமநிலை நீர்மட்டத்தோடு அந்தத்தில் இருக்கிறது. .நீர்த்தொகுதியும் முற்றிலுமாக பாதிக்கப்படுமாயின் அதன் ஆபத்து எல்லையற்றது.
தெற்கில் பூகொட போன்ற தொழிற்சாலைக் கழிவகற்றும் பாரிய நிறுவனங்களை அரசாங்கம் ரத்து செய்ததைப் போல வடக்கிலும், இன்னும் எங்கெல்லாம் இந்தப் பிரச்சினை இருக்கிறதோ அங்கெல்லாம் செய்ய வேண்டும். மாற்று நீர்ச்சுத்திகரிப்பை ஏற்படுத்த வேண்டும். நிலத்தடி நீரின் தன்மை பற்றிய ஆராய்ச்சிப் படிப்பிற்கான ஊக்குவிப்பை அரசு செய்ய வேண்டும்.மக்களிடம் நேரடியாகத் தொடர்புகொள்ளக் கூடிய, வைத்தியர்கள், ஆசிரியர்கள், தாதிமார்,அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியும், விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும்படிக்குத் தூண்டவும் வேண்டும். பாடசாலைகளில், பலகலைக்கழகங்களில் இதுதொடர்பான போதியளவு கருத்துபரிமாற்றம் வேண்டும். சூழல் விஞ்ஞான மாணவர்கள் தவிர்ந்தவர்களுக்கு, இது தொடர்பான அறிவு புகட்டப்பட வேண்டும். குறிப்பாக பாதிக்கப்பட்ட மக்கள் நேரடியாக இது தொடர்பான போராட்டங்களில் ஈடுபடுதலை தூண்ட வேண்டும்.
நேற்றைய இந்த அலை மதிப்புக்குரியதும் பாராட்டுக்குரியதுமாகும். இதன் தொடர்ச்சி இன்னுமின்னும் நீள வேண்டும். வடக்கில்/ தேவைப்பாடு இருக்கும் இடங்களில் இது தொடர்பான விழிப்புணர்வை தகுந்த விளக்கங்களுடன் ஏற்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. இதன் தொடர்ச்சி அப்படியாகவும் இருக்க வேண்டும். ஒரு தீர்வை ஏற்படுத்திக் கொடுப்பதாக இருக்க வேண்டும்.நான் தயாராக இருக்கிறேன்.
- Get link
- Other Apps
Comments
Post a Comment