Skip to main content

முகிலோ மேகமோ ...

ஆமா,ஏ.ஆர் ரஹ்மான், ஏன் தேவா “சொந்தமா” இசையமைச்சதுகள் கூட இதல க்ராஸ் பண்ணுது தான். ஆனா...என்ன மனுஷனையா இந்தாள்?மனுஷனுக்கு மலையைப் போல பிரச்சினை வந்தாக் கூட இந்தாளைக் கேட்டா ரிலாக்ஸ் ஆகீரலாம். இந்தச் செப்படி வித்தையை எப்பிடிக் கையாளுதோ!!! என்ன மந்திரமோ மாயமோ என்னமோ ஒண்ணு இந்தாள்கிட்ட இருக்கு!

பெருசா சொல்லிக் கொள்ளுற அளவுக்கு இல்லாட்டியும், இந்தப்பாட்டைக் கேளுங்க, வருடிக் குடுக்கிற மாதிரி, யுவனைக் கூட தாளத்துக்குப் பாடவைச்சிருக்கிறேர் (அப்பா சொன்னா பிள்ளையள் கேக்கும் எண்டுறது இதைத்தானோ? :P )

பின்னணி இசை தொடங்கிறதே, சாதாரண பீத்தோவன் ஹார்மேனி, இது கீ போர்டில் சாதாரணமாக் கிடைக்கும்.எதை எப்பிடிப் பயன்தகு விதத்தில பயன்படுத்தோணும் எண்டு இந்தாளுக்குத் தான் தெரியும். எந்தக் காற்று வார்த்தியத்தையும் உயிரை வாங்கிற மாதிரி இப்பிடி யாரும் வாசிச்சதில்ல.இந்த நாளுக்கு,எனக்கு இந்தப் பாட்டுக் காணும்.

இவங்களெல்லாம் இல்லாமப் போற ஒரு காலத்தை நினைச்சும் பாக்க முடியேல்ல. அந்தாளுக்கு வயசு போகுது :(



முகிலோ மேகமோ சொல் வேறு வேறு
இரண்டும் இருந்தும் பொருள் ஒன்று தானே!
உடலால் தேகத்தால் இரண்டான போதிலும்
உயிரால் உணர்வினால் அது ஒன்று தானே!
நீயோ நானோ இரு ஜீவனன்று!


இதயத்தின் அறைகள் புதிய வாசம்-
மனமெனும் வனங்களில் மலர்ந்த பூவின் நேசம்
நினைவெனும் அலைகளில் வலையை வீசும்
விரல்களை இதயமே திருப்பி ஏசும்-
அருகிலும் தொலைவிலும் நெருக்கம் நீயே தான்- 


இன்னொருக்கா நா.முத்துக்குமார் இயல்பாத் தெரியிறார் :)

பாடலைக் கேட்க முகிலோ மேகமோ

Comments

Popular posts from this blog

சாமகானமும் காம்போதியும்

முருகையன் ஒரு மொழிபெயர்ப்புச் செய்தார். மொழிபெயர்ப்பு எண்டும் சொல்ல முடியாது,சாதுவா மொழிபெயர்ப்பும்,திறமையான கற்பனையும் போட்டு செய்யுள் வடிவத்தில, இளநலம்! என்ன இளநலமா?ஹையா கிளுகிளுப்பான கதை வரப்போகுது. குமாரசம்பவம் (ஸாரி வேற கண்டென்ட் எண்டு நினைக்கப்படாது, ஐ ஆம் வெரி டீசன்ட்) காளிதாசன் குமாரசம்பவத்தில எழுதின அதே கதையை தமிழில தந்தவர். அதில தான் இந்தக் கதை வருகுது.  சாமகானம் சாமகானம் எண்டு ஒண்டு சொல்லக் கேட்டிருப்பம். “சாமகானம் பாடினான்” எண்டு நாலாம் வகுப்புச் சமய பாட புத்தகத்தில ஒரு பாடம் இருக்கு. பத்துத் தலையும், கையில ஒரு தலையுமாக் கணக்குப் பிழையா மொறாயஸ் கீறின இராவணனிண்ட மீசை வெச்ச படம் இருக்கும், இப்ப ஞாபகம் வந்துட்டுதா? அந்தக் காலத்திலேயே தலைகளிண்ட கணக்கை எண்ணிப் பாத்தனாங்கள் ஆக்கும். (தலைக்கணக்கு முக்கியம் அமைச்சரே) இப்ப சாமகானத்தைப்பற்றிப் பாப்பம். காளிதாசன் குமாரசம்பவம் எழுதேக்க, சும்மா கற்பனைகுதிரையை காட்டாற்று வெள்ளம் போல பறக்க விடுறேர்.  மிஸ்டர் சிவனும் மிசஸ் உமாவும் கலியாணமான புதிசில, (ஏன் கல்யாணமான பழசில யாரும் வெளிய போறதில்ல எண்டு நெடுங்காலமா டவுட்) சும்மா வெளிய வெளிக்

இராவணேசன் ; Maunaguru's 'Ravanesan'

நெறியாள்கை - பேராசிரியர் மௌனகுரு. இடம் -கொழும்பு கலை இலக்கியப் பேரவை. காலம்- சனி(13.02.2010)  மாலை 6.30மணி. சனி மாலை(13.02.2010) பேராசிரியர் மௌனகுரு அவர்களின் 'இராவணேசன்' நாடகம் நடைபெறவிருக்கிறதென்று நண்பரொருவர் தகவல் சொன்னார். இருந்த எல்லா வேலைகளையும் புறந்தள்ளி விட்டேன். நாடகங்கள் என்றவுடன்  வரும் இந்த தொலைகாட்சி சீரியல்களையே கண் ஞாபகத்தில் கொண்டுவந்து முகத்தை அஷ்ட கோணலாக்குகிறது. மேடையமைப்பும், அரங்கமும்,அரிதாரம் பூசிக்கொண்ட பாத்திரங்களும், நேரடியான காட்சிகளூட்டும் கிளர்வும், எங்களுக்கு முன்னாள் ஒரு தலைமுறை இதனூடே வாழ்ந்து காட்டியிருக்கிற விடயமும் தெரிவதில்லை. மாற்றங்கள் மட்டுமே மாறிக் கொண்டிருந்தாலும்,எங்களின் முன்னோடிகள் வழி வந்த கலைப் பாதையை எடுத்தியம்புதலுக்கும்,அதற்கான வரவேற்புக்கும் இங்கு இடமில்லை எனும் போது அவற்றையெல்லாம் தாண்டி மனதில் எங்கேயோ வலிக்கிறது. எங்களுடைய காலத்தில், முழுமையான கூத்துக்கலையோ, அரங்காடல்ககளையோ  காண்பதற்கு காலமோ மாற்றமோ ஏதோவொன்று இடந்தரவில்லை .இருப்பினும் யாராவது எங்கள்  நலிந்து போன கலைகளை மறுபடியும் இளஞ்சமுதாயத்திட்கு க

குழந்தைகளுக்கான நவீன தமிழ்ப் பெயர்கள்

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தல் எனும்போது, இவ்வளவு காலமும் வைத்த பெயர்கள் தமிழ்ப்பெயர்கள் இல்லையா எனும் கேள்வி எம்மில் பலருக்கு எழும். உங்கள் பெரும்பாலானோர் தமிழ்ப்பெயர் என்று எண்ணிக்கொண்டிருக்கும் உங்கள் பெயரை வட இந்தியக் கலப்பு,சமக்கிருத கலப்பு,ஐரோப்பிய,அரேபியக் கலப்புடனான பெயராக இனங்காணுவீர்கள்.  தமிழில் பெயர் சூட்டுவது இனத்துவேசம் உள்ள செயலா? :P இனத்தைக் கொண்டாடக் கூடிய செயல். மறத்தமிழன் என்று அடைமொழி இட்டுக்கொண்டு உலாவுவதை விட அழகான செயல் என்று எண்ணுகிறேன். இந்த அடையாளம் மிக அழகானது.  அண்மையில் நிறையப் பேர் தமிழில் குழந்தைகளூக்கான நவீனமான பெயர்கள் வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். தமிழில் பெயர்கள் பழமையானவையாக இருப்பது கூட இக்காலத்தோரின் தெரிவுக்குட்படாமைக்கு ஒரு காரணமாகும். பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் சிலவற்றை தொகுத்திருக்கிறேன்.சிலவற்றை கண்டும் பிடித்திருக்கிறேன். ( பிற்காலத்தேவைகளுக்கு ;)  ) வினைச்சொல் பெயர்கள் அஞ்சா ஆராதி ஆனந்தி  சலனி கோளறா இசி இனி தேயா மேதா வேயா வேகா மின்னு மிதவா தெகிழா நெகி