Skip to main content

பழங்கவிதைகள் சில...


2007 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட சில பழங்கவிதைகள்.

இந்தத் தொப்பி.......

இந்தத் தொப்பி யாருக்குப் பொருத்தமென்று
இளையோரையெல்லாம் கேட்டு வைத்தான்.

இன்னோரன்ன இழவுகளாலே
இனிப் பொருத்தமென்றால் இது தான் என்றான்.

அவனைக் கண்டவரெல்லாம் அது அவனுக்குத் தானென்றார்.

இவனைக் கண்டவரெல்லாம் அது இவனுக்குமென்றார்.

ஒருவரும் தனக்கென்று சொல்லி
தலை கொடாமல் சென்ற போது-
அந்தோ அது வந்துதலையில் வீழ்ந்து -தெறித்து,
முன்னோர் அலறி முறை கெடும் வண்ணம்
வீணாய்ப் போனார் எம்மின மக்காள்!

2004



கற்புடை பாடலொன்று!

பூனைக்குட்டிகளைச்
சாம்பலக் கிடங்குக்குள் வளர்க்கும்
பெண்களைப் பற்றி
கற்புடை பாடலொன்று பாடவா?

இறுதி முறையாக துயரப்பறவை
வட்டமிட்டபோது,
பூனைக்குஞ்சுகள் அடுப்பங்கரையச்
சுற்றி வட்டமிட்டனவா?

பெண்களே நீங்கள் அதனருகில்
நிற்கும் வரை பாதுகாப்பாக
குளிர்க்காய்வதாய் நினைத்துக் கொள்கிறீர்களா?

பூனைகள் மீன்களை
அடுப்பங்கரையிலிருந்தே விழுங்குகின்றன.
நீங்கள் கழுவிய மீன்களைப் பூனைகள்
விழுங்குதல் நியாயமாகப் படுகிறதா?

ஒ..பெண்களே,
உங்கள் பூனைகளுக்கு
அடுப்பங்கரைக்கு வெளியில் உணவைத் தேடித்தாருங்கள்.
அவை விழுங்குவதற்கான பூச்சிகளும்,
பூரான்களும் அவ்விடமே உள்ளன!

ஒ..பெண்களே
தேடுதலுக்கு அரியவையும் உண்டோ?


பேச்சற்ற பண்பொன்றை
உனக்கு மற்றவர்கள் போதிக்கவிளையும் தருணமொன்றில்,
சகோதரி,
உன் தேடுதலை
பலவீனங்களால் மட்டுப்படுத்தாதே!
இயல்பாகவே,
எதிர்ப்புணர்வை நேசிப்பதைக்காட்டு !
அத்தகைய நாளொன்றில்,
யாவரிலும் வலியோளாக  நீ வட்டமிடுவாய்  !

2007

  


மக்களைப் பற்றி.....

மக்களே கவிதையின்பாடகராயின்
பாடல்கள் எழுவது மக்களைப் பற்றியோ ?

மக்களே காலத்தின்
நெருக்குதலாயின் நெருக்குதல்
மக்களைப் பற்றியே ஆமோ ?

மக்களே உங்கள் விருந்தினராயின்
விருந்துகள் அவரை உபசரிக்காவோ ?

மக்களே உங்கள் விருந்தினராயின்,
மக்களும் விருந்தாய் மாறுதல் ஆமோ ?

மக்களே உங்கள் இலக்குகள் ஆயின்,
மக்களைப் பற்றியே-பேசுவார் எல்லாம்-
மரித்தவர் ஆவதைத் தடுப்பவர் எவரோ ?

2006

தூக்கணாம் குருவியின்........

தூக்கணாம் குருவியின்
கூடுகளைப் பாரீர்.தூர்ந்து விழுந்த
அந்த  மரத்தைப் பாரீர்.

உருக்குலைந்த என் தோழர்கள்-
நெருக்குதலைக் கேளீர்.

எங்கும் மேன்மையை தங்குதல் பற்றி
எவர் கதைப்பார் ?
தங்கும் தரித்திரம் தொலைவதும் பற்றி எவர் கதைப்பார் ?
எரிந்த   களத்தினில் இடி விழுதலைப் பற்றி-
எவர் கதைப்பார் ?

கிளைத்த பணத்தின் கிளையொன்றின் மீது,
கிடந்தது கதைகள் எழுதுவார் பலர்-
மேன்மை பெற்ற மேல்சாதியரெல்லாம்
கீழ் சாதியாரைத் தீண்டியதை.

ஆண்டாவா ஆண்டவா அடுக்காதென்று
அலறியவரெல்லாம்
மீண்டவாறு வந்த கதை யார் சொல்வார் ?
மீண்டும் புதிய நாள் போலொன்று
புதிதாய்ப் பூர்க்க யார் வைப்பார் ?

2002

சில சொற்களைப் பற்றி....

சில சொற்களைப் பற்றிமெதுவாகக் கதைப்பதில் உமக்குச் சந்தோசமா?

ஓம் ஓம்..சந்தோசம்....

சில செயலக்ளைப் பற்றிமந்தமாகக் கதைப்பதில் உமக்குச் சந்தோசமா?

ஓம் ஓம் சாலச் சந்தோசம்.......

இன்னும், சில வாதங்களை வாதிக்காமலிருப்பதில் உமது நோக்கமென்ன ?

உதவாக் கதையை கதையாதிருப்பது நல்லது!

நல்லது,
உமது உணவை யார் தந்ததுஎன்பதைப்பற்றியும் கதைக்க வேண்டாமா?

ஐயோ, எசமானர் வீட்டு நாய் கடிக்கும்!

2007


அப்பாவி!

சிங்களவன் எம்மை மிதிப்பானோ ?
....த்திரம் பருக்குவானோ ?
தாரில் வீழ்த்திச் சுடுகடிக்கச் சாக்காட்டுவானோ ?

மித்திப்பான்-பருக்குவான்-சுடுகடிக்கச் சாக்காட்டுவான்!

நாங்கள் இப்போதும் ,
இதற்கு முந்தியும்அவனுக்கென்ன செய்தோம்?
முதலில் பருக்கினோம்,
தாரில் போட்டோம்,
பின் முதுகில் எழுதினோம்.

சிங்களவனெம்மைச்  சுடுவதுமுண்டோ?
ஓம், அதிகமுண்டு.
இதெற்கென்ன நாம் செய்வோம்?
வலக்காதில் பென்சிலைப் புகுத்தி,
இடக்காதால்  எடுப்போம்-

சிங்களன் எங்கள் பெண்களைபிள்ளைபெறச் செய்தானா?
ஓம், அதிகமாய்  .... அதிகம் செய்தான்.....


நாங்கள் என்ன செய்தோம்?-
அவன் பெற்றதையும், நாம் பெற்றதையும்
வெளிநாடு அனுப்பிவிட்டு -ஒளிந்துகொண்டோம்.

இனி சிங்களனுக்கு நாம் என்ன செய்வோம் ?

அதிகபட்சம-
வேறொரு நாட்டிலிருந்து கடலில் முத்துக் குளித்துவிட்டு
கொடி தூக்குவோம்!

சிங்களன் இனி  என்ன செய்வான் ?

அவன் தானே, அப்பாவி ஆவான்!

***
2006 மாசி 17

நச்சுக்குப்பி


என்னுடைய தோழர்கள்
வயலிலே களை  பிடுங்கினார்கள்.

என்னுடைய தோழர்கள்
வெயிலிலே வேர்வை சிந்தினார்கள்.
என்னுடைய தோழர்கள்
புரட்சியைத் தூண்டிப் பாடினார்கள்.
என்னுடைய தோழர்கள்
எல்லா நாடுகளிலும் இருந்தார்கள்-


என்னுடைய தோழர்கள்
எனக்கு அரிசியைத் தந்தார்கள்.
என்னுடைய தோழர்கள்
வீரத்தை விளைவித்தார்கள்.
என்னுடைய தோழர்கள்
பழமைகளை முறியடித்தார்கள்.

என்னுடைய தோழர்கள் ,
ஒருநாள்,என்னையும் போராட அழைத்த போது,
நச்சுக் குப்பியொன்றை இலவசமாகப் பரிசளித்து-
வெட்கமில்லாமல் வாழ்ந்து வந்தேன்.

என்னுடைய நீரையும்,
என்னுடைய காற்றையும்,
என்னுடைய வளத்தையும் அவர்கள் பிடுங்கிய போது,
எனக்கும் உண்பதற்குநச்சுக்குப்பியைத் தவிர வேறிருக்கவில்லை.

2004


தொலைந்து போன சில தடயங்களைத் தேடித் பகிந்துகொள்வதில் உள்ள ஆவணப்படுத்துகை, ஒருவகை நிறைவானதும், இன்பமானதும் கூட. இன்றைய எழுத்துக்கும் அன்றைய எழுத்துக்குமிடையிலான இடைவெளியை இன்னமும்  வியந்துகொண்டிருக்கிறேன்.

நிலா.லோ
2012

Comments

Popular posts from this blog

சாமகானமும் காம்போதியும்

முருகையன் ஒரு மொழிபெயர்ப்புச் செய்தார். மொழிபெயர்ப்பு எண்டும் சொல்ல முடியாது,சாதுவா மொழிபெயர்ப்பும்,திறமையான கற்பனையும் போட்டு செய்யுள் வடிவத்தில, இளநலம்! என்ன இளநலமா?ஹையா கிளுகிளுப்பான கதை வரப்போகுது. குமாரசம்பவம் (ஸாரி வேற கண்டென்ட் எண்டு நினைக்கப்படாது, ஐ ஆம் வெரி டீசன்ட்) காளிதாசன் குமாரசம்பவத்தில எழுதின அதே கதையை தமிழில தந்தவர். அதில தான் இந்தக் கதை வருகுது.  சாமகானம் சாமகானம் எண்டு ஒண்டு சொல்லக் கேட்டிருப்பம். “சாமகானம் பாடினான்” எண்டு நாலாம் வகுப்புச் சமய பாட புத்தகத்தில ஒரு பாடம் இருக்கு. பத்துத் தலையும், கையில ஒரு தலையுமாக் கணக்குப் பிழையா மொறாயஸ் கீறின இராவணனிண்ட மீசை வெச்ச படம் இருக்கும், இப்ப ஞாபகம் வந்துட்டுதா? அந்தக் காலத்திலேயே தலைகளிண்ட கணக்கை எண்ணிப் பாத்தனாங்கள் ஆக்கும். (தலைக்கணக்கு முக்கியம் அமைச்சரே) இப்ப சாமகானத்தைப்பற்றிப் பாப்பம். காளிதாசன் குமாரசம்பவம் எழுதேக்க, சும்மா கற்பனைகுதிரையை காட்டாற்று வெள்ளம் போல பறக்க விடுறேர்.  மிஸ்டர் சிவனும் மிசஸ் உமாவும் கலியாணமான புதிசில, (ஏன் கல்யாணமான பழசில யாரும் வெளிய போறதில்ல எண்டு நெடுங்காலமா டவுட்) சும்மா வெளிய வெளிக்

இராவணேசன் ; Maunaguru's 'Ravanesan'

நெறியாள்கை - பேராசிரியர் மௌனகுரு. இடம் -கொழும்பு கலை இலக்கியப் பேரவை. காலம்- சனி(13.02.2010)  மாலை 6.30மணி. சனி மாலை(13.02.2010) பேராசிரியர் மௌனகுரு அவர்களின் 'இராவணேசன்' நாடகம் நடைபெறவிருக்கிறதென்று நண்பரொருவர் தகவல் சொன்னார். இருந்த எல்லா வேலைகளையும் புறந்தள்ளி விட்டேன். நாடகங்கள் என்றவுடன்  வரும் இந்த தொலைகாட்சி சீரியல்களையே கண் ஞாபகத்தில் கொண்டுவந்து முகத்தை அஷ்ட கோணலாக்குகிறது. மேடையமைப்பும், அரங்கமும்,அரிதாரம் பூசிக்கொண்ட பாத்திரங்களும், நேரடியான காட்சிகளூட்டும் கிளர்வும், எங்களுக்கு முன்னாள் ஒரு தலைமுறை இதனூடே வாழ்ந்து காட்டியிருக்கிற விடயமும் தெரிவதில்லை. மாற்றங்கள் மட்டுமே மாறிக் கொண்டிருந்தாலும்,எங்களின் முன்னோடிகள் வழி வந்த கலைப் பாதையை எடுத்தியம்புதலுக்கும்,அதற்கான வரவேற்புக்கும் இங்கு இடமில்லை எனும் போது அவற்றையெல்லாம் தாண்டி மனதில் எங்கேயோ வலிக்கிறது. எங்களுடைய காலத்தில், முழுமையான கூத்துக்கலையோ, அரங்காடல்ககளையோ  காண்பதற்கு காலமோ மாற்றமோ ஏதோவொன்று இடந்தரவில்லை .இருப்பினும் யாராவது எங்கள்  நலிந்து போன கலைகளை மறுபடியும் இளஞ்சமுதாயத்திட்கு க

குழந்தைகளுக்கான நவீன தமிழ்ப் பெயர்கள்

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தல் எனும்போது, இவ்வளவு காலமும் வைத்த பெயர்கள் தமிழ்ப்பெயர்கள் இல்லையா எனும் கேள்வி எம்மில் பலருக்கு எழும். உங்கள் பெரும்பாலானோர் தமிழ்ப்பெயர் என்று எண்ணிக்கொண்டிருக்கும் உங்கள் பெயரை வட இந்தியக் கலப்பு,சமக்கிருத கலப்பு,ஐரோப்பிய,அரேபியக் கலப்புடனான பெயராக இனங்காணுவீர்கள்.  தமிழில் பெயர் சூட்டுவது இனத்துவேசம் உள்ள செயலா? :P இனத்தைக் கொண்டாடக் கூடிய செயல். மறத்தமிழன் என்று அடைமொழி இட்டுக்கொண்டு உலாவுவதை விட அழகான செயல் என்று எண்ணுகிறேன். இந்த அடையாளம் மிக அழகானது.  அண்மையில் நிறையப் பேர் தமிழில் குழந்தைகளூக்கான நவீனமான பெயர்கள் வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். தமிழில் பெயர்கள் பழமையானவையாக இருப்பது கூட இக்காலத்தோரின் தெரிவுக்குட்படாமைக்கு ஒரு காரணமாகும். பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் சிலவற்றை தொகுத்திருக்கிறேன்.சிலவற்றை கண்டும் பிடித்திருக்கிறேன். ( பிற்காலத்தேவைகளுக்கு ;)  ) வினைச்சொல் பெயர்கள் அஞ்சா ஆராதி ஆனந்தி  சலனி கோளறா இசி இனி தேயா மேதா வேயா வேகா மின்னு மிதவா தெகிழா நெகி