Skip to main content

இரண்டு மாமரங்கள்; Two Mango Trees



A poem about two Mango trees and this is a picture of my native hometown 'karutha kolumban' Mango tree in Jaffna


மாம்பழம் ,
சாப்பிடுவதற்கென்று ஒரு மரம் வளர்த்தேன்.
ஒரு மரம் என்றா சொன்னேன்? ஒரு மரமல்ல,
ஒன்றுக்குத் 'துணையாய் நிற்கட்டுமே' என்று இன்னொரு கன்றையும்
வளர்த்தேன்.

ஒரு 'கறுத்தக் கொழும்பான்'.
மற்றையது, நல்ல நெடுமி-
அது 'பிளாட்'! 

மரம் காய்க்கத் தொடக்கி,
ரெண்டு நாள் இல்லை-
வண்டடிச்கிப் போட்டுது.
'கறுத்தக் கொழும்பான்' முழுக்க 
மாம்பழ வண்டு.

"பிளாட்" ஒரு புனிதனைப் போல 
ஓங்கி ஓங்கி வளர்ந்து கொண்டே 
இருந்தது-
இன்னும் காய்க்கவே இல்லை.

இப்போது,
வண்டடிச்சாலும் பரவாயில்லை
அது தான் ருசி எண்டு பக்கத்து வீட்டுச் சிறுசுகள்
மரம் முழுக்க ஏறி,
கொம்மாளம் போட்டுக் கொண்டு 
பழம் பறிக்கத் தொடங்கினர்.
காய்ச்ச மரம் எண்டதால அது கல்லெறியும் பட்டது.

பிறகு,
'பிளாட்' மரத்தைப் பார்த்து,
சனம்,
இது மலட்டு மரம் எண்டு கதைக்கத் தொடங்கீட்டுது.

காய்க்கும் காய்க்கும் எண்டு காத்துக் கிடந்த மரம்
இன்னமும் காய்க்கேல்ல..
நானும்
உது மலட்டு மரமேண்டு நம்பத் தொடங்கீட்டன்.
மரத்தைப் பார்க்கும் போது ,
அசூசையும்,  இவ்வளவு நாள் உன்னையும் 
தண்ணியூத்தி வளர்த்தனே எண்டும் இருக்கும்.
சிலநேரம் "சீ "  எண்டும் போகும்.

ஆனால்,
மரம் மட்டும் அசராமல்
காத்தை வடிகட்டி ஜன்னலுக்கால்,
தென்றலாகத் தந்துகொண்டிருந்தது.

அப்போது
எனக்கும், மரங்களுக்கும்
எண்ட  வீட்டுக் காரர், உவர் தாத்தாவுக்கும், 
நல்லா வயசு போட்டுது.

எங்களுக்கு சீனி வியாதியும் 
வந்துட்டுது.
காத்தாட நடந்துட்டு வரத்தான் ,
" டொக்டர் " சொன்னவர்.   

பிளாட் மரத்தைச் சுற்றிச் சுற்றி 
நானும் அவருமா நடப்பம்.
நல்ல காத்தா இருக்கும்.
'கறுத்தக் கொழும்பான்' காச்சுக் கொட்டும், அதுக்குக் கீழ போகவே முடியாது.-
அதைப் பொறுக்க முன் போல 
அந்தக் குஞ்சுக் குரும்பான்கள் இல்லை-
அதுகள் பெரிசுகளா வளர்ந்துட்டுதுகள்.
மூத்தவன் ஆரோ ஒரு பெடிச்சியைக் கூட்டிக் கொண்டு ஓடிப் போயிட்டான்.
சின்னவள், ஆரோ ஒரு பெடியனைக் கூப்பிட்டிருக்கிறாள்,
அவன் வராததால 
கிணத்துக்குள் விழுந்து மாண்டு போனாள் .
இது இப்ப பழங்கதையாச்சு!
கிணறும் இப்ப தூர்ந்து போச்சு!
ஆருமே இப்ப இல்லை - அந்த 'இனிப்புப் பழம்' பொறுக்க. 

ஒரு நாள் 
" டொக்டர்" வீட்ட வந்தார்.
பிளாட் மரத்திண்டையும் 
கறுத்தக் கொழும்பான் மரத்திண்டையும் 
சின்னக் கிளைகளை வெட்டி 
பதியம் போட்டு 
தென்னந்தும்பும் கட்டி , ஒரு மூண்டு மாசம்.....!
மரம் காய்க்கத் தொடங்கீட்டுது.

மரங்காய்க்கிறது ,
எனக்குச் சந்தோசம்-
அவர் தாத்தாவுக்கும் 
சரியான சந்தோசம்.
ஒரு, ஒரு, பழம் சாப்பிடலாமாம்,
சீனி வியாதிக்காரர்கள்-
"டொக்டர்" சொல்லீட்டுப் போட்டார்.
வந்த "டொக்டருக்கு"  தேத்தண்ணியுங் குடுக்கேல்ல.

கடைசியா ஒரு வழியா
ரெண்டு மரமுங் காய்ச்சிட்டுது,
ஆனா 'பிளாட்' காய்ச்சது தான் 
அதிசயமாக் கிடக்குது.

இப்பவும்,
இவர் தாத்தா சொல்லுவார்,
யாதொண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாதெண்டு.

என்னால ,
இப்பையும் 
மரத்தைப் பார்த்து ,
"சீ" எண்டு துப்பினத்தை மறக்கேலாமக் கிடக்கு.

ஒரு நாள்,
தாத்தாவைப் பார்த்து,
ஏனப்பா, 
நான் திடீரெண்டு கண்ணை மூடிட்டா, 
உந்த பிளாட் மரத்துக்குக் கீழ தாப்பியளோ ? 
எண்டன்.

தாத்தா, அழுதாரா எண்டு தெரியேல்ல, 
மூக்குக் கண்ணாடியைக் கழற்றித் துடைத்துக் கொண்டிருந்தார்.
நான் அழுதேன்!!!
***



And this is the Dilapidated well,which actually mentioned in the poetry

நிலா -
6 /8 /2010

Comments

  1. மிகச்சிறந்த ஒரு படைப்பு.
    இயல்பின் இருப்பை இயல்பாய் வெளிப்படுத்துகிறது கவிதை.
    எதையும் சீ எண்டு உதறித்தள்ளும் உலகத்தை கணக்கெடுக்காமல்
    நம்வழியே நாம் உயர்ந்து கொண்டு செல்லவேண்டும் என்று பாடம் கற்பிக்கின்ற பிளாட் சொல்வதைத்தான் நானும் உங்களுக்குச் சொல்கிறேன்.
    தொடர்ந்தும் எழுதுங்கள்.

    ReplyDelete
  2. கவிதையில் ஒரு கதை. நல்லாயிருக்கு.

    அது 'பிளாட்'டா? அல்லது 'விளாட்'டா? தாட்சாயணீ

    ReplyDelete
  3. மன்னிக்கவும் தர்ஷாயணீ... பெயரை மாற்றி எழுதிவிட்டேன். அது சரி... பெயரில் என்ன இருக்கிறது:)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சாமகானமும் காம்போதியும்

முருகையன் ஒரு மொழிபெயர்ப்புச் செய்தார். மொழிபெயர்ப்பு எண்டும் சொல்ல முடியாது,சாதுவா மொழிபெயர்ப்பும்,திறமையான கற்பனையும் போட்டு செய்யுள் வடிவத்தில, இளநலம்! என்ன இளநலமா?ஹையா கிளுகிளுப்பான கதை வரப்போகுது. குமாரசம்பவம் (ஸாரி வேற கண்டென்ட் எண்டு நினைக்கப்படாது, ஐ ஆம் வெரி டீசன்ட்) காளிதாசன் குமாரசம்பவத்தில எழுதின அதே கதையை தமிழில தந்தவர். அதில தான் இந்தக் கதை வருகுது.  சாமகானம் சாமகானம் எண்டு ஒண்டு சொல்லக் கேட்டிருப்பம். “சாமகானம் பாடினான்” எண்டு நாலாம் வகுப்புச் சமய பாட புத்தகத்தில ஒரு பாடம் இருக்கு. பத்துத் தலையும், கையில ஒரு தலையுமாக் கணக்குப் பிழையா மொறாயஸ் கீறின இராவணனிண்ட மீசை வெச்ச படம் இருக்கும், இப்ப ஞாபகம் வந்துட்டுதா? அந்தக் காலத்திலேயே தலைகளிண்ட கணக்கை எண்ணிப் பாத்தனாங்கள் ஆக்கும். (தலைக்கணக்கு முக்கியம் அமைச்சரே) இப்ப சாமகானத்தைப்பற்றிப் பாப்பம். காளிதாசன் குமாரசம்பவம் எழுதேக்க, சும்மா கற்பனைகுதிரையை காட்டாற்று வெள்ளம் போல பறக்க விடுறேர்.  மிஸ்டர் சிவனும் மிசஸ் உமாவும் கலியாணமான புதிசில, (ஏன் கல்யாணமான பழசில யாரும் வெளிய போறதில்ல எண்டு நெடுங்காலமா டவுட்) சும்மா வெளிய வெளிக்

இராவணேசன் ; Maunaguru's 'Ravanesan'

நெறியாள்கை - பேராசிரியர் மௌனகுரு. இடம் -கொழும்பு கலை இலக்கியப் பேரவை. காலம்- சனி(13.02.2010)  மாலை 6.30மணி. சனி மாலை(13.02.2010) பேராசிரியர் மௌனகுரு அவர்களின் 'இராவணேசன்' நாடகம் நடைபெறவிருக்கிறதென்று நண்பரொருவர் தகவல் சொன்னார். இருந்த எல்லா வேலைகளையும் புறந்தள்ளி விட்டேன். நாடகங்கள் என்றவுடன்  வரும் இந்த தொலைகாட்சி சீரியல்களையே கண் ஞாபகத்தில் கொண்டுவந்து முகத்தை அஷ்ட கோணலாக்குகிறது. மேடையமைப்பும், அரங்கமும்,அரிதாரம் பூசிக்கொண்ட பாத்திரங்களும், நேரடியான காட்சிகளூட்டும் கிளர்வும், எங்களுக்கு முன்னாள் ஒரு தலைமுறை இதனூடே வாழ்ந்து காட்டியிருக்கிற விடயமும் தெரிவதில்லை. மாற்றங்கள் மட்டுமே மாறிக் கொண்டிருந்தாலும்,எங்களின் முன்னோடிகள் வழி வந்த கலைப் பாதையை எடுத்தியம்புதலுக்கும்,அதற்கான வரவேற்புக்கும் இங்கு இடமில்லை எனும் போது அவற்றையெல்லாம் தாண்டி மனதில் எங்கேயோ வலிக்கிறது. எங்களுடைய காலத்தில், முழுமையான கூத்துக்கலையோ, அரங்காடல்ககளையோ  காண்பதற்கு காலமோ மாற்றமோ ஏதோவொன்று இடந்தரவில்லை .இருப்பினும் யாராவது எங்கள்  நலிந்து போன கலைகளை மறுபடியும் இளஞ்சமுதாயத்திட்கு க

குழந்தைகளுக்கான நவீன தமிழ்ப் பெயர்கள்

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தல் எனும்போது, இவ்வளவு காலமும் வைத்த பெயர்கள் தமிழ்ப்பெயர்கள் இல்லையா எனும் கேள்வி எம்மில் பலருக்கு எழும். உங்கள் பெரும்பாலானோர் தமிழ்ப்பெயர் என்று எண்ணிக்கொண்டிருக்கும் உங்கள் பெயரை வட இந்தியக் கலப்பு,சமக்கிருத கலப்பு,ஐரோப்பிய,அரேபியக் கலப்புடனான பெயராக இனங்காணுவீர்கள்.  தமிழில் பெயர் சூட்டுவது இனத்துவேசம் உள்ள செயலா? :P இனத்தைக் கொண்டாடக் கூடிய செயல். மறத்தமிழன் என்று அடைமொழி இட்டுக்கொண்டு உலாவுவதை விட அழகான செயல் என்று எண்ணுகிறேன். இந்த அடையாளம் மிக அழகானது.  அண்மையில் நிறையப் பேர் தமிழில் குழந்தைகளூக்கான நவீனமான பெயர்கள் வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். தமிழில் பெயர்கள் பழமையானவையாக இருப்பது கூட இக்காலத்தோரின் தெரிவுக்குட்படாமைக்கு ஒரு காரணமாகும். பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் சிலவற்றை தொகுத்திருக்கிறேன்.சிலவற்றை கண்டும் பிடித்திருக்கிறேன். ( பிற்காலத்தேவைகளுக்கு ;)  ) வினைச்சொல் பெயர்கள் அஞ்சா ஆராதி ஆனந்தி  சலனி கோளறா இசி இனி தேயா மேதா வேயா வேகா மின்னு மிதவா தெகிழா நெகி