Skip to main content

ஓசைஒலியெலாம் ஆனாய் நீயே........


இது ஒரு பதில்க்கவிதை ; அவ்வளவு  விளக்கம் இப்போதைக்குக்  காணும் என்ன ? ;)  


பிரஜாப சங்கல்பத் தீயினின்றும் 
எழுந்து வருகிறது-எனக்கான கீதம்.
ஆழமான லோகத்தின்
ஜென்ம அதரங்களிலிருந்து
சாபத்தின் சன்னல் வழியே
எழுகிறது-அது,

மந்தமான சாத்தானின் பிடியிலிருந்து
அதர்மத்தின் இழைகளில் பயணிக்கும் என்னை,
ஆலகால விடத்தினின்றும்
அருட்சிக்கப்பட்டு
நிருதூழியமான-எனது
நனவிலி மனதுடன் உரையாடல்
வைக்கிறது.

தேவதேவனின்
குமிழிகளுக்குள் ஒளிந்திருக்கின்ற
காலச்சக்கரம் 
எந்திரம் போல சுழழுகிறது- இது 
ஏந்திழை சம்பந்தமானது.

சதசித்து சம்மந்தமாக –ஒரு
சச்சிதானந்த பிம்பம் தொடருகின்றது- நெடுநாளாய்,அது 
நித்திய கைங்கூலியத்திலிருந்து
ஈடேற்றமற்ற எனதான்மாவைப்பிளக்கிறது.-
அதற்குள், நியமம் தவறாத அகிற்புகை கிளம்புகிறது-
உன் இசை சம்பந்தமாக.......

சவரிக்கப்படாத என் அந்தங்களில்
மோட்ச நிருவாணம் உணர்த்தப்படுகிறது!
அதீதத்தின் அதீதமே,
தேவ தேவா – உன்
இரட்சிப்பு  எத்துனை
ஆகாம்மியமானது?
ரஸமானது?
இன்னல் தரும் உன் இசை,
ஸ்மரணம், மரணம், கடந்து
லஜ்ஜையின்றிய க்ருகபேதங்களையும்;
சன்மானமின்றிய சொருப நிலையையும்
ஆகிருதியையும்; தருகின்றது.

இதனால்
பாந்தமான சுடரிலிருந்து
எனக்கான பூமி பிறக்கிறது.
மலமழிகிறது-
அட்டமா சித்தி பெற்றேன்........
தளிர் இலைக்குள்ளும்,
பிரவாகந்தாங்கிய நீர்ச்சுணைக்குள்ளும்,
விசும்பின் விளிம்பு நிலைக்கும் 
பறக்க முடிகிறது.

போசணை நீங்கிய எனதான்மா 
ஓப்புயர்வற்ற அருவுருவ நிலையெய்துகிறது.
எனக்கும், இசைக்கும் இடையில்
மலர் இடுக்குகளிளான சன்னத்தைத் தைத்துத்தருகிறது.
ஏகாந்தத்தின் சப்தம் தாங்கிய
அமான்யத்தைப் பரிசளிக்கிறது.

இன்னுமின்னும் உனதினிய ஆபோகிச்சங்கீதம்,
சாலையெங்கும் பனி மரங்களைத்தூவி
இலைகளின் பெருமூச்சில் பயணம் கொள்ள வைக்கிறது.
பூக்களின் துவரக்காம்புகளினின்றும்
தன்னிச்சையாய் அண்ட வெளியில் உயிர்களைப்பிய்த்துப் போடுகிறது,
மீண்டும் பிறவெனச்சொல்லி........

எனதினிய சங்கீதத்தை
நரம்புகளின் அதரங்களில் மீட்டியபடி-
நிருவான பூமியினது சாசுவதத்தில் மூழ்கி-
பிரேதமான நான்,
உன்
பரிசுத்தம் சார்ந்த செய்கையினால் -
காற்று வார்த்தியத்தின் தேசீயத்தைப்போலே,
உள்வாங்குகிறேன் காற்றினது உயிரை.......

ஸ்வாசத்தக்கு லகுவான உன்
சாமவேதத்தின் சாயல்!
தருகிறது –
பொய்கை நிழலுக்குள் குளிர் இதம்!
மேலும்,
இதமேயுருவான மயிற்பீலி உரசல்....
அது,
உத்தமத்தின் உத்தமத்திலும்,
மத்திமத்தின் மத்திமத்திலும்,
அதமத்தின் அதமத்திலும்
காவுகிறது-
இது
எனக்கு
உத்தமமே!.......

ஓசை, ஒலி எல்லாமுமான நீ,
சப்தங்களின் கடவுளாகிறாய். -பின்
சாவுகளின் வெளித்தத்துவ வழியைத்துண்டித்து,
மரணத்தினின்றும் காக்கிறாய்.
ஓம அக்கினியில் இருந்து ஸ்வரங்களை குறி பார்த்தெறிகிறாய்-
அவை வேதத்தின் சாயலாய் எதிரொலிக்கின்றன.

நரபலியைப்போன்ற –ரஸமற்ற காரியம்,
மௌனந்தாங்கிய என் கவிதை!
சந்தங்களாளான உன்னை வாழ்த்த......

நாணற்புல்லினது, போன்ற சாத்விக கீதம்,
எனக்குள் ஒவ்வொரு அதரங்களையும் கிளர்வூட்டுகிறது.
நீ என்ன தேவ பாஷை பரிபாசிக்கிறாயா?
கடவுளான எனக்கு மட்டும் புரிய?.........

புரிந்ததா என் ஆணவம்?............
உன் இசையை விழுங்கிக்கொள்ளும் பேராசையால்
வந்த வினை....

நோவுணர்வு தரும்
மெல்லிய உன் சாமவேதம் -
இனியுந் தரட்டும்
இனிமையான சாபவிமோச்சனங்களை!



ஒரு காலத்தில மணிப்பிரவாள கவிதைகள் வாசிச்ச பாதிப்பில எழுதி இருக்கலாம். நா. பிச்சமூர்த்தியை வாசித்திருக்கிறேன், ஆகக் சின்ன வயதில். நிறைய மொழிபெயர்ப்பு மலையாளக் கவிதைகள்  வாசிக்கின்ற பழக்கம் அப்போது எனக்கிருந்தது.



நிலா -
2009




Comments

  1. மணிப்பிரவாள நடை கலந்து கலந்து எழுதப்பட்ட பல கவிதைகள் படித்திருக்கிறேன் . உங்களின் நடையில் இன்னும் சிறப்பு தெரிகிறது . அருமை . பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சாமகானமும் காம்போதியும்

முருகையன் ஒரு மொழிபெயர்ப்புச் செய்தார். மொழிபெயர்ப்பு எண்டும் சொல்ல முடியாது,சாதுவா மொழிபெயர்ப்பும்,திறமையான கற்பனையும் போட்டு செய்யுள் வடிவத்தில, இளநலம்! என்ன இளநலமா?ஹையா கிளுகிளுப்பான கதை வரப்போகுது. குமாரசம்பவம் (ஸாரி வேற கண்டென்ட் எண்டு நினைக்கப்படாது, ஐ ஆம் வெரி டீசன்ட்) காளிதாசன் குமாரசம்பவத்தில எழுதின அதே கதையை தமிழில தந்தவர். அதில தான் இந்தக் கதை வருகுது.  சாமகானம் சாமகானம் எண்டு ஒண்டு சொல்லக் கேட்டிருப்பம். “சாமகானம் பாடினான்” எண்டு நாலாம் வகுப்புச் சமய பாட புத்தகத்தில ஒரு பாடம் இருக்கு. பத்துத் தலையும், கையில ஒரு தலையுமாக் கணக்குப் பிழையா மொறாயஸ் கீறின இராவணனிண்ட மீசை வெச்ச படம் இருக்கும், இப்ப ஞாபகம் வந்துட்டுதா? அந்தக் காலத்திலேயே தலைகளிண்ட கணக்கை எண்ணிப் பாத்தனாங்கள் ஆக்கும். (தலைக்கணக்கு முக்கியம் அமைச்சரே) இப்ப சாமகானத்தைப்பற்றிப் பாப்பம். காளிதாசன் குமாரசம்பவம் எழுதேக்க, சும்மா கற்பனைகுதிரையை காட்டாற்று வெள்ளம் போல பறக்க விடுறேர்.  மிஸ்டர் சிவனும் மிசஸ் உமாவும் கலியாணமான புதிசில, (ஏன் கல்யாணமான பழசில யாரும் வெளிய போறதில்ல எண்டு நெடுங்காலமா டவுட்) சும்மா வெளிய வெளிக்

இராவணேசன் ; Maunaguru's 'Ravanesan'

நெறியாள்கை - பேராசிரியர் மௌனகுரு. இடம் -கொழும்பு கலை இலக்கியப் பேரவை. காலம்- சனி(13.02.2010)  மாலை 6.30மணி. சனி மாலை(13.02.2010) பேராசிரியர் மௌனகுரு அவர்களின் 'இராவணேசன்' நாடகம் நடைபெறவிருக்கிறதென்று நண்பரொருவர் தகவல் சொன்னார். இருந்த எல்லா வேலைகளையும் புறந்தள்ளி விட்டேன். நாடகங்கள் என்றவுடன்  வரும் இந்த தொலைகாட்சி சீரியல்களையே கண் ஞாபகத்தில் கொண்டுவந்து முகத்தை அஷ்ட கோணலாக்குகிறது. மேடையமைப்பும், அரங்கமும்,அரிதாரம் பூசிக்கொண்ட பாத்திரங்களும், நேரடியான காட்சிகளூட்டும் கிளர்வும், எங்களுக்கு முன்னாள் ஒரு தலைமுறை இதனூடே வாழ்ந்து காட்டியிருக்கிற விடயமும் தெரிவதில்லை. மாற்றங்கள் மட்டுமே மாறிக் கொண்டிருந்தாலும்,எங்களின் முன்னோடிகள் வழி வந்த கலைப் பாதையை எடுத்தியம்புதலுக்கும்,அதற்கான வரவேற்புக்கும் இங்கு இடமில்லை எனும் போது அவற்றையெல்லாம் தாண்டி மனதில் எங்கேயோ வலிக்கிறது. எங்களுடைய காலத்தில், முழுமையான கூத்துக்கலையோ, அரங்காடல்ககளையோ  காண்பதற்கு காலமோ மாற்றமோ ஏதோவொன்று இடந்தரவில்லை .இருப்பினும் யாராவது எங்கள்  நலிந்து போன கலைகளை மறுபடியும் இளஞ்சமுதாயத்திட்கு க

குழந்தைகளுக்கான நவீன தமிழ்ப் பெயர்கள்

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தல் எனும்போது, இவ்வளவு காலமும் வைத்த பெயர்கள் தமிழ்ப்பெயர்கள் இல்லையா எனும் கேள்வி எம்மில் பலருக்கு எழும். உங்கள் பெரும்பாலானோர் தமிழ்ப்பெயர் என்று எண்ணிக்கொண்டிருக்கும் உங்கள் பெயரை வட இந்தியக் கலப்பு,சமக்கிருத கலப்பு,ஐரோப்பிய,அரேபியக் கலப்புடனான பெயராக இனங்காணுவீர்கள்.  தமிழில் பெயர் சூட்டுவது இனத்துவேசம் உள்ள செயலா? :P இனத்தைக் கொண்டாடக் கூடிய செயல். மறத்தமிழன் என்று அடைமொழி இட்டுக்கொண்டு உலாவுவதை விட அழகான செயல் என்று எண்ணுகிறேன். இந்த அடையாளம் மிக அழகானது.  அண்மையில் நிறையப் பேர் தமிழில் குழந்தைகளூக்கான நவீனமான பெயர்கள் வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். தமிழில் பெயர்கள் பழமையானவையாக இருப்பது கூட இக்காலத்தோரின் தெரிவுக்குட்படாமைக்கு ஒரு காரணமாகும். பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் சிலவற்றை தொகுத்திருக்கிறேன்.சிலவற்றை கண்டும் பிடித்திருக்கிறேன். ( பிற்காலத்தேவைகளுக்கு ;)  ) வினைச்சொல் பெயர்கள் அஞ்சா ஆராதி ஆனந்தி  சலனி கோளறா இசி இனி தேயா மேதா வேயா வேகா மின்னு மிதவா தெகிழா நெகி