Skip to main content

பௌர்ணமிக் கிறுக்கு -02 -கவிதை-








-நிலா-
29-7-2010 



ஒரு நாள் ,
வானம் விடை பெற்றுக் கொண்டிருந்தது-
அந்த நாள் புத்தனும் சில சந்நியாசிகளும் 
வானத்துக்குக் கீழே நடப்பவை பற்றி 
பிரஸ்தாபித்துக் கொண்டிருந்தார்கள்.

மரங்கள் நேர் கோட்டில் அசைகின்றன 
என்றான் ஒரு- புனிதன்.
இலைகள் வளைவை நோக்கிப் பயணிக்கின்றன 
என்றான் இன்னொரு- புனிதன்
எனினும் எல்லாமுமே மண்ணை நோக்கித்தான் விழுகின்றன
என்றான் 
இன்னொரு- மனிதன்.

புத்தனுக்கு கதைப்பதற்கு ஏதுமில்லை-
கதைகளைத் தவிர்க்கிறான்.
அல்லது கேள்விகளைத் துரத்துகிறான். 
கேள்விகளில் இருந்து பதில்களுக்கான நியாயங்களை அவன் 
நிராகரிக்கிறான்
அல்லது
நிராகரிப்புக்களை கேள்விகளாக்குகின்றான்.
ஏனென்றால் அவன் எப்போதும் 
புத்தனாயிருக்க விரும்புகிறான்.

புத்தன் ஒரு தர்மத்தை ஸ்தாபித்தவன்,
அவனுக்கு 
வழக்கொழிந்து போன காருண்யம் பற்றித் தெரியவே தெரியாது.
இருந்தாலும் அவன் 
மரங்கள் நேர் கோட்டிலா, இலைகள் வளைவிலா,
கனிகள் சுவையிலா பயணிக்கின்றன என்பது பற்றி 
கனவுகளில் தனும் சிந்திப்பான்.

 
புத்தன் ஒவ்வொரு தடவையும் 
கனவில் விழும் போது சாமான்னியனாகிறான்.
சாமானியனாகும் போது 
அவன் உடல் அசாத்தியத் தேஜசுடன் மிளிர்கின்றது .
கருணையின் வசந்தமோ , 
வாசனையோ சுடர் விடுகிறது.
பின் அவன் மீண்டும் 
புத்தனாக எண்ணுகையில்.
அதே சவத்தின் நிணம் வந்து 
 மூக்கை அடிக்கின்றது.

 
புத்தன் ஒரு போதும் இயேசுவை சந்தித்ததே இல்லை-
ஏசுவுக்கும் அவனுக்கும் காலத்தின் இடைவெளி அல்லது
கடல் கடந்து போன உறவு.

ஒரு முறை புற்றரை ஒன்றின் மீதாக 
புத்தன் நடந்து கொண்டிருக்கையில்,
பஞ்சுப் பாதுகையில் கல் ஒன்று குத்தியது.
பின்னொரு நாள் அந்த வெள்ளரசு மரம் கொஞ்சம் சரிந்து 
வேரோடு விழப்பார்த்தது .
புத்தன் சுமை தாங்கிப் பழகாதவன்.
ஏங்கிப் போனான், 
 
உள்ளொன்றும் புறமொன்ருமாய் தன் அத்துவிதத்தை 
கல்லோன்ரும் மரமொன்ருமாய்க் கூறு போட்டதை எண்ணி-
சற்றைக்கெல்லாம் சிலுவை சுமந்த இயேசுவாய் ஆகிப் போனான். 



Comments

Popular posts from this blog

சாமகானமும் காம்போதியும்

முருகையன் ஒரு மொழிபெயர்ப்புச் செய்தார். மொழிபெயர்ப்பு எண்டும் சொல்ல முடியாது,சாதுவா மொழிபெயர்ப்பும்,திறமையான கற்பனையும் போட்டு செய்யுள் வடிவத்தில, இளநலம்! என்ன இளநலமா?ஹையா கிளுகிளுப்பான கதை வரப்போகுது. குமாரசம்பவம் (ஸாரி வேற கண்டென்ட் எண்டு நினைக்கப்படாது, ஐ ஆம் வெரி டீசன்ட்) காளிதாசன் குமாரசம்பவத்தில எழுதின அதே கதையை தமிழில தந்தவர். அதில தான் இந்தக் கதை வருகுது.  சாமகானம் சாமகானம் எண்டு ஒண்டு சொல்லக் கேட்டிருப்பம். “சாமகானம் பாடினான்” எண்டு நாலாம் வகுப்புச் சமய பாட புத்தகத்தில ஒரு பாடம் இருக்கு. பத்துத் தலையும், கையில ஒரு தலையுமாக் கணக்குப் பிழையா மொறாயஸ் கீறின இராவணனிண்ட மீசை வெச்ச படம் இருக்கும், இப்ப ஞாபகம் வந்துட்டுதா? அந்தக் காலத்திலேயே தலைகளிண்ட கணக்கை எண்ணிப் பாத்தனாங்கள் ஆக்கும். (தலைக்கணக்கு முக்கியம் அமைச்சரே) இப்ப சாமகானத்தைப்பற்றிப் பாப்பம். காளிதாசன் குமாரசம்பவம் எழுதேக்க, சும்மா கற்பனைகுதிரையை காட்டாற்று வெள்ளம் போல பறக்க விடுறேர்.  மிஸ்டர் சிவனும் மிசஸ் உமாவும் கலியாணமான புதிசில, (ஏன் கல்யாணமான பழசில யாரும் வெளிய போறதில்ல எண்டு நெடுங்காலமா டவுட்) சும்மா வெளிய வெளிக்

இராவணேசன் ; Maunaguru's 'Ravanesan'

நெறியாள்கை - பேராசிரியர் மௌனகுரு. இடம் -கொழும்பு கலை இலக்கியப் பேரவை. காலம்- சனி(13.02.2010)  மாலை 6.30மணி. சனி மாலை(13.02.2010) பேராசிரியர் மௌனகுரு அவர்களின் 'இராவணேசன்' நாடகம் நடைபெறவிருக்கிறதென்று நண்பரொருவர் தகவல் சொன்னார். இருந்த எல்லா வேலைகளையும் புறந்தள்ளி விட்டேன். நாடகங்கள் என்றவுடன்  வரும் இந்த தொலைகாட்சி சீரியல்களையே கண் ஞாபகத்தில் கொண்டுவந்து முகத்தை அஷ்ட கோணலாக்குகிறது. மேடையமைப்பும், அரங்கமும்,அரிதாரம் பூசிக்கொண்ட பாத்திரங்களும், நேரடியான காட்சிகளூட்டும் கிளர்வும், எங்களுக்கு முன்னாள் ஒரு தலைமுறை இதனூடே வாழ்ந்து காட்டியிருக்கிற விடயமும் தெரிவதில்லை. மாற்றங்கள் மட்டுமே மாறிக் கொண்டிருந்தாலும்,எங்களின் முன்னோடிகள் வழி வந்த கலைப் பாதையை எடுத்தியம்புதலுக்கும்,அதற்கான வரவேற்புக்கும் இங்கு இடமில்லை எனும் போது அவற்றையெல்லாம் தாண்டி மனதில் எங்கேயோ வலிக்கிறது. எங்களுடைய காலத்தில், முழுமையான கூத்துக்கலையோ, அரங்காடல்ககளையோ  காண்பதற்கு காலமோ மாற்றமோ ஏதோவொன்று இடந்தரவில்லை .இருப்பினும் யாராவது எங்கள்  நலிந்து போன கலைகளை மறுபடியும் இளஞ்சமுதாயத்திட்கு க

குழந்தைகளுக்கான நவீன தமிழ்ப் பெயர்கள்

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தல் எனும்போது, இவ்வளவு காலமும் வைத்த பெயர்கள் தமிழ்ப்பெயர்கள் இல்லையா எனும் கேள்வி எம்மில் பலருக்கு எழும். உங்கள் பெரும்பாலானோர் தமிழ்ப்பெயர் என்று எண்ணிக்கொண்டிருக்கும் உங்கள் பெயரை வட இந்தியக் கலப்பு,சமக்கிருத கலப்பு,ஐரோப்பிய,அரேபியக் கலப்புடனான பெயராக இனங்காணுவீர்கள்.  தமிழில் பெயர் சூட்டுவது இனத்துவேசம் உள்ள செயலா? :P இனத்தைக் கொண்டாடக் கூடிய செயல். மறத்தமிழன் என்று அடைமொழி இட்டுக்கொண்டு உலாவுவதை விட அழகான செயல் என்று எண்ணுகிறேன். இந்த அடையாளம் மிக அழகானது.  அண்மையில் நிறையப் பேர் தமிழில் குழந்தைகளூக்கான நவீனமான பெயர்கள் வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். தமிழில் பெயர்கள் பழமையானவையாக இருப்பது கூட இக்காலத்தோரின் தெரிவுக்குட்படாமைக்கு ஒரு காரணமாகும். பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் சிலவற்றை தொகுத்திருக்கிறேன்.சிலவற்றை கண்டும் பிடித்திருக்கிறேன். ( பிற்காலத்தேவைகளுக்கு ;)  ) வினைச்சொல் பெயர்கள் அஞ்சா ஆராதி ஆனந்தி  சலனி கோளறா இசி இனி தேயா மேதா வேயா வேகா மின்னு மிதவா தெகிழா நெகி