Skip to main content

பௌர்ணமிக் கிறுக்கு -01






இதோ இந்த புத்தன் 
போன மாதம் தான் வைகாசியில் வர்ணம் பூசி
வெளிச்சக் கூடுகள் மின்னி 
ஏந்து கரத்தில் தீபம் ஏந்தி
தாமரைக் கடவுளனுக்கு
நீலோத்பலம் பிடுங்கி,
சம்பங்கியும்,
பவள மல்லிகையும் சூட்டி,
கண்களை மூடி
மோனத்தின் உச்சியிலிருக்கும்
புத்தன்-
அதோ அன்று தான் பிறந்தான்.

ராஜ கம்பீரத்தில் மிடுக்கில் திரிந்து,
காலத்தின் கோலத்தில் காவி சூடிக் கொண்டவன்.
அதோ அன்று தான் பிறந்தான்..!

அவனது ,கேசங்களும்
தந்தங்களும், அகவன்கூடும்
தங்கப் பேழையுள் தாங்கப்படும் என்றறியாமலேயே-
முக்தியாகிப் போனான்.

புத்தா,
சந்திக்குச் சந்தி,
அரசமரத்துக்கு மரம்
கல்லாகி, மரமாகி ,கருஞ்சிலையாகி
பெருத்த வண்டிப் பெருச்சாளிப் பிள்ளையார் போல வீற்றிருப்பது-
கடினமடா பார்க்க எனக்கு-
அவருக்குத் தான்
தூக்க முடியாத தொந்தி 
நடுத்தெருவிலே குந்தி விட்டார்.
நீ கட்டழகனல்லவா ?
கூடாது கடவுளே -
நீ முக்தியடைந்திருக்கக் கூடாது கடவுளே !

காசினியிலோ 
கங்கையிலோ 
குளித்து விட்டு
"கப் " என்று இருந்திருக்கலாம்.

பாவி ...
கடவுளாகிப் போனாயே ..!

ஏசுவுக்குப் பின்னால் 
போனேன்- சிலுவை 
சுமந்து கடவுளானான்.
புத்தா உன் பின்னால் 
வந்தால்-
காருண்யம் பேசி 
கடவுளானாய்.

செய்யாத பாவத்துக்காய் 
நீவிர் எல்லோரும் கடவுளானால்-
செய்த பாவத்துக்கு
நான் நானாகவேயா
கிடப்பது..?

அதோ அன்று தான் பிறந்தான்....,
நல்ல மழை இருட்டு-
ஜன்னல்கள் கூட சட சடவென்று 
அடித்துக் கலகமூட்டுகின்றன.
அன்றைக்கு,
ரொட்டியும் ,சம்பலும் சாப்பாடு-
வெளிச்சக் கூடுகளுக்குளிருந்து -ஒளி 
பிம்பம் விலகி,
சூழ் கொண்டு 
முரண்டு பிடித்து- கூச்சமேயன்றி அழுது..
நீ.....
எனக்குள் பிறந்தாயா?
மகா மாயாவுக்குள் பிறந்தாயா?
எதுவோ ஒன்று!
என்னைச் சுற்றி நீ
பிறந்த நிணம் வீசிக் கொண்டே இருக்கிறது.

அன்று வைகாசிப் பெரு மழை-
மழைக்குள்ளும் வியர்க்கிறது உனக்கு.
நீர் மொண்டு கொண்டு ஜனிக்கிறாய்-
நான் தங்கத் தாம்பாளத்தில் ஏந்தக் காத்திருக்கிறேன்.
தங்கத்தில் ஏந்த, 
நானொன்றும் ராஜ குமாரனல்லன் என்று ,
பிறந்ததுமே சாத்விகம் கதைத்தாய். 

இப்படி,
சாத்விகமும், அத்துவைதமும் கதைத்துக் கதைத்தே -
கொண்டாய் புத்தா என்னை-
நீ பிறந்த நாளில் என்னைப் பெற்றுப் போட்டு -
நீ இறந்த நாளில் என்னை கொள்ளி போட்டு...
கொன்றாய் புத்தா என்னை!

உன்னுடன் நானும்,
எனது எதுவுமொவும்,
அன்று பிறந்தது -
இன்று , நானும் எனது எதுவுமோவும் கூடவே -
மோட்சம் காணுகிறது -

இரண்டாயிரம் வருஷம்
நீ கடவுளாய் கிடந்தது 
போதும்.
பூலோகத்தில் நிறையக் கிடக்கு
பார்ப்பதற்கு-
நீ பிறந்த லும்பினித்
தோட்டத்தைக் கூட சரிவரப் 
பார்த்திருக்க மாட்டாய் -
அப்போது உனக்கு 
ராஜ மிடுக்கு.
இப்போது பரம் பொருள் மிடுக்கு..!

மிடுக்கிலேயே வாழ்ந்து-
மிடுக்கிலேயே கெட்டோம்,
நீயும் நானுமாய்!

கடவுளாய் இருப்பதும்-
கடவுள் கலைக்கும்
சாத்தானாய் இருப்பதும் 
எவ்வளவு கடினம்..?
ஹ்ம்ம்... 

நீ வெறுமனே 
செத்துப் போன நாளிது.
கேவலம் நீ செத்துப் போனாய் என்று தெரியாமலேயே
பரி நிர்வாணமடைந்தாயாம்...!
பிதற்றும் உலகம்.
ஹ்ம்ம்...
என்னைப் போலத் தான் என் உலகமும்.

நீ கடவுளடா சுவாமி ..!
என்னையும் - கதி மோட்சம் 
காண வைத்த,
கடவுளடா சுவாமி - நீ !




நிலா-
2010

Comments

Popular posts from this blog

சாமகானமும் காம்போதியும்

முருகையன் ஒரு மொழிபெயர்ப்புச் செய்தார். மொழிபெயர்ப்பு எண்டும் சொல்ல முடியாது,சாதுவா மொழிபெயர்ப்பும்,திறமையான கற்பனையும் போட்டு செய்யுள் வடிவத்தில, இளநலம்! என்ன இளநலமா?ஹையா கிளுகிளுப்பான கதை வரப்போகுது. குமாரசம்பவம் (ஸாரி வேற கண்டென்ட் எண்டு நினைக்கப்படாது, ஐ ஆம் வெரி டீசன்ட்) காளிதாசன் குமாரசம்பவத்தில எழுதின அதே கதையை தமிழில தந்தவர். அதில தான் இந்தக் கதை வருகுது.  சாமகானம் சாமகானம் எண்டு ஒண்டு சொல்லக் கேட்டிருப்பம். “சாமகானம் பாடினான்” எண்டு நாலாம் வகுப்புச் சமய பாட புத்தகத்தில ஒரு பாடம் இருக்கு. பத்துத் தலையும், கையில ஒரு தலையுமாக் கணக்குப் பிழையா மொறாயஸ் கீறின இராவணனிண்ட மீசை வெச்ச படம் இருக்கும், இப்ப ஞாபகம் வந்துட்டுதா? அந்தக் காலத்திலேயே தலைகளிண்ட கணக்கை எண்ணிப் பாத்தனாங்கள் ஆக்கும். (தலைக்கணக்கு முக்கியம் அமைச்சரே) இப்ப சாமகானத்தைப்பற்றிப் பாப்பம். காளிதாசன் குமாரசம்பவம் எழுதேக்க, சும்மா கற்பனைகுதிரையை காட்டாற்று வெள்ளம் போல பறக்க விடுறேர்.  மிஸ்டர் சிவனும் மிசஸ் உமாவும் கலியாணமான புதிசில, (ஏன் கல்யாணமான பழசில யாரும் வெளிய போறதில்ல எண்டு நெடுங்காலமா டவுட்) சும்மா வெளிய வெளிக்

இராவணேசன் ; Maunaguru's 'Ravanesan'

நெறியாள்கை - பேராசிரியர் மௌனகுரு. இடம் -கொழும்பு கலை இலக்கியப் பேரவை. காலம்- சனி(13.02.2010)  மாலை 6.30மணி. சனி மாலை(13.02.2010) பேராசிரியர் மௌனகுரு அவர்களின் 'இராவணேசன்' நாடகம் நடைபெறவிருக்கிறதென்று நண்பரொருவர் தகவல் சொன்னார். இருந்த எல்லா வேலைகளையும் புறந்தள்ளி விட்டேன். நாடகங்கள் என்றவுடன்  வரும் இந்த தொலைகாட்சி சீரியல்களையே கண் ஞாபகத்தில் கொண்டுவந்து முகத்தை அஷ்ட கோணலாக்குகிறது. மேடையமைப்பும், அரங்கமும்,அரிதாரம் பூசிக்கொண்ட பாத்திரங்களும், நேரடியான காட்சிகளூட்டும் கிளர்வும், எங்களுக்கு முன்னாள் ஒரு தலைமுறை இதனூடே வாழ்ந்து காட்டியிருக்கிற விடயமும் தெரிவதில்லை. மாற்றங்கள் மட்டுமே மாறிக் கொண்டிருந்தாலும்,எங்களின் முன்னோடிகள் வழி வந்த கலைப் பாதையை எடுத்தியம்புதலுக்கும்,அதற்கான வரவேற்புக்கும் இங்கு இடமில்லை எனும் போது அவற்றையெல்லாம் தாண்டி மனதில் எங்கேயோ வலிக்கிறது. எங்களுடைய காலத்தில், முழுமையான கூத்துக்கலையோ, அரங்காடல்ககளையோ  காண்பதற்கு காலமோ மாற்றமோ ஏதோவொன்று இடந்தரவில்லை .இருப்பினும் யாராவது எங்கள்  நலிந்து போன கலைகளை மறுபடியும் இளஞ்சமுதாயத்திட்கு க

குழந்தைகளுக்கான நவீன தமிழ்ப் பெயர்கள்

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தல் எனும்போது, இவ்வளவு காலமும் வைத்த பெயர்கள் தமிழ்ப்பெயர்கள் இல்லையா எனும் கேள்வி எம்மில் பலருக்கு எழும். உங்கள் பெரும்பாலானோர் தமிழ்ப்பெயர் என்று எண்ணிக்கொண்டிருக்கும் உங்கள் பெயரை வட இந்தியக் கலப்பு,சமக்கிருத கலப்பு,ஐரோப்பிய,அரேபியக் கலப்புடனான பெயராக இனங்காணுவீர்கள்.  தமிழில் பெயர் சூட்டுவது இனத்துவேசம் உள்ள செயலா? :P இனத்தைக் கொண்டாடக் கூடிய செயல். மறத்தமிழன் என்று அடைமொழி இட்டுக்கொண்டு உலாவுவதை விட அழகான செயல் என்று எண்ணுகிறேன். இந்த அடையாளம் மிக அழகானது.  அண்மையில் நிறையப் பேர் தமிழில் குழந்தைகளூக்கான நவீனமான பெயர்கள் வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். தமிழில் பெயர்கள் பழமையானவையாக இருப்பது கூட இக்காலத்தோரின் தெரிவுக்குட்படாமைக்கு ஒரு காரணமாகும். பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் சிலவற்றை தொகுத்திருக்கிறேன்.சிலவற்றை கண்டும் பிடித்திருக்கிறேன். ( பிற்காலத்தேவைகளுக்கு ;)  ) வினைச்சொல் பெயர்கள் அஞ்சா ஆராதி ஆனந்தி  சலனி கோளறா இசி இனி தேயா மேதா வேயா வேகா மின்னு மிதவா தெகிழா நெகி