Skip to main content

நன்நிலை வாதம்.



மறை பொருள்.

சம்பவங்களைப் படிவகுக்கை செய்வது தொடர்பான ஆய்வு. தரவுகளை உதிரி உதிரியாகப் பிரித்துப் போட்டு ஒரு இலட்சிய வீழ்ச்சியை எதிர் நோக்கச் செய்வது நிகழ்வுகள், என்பவை எதற்கும் பிடிப்புக்கலல்லாத சிருட்டி பேதங்கள். இவை நேரத்தில் தங்கியிருக்கின்றன. ஆனால், சம்பவங்கள், நிகழ்வுகள் இரண்டுமே காலத்தில் தங்கியிருக்கின்றன.


பரிணாமக் குன்ரலை ஒரு வகை யதார்த்தப் பின்னிணைப்பான ஒரோழுங்கில் படியச் செய்து, தடயங்கலாக்கலாம். இவை சம்பவங்களாகா; நிகழ்வுகளாகா சற்றே வேறு பட்டவை, வரலாற்றின் பாகங்கள். சம்பவங்களாயும் நிகழ்வுகளாயும் உரு வார்ப்புப் பெற்றவை செயற்கையான நேர்கோட்டுத் தளத்தில் இயங்குகின்றன. வார்த்தைகளைக் குழப்பிப் போடுவது போல, இது, ஒன்றுக்கொன்று முரண் தத்துவத்தை தருகின்றது .

இனி,


குலசாமி சொன்ன காதை.


வீடு திரும்ப எத்தனிக்கின்ற
எனக்கு
காயங்களை மாற்றிவிடத் தோணுகிறது
முதலில் சரிவர.
பெருமிதமாக இருக்கின்றது,
எனக்கான கேள்வியில் நாளிதழ்கள்
விற்பனையாகுவது குறித்து - ஆயினும்
சொற்ப
உயிருடன் தனும்
வீடு நல்கும் எனக்கு,
குழந்தையின் கேள்விக்கு
பதில் தெரியவில்லை.

......அப்பா செத்துப் போயிருந்தா,
என்னம்மா செய்வின?
................................
சுடுகாட்டில கொண்டுபோய்க்
கொளுத்தியிருப்பின ராசாத்தி!!!


தற்சமம்.

அறுவடை செய்யாத
வார்த்தையுடனும்,
புதினம் பார்ப்பது போன்ற
கோணல் வாயுடனும்,
செத்துப் போன கடவுள்களை
அழைத்துக் கொண்டு வந்து
கதவு தட்டுகிறாள்
குழந்தை -

பரிசீலிக்கப் படாத அதன்
முதன் வார்த்தைகள் ,
பெரியதொரு வன்முறையை
எதிர்கொள்கிறது.

விம்மியழவுந்தெரியாத
பஞ்சுக் குழந்தை!

வெறும் பூனையைப் போல,
பொட்டலங்கட்டி,
சுருட்டி வீசப்பட்டு........


இன்னொரு கவிதை...

என்னைக் கொன்று எரித்த
சாம்பலில் பூத்து நிற்கிறேன்- சடையான
விழுதுகள் ஊன்றியபடி,
கிளைகள் விட்டுக் கொண்டு
கிளர்ச்சியாகவும் இருக்கின்றேன் .

பெருவழிச் சாலைகளில்
நகரின் ஒதுக்குப்புற மையத்தில்
நாய்கள் குரைக்கும் ஓசையில்
பறந்து போகிறது- எனையொத்த காக்கை.

அதற்கு முன்னம் அங்கே -
இருந்திருக்கலாம்,
வானத்தின் விளிம்பிலிருந்து-விழுந்த
நட்சத்திரப் பறவையொன்று .
மினுக்கும் வசீகரத்துடன் .

உலர்ந்து போன
சிசுக் சருமத்தைஒத்த
இன்னுமொரு
அண்டப் பறவையும்.....

படுக்கை மீது கழிக்க வைக்கும்
மழையின் வன்முறை தாங்கிய
சக்கரவாகமும்-
அதன் ஈரமும் கூட ,
இருந்திருக்கலாம்
அந்த கருத்தரித்த மரக் கூட்டத்தில்.

உனதுமெனதுமான
குவியப் புள்ளியில் எதுவோ வெடிக்கப் போய்,
வாழ்வுக்கான அழைப்பு வர முன்னமே பூக்களின்
அகாலம் நிர்ணயிக்கப்பட்டு விட்டது .

தேவதேவியின் சன்னதக் குறிப்புகளால் ,
ஓடு உடைத்த சேவட் குஞ்சுகளையும் கூட
பார்க்க முடியவில்லை .
இன் நாளில் ...

எரி  நட்சத்திரங்களின்,
மந்தமான ஜொலிப்பில்
அழிந்தே போயிருக்கும்
பசுவாதப் பட்சிகள் .

நெரிசலான
நெடுஞ்சாலையைக் கடக்கையில் ஊர்வனவொன்று-
கசிந்து போயிருக்கலாம்.

ஆறுகள்,
கடல் வெளிகள்
கூடல்களிலிருந்து
பழுத்த இலையொன்று வசந்தத்தின் பிடியிலிருந்து
விடுவிக்க எடுக்கும் சுற்றல்க் காலம்,
காற்றின் இருப்பை உணர்த்துகின்றது.

அலைகள் முரண்படும் தருணமொன்றில்
எனக்காக பூத்த பூவும்
விசும்பிலிருந்து
நெடு தூரம் செல்கிறது .

சர்வகாலமும் ,
இயற்கை பற்றியே
கனவு வருகின்றது.
தொன்மத்தின் முடிச்சுக்களை கான முடியவில்லை.-
வேர்களின் அந்தங்களிலும்,
இலைச்சுவரிலும்.

நரிகளும், நாய்களும்,
கரடிகளும், கழுகுகளும்,
சகுணப் பூனைகளும்,
பாம்புகளும், நத்தைகளும்
நாகணவாய்களும் -
இனி-வருவதில்லையென்ற முடிவிலிருக்கின்றன,
நாடு பற்றிய கதைகளில்.

எல்லைகளின் கடைசி மீறலாய்
நொடிந்து போனது
பச்சை....
எதறகுள்ளும் இருப்பதில்லை
ஒயிலான காற்றின் நெடி !

பசுக் கூட்டங்களைக் களவாடுகின்ற பண்பு இல்லை.
இலக்கொன்ருமில்லாப் பேடுகளையும
களவாட யாரும் எத்தனிப்பதில்லை.

ஆகாயத்தில் எந்திரம் தவிர பறப்பது ஏதுமில்லை.
நிருவானமான குட்டைகள் .- வெகு தூரத்தில்
அதைத் தொடர்ந்து பேய் வசிக்கும்
தனி மரந்தனுமில்லை.

வெகு தூரம்
ஆண்டுகள் கடந்து வந்ததன்புறம் -
தாயின் இடுப்பிலிருந்து கொண்டே
'நைக்காட்டும்' குழந்தைகளும் இனியில்லை.

சுகப்படாத
பயணத்தின் தொலைவில்
எனக்கான ஒரு செவ்வரளி தானும் இல்லை.

எழிலான நித்திரை வந்து.
நாளாகிறது-
கட்டிலில் போய் படுத்துக் கொள்ள
கடைசி மூச்சை உணரமுடிகிறது
கட்டில் மரத்தினது.

விவாதமொன்றில்
தோல்வியுற்றவன் போலே
தனித்து
நடந்து வருகிறேன்.
என்னால் இனியும்
சுவாசிக்க முடிந்தது -
துரு நாற்றத்திட்குச் சொந்தமான
இயற்கையை-
சாகுபடி எதுமிலாமலுக்கு.


School Annual Science day  -2007

-நிலா

Comments

  1. ஏன் பிள்ளை இந்த வேலை அதுவும் பிறந்த நாளும் அதுவுமா? பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. உங்களை இங்கே அழைக்கின்றேன் http://shanthru.blogspot.com/2009/11/keelvikkenna-pathil.html தொடர் பதிவுக்காக

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சாமகானமும் காம்போதியும்

முருகையன் ஒரு மொழிபெயர்ப்புச் செய்தார். மொழிபெயர்ப்பு எண்டும் சொல்ல முடியாது,சாதுவா மொழிபெயர்ப்பும்,திறமையான கற்பனையும் போட்டு செய்யுள் வடிவத்தில, இளநலம்! என்ன இளநலமா?ஹையா கிளுகிளுப்பான கதை வரப்போகுது. குமாரசம்பவம் (ஸாரி வேற கண்டென்ட் எண்டு நினைக்கப்படாது, ஐ ஆம் வெரி டீசன்ட்) காளிதாசன் குமாரசம்பவத்தில எழுதின அதே கதையை தமிழில தந்தவர். அதில தான் இந்தக் கதை வருகுது.  சாமகானம் சாமகானம் எண்டு ஒண்டு சொல்லக் கேட்டிருப்பம். “சாமகானம் பாடினான்” எண்டு நாலாம் வகுப்புச் சமய பாட புத்தகத்தில ஒரு பாடம் இருக்கு. பத்துத் தலையும், கையில ஒரு தலையுமாக் கணக்குப் பிழையா மொறாயஸ் கீறின இராவணனிண்ட மீசை வெச்ச படம் இருக்கும், இப்ப ஞாபகம் வந்துட்டுதா? அந்தக் காலத்திலேயே தலைகளிண்ட கணக்கை எண்ணிப் பாத்தனாங்கள் ஆக்கும். (தலைக்கணக்கு முக்கியம் அமைச்சரே) இப்ப சாமகானத்தைப்பற்றிப் பாப்பம். காளிதாசன் குமாரசம்பவம் எழுதேக்க, சும்மா கற்பனைகுதிரையை காட்டாற்று வெள்ளம் போல பறக்க விடுறேர்.  மிஸ்டர் சிவனும் மிசஸ் உமாவும் கலியாணமான புதிசில, (ஏன் கல்யாணமான பழசில யாரும் வெளிய போறதில்ல எண்டு நெடுங்காலமா டவுட்) சும்மா வெளிய வெளிக்

இராவணேசன் ; Maunaguru's 'Ravanesan'

நெறியாள்கை - பேராசிரியர் மௌனகுரு. இடம் -கொழும்பு கலை இலக்கியப் பேரவை. காலம்- சனி(13.02.2010)  மாலை 6.30மணி. சனி மாலை(13.02.2010) பேராசிரியர் மௌனகுரு அவர்களின் 'இராவணேசன்' நாடகம் நடைபெறவிருக்கிறதென்று நண்பரொருவர் தகவல் சொன்னார். இருந்த எல்லா வேலைகளையும் புறந்தள்ளி விட்டேன். நாடகங்கள் என்றவுடன்  வரும் இந்த தொலைகாட்சி சீரியல்களையே கண் ஞாபகத்தில் கொண்டுவந்து முகத்தை அஷ்ட கோணலாக்குகிறது. மேடையமைப்பும், அரங்கமும்,அரிதாரம் பூசிக்கொண்ட பாத்திரங்களும், நேரடியான காட்சிகளூட்டும் கிளர்வும், எங்களுக்கு முன்னாள் ஒரு தலைமுறை இதனூடே வாழ்ந்து காட்டியிருக்கிற விடயமும் தெரிவதில்லை. மாற்றங்கள் மட்டுமே மாறிக் கொண்டிருந்தாலும்,எங்களின் முன்னோடிகள் வழி வந்த கலைப் பாதையை எடுத்தியம்புதலுக்கும்,அதற்கான வரவேற்புக்கும் இங்கு இடமில்லை எனும் போது அவற்றையெல்லாம் தாண்டி மனதில் எங்கேயோ வலிக்கிறது. எங்களுடைய காலத்தில், முழுமையான கூத்துக்கலையோ, அரங்காடல்ககளையோ  காண்பதற்கு காலமோ மாற்றமோ ஏதோவொன்று இடந்தரவில்லை .இருப்பினும் யாராவது எங்கள்  நலிந்து போன கலைகளை மறுபடியும் இளஞ்சமுதாயத்திட்கு க

குழந்தைகளுக்கான நவீன தமிழ்ப் பெயர்கள்

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தல் எனும்போது, இவ்வளவு காலமும் வைத்த பெயர்கள் தமிழ்ப்பெயர்கள் இல்லையா எனும் கேள்வி எம்மில் பலருக்கு எழும். உங்கள் பெரும்பாலானோர் தமிழ்ப்பெயர் என்று எண்ணிக்கொண்டிருக்கும் உங்கள் பெயரை வட இந்தியக் கலப்பு,சமக்கிருத கலப்பு,ஐரோப்பிய,அரேபியக் கலப்புடனான பெயராக இனங்காணுவீர்கள்.  தமிழில் பெயர் சூட்டுவது இனத்துவேசம் உள்ள செயலா? :P இனத்தைக் கொண்டாடக் கூடிய செயல். மறத்தமிழன் என்று அடைமொழி இட்டுக்கொண்டு உலாவுவதை விட அழகான செயல் என்று எண்ணுகிறேன். இந்த அடையாளம் மிக அழகானது.  அண்மையில் நிறையப் பேர் தமிழில் குழந்தைகளூக்கான நவீனமான பெயர்கள் வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். தமிழில் பெயர்கள் பழமையானவையாக இருப்பது கூட இக்காலத்தோரின் தெரிவுக்குட்படாமைக்கு ஒரு காரணமாகும். பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் சிலவற்றை தொகுத்திருக்கிறேன்.சிலவற்றை கண்டும் பிடித்திருக்கிறேன். ( பிற்காலத்தேவைகளுக்கு ;)  ) வினைச்சொல் பெயர்கள் அஞ்சா ஆராதி ஆனந்தி  சலனி கோளறா இசி இனி தேயா மேதா வேயா வேகா மின்னு மிதவா தெகிழா நெகி