உணர்வுகளைத் திசை திருப்பி
அங்குமிங்குமாக அழைக்கழிக்கின்றது
சுவாலையின் சுடர் நாக்குகள்.-
இரவினது மிக மிருதுத்தன்மை-
நித்திரையின் நிலைப்படிகளின் இருபுறமும்
மெழுகுவர்த்திகளை அந்தம் பிடிக்கின்றது.
காதல் போன்ற கனமற்ற ஒரு வார்த்தை
நம் இருவரின் காதுகளிலும் குளிர்க்
காற்றுடன் மோதுகிறது .
தந்தத்தில் செய்யப்பட்ட புத்தனின்
மோன நிலை வறட்சியான மேகத்திலிருந்து
அடர் மழை பெய்கிறதைப் போல கனத்தது .
மொழிகளைப் பரிமாறாத
சிலைகளிலிருந்து நமக்கான
கேள்விகளையும் ,பதில்களையும்
பெற்றுக்கொண்டோம்.
வெற்றுககாகிதத்திட்கும்-பாலியக் குழந்தைக்கும், வர்ணங்களுக்கும்-
உள்ள பிரேமையைப் போல
மொழிகளுக்கப்பாடப்பட்ட - பழஞ்சோற்று
வார்த்ததயாடினோம்.
கடுங்குளிரால் போர்வைகளில் ஒளிந்திருந்த
சன்னஙகள் கண்மூடிக் கொண்டன.
வெளியே நல்லமழைக் காத்து.
கூதிர்கால பின் இரவின் முனங்கத் சத்தம்.
தவளைகளின் ஒசைக்குறிப்புகள்.....
தகரத்தின் பொத்தலுக்குள் மழை நுழைந்த ஜாலச் சந்தம்.........
நிலவிருட்டின் அதி உன்னதம்...
எல்லாவற்றுக்குள்ளும்,
அறைக்குள் அல்லோல கல்லோலம்.............
குத்திக் குளிர்கின்ற
உரிமைக் குளிருககு ,
புதையல்களை மறைக்கின்ற லாவகம்
தெரியவில்லை....!
விஸ்தீரனமில்லாத இரவுப் படுக்கை-
இயன்ற வரைக்கும் கூச்சங்கொள்ளச் செய்கிறது.
கை தவறி கிணற்றில் விழும்
வாளியைப் போல-
ஒவ்வொரு ரோஷ நரம்புகளும் அவிழ்த்துக்
கொண்டோடி ஒழிகின்றது -
பூக்களின் நந்தவனங்களை
இளமாறன் பரிசளிக்கின்றானl .
சன்னலினூடு பார்க்கையில்,
ராத்திரையை விலக்கிக் கொண்டு
செவ்வாய்க் கொக்குகள் பறக்கின்றன.
இயல்பு நிலையிலிருந்து விலகிவிடுகின்ற
உயிர்த் தருனமொன்ரின் உச்ச நிலையில் -
தொலைவிலிருந்து
செய்தி வந்தது,
மவுனங்களையும் தங்கமாட்டாத
விரகம் -
திமிறி நிற்கின்ற உயிர் விளிம்பை
சாப்பிட்டு விழுங்கிக் கொண்டு
ஏப்பம் விடுகிற தருவாயில்,
அந்த இனிய மழையினது தூறல்
நின்று போனதாய்.....
குளிரினது இதமும்,
கதகதப்பும் குறைந்து போனது.
வெளியே இயற்கையின் சன்னதம் தீர்ந்து போனது.
தீவிரம் தளர்ந்து போனது !
ஏகாதிபத்திய மழைக்கும்,
கனமற்ற "பூக்"காதலுக்கும் -
என்னதிது புதுச் சம்பந்தம்....?
2009
நன்றாக இருக்கிறது...
ReplyDeleteவாவ் சூப்பர். இன்றுதான் முதல் முதலாக உங்களுடைய பதிவுப்பக்கம் வருகிறேன். நன்றாக இருக்கிறது. சரி இந்த கவிதையை எழுதியது நீங்களா? 19 வயது பெண்ணா? நம்ப முடியவில்லை. :-)) வார்த்தைகளும் வர்ணனைகளும் நன்றாக இருக்கின்றது. குறிப்பாக:
ReplyDelete"காதல் போன்ற கனமற்ற ஒரு வார்த்தை
நம் இருவரின் காதுகளிலும் குளிர்க்
காற்றுடன் மோதுகிறது."
"வெளியே நல்ல
மழைக் காத்து.
கூதிர்கால பின் இரவின் முனங்கத் சத்தம்.
தவளைகளின் ஒசைக்குறிப்புகள்.....
தகரத்தின் பொத்தலுக்குள் மழை நுழைந்த ஜாலச் சந்தம்.........
நிலவிருட்டின் அதி உன்னதம்...
"
Wow Supper
தொடர்ந்து எழுதுங்கள்.