Skip to main content

பெய்கின்ற மழைக்கு,



உணர்வுகளைத் திசை திருப்பி
அங்குமிங்குமாக அழைக்கழிக்கின்றது
சுவாலையின் சுடர் நாக்குகள்.-

இரவினது மிக மிருதுத்தன்மை-
நித்திரையின் நிலைப்படிகளின் இருபுறமும்
மெழுகுவர்த்திகளை அந்தம் பிடிக்கின்றது.

காதல் போன்ற கனமற்ற ஒரு வார்த்தை
நம் இருவரின் காதுகளிலும் குளிர்க்
காற்றுடன் மோதுகிறது .

தந்தத்தில் செய்யப்பட்ட புத்தனின்
மோன நிலை வறட்சியான மேகத்திலிருந்து
அடர் மழை பெய்கிறதைப் போல கனத்தது .

மொழிகளைப் பரிமாறாத
சிலைகளிலிருந்து நமக்கான
கேள்விகளையும் ,பதில்களையும்
பெற்றுக்கொண்டோம்.

வெற்றுககாகிதத்திட்கும்-பாலியக் குழந்தைக்கும், வர்ணங்களுக்கும்-
உள்ள பிரேமையைப் போல
மொழிகளுக்கப்பாடப்பட்ட - பழஞ்சோற்று
வார்த்ததயாடினோம்.

கடுங்குளிரால் போர்வைகளில் ஒளிந்திருந்த
சன்னஙகள் கண்மூடிக் கொண்டன.

வெளியே நல்லமழைக் காத்து.
கூதிர்கால பின் இரவின் முனங்கத் சத்தம்.
தவளைகளின் ஒசைக்குறிப்புகள்.....
தகரத்தின் பொத்தலுக்குள் மழை நுழைந்த ஜாலச் சந்தம்.........
நிலவிருட்டின் அதி உன்னதம்...

எல்லாவற்றுக்குள்ளும்,
அறைக்குள் அல்லோல கல்லோலம்.............

குத்திக் குளிர்கின்ற
உரிமைக் குளிருககு ,
புதையல்களை மறைக்கின்ற லாவகம்
தெரியவில்லை....!

விஸ்தீரனமில்லாத இரவுப் படுக்கை-
இயன்ற வரைக்கும் கூச்சங்கொள்ளச் செய்கிறது.

கை தவறி கிணற்றில் விழும்
வாளியைப் போல-
ஒவ்வொரு ரோஷ நரம்புகளும் அவிழ்த்துக்
கொண்டோடி ஒழிகின்றது -

பூக்களின் நந்தவனங்களை
இளமாறன் பரிசளிக்கின்றானl .

சன்னலினூடு பார்க்கையில்,
ராத்திரையை விலக்கிக் கொண்டு
செவ்வாய்க் கொக்குகள் பறக்கின்றன.

இயல்பு நிலையிலிருந்து விலகிவிடுகின்ற
உயிர்த் தருனமொன்ரின் உச்ச நிலையில் -
தொலைவிலிருந்து
செய்தி வந்தது,

மவுனங்களையும் தங்கமாட்டாத
விரகம் -
திமிறி நிற்கின்ற உயிர் விளிம்பை
சாப்பிட்டு விழுங்கிக் கொண்டு
ஏப்பம் விடுகிற தருவாயில்,

அந்த இனிய  மழையினது தூறல்
நின்று போனதாய்.....

குளிரினது இதமும்,
கதகதப்பும் குறைந்து போனது.

வெளியே இயற்கையின் சன்னதம் தீர்ந்து போனது.
தீவிரம் தளர்ந்து போனது  !

ஏகாதிபத்திய மழைக்கும்,
கனமற்ற "பூக்"காதலுக்கும் -
என்னதிது புதுச் சம்பந்தம்....?


-நிலா
2009

Comments

  1. நன்றாக இருக்கிறது...

    ReplyDelete
  2. வாவ் சூப்பர். இன்றுதான் முதல் முதலாக உங்களுடைய பதிவுப்பக்கம் வருகிறேன். நன்றாக இருக்கிறது. சரி இந்த கவிதையை எழுதியது நீங்களா? 19 வயது பெண்ணா? நம்ப முடியவில்லை. :-)) வார்த்தைகளும் வர்ணனைகளும் நன்றாக இருக்கின்றது. குறிப்பாக:

    "காதல் போன்ற கனமற்ற ஒரு வார்த்தை
    நம் இருவரின் காதுகளிலும் குளிர்க்
    காற்றுடன் மோதுகிறது."
    "வெளியே நல்ல
    மழைக் காத்து.
    கூதிர்கால பின் இரவின் முனங்கத் சத்தம்.
    தவளைகளின் ஒசைக்குறிப்புகள்.....
    தகரத்தின் பொத்தலுக்குள் மழை நுழைந்த ஜாலச் சந்தம்.........
    நிலவிருட்டின் அதி உன்னதம்...
    "
    Wow Supper

    தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சாமகானமும் காம்போதியும்

முருகையன் ஒரு மொழிபெயர்ப்புச் செய்தார். மொழிபெயர்ப்பு எண்டும் சொல்ல முடியாது,சாதுவா மொழிபெயர்ப்பும்,திறமையான கற்பனையும் போட்டு செய்யுள் வடிவத்தில, இளநலம்! என்ன இளநலமா?ஹையா கிளுகிளுப்பான கதை வரப்போகுது. குமாரசம்பவம் (ஸாரி வேற கண்டென்ட் எண்டு நினைக்கப்படாது, ஐ ஆம் வெரி டீசன்ட்) காளிதாசன் குமாரசம்பவத்தில எழுதின அதே கதையை தமிழில தந்தவர். அதில தான் இந்தக் கதை வருகுது.  சாமகானம் சாமகானம் எண்டு ஒண்டு சொல்லக் கேட்டிருப்பம். “சாமகானம் பாடினான்” எண்டு நாலாம் வகுப்புச் சமய பாட புத்தகத்தில ஒரு பாடம் இருக்கு. பத்துத் தலையும், கையில ஒரு தலையுமாக் கணக்குப் பிழையா மொறாயஸ் கீறின இராவணனிண்ட மீசை வெச்ச படம் இருக்கும், இப்ப ஞாபகம் வந்துட்டுதா? அந்தக் காலத்திலேயே தலைகளிண்ட கணக்கை எண்ணிப் பாத்தனாங்கள் ஆக்கும். (தலைக்கணக்கு முக்கியம் அமைச்சரே) இப்ப சாமகானத்தைப்பற்றிப் பாப்பம். காளிதாசன் குமாரசம்பவம் எழுதேக்க, சும்மா கற்பனைகுதிரையை காட்டாற்று வெள்ளம் போல பறக்க விடுறேர்.  மிஸ்டர் சிவனும் மிசஸ் உமாவும் கலியாணமான புதிசில, (ஏன் கல்யாணமான பழசில யாரும் வெளிய போறதில்ல எண்டு நெடுங்காலமா டவுட்) சும்மா வெளிய வெளிக்

இராவணேசன் ; Maunaguru's 'Ravanesan'

நெறியாள்கை - பேராசிரியர் மௌனகுரு. இடம் -கொழும்பு கலை இலக்கியப் பேரவை. காலம்- சனி(13.02.2010)  மாலை 6.30மணி. சனி மாலை(13.02.2010) பேராசிரியர் மௌனகுரு அவர்களின் 'இராவணேசன்' நாடகம் நடைபெறவிருக்கிறதென்று நண்பரொருவர் தகவல் சொன்னார். இருந்த எல்லா வேலைகளையும் புறந்தள்ளி விட்டேன். நாடகங்கள் என்றவுடன்  வரும் இந்த தொலைகாட்சி சீரியல்களையே கண் ஞாபகத்தில் கொண்டுவந்து முகத்தை அஷ்ட கோணலாக்குகிறது. மேடையமைப்பும், அரங்கமும்,அரிதாரம் பூசிக்கொண்ட பாத்திரங்களும், நேரடியான காட்சிகளூட்டும் கிளர்வும், எங்களுக்கு முன்னாள் ஒரு தலைமுறை இதனூடே வாழ்ந்து காட்டியிருக்கிற விடயமும் தெரிவதில்லை. மாற்றங்கள் மட்டுமே மாறிக் கொண்டிருந்தாலும்,எங்களின் முன்னோடிகள் வழி வந்த கலைப் பாதையை எடுத்தியம்புதலுக்கும்,அதற்கான வரவேற்புக்கும் இங்கு இடமில்லை எனும் போது அவற்றையெல்லாம் தாண்டி மனதில் எங்கேயோ வலிக்கிறது. எங்களுடைய காலத்தில், முழுமையான கூத்துக்கலையோ, அரங்காடல்ககளையோ  காண்பதற்கு காலமோ மாற்றமோ ஏதோவொன்று இடந்தரவில்லை .இருப்பினும் யாராவது எங்கள்  நலிந்து போன கலைகளை மறுபடியும் இளஞ்சமுதாயத்திட்கு க

குழந்தைகளுக்கான நவீன தமிழ்ப் பெயர்கள்

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தல் எனும்போது, இவ்வளவு காலமும் வைத்த பெயர்கள் தமிழ்ப்பெயர்கள் இல்லையா எனும் கேள்வி எம்மில் பலருக்கு எழும். உங்கள் பெரும்பாலானோர் தமிழ்ப்பெயர் என்று எண்ணிக்கொண்டிருக்கும் உங்கள் பெயரை வட இந்தியக் கலப்பு,சமக்கிருத கலப்பு,ஐரோப்பிய,அரேபியக் கலப்புடனான பெயராக இனங்காணுவீர்கள்.  தமிழில் பெயர் சூட்டுவது இனத்துவேசம் உள்ள செயலா? :P இனத்தைக் கொண்டாடக் கூடிய செயல். மறத்தமிழன் என்று அடைமொழி இட்டுக்கொண்டு உலாவுவதை விட அழகான செயல் என்று எண்ணுகிறேன். இந்த அடையாளம் மிக அழகானது.  அண்மையில் நிறையப் பேர் தமிழில் குழந்தைகளூக்கான நவீனமான பெயர்கள் வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். தமிழில் பெயர்கள் பழமையானவையாக இருப்பது கூட இக்காலத்தோரின் தெரிவுக்குட்படாமைக்கு ஒரு காரணமாகும். பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் சிலவற்றை தொகுத்திருக்கிறேன்.சிலவற்றை கண்டும் பிடித்திருக்கிறேன். ( பிற்காலத்தேவைகளுக்கு ;)  ) வினைச்சொல் பெயர்கள் அஞ்சா ஆராதி ஆனந்தி  சலனி கோளறா இசி இனி தேயா மேதா வேயா வேகா மின்னு மிதவா தெகிழா நெகி