1981இல் வெள்ளவத்தை என்று நிறைய நண்பர்கள் பழைய புகைப்படங்கள் சிலவற்றைப் பகிர்ந்திருந்தார்கள். கூர்ந்து பார்க்கும் போது அப்பத்தைய பெண்கள் எல்லாரும் நல்ல வடிவான உடுப்புப் போட்டு, நல்ல ட்றேசிங் சென்ஸ்சோட இருந்திருக்கிறதா தெரியுது. அத நினைச்சாத்தான் கவலையா இருக்கு. வெள்ளவத்தை, அப்போதும் இப்போதும் தமிழர் நகரம் தான். இலங்கையின் அறுபதாமாண்டு காலப் படமொன்றை முன்னர் ஒரு தடவை பார்த்து வியந்தேன். சாதாரணமாக சந்தையில் பண்டம் வாங்கும் பெண்களின் படங்கள் அவை. படங்களில் பாடல்க்காட்சியின் பின்னணியில் வரும் 'ரிச் கேர்ள்ஸ்' மாதிரி இருந்தார்கள். எனது அம்மா பழையவர். அறுபத்தைந்து பிராயம். சிறிய சட்டைகளையும், காற்சராய்களையும் மட்டுமே இளம்பருவத்தில் யாழ்ப்பாணத்தில் அணிந்ததாகச் சொன்னார். கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரயில் முழங்காலுக்கு கீழே சட்டை போட்டால் தண்டனை என்றும் சொன்னார். கணருபனின் அம்மா அதே காலத்தவர். அறுபது பிராயம். தான் என்னென்ன வகையான கால்ச்சப்பாத்துக்களை அணிந்ததாகவும் இப்போது அப்படி ஒன்றுமேயில்லை என்று கேலியாக, "நான் ஸ்டைல் என்று சொல்லி அணிந்திருந்த" எனது செருப்புக்களை பார்த்துவிட்டுச