காதலைப்பற்றி கட்டாயம் இண்டைக்கு எழுதிப் போடனுமாம்ல. அதுவும் நிறையப் பேர் மெசேஜ் அனுப்பி வேற கேட்டிருக்கிதுகள். grrr அவன் மேட்ச் பாத்துக்கொண்டிருக்கிறான். நானும் அவனோட மேட்ச் பாத்துக்கொண்டிருக்கிறன். நான் மேட்ச் பாக்கிறத விட்டு கிட்டத்தட்ட பத்து வருஷங்களாச்சி. ஓ.எல் சோதினை மூட்டம் பள்ளிக்கூடம் மாறினது, கிரிக்கெட் நாட்டம் குறையக் காரணம். அப்பிடியே படிக்கிறதுக்காக விளையாட்டு மேட்ச் எல்லாத்தையும் நிப்பாட்டியாச்சு. ஆனா ரெண்டு நாளுக்கு முன்னமே இந்த முறை மேட்ச் பாக்கிற இண்டரெஸ்ட் வந்து தொத்தியிருக்கு. அது ஒரேவேளை காதலா இருக்கலாம். பின்னேரம் எனக்காக எங்கையாவது காலாற நடந்துவிட்டு, வெட்டிக்கதை கதைச்சிட்டு வருவோம்னு நினைக்கிறேன். காதலெண்டா என்ன எண்டு டெபினிஷன் எங்களுக்குள்ள இல்ல. அதுபாட்டுக்கு என்னவோ ஒரு வஸ்து. காதலிக்கிறம் காதலிக்கப்படுகிறம் எண்டு உணரத்தொடங்கிறது ஒரு அற்புதமான தருணம். எம்மை யாருக்காவது பிடித்துக்கொண்டால் இவ்வளவு இதமாக இருக்குமா என்றால் அது காதலாக இருந்தால் மட்டுமே சாத்தியம். யாரோ ஒருவரோ, சிலருடனோ மட்டும் எது செய்தாலும் அதை உற்றுப் பார்க்கும் படியாக இருக்கும்