Skip to main content

Posts

பெண் வெறுப்பு நோய்

அண்மையில் பரவி வரும் பெண் வெறுப்பு நோய் சம்பந்தமானது,  பெண்கள் மீதான இயலாமையை நினைத்துக் குமுறிக் குமுறி எல்லா இடங்களிலும் தமது தலையை பிய்த்துக்கொள்வதும், தாங்கொணா வயிற்றுளைவில் குடலேறிக் கிடப்பவர்களையும் பார்க்க முடிகிறது. மிக நல்லது.மீண்டும் மீண்டும் உங்களது நிலைப்பாட்டினை அருவருப்பு சார்ந்ததாகவே நிரூபித்து வருகிறீர்கள். நீங்கள் நிரூபிக்கவும் தேவையில்லை, உங்களது இயல்பான குணாதிசயங்கள் அதுவாகவே வெளிவருகின்றது. எங்களுக்கு இது வேடிக்கையின்றி ஒரு பொருட் டும் இல்லை.  பெண்ணுடலை மோப்பம்பிடித்துப் பார்க்கிற பாலியல் வறுமையும், வசை வறுமையும் கொண்ட கூட்டங்களே, எழுத்தையும், திறன்பாட்டினையும் கூட உங்களால் அதைத்தாண்டிப் பார்க்க முடியவில்லை. உங்கள் மன நோய்களுக்கு தக்க மருந்தினை உங்கள் வயதான காலங்களில் உங்களிடம் தர வேண்டாமே என்று பார்க்கிறேன்.  எனக்குத்தெரிந்து எந்தப் பெண்ணும் பிச்சை வாங்கிப் புத்தகம் வெளியிடுவதில்லை. எந்த ஆணினுடைய கையாலாகாததனத்தையும் பார்த்துப் பயந்ததும் இல்லை ;இந்தளவு நோய்க்கூறும் இனங்காணப்படவில்லை.  பெண்ணியலாளர்கள் , பெண் எழுத்தாளர்கள், பெண் களப்பணியா

Painting caption: சிவப்புப் பெண்கள் | Women in Red

நீண்ட பயணம் போக வேண்டும். கால்கள் எங்கேனும் ஓய்வைப்பற்றி நினையா வண்ணம், நீண்ட பயணம் போக வேண்டும். இருளை மீறி இரண்டோ மூன்றோ அடி எடுக்க வேண்டும். பிரிந்த சாலையில் இதுவோ அதுவோ எனத் தெரிய வேண்டும். நாம் நடப்பதைப் பற்றி யாரேனும் வேறொரு கோணமாய் சொல்ல முன் நீண்ட பயணம் போக வேண்டும்! பழங்கதை ஒன்றின் விளிம்பில் அவை அடிபடு முன்னும் இனிமேல் இல்லாத என்றொன்று வருவதன் முன்னும் நீண்ட பயணம் போக வேண்டும்! விழிகள் மெல்ல சொருகும் முன்னும், விடியும் என்பது சலனம் எனுமுன், மறுப்போம் என்று மறுதலை வரு முன் நீண்ட பயணம் போக வேண்டும்! வலிய காற்றின் சுழலில் சுற்றும், இறந்த இலைகள் விழுபடு முன்னும், மறுப்பது என்பது சமரசமாயினும், எப்புண்ணும் பழுதுபட முன்னும் நீண்ட பயணம் போக வேண்டும். நீண்ட தூரம் போக வேண்டும், விலகியோ,சேர்ந்தோ நாம் நீண்ட தூரம் போக வேண்டும். நிலா-

The Emotional Impact of the TV Show 'Mahabharat' on a Secularist

I have been heavily invested in the TV show "Mahabharat" on Star-Plus, listening to the theme songs and watching the episodes compulsively. It has been a difficult time for me as I am unable to stop thinking about the show and how it has affected me emotionally. I have never been so attached to a TV show before. When one thinks of mythology, they may think of stories about gods and demigods with incredible strength or special abilities who go on epic adventures to uphold the dharmic ethical way and fight against adharma. These characters are often loved for their personality and are seen as symbols of the vital energy of the universe. People find comfort and trust in the predictability of these demigods, even if they don't admit it. Mythology creates a necessary foundation for us to turn to when everything feels uncertain. Mahabharat is considered an epic of great magnitude. I have read the story before, but never felt so connected to the characters. While I typically d

சாமகானமும் காம்போதியும்

முருகையன் ஒரு மொழிபெயர்ப்புச் செய்தார். மொழிபெயர்ப்பு எண்டும் சொல்ல முடியாது,சாதுவா மொழிபெயர்ப்பும்,திறமையான கற்பனையும் போட்டு செய்யுள் வடிவத்தில, இளநலம்! என்ன இளநலமா?ஹையா கிளுகிளுப்பான கதை வரப்போகுது. குமாரசம்பவம் (ஸாரி வேற கண்டென்ட் எண்டு நினைக்கப்படாது, ஐ ஆம் வெரி டீசன்ட்) காளிதாசன் குமாரசம்பவத்தில எழுதின அதே கதையை தமிழில தந்தவர். அதில தான் இந்தக் கதை வருகுது.  சாமகானம் சாமகானம் எண்டு ஒண்டு சொல்லக் கேட்டிருப்பம். “சாமகானம் பாடினான்” எண்டு நாலாம் வகுப்புச் சமய பாட புத்தகத்தில ஒரு பாடம் இருக்கு. பத்துத் தலையும், கையில ஒரு தலையுமாக் கணக்குப் பிழையா மொறாயஸ் கீறின இராவணனிண்ட மீசை வெச்ச படம் இருக்கும், இப்ப ஞாபகம் வந்துட்டுதா? அந்தக் காலத்திலேயே தலைகளிண்ட கணக்கை எண்ணிப் பாத்தனாங்கள் ஆக்கும். (தலைக்கணக்கு முக்கியம் அமைச்சரே) இப்ப சாமகானத்தைப்பற்றிப் பாப்பம். காளிதாசன் குமாரசம்பவம் எழுதேக்க, சும்மா கற்பனைகுதிரையை காட்டாற்று வெள்ளம் போல பறக்க விடுறேர்.  மிஸ்டர் சிவனும் மிசஸ் உமாவும் கலியாணமான புதிசில, (ஏன் கல்யாணமான பழசில யாரும் வெளிய போறதில்ல எண்டு நெடுங்காலமா டவுட்) சும்மா வெளிய வெளிக்

காரைக்கால் அம்மையாரும் குமரன் பெஞ்சாதியும்!

எ ன்ர வீட்டுக்காரர் முருகன் மாதிரி. முருகன் மாதிரி எண்டா நிறைய விஷயம் உங்களுக்கு நினைப்புக்கு வரலாம்.. ஒண்டு அழகா இருப்பாரெண்டு யூகிக்கலாம்,அது சாடையாக் குறைவு.ரண்டு மனுசியா எண்டுங் கேக்கலாம், அந்தளவு விஷய சாமர்த்தியம் ஆளுக்குக் குறைவு, சும்மா சொல்லப்பிடாது ஆள் நல்ல மனுஷன்,ஆனா முருகன் மாதிரி.   சீர்காழி கோவிந்தராஜணும், பித்துக்குளி முருகதாசும் ஒரு காசெட்டில் பாட்டுப்படிச்சிருப்பினம், “திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்” எண்டு, ஓம் எங்கண்ட அவரும் அப்பிடித் தான், வீட்ட சிரிச்சா என்ட அலுவலகம் வரைக்கும் எனக்குக் கேக்கும். அண்டய நாள் முழுத்தும் சந்தோஷமா ஜெகஜ்ஜோதியாப் போகும்.   அதே மாதிரி வீட்ட மனஸ்தாபம் எண்டாலும் அலுவலகம் வரைக்கும் அது வந்து குடையும்;குத்தும்; தலை எல்லாம் இடிச்சு அண்டு முழுக்க ஒரு வேலையும் செய்யேலாமப் போகும். இதால நான் செல்லமா அவரை “முருகா” “முருகா” எண்டு கூப்பிடுவன். அவர் “வள்ளி” “வள்ளி” எண்டு கூப்பிட்டு “அடிக்கள்ளி” எண்டு முத்தாய்ப்பு வெச்சு எங்கண்ட ரோசங்கெட்ட சண்டை இனிதே முடியும்.   சொன்னாப்போல, ஆளுக்குப் பேரும் க

அது அல்லது இது...

ஒ ரு காகம் கிழக்கிருந்து மேற்காக கரைந்து கொண்டு வெள்ளை எச்சம் போட்டுவிட்டுப் போன நாளில், வீட்டில் அரிசிபொங்கவில்லை. உலை கொதிக்கவில்லை. அம்மாச்சியும், மாமியும் அழுது வடித்துக் கொண்டிருந்தார்கள். ரங்கன் மாமா சைக்கிளை எடுத்துக் கொண்டு போனவர், போனவர் தான் இன்னுமே வரேல்ல. அப்பா கொழும்பால வீட்ட வந்துட்டார். சிங்கம் மாமாவும், மூர்த்தி அங்கிளும் எல்லாத் திக்குக்கும் போயிட்டினம், ஒரு தகவலும் வரேல்ல.   கண்ணைச் சுழட்டிக் கொண்டு பசியும், தண்ணித் தாகமும் எடுக்குது. நான் வெள்ளப் பிள்ளையா குளிச்சிட்டு, படம் கீறிக் கொண்டிருக்கிறன். என்னை யாருமே கவனிக்கேல்ல. அப்பா கொழும்பால கொண்டுவந்த போட்டெல்லோ அப்பிடியே கிடக்குது. அப்பாண்ட கொழும்பு பாக்கை இன்னும் யாருமே திறக்கேல்ல. அம்மாவும், பூமணிச் சித்தியும் கிணத்துக் கட்டில நிண்டு குசுகுசுத்துக் கொண்டிருக்கினம். பூமணிச் சித்தி அழ வெளிக்கிடுறா. அம்மா அங்க நிண்டு போக்குக் காட்டிக் கொண்டிருக்கிறா. அக்காவும் வீட்ட இல்ல. எப்பயுமே அடிச்சு விளையாடுற அண்ணாவும் அண்டைக்குச் சண்டைக்கு வரேல்ல.   நான் அண்ணாவிண்ட கலர்ப்பெட்டியை எடுத்துத் தான் படம் கீறிக் கொண்