Skip to main content

Posts

ஒரு யூதப்பாடலும் ஆங்கிலப்பாடலும்

இசையைப் பற்றி பேசுவதைப் போல, இசைக் கலைஞர்களைப் பற்றி பேசுவதும் அற்புதமானது.அந்த வகையில் இசைக்கலைஞனின் வறுமை பற்றி பேசும் படம் தான் Inside Lewis Davis. ஆப்பிரிக்க எத்தியோப்பிய மக்களின் Blues Music, பூர்வீக செவ்விந்தியர்களின் Traditional Tri bal Music, Waila, Rock போன்றவற்றின் கலவையாக அமெரிக்காவின் இசை  வந்த வழி அறியலாம்.  கீழைத்தேய நாடோடி மக்களுக்கு பிடில் எவ்வாறு கதை கூறியதோ, மேலைத்தேய நாடோடிகளின் கதையை கித்தார் கூறுகிறது. இப்படியொரு கித்தார் இசைக்கலைஞனைப் பற்றி வந்தஇந்தப்படம் grand prix -13 விருதை தழுவியது.  T Bone Burnett நின் இசைக்குரியது இந்தப்பாடல். இதில் வரும் மெல்லிய கித்தாரைக் கவனியுங்கள்.  //Muddy river runs muddy and wild You can't give a bloody for my unborn child Fare thee well, my honey, fare thee well// to listen the song Andalusian classical music, யூதர்களதா, முஸ்லீம்களுடையதா என்று அறியப்படாத, ஒன்பதாம் நூற்றாண்டுக்கிரிய இசை வடிவம். வட ஆப்பிரிக்காவின் மொராக்கோ இதன் பிறப்பிடமென்று ஒரு சாராரும் டுனிஷியா,லிபியாவின் மகிழ்ச்சியின் சமாதான இசையின் வடிவம்

பழங்கவிதைகள் சில ...

பழங்கவிதைகள் சிலவற்றை ப்ளாக்கில் பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கிறேன்.இவை அனைத்துமே 2007ஆம் ஆண்டுக்கு முற்பட்டவை. பள்ளிக்கூடக் காலத்தில் எழுதப்பட்டவை.  தொலைந்து போன சில தடயங்களைத் தேடித் பகிந்துகொள்வதில் உள்ள ஆவணப்படுத்துகை, ஒருவகை நிறைவானதும், இன்பமானதும் கூட. இன்றைய எழுத்துக்கும் அன்றைய எழுத்துக்குமிடையிலான இடைவெளியை இன்னமும்  வியந்துகொண்டிருக்கிறேன். நிலா.லோ 2012 இந்தத் தொப்பி....... இந்தத் தொப்பி யாருக்குப் பொருத்தமென்று இளையோரையெல்லாம் கேட்டு வைத்தான். இன்னோரன்ன இழவுகளாலே இனிப் பொருத்தமென்றால் இது தான் என்றான். அவனைக் கண்டவரெல்லாம் அது அவனுக்குத் தானென்றார். இவனைக் கண்டவரெல்லாம் அது இவனுக்குமென்றார். ஒருவரும் தனக்கென்று சொல்லி தலை கொடாமல் சென்ற போது- அந்தோ அது வந்துதலையில் வீழ்ந்து -தெறித்து, முன்னோர் அலறி முறை கெடும் வண்ணம்  வீணாய்ப் போனார் எம்மின மக்காள்! 2004 கற்புடை பாடலொன்று! பூனைக்குட்டிகளைச் சாம்பலக் கிடங்குக்குள் வளர்க்கும் பெண்களைப் பற்றி கற்புடை பாடலொன்று பாடவா? இறுதி முறையாக துயரப்பறவை வட்டமிட

வீட்டில விசேஷங்க :)

I was rushing, really rushing....இப்பிடித்தான் கொஞ்சக் காலம் போய்க்கொண்டே இருந்தது. எவ்வளவு காலம் எண்டு தெரியேல்ல, கண்ணை மூடித் திறக்கிறதுக்குள்ள நிறையக் காலம்;அந்தக் காலம் பூராவும் சிலவற்றை மறந்து விட்டிருந்தேன். எங்கிருந்து அவை மீள வந்தன என்று தெரியவில்லை. ஒரு ஒற்றையடிப்பாதைக்குள், ஆள்த்தடயமில்லாமல் போய்க்கொண்டிருந்த இடத்தில், யாரோ மறித்து, கூடவே வருகிறது போல உணர்வு! இவ்வளவு அழகான உணர்வையா தொலைத ்துவிட்டு இருந்தேன்? இசையைப்பற்றி கதைத்துக்கொண்டிருக்கிறேன். அதை வாசிப்பதும், அதனுடன் கதைப்பதும், அதைக் கட்டிப்பிடித்துத் தூங்குவதும் ஒரு அலாதி சுகம். போனவாரம் தூசு தட்டி கீ போர்ட்டை கையில் எடுத்துக் கொண்டேன், இப்போது வரைக்கும் விலகிப் போக மறுக்கிறது. குழந்தையைக் கொஞ்சுவதற்காகத் தூக்கி வைத்துக் கொண்டால் எப்பிடி, மடியிலிருந்து இறங்கும்? கூடவே விட்டு விலகாமல் பார்த்துக் கொள்ளத் தோணுகிற உணர்வுகளில் இதுவும் ஒன்று, வசந்தகாலத்தின் இன்னுமொரு சிணுங்கல் தொடங்கிவிட்டது மனிதன் எவ்வளவு ரம்மியமான உணர்வுகளோடு கூடிய மிருகம்? சிரிப்பும், கவலையும், கோவமும், குரோதமும் என்ன காரணங்களுக்காய்

முகிலோ மேகமோ ...

ஆமா,ஏ.ஆர் ரஹ்மான், ஏன் தேவா “சொந்தமா” இசையமைச்சதுகள் கூட இதல க்ராஸ் பண்ணுது தான். ஆனா...என்ன மனுஷனையா இந்தாள்?மனுஷனுக்கு மலையைப் போல பிரச்சினை வந்தாக் கூட இந்தாளைக் கேட்டா ரிலாக்ஸ் ஆகீரலாம். இந்தச் செப்படி வித்தையை எப்பிடிக் கையாளுதோ!!! என ்ன மந்திரமோ மாயமோ என்னமோ ஒண்ணு இந்தாள்கிட்ட இருக்கு! பெருசா சொல்லிக் கொள்ளுற அளவுக்கு இல்லாட்டியும், இந்தப்பாட்டைக் கேளுங்க, வருடிக் குடுக்கிற மாதிரி, யுவனைக் கூட தாளத்துக்குப் பாடவைச்சிருக்கிறேர் (அப்பா சொன்னா பிள்ளையள் கேக்கும் எண்டுறது இதைத்தானோ? :P ) பின்னணி இசை தொடங்கிறதே, சாதாரண பீத்தோவன் ஹார்மேனி, இது கீ போர்டில் சாதாரணமாக் கிடைக்கும்.எதை எப்பிடிப் பயன்தகு விதத்தில பயன்படுத்தோணும் எண்டு இந்தாளுக்குத் தான் தெரியும். எந்தக் காற்று வார்த்தியத்தையும் உயிரை வாங்கிற மாதிரி இப்பிடி யாரும் வாசிச்சதில்ல.இந்த நாளுக்கு,எனக்கு இந்தப் பாட்டுக் காணும். இவங்களெல்லாம் இல்லாமப் போற ஒரு காலத்தை நினைச்சும் பாக்க முடியேல்ல. அந்தாளுக்கு வயசு போகுது :( முகிலோ மேகமோ சொல் வேறு வேறு இரண்டும் இருந்தும் பொருள் ஒன்று தானே! உடலால் தேகத்தால் இ

உழுவான் வண்டு

ஜெ ர்மன் நாட்டுக் கவிஞர் ஒருத்தர் ஒரு நாவல் எழுதினார். அந்த நாவல் பூராவும் உழுவான் வண்டு (Colfax plowing bee) வளர்த்தல் தொடர்பான கதை. உழுவான் வண்டு செர்மனியில் இருக்கிறதா எண்டு நம்பிறதுக்கு எனக்கு சுமார் இரண்டு ஆண்டுகள் பிடித்தன. உழுவான் வண்டே நாலு குல பேதங்களில் ஆறு வர்ணங்களில் கிடைக்கிறது. கரச்சான் உழுவான்,நண்டு உழுவான்,பேய் உழுவான்,குதிரைப்பாச்சான் எண்டு நாலு குலங்கள் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது. சாணிப்பச்சை,அரியதரக் கலர், தவிட்டுக்கலர்,அழுகின விளாம்பழ நிறம், மேலும் சொல்ல முடியாத சில வஸ்துக்களின் நிறம் எண்டு சுமார் எட்டு வகையான நிறங்களில் உழுவான் வண்டு பறந்தும், நடந்தும், ஊர்ந்தும், உழுதுகொண்டும் திரிகிறது.  உழுவான் வண்டைப்பற்றி இந்த சேர்மன் நாட்டுக் கவிஞர் எழுதியதெல்லாம் உழுவான் வண்டை வீட்டில் செல்லப்பிராணியாக வளர்ப்பது எப்படி என்றே.சேர்மன் மொழி எனக்குத் தெரியாததால், ஆங்கிலத்தின் அதன் ஆறாம் பதிப்பொன்றை கொஞ்சக் காலத்துக்கு முன்பு ஒரு ரயில்ப்பயணத்தில், தண்ணீர்க் கடை ஒன்றில் வாங்கின புத்தகமொன்றில் படித்தேன். இதில என்ன விசேடமென்றால் உழுவான் வண்டு ஒன்றைப்

Overcoming a Rut: A Personal Journey

Falling into a rut is something that happens to all of us, but how do we get out? It can be hard to recognize when we're in a rut and to motivate ourselves to move on. I've been feeling less than my best lately; like my life is stuck in a rut. I've even found myself watching TV series to pass the time. Recently, I became obsessed with a Tamil show called "OFFICE" and watched all of it in a week. Now, I'm bored and feeling empty. TV shows aren't usually my thing, as I don't have the patience to wait until the end of an episode, and I don't have time to watch them all. Additionally, some people become so busy that they don't have time for leisure activities, and I'm in that category right now. I'm just going through the motions of my mundane tasks. I'm also really over summer. Sometimes I feel like I can't take another day in this hot weather. I've had some new experiences this summer because of my internship, one of which w

அப்பா சொல்லித் தந்த பாட்டுக்கள்.

மாலை நேரப்  பொழுதினிலே மாமரத்தைப் பாருங்கள் மஞ்சள் நிற இலையெல்லாம் மாறி மாறி விழுகுது சின்னஞ்சிறு  பூவுண்டு சிலதில் நல்ல பிஞ்ச்சுண்டு வண்டு வந்து மொய்க்கவே வாசம்  எங்கும் வீசுது - மாலை நேரப் பொழுதிலே மாமரத்திப் பாருங்கள்! கிழக்குப் புறத்து பெரிய மாமரத்தின் கிளைகளிலே, வைகாசி மாத மாவடு தோன்றும் வாசத்தோடு, முற்றத்தில் விழுந்து கிடந்த மாம்பிஞ்சுகளை, கூட்டிக் கொண்டே அப்பா எனக்காகச் செய்த பாட்டு இது.   அது ஒரு செங்கல் மங்கலான பொழுது இன்னமும் ஞாபகமிருக்கிறது.  (4/5 வயதுக் குழந்தைக்கு)  *** வெகுமதியாய் புகழ்ந்திடவே வெகுளி எங்கள் குழந்தைகளே.... வெள்ளை நிறக் குழந்தைகளை வேடிக்கைகள் பார்த்துடுவர்- விஞ்ஞானத்தின் விந்தைகளை அள்ளி அள்ளி வீசிடுவார்- அமெரிக்காவில், ஐரோப்பாவில் அழகழகாய் குழந்தைகள்- கைகள் தட்டி சிரிக்கிறார் கண்ணைக் கண்ணைச்  சிமிட்டுறார்- பறக்கும் தட்டு, பலூன்எல்லாம் விண்வெளியில் பறக்குதங்கு பேசும் பொம்மை, பேசும் நாயும் திருகிடவே  நடந்து போகும் பாழும் எங்கள் நாட்டிலே - பறந்து வரும் விமானமோ குண்டு வந்து போடுமோ? கொலைகள்  செய்து போகுமோ? என