Skip to main content

Posts

சென்னை

சென்னையில் இருக்கிறேன். சென்னையில் இது எனக்கு முதல் முறை. கொழும்புக்கும் சென்னைக்குமுள்ள வேறுபாடு, கொழும்பையும் அடித்துச் சாப்பிடுமளவுக்கு இங்கே வெயில். மற்றது குப்பை. தெருவெல்லாம் நிறையக் குப்பை. கொழும்பு எவ்வளவோ மேல். அடுத்தது, தமிழர்களைக் கண்டால் துக்கம் விசாரிக்கிற மனநிலை. அங்க எல்லாரும் நல்லா இருக்காங்களா என்று விசாரிக்கிற போலி அரசியலும்,போலித்தனமும். குஜராத்தில் பூகம்பம் வந்த போதோ,காஸ்மீரில் குண்டு வெடிக்கும் போதோ, உள்ளூர்வாசிகள் இவ்வளவு இரக்கப்பட்டிருப்பார்களா தெரியவில்லை. ஏன் சிவகாசியில் பட்டாசு ஆலை வெடித்து குழந்தைகள் எல்லோரும் இறந்த போதோ,கும்பகோணத்தில் பள்ளிக்கூடம் எரிந்த போதோ கூட இவ்வளவு கவலை இருந்திருக்குமா தெரியவில்லை. அதில ரகசியமா,இன்னும் ஒருபடி மேலே போய், தலைவர்  இன்னும் இருக்கிறாரா என்றும் கேட்கிறார்கள். என்னத்த சொல்ல, ரஜினி இன்னும் உயிரோட தானுங்களே இருக்கார்...ன்னு சொல்லிட்டு வந்தேன். தட் மிடியல மொமென்ட் ... தைப்பொங்கலுக்கு சூரியன் கையில் விழுந்துவிடும் போல இருந்தது. சிவன் பார்க் பக்கத்தில், ஒப்பிலிராஜா சாலையில்   ஒரு லக்சரி வீட்டை வாடகைக்கு அமர்த்திக் கொண

முன்னமொரு சகுனிகள்..

                                                முன்னமொரு சகுனிகள் முடிந்து வைத்த கதைகள் பல பின்னையொரு பொழுதிலே பேச்சவிழ்ந்த கதைகள் பல மன்னுமொரு காதல் மருந்தடித்த கதைகள் பல மாட்டிவைத்த அவன் கதையை மாய்ந்து மாய்ந்து-  உரைத்தன பல என்னையொரு நாளில் நீ அடித்துரைத்த கதையும் பல ஏக்கமொருநாளில் ஏங்கி வழிந்த கதையும் பல தோற்க வழியின்றி என்னைத் தோற்பித்த கதையும் பல தாக்க வழியின்றி எனைத் தகர்ப்பித்த கதையும் பல இருட்டிளுந்தன் பேர்தனை இடித்துரைத்த கதைகள் பல இன்னுமின்னும் இங்கிதமில்லாப் பங்கமும் பல கதை அழுக்கு என்று ஆர்ப்பரித்த ஆயிரங்கதை அன்றொருநாள் சொல்லிச் சொல்லி அழுத கதை பாடிப் பரவசம் காண முனைந்த பல கதை, பாடு பொருள் மட்டும் மாறாத பரிதவிப்பும் ஒரு கதை நாடி ஓடி வருங்கனவில் நான் நலிந்து போனதும் ஒரு கதை தேடி இனிதேடி தேய்ந்து போனதும் தொடர் கதை தேய்ந்த சகுனங்கள் தெளிவில்லை கண்ணே தேய்தலுக்கும் திரிதலுக்கும் எது எங்கே முன்னே ஆய்ந்து பதிலுரைத்தல் அடுத்தவிடை ஆனால் ஆன இன்பம் அது எனக்காம் பின்னே - ஏங்கி இனிப்பிரிதல் கூடாது என்றால் எது சரியோ, எது பிழையோ ஆரையும் நோகோம், இன

காக்கைகளும் நரிகளும் வடையும்...

 நா வலை மேம்பாலத்துக்கருகில் மிகப் பயத்துடன் நடந்துகொண்டிருந்த போது யாரோ என் முதுகுக்குப் பின்னால் இருந்து மிஸ் கந்தையா என்று கூப்பிட்டது நன்றாகக் காதில் விழுந்தது. கூப்பிட்ட குரல் எனக்கானதாக இருக்க வேண்டுமென்றால் என்னுடைய இளம்பிராயத்தில் அறிமுகமானவர்களாக இருக்க வேண்டும். சிறிது குழப்பத்துடன் திரும்பிப் பார்த்தேன். ஆளைச் சரியாக மட்டுக் கட்ட முடியவில்லை. திரும்பிப் பார்த்து நேரம் செலவழியாமல் நடக்க முனைந்தேன். அந்த நபர் என்னை நோக்கி மிக வேகமாக ஓடி வந்து எனக்கு முன் பாதையை வழி மறித்துக் கொண்டு என்னைத் தெரியேல்லையோ எண்டு கேட்டார். எனக்கு சாதுவாகவும் நினைவில்லையாதலால், மன்னிக்கோணும் எனக்கு சற்றைக்கும் நினைவு படுத்த முடியேல்ல என்றேன் . நினைவுப் படுத்துவதில் உள்ள சிரமத்தை விட அவர் எனக்கு முன்பாக வழிமறித்துக் கொண்டு நின்ற விதம் சங்கடமானதாக இருந்தது. இப்ப இங்கையோ இருக்கிறீர் எண்டார் . என்னைப் பொதுவாக யாரும் 'றீர் ' அடைமொழி பாவித்து அழைப்பதே இல்லை எனலாம். எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. எனக்கு சொல்லுவதற்கு ஒரு பதிலும் இருக்கவில்லை. அவர் கொஞ்சம் உரத்த குரலில் சிரித்த

திரும்புவதற்குச் சாத்தியமற்ற குரல்........

திரும்புவதற்குச் சாத்தியமற்ற உன் குரல் தேடல்கள் தொலைந்து போன ஒரு  அந்தியில் என்னிடம் ஓடி வருகின்றன. நீ கோபப் படுவாய் என்பதற்காய் குரலில் மன்னிப்பு நிறைந்த கெஞ்சலை  அவிழ்த்துப் போட்டுக் கொண்டிருக்கிறேன். மன்னிப்பின் தீவிரத்தில் நீ  திட்ட மறந்த வார்த்தைகள்  நாளைக்காய் கிடப்பிலிருக்கிறது. மெல்ல,  நொடிப் பொழுதில்  நான் உன் கர்வம் என்பது போல் நான் உன்னில் நிறைந்து நிற்கும்  மந்திரக் கணத்தை ஆகர்ஷிக்க முற்படுவேன். உடனேயே, என்னிலிருந்து விலகும் வெளிச் சுவாசம் போல உன்னிலிருந்து விண்டு பிளவு படும் ஆக்ரோஷம் வெட்கமேயின்றி என்னைத் திட்டும். சிறுகச் சிறுகச் சேமித்து வைத்த என் மானம் மலினமாகும். மூடு பனியின் நளினங்கள் சாகும். நீ உச்சத்தில் இருப்பாய், நான் பாதத்தில் இருப்பேன். முன்னை விடத் தெளிவாக தீர்மானமாக, எல்லா நாளிலும் என் அழைப்பின் போது நீ சொல்லும்  தாரக மந்திரத்தை இப்போதும் சொல்ல மறக்க மாட்டாய். வழிகிற கன்னங்களை நான் துடைப்பதேயில்லை.  பதிலுக்கான சாத்தியமற்ற  ஓரிரு கணங்களில் துண்டிக்கப் படுகிறது,  தொடர்பு. நான் காட்டிய திசையில்

பிரம்மச்சரியத்தின் பிலாக்கணம்!

                                             இலையுதிர் காலமாதலால் ஒவ்வொரு பௌர்ணிமையிலும் அரச மரங்கள், இலைகளை சட்டை கழற்றுவது போல ஒரு வித சலசலப்புடன் உதிர்த்துக் கொட்டுகிறது ! அல்லது இலையுதிர்காலத்தின் இறுதி மரணந்தழுவும் வெள்ளரசு மரத்தினிலைகள் தெரு நாயொன்று சிரங்கு தாளாமல் உடலை சடசடத்து உலுப்பிக் கொள்வது போல உதிர்த்துக் கொட்டுகிறது ! கீழே போதிசத்துவன் இருந்தான் புகழ் மாலையில் நனைவது போல பழம் இலைகளாலும், இலைகளின் சவங்களாலும், சருகுகளாலும் அபிஷேகிக்கப்பட்டான். அதில் எதோ உத்தமத்தை உணர்ந்தவன், சடத்துவத்தைத் தாண்டி சத்துவத்துக்குள் நுழைந்தான். பிரம்மச்சரியத்தின் அந்தம் பற்றி புல்லுருவியாக வியாபகமாகிக் கொண்டு வருகின்ற படிகளில் என் முன்னேற்றம் தெரிகிறது !  என் அம்மா எனக்குத் தந்த இறுதி அரவணைப்போடு- 'அம்மா' என்கிற காட்சிப்புலமும் , அதன் விஸ்தீரணமும் என் வட்டத்துள் இருந்து தீர்ந்து போயிற்று. இன்று உணரக் கூடியதாயிருக்கிறது, எனக்கான குழந்தைகளுக்காக சேமித்து  வைத்த அன்பு முத்தங்களைப் பரிமா

மலபரிபாகம் !

                                         விரிவாக நான் ஒன்றுமே இன்னமும் எழுதவில்லை. என் எழுத்தில் இருந்து விரவி ஓடும் எச்சில் ஈயைப் போல காலத்தின் முன் சிறு முட்களைப் போல இப்படிப் பல 'போல'  வாக நீ தள்ளி ஓடுகிறாய். காப்பிய மானத்தைப் பற்றி அக்கறை கொண்டவனாக நீ இருக்கையில், அதில் பாதி காப்பாற்றிய மானமாவது எனக்கிருக்கக் கூடாதா? இல்லை, இருக்கக் கூடாது. அகம்பாவத்தின் அடிச் செருக்கு நீ, உனக்கேற்றாட் போல உன் மான விபரத்தைக் கூட்டிக் குறைக்கிற பொறுப்பு உன்னிடமில்லை. எந்தவொரு உயிரின் மீது நீ அளவு கடந்த பாசத்தை வைக்கிறாயோ, அந்த நொடி முதல் நீ  மனதாலும் உடலாலும், சமூகத்தாலும் பலவீனனாகிறாய். ஆக நீ கோழையாகி விட்டாய். 'குரு தேவா, நான் மலபரிபாகம் பால் ஆட்கொள்ளப் பட்டவள் என்பதை நீங்கள் தானே சொல்லியிருந்தீர்கள்?'  .....ஹஹ் பூ.....மலபரிபாகமா, நேற்று முதல் நீ அப்படியிருந்திருக்கலாம்,இன்று கடிகார முள்ளைப் பார்த்தாயா, காலத்தின் நிகண்டில் குத்திட்டு நிற்கிறது. ஒருகாலமும் முடியாது,உன்னால் ஒரு காலமும் முடியாது....! ஆக்ரோஷமாய்க் கத்தினார். மலம் என்று சிறப

கடவுள் பற்றி வாழ்தல் ............

                                                                                                    ....அம்மா, அந்த அனிச்சம் பூ பூக்குமாம்மா?....... பூக்கும் ராசாத்தி.......... 'எப்பம்மா பூக்கும்? .......... ...    மழை நிறையப் பெஞ்சு, காத்தும் சூரிய ஒளியும் தாராளமாக் கிடைக்கிரண்டைக்குப் பூக்கும். ......... "இன் சபிசியன்ட்"   பூட்ஸ் அப்பிடித்தானேம்மா ? ம்ம்ம்........ '' ஏண்டா,  தேவ மகனே , இந்த அனிச்ச மரம் எப்ப பூக்கும்? ......... 'தெரியேல்ல'.............., அது பூத்த அண்டைக்கு அதைப் பிச்சு எனக்குத் தருவியளா? ........... .........இல்லை....., மாட்டன். 'ஏன்? ............. அதை உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை. ......சரி, அணிச்சம்பூவைப் பிச்சுத் தரவேண்டாம்.அது எப்ப பூக்குதெண்டு பாத்தியள் எண்டா எனக்குச் சொல்லுவியலா? ......... 'இல்லை...., மாட்டன். 'உங்களுக்கு, 'இல்லை'யையும் 'மாட்டனை'யும் தவிர தமிழில வேற ஒன்டுமும் தெரியாதா? .......???? ...........தெரியுமே, திருப்புகழும், த