Skip to main content

Posts

பௌர்ணமிக் கிறுக்கு -01

இதோ இந்த புத்தன்   போன மாதம் தான் வைகாசியில் வர்ணம் பூசி வெளிச்சக் கூடுகள் மின்னி   ஏந்து கரத்தில் தீபம் ஏந்தி தாமரைக் கடவுளனுக்கு நீலோத்பலம் பிடுங்கி, சம்பங்கியும், பவள மல்லிகையும் சூட்டி, கண்களை மூடி மோனத்தின் உச்சியிலிருக்கும் புத்தன்- அதோ அன்று தான் பிறந்தான். ராஜ கம்பீரத்தில் மிடுக்கில் திரிந்து, காலத்தின் கோலத்தில் காவி சூடிக் கொண்டவன். அதோ அன்று தான் பிறந்தான்..! அவனது ,கேசங்களும் தந்தங்களும், அகவன்கூடும் தங்கப் பேழையுள் தாங்கப்படும் என்றறியாமலேயே- முக்தியாகிப் போனான். புத்தா, சந்திக்குச் சந்தி, அரசமரத்துக்கு மரம் கல்லாகி, மரமாகி ,கருஞ்சிலையாகி பெருத்த வண்டிப் பெருச்சாளிப் பிள்ளையார் போல வீற்றிருப்பது- கடினமடா பார்க்க எனக்கு- அவருக்குத் தான் தூக்க முடியாத தொந்தி   நடுத்தெருவிலே குந்தி விட்டார். நீ கட்டழகனல்லவா ? கூடாது கடவுளே - நீ முக்தியடைந்திருக்கக் கூடாது கடவுளே ! காசினியிலோ   கங்கையிலோ   குளித்து விட்டு "கப் " என்று இருந்திருக்கலாம். பாவி ... கடவுளாகிப் போனாயே ..!

ஆளச் சொல்லுகிற ஆட்சிப் பாட்டு

                              அரவச் சடை கழழில் பூட்டி அருவத் துயில் விழியில் கொண்டு அருக்கக் கதிர் அகலம் பரப்பி ஐம்பொன் உன்னை ஆழேன் அருகில்?  இரக்கக் குணம் சிறிதும் இல்லா இன்பப் பொருள் எதிலும் அல்லா மெய்யன் உன்னை மெச்சேன் பொழுதில்? பொய்யன் உன்னை புகழேன் வாதில்? [எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்] வானமே இரு சோலை வான்முகிலும் நாடும் கானமே  ஒரு பாட்டில் கவியரசு செய்யும் ஏனம் ஒரு கிண்ணம் பாலமுது  கொய்து பானமெனப் பருக்கும் சேய் எனது கன்றே ! கண்ட திருக்கோலம் காட்சிப் பிழையின்றி கைகளை தலை மீது தானுயர்த்தி தவிசு பாடி பொய்களை பூசுற போதுமென  அகஞ்சொல்லி அல்லிக் குவளையிவள் ஆதாரமின்றிப் படர்ந்து !  [ஆசிரியத்துறை] வேள்வித் தீயில் வெட்கிக் குனிகையில் ஆவி பெருகி  அங்குமிங்கும் ஒழுகி -ஐயம் இல்லாமல் ஐம்புலனும் கருகி அட்டமா சித்திக்கு அப்பாலும் தாவித் தாவி, தன் நிலைபரம் தவித்து- கடினமடா காத்திருத்தல் காம்போடு வேர் பிடுங்கல்! [ஆசிரியத்துறை]  மெய் நிகர்த்தப் பாடுபட்டு மெய்யாலே விதிர் விதித்து கை நிறையப் பாடும் பட்டு பாழுமோர் பழியைச் சுமந்து "

போன வழிப் பயணம்...

பாகம் - 02. பயணப்படுகிற உடலைத்தூக்கிச் சொருகிக் கொண்டே அந்தராத்மா பூமிக்கும் வானத்துக்குமேலேயும் கூத்தாடுகின்றது. பேரூந்து ஒவ்வொரு முட் பதிவாளர்களையும் நின்று நின்று ஏற்றிக்கொண்டு செல்கிறது, அது தன் பாடு ; நான் என் பாடு ; ஊர்ந்துக்குள்ளே பலர் கூப்பாடு ! என் மௌன தவத்தைக் கலைக்கிறதுக்கேண்டே கண்டெக்டர் ஒரு பலத்த சப்தத்தில் இப்ப வந்திருக்குற பன்னாடைப் பாடல்களையெல்லாம் போடத்தொடன்கீட்டான். முதல் புலி உறுமுது, பிறகு, பொம்மாயி..., ச்சே..என் தவத்தைக் கலைத்ததோடு மட்டுமல்லாமல், அம்மாவின் அருமந்த வழிஞ்சு விழுகிற நித்திரையும் போச்சு..! சொப்பனம் கலைஞ்சு எழும்புற சின்னக் குழந்தையைப் போல அம்மா சுழன்று வருகிற கொட்டாவியை கையால் பொத்திக் கொண்டே எழும்பி திரும்பவும் நித்திரையாப் போட்டா... ! இடையில வீட்டையிருந்து ஒரு குசல விசாரிப்பு SMS, நான் குறுஞ்செய்தியைப் படிச்சிட்டு ஒரு மார்க்கமாச் சிரிக்கேக்க எனக்கு முன்னால இருந்த ஒரு "அரைவேக்காடு" என்னைப் பார்த்துச் சிரித்தது, அது சிரிக்குதா பழிச்சுக் காட்டுதா என்று தெரியாததால எனக்கு பலமாச் சிரிப்பு வந்துட்டுது, அது தன்னைப் பாத்துத்தான் நான்

போன வழிப் பயணம்...

பாகம்- 01 பயணக் கட்டுரை.     மழை சொட்டுச் சொட்டாகப் பெய்து கொண்டிருந்தது, காதுக்குள்ள அடர்த்தியான காத்து வீசிக் கொண்டே இருந்தது, நல்ல கறுப்புக் கலர் இரவு, நானும் அம்மாவும் மட்டுந்தான், அம்மா கேட்டா இப்ப வந்திருமா..? வந்திரும் வந்திரும்...- நான், இன்னுங் காணேல்ல...?.... வரும் வரும்...வராமப் போகாது.... ஒரு வேளை விட்டிட்டுப் போயிட்டால்...? ..............நான் ஒருக்கா அம்மாவை நிமிர்ந்து பார்த்து விட்டு, விட்டுட்டுப் போனாப் பரவாயில்ல, கருத்து உருண்டு திரண்டிருந்த மேகங்களின் பஞ்சுப் பொதியில உங்களை இருக்க வெச்சு ..ஆகாய மார்க்கமாக் கூட்டீட்டுப் போறன் ம்மா...எண்டன்,,,       நல்ல காலம் அம்மாக்கு எதுவுமே கேக்கேல்ல, இரவு முழுக்க பனிக்க நிக்க வேண்டாமேண்டால் கேக்க்கிரதில்லை...., வாய்க்குள்ள அம்மா முணுமுணுத்துக் கொண்டு கைக்கெடியாரத்தில நேரம் பார்த்தா... ஒன்பதே முக்கால்..., எண்ட கடியாரத்தில பத்து....! ரெண்டு பேருக்கும் எவ்வளவு ஜெனரேஷன் கப்? ............................................................................................................... ஒரு சொறி நாய் வந்து அறு