Skip to main content

Posts

இரண்டு கவிதைகள் ; Two Poems

                                                                                                       ஐந்தாம் படைக் காதல் எனக்குத் தெரிந்த வரைக்கும் கடல் ஆர்ப்பரிக்கத் தொடங்கியது- என் அகாலத்தின் போதே மெல்லிய சாம்பலில்- சுடுகின்ற தணல் தாங்கும் குளிரைப் போல- இருக்கிறது- எனக்குள்ளான காதல். இது, வகையறா வகைக்குரியது. இசையினது சாரலில் தூணோரமாக தழுவியபடி நிற்கின்ற நாணலைப் பிடித்தபடி, செத்துப் போன மஞ்சளிளைகளைப் பார்க்கையில்- என், காதலின் ஆண்டு வளையம் தெரிகின்றது. புலப்பட்டுப் போக, இறுதியில் மேகங்களைப் பிழிந்து, சாறு கொண்டுவந்து, காயங்கண்ட இடங்களில் தெளிக்க, சில்லிடுகிறது தேகம்- அக்கினிக் குமிழியின் ஆரை தீண்டியது போல, மௌனக்குடிலிலிருந்து வரும் ஆபோகிச் சங்கீதத்தில்- அவர்களிருக்கிரார்கள், வேட்டி நிறைந்த பூக்களுடன் அவளிருக்கிறாள். தீவிரமான விரகத்தின் முடிபில்- போய்க் கேட்கிறேன், ஐந்தாம் படைக் காதலை- ஆயுதந்தந்துதவும் படிக்கு... அவர்களின் , பிரிக்க முடியாத பல்லிடுக்கிலிருந்து சிரிப

நன்நிலை வாதம்.

மறை பொருள். சம்பவங்களைப் படிவகுக்கை செய்வது தொடர்பான ஆய்வு. தரவுகளை உதிரி உதிரியாகப் பிரித்துப் போட்டு ஒரு இலட்சிய வீழ்ச்சியை எதிர் நோக்கச் செய்வது நிகழ்வுகள், என்பவை எதற்கும் பிடிப்புக்கலல்லாத சிருட்டி பேதங்கள். இவை நேரத்தில் தங்கியிருக்கின்றன. ஆனால், சம்பவங்கள், நிகழ்வுகள் இரண்டுமே காலத்தில் தங்கியிருக்கின்றன. பரிணாமக் குன்ரலை ஒரு வகை யதார்த்தப் பின்னிணைப்பான ஒரோழுங்கில் படியச் செய்து, தடயங்கலாக்கலாம். இவை சம்பவங்களாகா; நிகழ்வுகளாகா சற்றே வேறு பட்டவை, வரலாற்றின் பாகங்கள். சம்பவங்களாயும் நிகழ்வுகளாயும் உரு வார்ப்புப் பெற்றவை செயற்கையான நேர்கோட்டுத் தளத்தில் இயங்குகின்றன. வார்த்தைகளைக் குழப்பிப் போடுவது போல, இது, ஒன்றுக்கொன்று முரண் தத்துவத்தை தருகின்றது . இனி, குலசாமி சொன்ன காதை. வீடு திரும்ப எத்தனிக்கின்ற எனக்கு காயங்களை மாற்றிவிடத் தோணுகிறது முதலில் சரிவர. பெருமிதமாக இருக்கின்றது, எனக்கான கேள்வியில் நாளிதழ்கள் விற்பனையாகுவது குறித்து - ஆயினும் சொற்ப உயிருடன் தனும் வீடு நல்கும் எனக்கு, குழந்தையின் கேள்விக்கு பதில் தெரியவில்லை.

நீலவானத்தின் தொன்நூற்றோராவது பிரிப்பின் நிழல் ...

வானத்தின் வசந்தத்தை யாரோ விடுத்துச் சென்ற படகில், மகாவலி ஓடிக் கொண்டிருந்தது. அதன் மருங்கில் கிளைத்த மரங்களை வீடு கட்டிக் கொண்டிருக்கும் குச்சு வீடுகளை வாழ்தலின் உச்ச இடமாக நான் கனவுகண்டுகொண்டிருந்தேன். வாரி இறைக்கும் மணல் டக்ற்றறொன்றில் பணி புரிபவளாக இருக்க விரும்பினேன். நதியின் புல் முளைத்த திட்டுக்களில் கங்கூன் அரியும் பெண்ணாக இருக்க என்னை மிகவும் நேசித்தேன் ஒரு கோடை காலத்தில் காய்ந்து கிடந்த மகாவலியின் சொறிச் சிரங்கை கைகளால் பிளந்து விட்டுக் கொண்டே கற்கள் கடைந்து இரத்தினக்கல் பொறுக்கிக் கொள்ளவும், பொழிதல் ஓய்ந்த ஆற்றுப்படுக்கையில் 'சாயிலா' போல நீந்திக் கொண்டு போகவும் ஆசைப்பட்டேன் ஒ..சாயிலா... எனக்கு நீச்சல் சொல்லித் தந்தவள்... அவளுக்கு நீண்ட கூந்தல்... மகாவலியின் நீளத்தில் பாதி இருப்பதாக பீற்றிக் கொண்டாள் ! கூந்தலின் தேவை பற்றி அறிந்திராத எனக்கு,  ஒரு பெடியனைப் போல இருப்பது சவுகரியமாகவிருந்தது, இருப்பினும் சாயிலா நீண்ட கூந்தலுடைய ஒரு முசுலீம் பெண் ! சாயிலா... நீச்சல்க் காரி சாயிலா போல் நீந்துவது கடினம் ! சாயிலா போ

என் நாளினது சுமை

ம னிதனின் நிலைப்பாடு என்பது எந்தப் புள்ளியில் தங்கியிருக்கிறது என்பதற்கான கேள்வியுடன் ஆரம்பிக்கிறேன். சாதாரணமாக ஆசனத்தில் அமர்ந்து இருப்பீர்கள். அது அவ்வளவு சௌகரியப்படாத போது , காலைக் கொஞ்சம் மடக்கி, பிறகு காலுக்கு மேல் கால் போட்டு இன்னும் பிறகு புழு நெளிவதை போல கால்களைப் பின்னிக் கொண்டும், கொஞ்ச நேரமப்பால், கால்களை நிதானமாக பிரித்துப் போட்டும ஆயாசமான நிலையில் ....... இருக்க எத்தனிப்பீர்கள். இந்த உட்காருதலுக்கான கூர்ப்பே இவ்வளவு நீளுகையில், மனிதனின் நிலைப்பிற்கான கூர்ப்பானது எத்துனை நீண்டதாய் இருக்கும்.?உங்களைக் கடந்து செல்கின்ற நாட்களை ஒவ்வொருவரும் எவ்வாறு  கழிக்கிறீர்கள் ? புதிதாக புலருகின்ற நிதானமேயல்லாத காலைப் பொழுதில் மனமும் உடலும் வெறுப்பைச் சுமந்து கொண்டு உடலைக் காற்றில் மிதக்க வைக்கின்றது. நித்திரையின் இறுதிப்படி இன்னமும் கண்களில் பேராசையைத் தூண்டி , நாளின் அபவாதங்களை ஆராய்கின்றது. இந்த நாளின் தொடக்கம் ஒரு வேளை ஏதாவது ஆராய்ச்சியுடன் ஆரம்பமாகலாம். என்ன, எதுவென்ற கேள்விகளுடன் மணிகளை, விழுங்கி ஏப்பம் விடுகின்ற அவசரத்தில் காலம் நகருகின்றது.    கண்ணாடிக் கூட

பெய்கின்ற மழைக்கு,

உணர்வுகளைத் திசை திருப்பி அங்குமிங்குமாக அழைக்கழிக்கின்றது சுவாலையின் சுடர் நாக்குகள்.- இரவினது மிக மிருதுத்தன்மை- நித்திரையின் நிலைப்படிகளின் இருபுறமும் மெழுகுவர்த்திகளை அந்தம் பிடிக்கின்றது. காதல் போன்ற கனமற்ற ஒரு வார்த்தை நம் இருவரின் காதுகளிலும் குளிர்க் காற்றுடன் மோதுகிறது . தந்தத்தில் செய்யப்பட்ட புத்தனின் மோன நிலை வறட்சியான மேகத்திலிருந்து அடர் மழை பெய்கிறதைப் போல கனத்தது . மொழிகளைப் பரிமாறாத சிலைகளிலிருந்து நமக்கான கேள்விகளையும் ,பதில்களையும் பெற்றுக்கொண்டோம். வெற்றுககாகிதத்திட்கும்-பாலியக் குழந்தைக்கும், வர்ணங்களுக்கும்- உள்ள பிரேமையைப் போல மொழிகளுக்கப்பாடப்பட்ட - பழஞ்சோற்று வார்த்ததயாடினோம். கடுங்குளிரால் போர்வைகளில் ஒளிந்திருந்த சன்னஙகள் கண்மூடிக் கொண்டன. வெளியே நல்லமழைக் காத்து. கூதிர்கால பின் இரவின் முனங்கத் சத்தம். தவளைகளின் ஒசைக்குறிப்புகள்..... தகரத்தின் பொத்தலுக்குள் மழை நுழைந்த ஜாலச் சந்தம்......... நிலவிருட்டின் அதி உன்னதம்... எல்லாவற்றுக்குள்ளும், அறைக்குள் அல்லோல கல்லோலம்

முகம்

சகுந்தலாவுக்கு பெண் பார்க்க ஆரம்பித்திருந்தார்கள்.ஆனால் இன்று வரைக்கும் யாருமே அவளை வந்து பார்த்துவிடவில்லை.சகுந்தலாவுக்கு இருபது நெருங்கிக் கொண்டிருந்தது .பள்ளிக் கூடப் படிப்பு ஐந்தாறு தேறும் .  பெரிய அழகியும் இல்லை . அழகிக்கு முதட்படியும் இல்லை   கருப் பீ.. ..  கொஞ்சம் குட்டை . உடம்பு மசமசவென்று துவண்டு கிடந்தது .பெரிய விஷய ஞானமெல்லாம் கிடையாது . கூந்தல் நீளமாகக் கிடக்கும் அதுவுஞ்சுருட்டை .தனக்குள் தான் பெரிய  அழகி என்ற  கர்வமெல்லாம் அவளுக்கில்லை . அவளுக்கு தன உருவமே மறந்தது போலத்தான் படும் .அவ்வப்போது தன முக வடிவம் மறந்து  போய் கண்டவர்கள் ,பார்த்தவர்கள் முகமெல்லாம் தன்னது தானென்று நினைத்துக் கொண்டாள்  .அதனால் அவளுக்கு தன அழகைப் பற்றி ஓரளவுக்கு பெருமிதமாகவும் இருந்ததுண்டு .அவள் சேலை தான் கட்டிக் கொண்டாள் .  சில தடவை பாவாடையும் ,பிளவுசும் அணிந்தாள் .தன்னை சிங்காரிப்பதில்  எப்போதும்  ஆர்வமிருந்ததில்லை . தான் சிங்காரித்த முகத்துடனேயே எப்போதும் இருப்பதாகவும் பட்டது அவளுக்கு .......!     அவள் தகப்பனாருக்கு வேலை இருந்தது. தரகர் வேலை. வீடு பிடித்துக் கொடுத்து, அதிலே கி